திங்கள், 27 பிப்ரவரி, 2017

சினிமாவால் வந்த சீரழிவு

அமைதி பூங்காவா?கொலை பூமியா?

எனக்கு தெரிந்த தலைப்புகளை கொடுத்து விட்டேன்.இனி நீங்களே பொருத்தமான தலைப்பாக முடிவு செய்து கொள்ளுங்கள்.
சமீபத்தில் பட்டப்பகலில் நெல்லையில் போலீஸ் வேனை வழி மறித்து போலீசின் கண்களில் மிளகாய் போடி தூவி கைதியை பலவந்தமாக கீழே இறக்கி அதே இடத்தில் வெட்டி சாய்த்திருக்கிறது ஒரு கொலை வெறி பிடித்த கும்பல்.பழி தீர்க்கும் பயங்கர தொடர்கதையின் ஒரு அத்தியாயம்.பழி தீர்த்தல் என்றாலே அது தொடரும்தானே.இன்னும் எத்தனை அத்தியாயங்கள் தொடரப்போகின்றனவோ.
சுவாதி என்ற இளம்பெண் காலைபொழுது உதிக்கும் வேளையில் பலரும் கூடும் ரயில் நிலையத்தில் பலர் முன்னிலையில் அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டார்.
நந்தினி என்ற பெண்ணை காதலிப்பதாக கூறி ஏமாற்றி அவள் வயிற்றில் சிசுவை சுமந்திருக்கும் வேளையில் தன்னை கல்யாணம் பண்ணிகொள் என்று அவள் கோரிய ஒரே குற்றத்திற்காக அவளை கடத்தி கோரமாக கொன்று வயிறில் இருந்த சிசுவையும் பிறப்பு உறுப்பை பிளேடால் அறுத்து கிழித்து வெளியே எடுத்து சிதைத்தான் ஒரு மாபாதகன்.
தொடர்ந்து ஹாசினி என்ற சிறுமியின் கொலை.
இதெல்லாம் ஒரு பெரிய சீரியலின் அன்கொன்றும் இன்கொன்றுமாக பொறுக்கி எடுத்த சம்பவங்கள்.எங்கே நடந்தது என கேட்காதீர்கள்.எல்லாம் நம் அமைதி பூங்காவாம் நம் தமிழகத்தில்தான்.
ஆம் ஒரு காலத்தில் அதாவது அறுபதுகளில் அதற்கு முன்னும் தமிழகம் அமைதி பூங்காவாகத்தான் இருந்தது பத்திரிகைகளை புரட்டினால் அதில் கொலை மற்றும் வன்முறை சம்பவங்கள் காணப்படுவது மிகவும் அரிது.
ஆதித்தனாரின் தினத்தந்தி மற்றும் மலை முரசு பத்திரிகைகள் சிசுக்களாக இருந்த காலம் அது.அவற்றிற்கு நிருபர்கள் என்று யாரும் கிடையாது கேட்டதை காணாமலேயே கவர்ச்சிகரமான தலைப்பில் செய்திகள் போடுவார்கள் அவற்றில் பெரும்பாலும் வதந்திகளாகத்தான் இருக்கும்.
அன்று சினிமா என்று வருபவை பெரும்பாலும் நளினமான படங்களாகவே இருக்கும் எம் ஜி ஆரின் சண்டைப்படங்களில் கூட வன்முறை என்பது மிதமாகத்தான் இருக்கும்
பாசமலர்,என்று அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையே மணந்த பாசத்தை மையமாக கொண்டு வெளிவந்தது.
பாவமன்னிப்பு பணத்திமிர் பிடித்த ஒருவன் தன் திமிர் முற்றிய போய் யாரென்று தெரியாத நிலையில் மத வெறி பிடித்துப்போய் முஸ்லிமாக வளர்க்கப்பட்ட சிறுவயதில் காணாமல் போன தன் சொந்த மகனையே தீயிட்டு பொசுக்கும் நிலையில் உண்மை வெளிப்பட பதறிப்போய் தானே தீயில் விழுந்து கருகி தன மகனை காப்பாற்றி பாவமன்னிப்பு தேடும் ஒரு அருமையான படம்
பாகப்பிரிவினை.தீயவரின் சொல் கேட்டால் ஒற்றுமை குலைந்து வேற்றுமை தோன்றும்,தீமை விளையும் என்ற அருமையான கருத்தை சொன்ன படம்
இப்படி அழகான படங்கள் வந்த காலம் அது.
கைகொடுத்த தெய்வம் ,ஒரு பெண் உலகம் புரியாதவளாக இருந்தால் அவள் என்னென்ன தீமைகளை சந்திக்க நேரிடும் என்று மிக அழகாக சித்தரித்த படம்.
சில ஆங்கிலப்படங்கள் வன்முறைகளுடன் வந்தாலும் அவை சென்னை போன்ற பெரு நகரங்களில் சில நாட்கள் அல்லது ஒரு சில வாரங்கள் மட்டுமே ஓடும் பிறகு மக்களால் மறக்கப்படும்
ஆங்கில படங்களில் கூட வன்முறைகளை சினிமாவில் காண்பதால் மனோநிலை எப்படி பாதிக்கப்படுகிறது என்று விளக்கி சில படங்கள் வந்தன அவற்றில் ஓன்று BLIND TERROR அல்லது SEE NO EVIL என்ற படம் த்ரில் ஆக எடுத்திருந்தார்கள் ஆனால் ஒரு காட்சி கூட வன்முறையாக இருக்காது
அதே போல் SILENCE OF THE LAMBS என்ற படம் ஒரு மன நோயாளியை பற்றியது.வன் முறை காட்சிகள் கிடையாது.
ஆனால் இன்று கிராபிக்ஸ் என்ற கலி  முற்றிய பிறகு வரும் தமிழ் படங்களில் வன் முறை காட்சிகள் ஆங்கிலப்படத்தையும் மிஞ்சுபவைகளாக உள்ளன.இவற்றிற்கு எவ்விதத்திலும் குறைவில்லாமல் சீரியல்களிலும் வன்முறை காட்சிகள் கொடிகட்டி பறக்கின்றன.
டிவி மூலம் இவை அத்தனையும் வீடுகள் வரை வந்து விட்டன.பார்க்கிறவர்களில் எத்தனை பேர் எத்தனை மனோபாவங்களுடன் பார்க்கிறார்கள் என்பது பற்றியெல்லாம் எந்த கவலையும் கிடையாது படம் எடுப்பவர்களுக்கு.வெறும் சண்டை காட்சிகள் வீரச்செயல்கள் இவை பரவாயில்லை
ஆனால் வன்முறைகளுக்கு வித்திடுவது நூதன முறையில் அவற்றை செயல் படுத்துவது என்று கிராபிக்ஸ் முறையில் தத்த்ரூபமாக காட்டுகிறார்கள் ஒரு படம் ஓட வேண்டும் என்பதற்காகவே அசிங்கமான கவர்ச்சி காட்சிகள்,இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள் கொலைவெறியை தூண்டும் வன்முறைக்காட்சிகள் என்று ஏதாவதொன்றை வைத்துவிடுகிறார்கள்.
விஸ்வரூபம் படத்தில் ஒரு பெண்ணை கழுத்தை அறுப்பது போன்று ஒரு காட்சி
அந்த நாட்களில் ஆல்பிரட் ஹிட்சாக் என்பவர் மர்மமும் வன்முறைகளும் நிறைந்த படங்களை எடுப்பதில் பெயர் பெற்றவர் அவர் எடுத்த சைக்கோ என்ற படத்தில் பாத் ரூமில் நிர்வாண நிலையில் ஒரு பெண் ஒரு மர்ம உருவத்தால் கத்தியால் குத்தப்படுவது போல காட்சி வரும் இதற்காகவே அந்த படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது இது போல் பிளடி மூன் என்றோரு ஜெர்மன் படத்தில் காட்சிக்கு காட்சி கொலைகள் இதை பிரிட்டன் தடை செய்தது .இப்படி ஏராளமான மேற்கத்திய படங்கள் இருப்பினும் இவற்றை மேல்தட்டு மக்கள்தான்  பார்ப்பார்கள்.அதுவும் சில வாரங்களில் அவை தியேட்டரை விட்டு போய்விடும்.அது அவர்களது சீரழிந்த நாகரீகம்.இப்போது அவற்றையும் மிஞ்சும் விதத்தில் தமிழில் படங்களும் சீரியல்களும் வருகின்றன.
தமிழ்நாடு எதில்  முன்னேறுகிறதோ இல்லையோ இந்த கேடு கெட்ட சினிமாத்தொழிலில் பாலிவுட்டையும் ஹாலிவுட்டையும் மிஞ்சி நிற்கிறது என்றால் அது தான் வேதனை
மற்ற மாநிலங்களில் சினிமாவை சினிமாவாக பார்க்கிறார்கள்.ஆனால் இங்கே சினிமாவை நிஜம் என்று நம்பியே பார்க்கிறார்கள்.அதனால்தான் சினிமா ஹீரோக்கள் இங்கே தெய்வமாக கும்பிடப்படுகிறார்கள்.அவர்களுக்கு ஒரு ரசிகர் மன்றம் பட்டங்கள் சை.வெட்கமாக இல்லையா.
சினிமாவில் அட்டை கத்தி வீசிய எம்ஜியார் இங்கு பாரத ரத்னாவாம் அப்படி அவர் நாட்டிற்கு என்ன தியாகம் செய்தார்.சுதந்திரத்திற்காக போராடினாரா?
சினிமாவால் சீரழிந்தவர்கள் என்றால் அது தமிழர்கள்தான் என்றால் மிகை இல்லை
அந்த நாளில் தன் சகோதரியின் குடும்பத்தையே கொலை செய்து வீட்டின் ஒரு அறையில் பூட்டிவைத்த ஜெயக்குமார் என்பவன் போலீசிடம் சிக்கிய போது அவன் கூறியது நூறாவது நாள் என்ற திரைப்படத்தை பார்த்துத்தான் தனக்கு இப்படி ஒரு எண்ணம் தோன்றியதாக கூறினான்.காரணம் படத்தை அவன் நிஜம் என்ற எண்ணத்தில் பார்த்தது.
எம்ஜியார் வீரப்பாவுடனும் நம்பியாருடனும்  சண்டை இட்டு ஜெயிக்கும் போது அவர் இவர்களுக்கு உண்மையான ஆபத்பாந்தவனாக தென்பட்டார்.
சினிமாவில்தான் அவர் ஹீரோ என்றில்லாமல் நிஜமாகவே அவரை ஹீரோவாக பார்த்தனர் சந்தர்ப்பத்தை நன்றாக பயன் படுத்திக்கொண்ட எம்ஜியார் மக்களுக்கு நன்றாக மூளை சலவை செய்து கட்சி ஆரம்பித்து முத ல்வராகவே ஆனார்.இது இங்கு மட்டும்தான் சாத்தியம்.
அடுத்து ஜெயலலிதா.ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை மூலம் சினிமாவுக்கு வந்தார்.தமிழில் வெளிவந்த முதல் அடல்ட்ஸ் ஒன்லி படம் படம் பெயிலியர்.
பிறகு ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்ஜியார் மூலம் ஜெயலலிதா பிரபலத்தின் உச்சிக்கு போனார்.
பிறகு அதே எம்ஜியார் மூலம் அரசியலுக்கும் வந்தார்.
தமிழ்நாடு ஆச்சே இங்கு எல்லாமே சாத்தியம் அந்த அளவுக்கு இங்கு சினிமா படித்தவர் பாமரர் என்று எல்லோரையும் மடையர்கள் ஆக்கி வைத்திருந்தது
ஜெயலலிதாவே எதிர்பார்த்திருக்கமாட்டார் தனக்கு இப்படி ஒரு பதவியும் புகழும் கிடைக்கும் என்று எம்ஜியாரின் மறைவிற்கு பிறகு ஜெயலலிதா முதல்வரானார்.
ஆனால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி எம்ஜியாரினால் உண்டானதல்ல சசிகலா & நடராசன் கம்பெனி என்ற ஒரு மாபியா கும்பலின் சூத்திரத்தில்தான் அது கிடைத்தது என்று ஜெயலலிதா உணர்ந்தார்.எம்ஜியாரின் மறைவுக்கு பின் இந்த கும்பலுடன் தன்னை நெருக்கமாக்கிக்கொண்டார்.தன அழிவை தானே தேடிக்கொண்டார்.இனி வன்முறை சினிமாவுக்கு இந்த கும்பல்தான் திரைக்கதை அமைத்து கொடுக்கவேண்டும் என்னும் அளவுக்கு சதித்திட்டத்தை கன கச்சிதமாக செயல் படுத்துவதில் சூத்திரதாரிகள் என்று இன்றுவரை காட்டிக்கொண்டு இருக்கிறார்கள் இவர்கள்.
முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் கூட சினிமாவில் வருவது மாதிரி இன்றுவரை மர்மமாகவே உள்ளது.
அந்த மர்மம் எப்போது நீங்கும் என்றும் தெரியவில்லை
இன்னும் கொஞ்ச மாதங்களில் மக்களும் பழையபடி காசு வாங்கி ஓட்டு போடும் மனோநிலைக்கு திரும்பிவிடுவார்கள்
இனியாவது மக்கள் திருந்த வேண்டும்




புதன், 22 பிப்ரவரி, 2017

அழிவில் தமிழ் நாடு

நரகை நோக்கி 

ஆம் தங்களது அதிமேதாவித்தனத்தாலும் அலட்சியத்தால் தமிழர்கள் நம் தங்கத்தமிழகத்தை நரகப்படுகுழியில் தள்ளிவிட்டு விட்டார்கள்.ஐயோ தமிழகமே இனி உன் சாம்பல் கூட மிஞ்சாது 
ஒருபக்கம் மத்திய அரசின் பாராமுகமும் துவேஷமும்.இன்னொரு புறம் மற்ற மாநிலங்களின் சகோதரத்துவமின்மை,இப்படி தத்தளித்துக்கொண்டு இருக்கும் நிலையில் கூட இருந்தே குழிபறித்து குப்புற தள்ளி விட்ட மாதிரி உள்ளூர் அரசியல் கட்சிகளின் சுயநலமிக்க நயவஞ்சகம் இத்தனையும் தமிழகம் என்ற சொர்க்க பூங்காவை சுடுகாடாக்கி விட்டு நிற்கின்றன.
சசிகலா-நடராசன் மாபியா கும்பல் எப்படியோ ஒரு வழியாக தன்  காரியத்தை சாதித்து கொண்டது.சசிகலா சிறை சென்றாலும்,பன்னீர் செல்வம் பகைத்தாலும் தன்  புத்தி சாதுர்யத்தால் தனது பினாமி எடப்பாடி பழனி சாமி மூலமாக தமிழக ஆட்சியை பிடித்துவிட்டார்.
இனி நடக்கப்போவது வெறும் சூதாட்ட பேரங்களாக இருக்குமே ஒழிய மக்கள் நன்மை என்று ஒன்றும் இருக்காது.
ஜெயலலிதாவின் மறைவு இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது.கோர்ட்டில் இது சம்பந்தமாக டிராபிக் ராமசாமி மற்றும் ஜெயலலிதாவின் பழைய தோழி திருமதி கீதா ஆகியோர் போட்ட வழக்குகள் கிணற்றில் போட்ட பாறாங்கல் மாதிரி கிடப்பில் மவ்னம் சாதிக்கின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கு கூட 20 வருடம் இழுத்தடிக்கப்பட்டு முதல் குற்றவாளியின் மரணத்திற்குப்பிறகு தீர்க்கமான முடிவாக இப்போது வந்திருக்கிறது.இது முன்னாலேயே வந்திருந்தால் பல குழப்பங்களில் இருந்து தமிழகம் தப்பி இருக்கும்.
சரி ஆனால் இப்போது ஒரு முன்னாள் முதலமைச்சரின் மரணத்தினுள் பொதிந்திருக்கும் அந்த 75 நாள் மர்மம் விலகுவது எப்போது?
சசிகலா தரப்பினரும் மௌனம் காக்கிறார்கள்.அப்பல்லோ தரப்பினரும் ஒரு கண்துடைப்பு நாடகத்தை பிரஸ் மீட்டிங்க் என்ற பெயரில் நடத்தி விட்டு விஷயத்தை கை கழுவி விட்டார்கள்.
இருட்டினில் நீதி மறைந்திருக்கிறது .அதை வெளிக்கொணர வேண்டிய பொறுப்புள்ள அதிகார வர்க்கமோ மடியில் கனத்தை வைத்துக்கொண்டு அமைதி காக்கிறது.மறைந்திருக்கும் நீதியே உன்னை வெளியாக்குபவர்கள் யார்?
இந்த நாட்டில் பொய்யும் திருட்டும் மிரட்டிக்கொண்டு வெளியே உலா வருகிறது அதை தட்டி கேட்கும் நீதி மான்களோ கை கட்டி உட்கார்ந்திருக்கிறார்கள் ஆக எங்கு பார்த்தாலும் துரோகம்,துவேஷம் bureaucracy .
சமீபத்திய தீர்ப்பில் வரம்பு மீறி சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை தமிழக அரசின் கருவூலத்தில் சேர்க்கும் படி நீதி மன்றம் கூறி இருப்பது வரவேற்கத்தக்கதுதான் ஆனால் அதன் முன் பின் செயல் பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்று நீதி மன்றம் வரையறுக்கவில்லையே.
தமிழகத்தின் தலையில் ஏறி உட்கார்ந்து இருப்பதோ ஒரு பினாமி அரசு.மன்னார்குடி மாபியா கும்பல் தமிழகத்தையே கபளீகரம் செய்ய போடுகிற திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற தொடங்கியுள்ளன.இந்த நிலையில் அரசின் கருவூலத்தை மட்டும் இந்த மாபியா கும்பல் விட்டுவைக்குமா.
அரசியல் என்பது வெறும் சாக்கடை என்றால் அதில் முங்கி குளிக்கும் அரசியல் சாணக்கியர்கள் வெட்கம் கெட்டவர்கள்.என்ன செய்வது என்று இந்த சாக்கடை குளியல்களை சகிக்கும் மக்கள் விவஸ்தை கெட்டவர்கள்.இதுதான் இன்றைய தமிழ் நாட்டின் நிலை .
இப்போது மத்திய அரசு குழப்பத்தோடு குழப்பமாக மீண்டும் தமிழ்நாட்டின் பசுமையையே சுரண்டி சாகடிக்கும் வேலையை தொடங்கி உள்ளது.
அதுதான் மீத்தேன் திட்டம்.இதை தமிழக விவசாயிகள் கடுமையாக எதிர்த்ததால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அதை எதிர்த்து அனுமதிக்க மறுத்தார்.
ஆனால் அவர் மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக திணித்த மத்திய அரசு அவர் மூலம் இதற்க்கு அனுமதி வாங்கிவிட்டது.பன்னீரும் மீத்தேன் என்ற பெயர் தனக்கு அலர்ஜி என்பதால் Hydrocarbon என்று பெயர் மாற்றி கையெழுத்துப்போட்டார்.என்ன செய்ய நம் தலையெழுத்து .தஞ்சை தரணியே பாழாக்கப்போகிறது .
பன்னீரிடம் பேரம் தோற்றதால் சசி மாபியா அவரை குப்புறத்தள்ளி தனக்கு வேண்டிய எடப்பாடி பழனியை முதல்வராக நிறுத்தி எல்லா நியாயம் சட்டம் நெறிகள் அனைத்தையும் உடைத்து எறிந்து வெறும் வாய் ஒட்டு மூலம் தேர்ந்தெடுத்து அவர் பெயரை கவர்னருக்கு சிபாரிசு செய்து உள்ளனர் .இப்போது மத்திய அரசின் பிடியில் தமிழகத்தின் தலையெழுத்து உள்ளது 
ஆளுநர் வித்யாசாகர் மத்திய அரசின் சமிக்ங்கைக்கு காத்திருக்கிறார்.மத்திய அரசு இப்போது தன்னுடன் பேரம் பேச ஆள் தேடுகிறது.பினாமி பழனியா ?,பழைய உறவு பன்னீரா? இல்லை ஸ்டாலினா ?கடவுளே நான் யார் கையில்?-தமிழகத்தின் கதறல்.
மத்திய அரசிற்கு   மற்ற மாநிலங்களில் செயல் படுத்த முடியாத அத்தனை பாதக திட்டங்களையும் திறந்த வெளி கழிவறையான தமிழகத்தில் நிறைவேற்ற ஒரு கை  பொம்மை அரசு வேண்டும் .இதுதான் அவர்களின் பேரம் மற்றபடி ஆட்சி அமைப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் எப்படி வேண்டுமானாலும் ஊழல் செய்யலாம் கொள்ளை அடிக்கலாம்.கண்டுகொள்ளப்படாது.ஆனால் எங்கேயாவது இடறினால் ......அதை பின்னால் பார்க்கலாம்.
இந்த பேரத்திற்கு நம் தமிழ்நாட்டு அரசியல் வர்க்கம் மறுக்கும் என்று சொல்ல முடியாது.
இதற்கு பின்னால் காவிரி பிரச்சினை முல்லைப்பெரியாறு பிரச்சினை ஆந்திராவுடன் பாலாறு பிரச்சினை என்று பக்கத்து மாநிலங்களுடன் பிரச்சினைகள்.இந்த பிரச்சினைகள் இன்றுவரை தீர்க்கப்படவில்லை.காரணம் மக்களிடமும் விழிப்புணர்வு இல்லை ஆண்ட வர்க்கமும் இலவசங்கள்,ஓட்டுக்கு ரூபாய் என்று மக்களை மடையர்களாகவே ஆக்கி வைத்துவிட்டனர்.
என்ன படித்து என்ன செய்ய.மாணவர்கள் கூட இங்கு அரசியல்வாதிகளின் கைகளில்  பொம்மைகளாகிறார்கள்.சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் பெரிய வெற்றி என்று கூறுகிறார்கள்.அது உண்மையில் மத்திய மாநில அரசியல்கிங்கிறர்கள் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை சிதறடிக்க மாணவகண்மணிகளை பொம்மைகளாக்கி ஆடிய ஒரு பொம்மலாட்டம் அது.அது ஒரு வேஸ்ட் .ஜல்லிக்கட்டு கிடைத்ததாம் அதனால் என்ன? அது எவ்வளவு காலத்திற்கு? ஆண்டவனுக்கே வெளிச்சம்.இந்த ஜல்லிக்கட்டினால் மாநிலம் அடையப்போகும் நன்மைகள் என்ன?
மாட்டிற்கு பேசத்தெரிந்தால் தனக்கு நீர் வேண்டும் உணவு வேண்டும் விவசாயம் வேண்டும் என்று தான்  கேட்டிருக்குமே   ஒழிய இப்படி ஜல்லிக்கட்டு ஆட்டம் வேண்டும் என்று கேட்டிருக்காது.ஆனால் மாட்டின் மீது பழியை போட்டு ஒரு அர்த்தமற்ற போராட்டத்திற்கு தூண்டி விட்டு மாணவர்களின் படிப்பையும் கெடுத்து நம் கவனத்தை சிறகடிக்க அரசியல் நயவஞ்சகர்கள் நம் மாநிலத்தின் நமைகளை அற்ப லாபத்திற்காக காட்டிக்கொடுத்துவிட்டார்களே.
இப்போது ஒரு நிரூபணமில்லாத ஒரு செய்தியை ஊடகங்கள் தமிழகத்தின் நலனை கெடுப்பதற்காகவே பரப்புகின்றன.செய்தி வேறு அதன் தலைப்பு வேறாக இருக்கிறது.கீழே பாருங்கள் 

ஜெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.100 கோடி அபராதம் கர்நாடக கருவூலத்துக்கு போகுமாம்
இது தலைப்பு
ஆனால் கீழே செய்தியை பாருங்கள்.

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா தற்போது உயிருடன் இல்லாததால் அவரது அபராதத் தொகை எந்த அரசின் கருவூலத்துக்குச் செல்லும் என்பது கேள்வி குறியாக உள்ளது.
கடந்த 1991- 96 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக அன்றைய மதிப்பில் ரூ.66 கோடியை தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த பெங்களூர் தனி நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறையும், ரூ.100 கோடி அபராதம் விதித்தது. அதேபோல் அவருக்கு உடந்தையாக இருந்த தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதத்தையும் விதித்தது.

Source: tamil.oneindia.com தலைப்பில் உள்ள கருத்து செய்தியில் இல்லை

இப்படி ஊடகங்களே புதுப்பிரச்சினையை கிளப்புவது மாதிரி செய்திகளுக்கு தலைப்பிடுகின்றன.
இது போல்தான் அந்த   நாட்களில் சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த மாதிரி மலையாள மனோரமா என்ற பத்திரிக்கை தேவை இல்லாமல் யூகத்தின் அடிப்படையில் முல்லை பெரியார் அணை பலகீனமாக உள்ளது என்று ஒரு  கட்டுரையை வெளியிட்டு இடுக்கி பகுதியில் பெரும் பீதியை உண்டாக்கியாது.விளைவு இன்று நாம் அந்த அணையையே இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்
அன்று டாக்டர் ஷிவாகா மற்றும் போல்ஷ்விக்கர்களின் எழுச்சியினால் ரஷ்யா ஜார் மன்னர்களின் அராஜகத்திலிருந்து விடுபட்டது.
பதினாறாம் லூயியின் அதிகார துஷ்பிரயோகம் பிரஞ்சு புரட்சியாக வெடித்து பிரான்ஸ் காப்பாற்றப்பட்டது.
ஒரு தொழிற் புரட்சி பிரிட்டனை தலை நிமிர்த்தியது
இது போல தமிழகமும் ஒரு புரட்சியை அதுவும் ஒட்டுமொத்த அரசியல் அநாகரீகத்திற்கு எதிராக ஒரு கிளர்ச்சியை சந்திக்காதவரை இது நரகத்தை நோக்கித்தான் போய்க்கொண்டு இருக்கிறது.இது திண்ணம.
ஆனால் அந்தோ இங்குள்ள படித்தவர்களும் மாணவர்களும் கூட அரசியல் சூதாட்டத்தில் பகடைகளாகி அர்த்தமற்ற ஜல்லிக்கட்டு புரட்சியையும் இந்தி எதிர்ப்பு என்றோரு கிளர்ச்சியையும் நடத்திக்கொண்டு தங்களையும் தங்கள் சந்ததிகளையும் பெரும் நஷ்டத்த்திற்கு ஆளாக்கி விட்டார்களே.
இனி தமிழகம் எந்த அரசியல் கட்சியையும் நம்பி பலனில்லை .மாற்றம் மாற்றம் என்று கூறி இரு திமுகவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்டு எந்த நன்மையையும் எதிர்பார்க்க முடியாது.மற்ற கட்சிகளும் அப்படித்தான் என்ன செய்வீர்கள்
ஒரு நல்ல புரட்சிக்கு தயாராகுங்கள் ஒரு நல்லவனை தேடி கண்டுபிடித்து சுயேட்சையாக அவரை ஆட்சியில் அமர்த்துங்கள்
இல்லை என்றால் தலையில் ஒரு துண்டும் கையில் திருவோடும் ஏந்திக்கொண்டு தமிழகத்தை ஆந்திரா கேரளா கர்நாடகா என்று பிய்த்து கொடுத்துவிட்டு எல்லோரும் காசி யாத்திரை போய் கங்கையில் விழுங்கள்.


  

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

VACCINATION-முக்கிய குறிப்புகள்

தடுப்பூசி -ஆபத்தானதா 


இப்போது சமூக வலைத்தளங்களில் தடுப்பூசி போடாதீர்கள் அவை ஆபத்தானவை அவை மேல்நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது என்று பல தெளிவற்ற புள்ளிவிவரங்களுடன் ஒரு எச்சரிக்கை வலம் வந்து கொண்டு இருக்கிறது.
இது பற்றி நாம் இங்கு சில கருத்துக்களை பார்ப்போம்.
முதலாவது தடுப்பூசிகள் (Vaccination )என்றால் என்ன,அவை எப்படி தயாராகிறது அவற்றில் என்ன இருக்கிறது அவை எந்த நோக்கத்திற்காக தரப்படுகிறது என்று பார்ப்போம்.
அதற்கு முன் தொற்று  வியாதிகளை பற்றி ஒரு சிறு விளக்கத்தை காண்போம்.
நாம் சுவாசிக்கும் காற்றில்,அருந்தும் நீர்பானங்களில்,சுகாதாரமற்ற சூழ்நிலைகள் சரியாக சமைக்கப்படாத அல்லது வேக வைக்கப்படாத உணவு வகைகளில் இவை எல்லாவற்றிலுமே கண்ணுக்கு தெரியாத நுண் உயிரிகள் இருக்கின்றன.
இவை நம் உடம்புக்குள் செல்லும்போது நம் உடம்பு இறைவன் இயற்கையாகவே அதற்க்கு அளித்திருக்கின்ற சில பாதுகாப்பு (IMMUNITY)அம்சங்களை கொண்டு தன்னை பாதுகாத்து கொள்கிறது.இதற்கு குடல் வால் எனப்படும் Appendix கூட துணை புரிவதாக இப்போது கண்டு பிடித்து இருக்கிறார்கள்.குடல் வாலுக்குள் பொதிந்துள்ள சில நல்ல நுண்ணியிரிகள் நம் உடம்பின் நோய்  எதிர்ப்பு  சக்திக்கு வலு ஊட்டுவதாக சமீபத்திய ஓர் ஆய்வு சொல்கிறது.
நோய் கிருமிகளின் விஷத்தன்மை சிலவற்றில் அதன் வெளிப்பகுதியில் சிலவற்றில் அதன் உட்பகுதியில் இருக்கிறது இதற்கு முறையே Exotoxin மற்றும் Endotoxin என்பர்.
பெரும்பாலும் Exotoxin கள் பாக்டீரியாவால் உயிருடன் இருக்கும்போதும் அல்லது இறந்த பிறகும் சுரக்கப்படுபவை.உதாரணம் Clostridium Botulinum என்ற கிருமியால் சுரக்கப்படும் Botulinum toxin,
Corynebacterium Diphtherea வினால் சுரக்கப்படும் கொடிய நோயான டிப்தீரியா விஷம்,மற்றும் 
Clostridium Tetany யினால் சுரக்கப்படும் டெட்டனஸ் விஷம் 
ஆகியவை Exotoxin களுக்கு உதாரணங்கள் ஆகும.இந்த Exotoxin ஐ வெளி விஷம் என்று சொல்லலாம்.இவை கிருமி உடம்பினுள் சென்றவுடன் சுர க்கப்பட்டு விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை 
இன்னொரு வகை உள் விஷம் என்ற Endotoxin கள் ஆகும்.இவை கிருமி உடம்பினுள் சென்ற வுடன் எந்த பாதிப்பும் தராது.ஆனால் கிருமி அழியும் பொது இவை வெளிப்பட்டு கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.இவை சில கிருமிகளின் மேலேயே இருக்கும் எனவே கிருமி உயிருடன் இருக்கும் போதும் வெளிப்படும் இதற்க்கு உதாரணம் Neisseria மற்றும் Haemophilius வகை கிருமிகளாகும்.இந்த Endotoxin கள் வேதி இயலில் சர்க்கரை கொழுப்புகளுடன்(Lipopolysachcharide) இணைந்த O-antigen,களாகும்.
சரி இப்போது தடுப்பூசிக்கு வருவோம் தடுப்பூசிகளில் இருவகை உண்டு ஒன்று Vaccination மற்றது Antiserum .
Vaccination இல் நோய் கிருமிகள் வீரியம் குறைக்கப்பட்ட நிலையில் இருக்கும் இதை உடம்பில் செலுத்தும் போது நம் உடல் இதை வீரியமுள்ள கிருமியாகவே எண்ணி நோய் ஏற்படாமலே எதிர்ப்பு சக்தியை (Antibodies)உடனே ஏற்படுத்திவிடும்.
ஆனால் சிலருக்கு எதிர்ப்பு சக்தி ஏற்படுவதில் சில நாட்கள் தாமதம் ஏற்படலாம் அந்த நிலையில் அவருக்கு Vaccination அளிக்கப்பட்ட  நிலையிலேயே அவர் மீது உண்மையான நோய் கிருமி தாக்குதல் ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு.இதற்காக மருத்துவ உலகம் இவருக்கு Vaccin உடன் Antiserum என்ற மற்றொரு மருந்தையும் கொடுப்பார்கள்.இந்த Antiserum அவருடைய இரத்தத்தில் வெளியிலிருந்து ஏற்படுத்தப்பட்ட எதிர்ப்புசக்தியை (Antibodies) நேரடியாகவே செலுத்தி அந்த மனிதரின் இரத்தம் சுயமாகவே எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் அந்த ஒரு சில நாட்கள் அவரை பாதுகாக்கும் 
முன்பெல்லாம் துருப்பிடித்த ஆணி குத்தி விட்டால் ATS ( Anti Tetanus Serum)என்று போடுவார்கள்.இது உடனடி எதிர்ப்பு சக்தியை இரத்தத்தில் நேரடியாக தரப்பட்டதாக இருந்தாலும் இதன் வீரியம் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் என்பதால் இப்போது Tetanus Toxoid (TT )என்ற Vaccination போடுகிறார்கள்.
இந்த Toxoid கிருமியின் விஷத்தை Formaldehyde(0.5 to 1%)உடனும் lysine (0.005 to 0.25M) உடனும் சேர்த்து சுமார் 24 டு 32 நாட்கள் (6 டு 8pH)  அமிலத்தன்மையில் incubate செய்து தயாரிக்கிறார்கள் .

எட்வார்ட் ஜென்னர் இதை முதன் முதலில் Cow Pox என்ற நோய் பீடித்த பசுவின் சீழில் இருந்து உண்டாக்கியதால் இதற்க்கு Vaccination என்று பெயரிட்டார்.Vacca என்றால் லத்தீன்  மொழியில் பசு.
அவர் காலத்தில் கொடிய நோயாக இருந்தது பெரியம்மை என்ற Small Pox .
ஆனால் இது பசுவிடம் நெருங்கி பால் கறப்பவர்களுக்கு வருவதில்லை.
இதை அவர் வியப்புடன் ஆராய்ந்தார்.இவர்களுக்கு சில நாட்கள் மட்டுமே தாக்கக்கூடிய ஆபத்து இல்லாத மிகவும் எளிய பசு அம்மை நோய் தாக்குவதால் இவர்களது உடம்பு கொடிய பெரியம்மையையே எதிர்க்கக்கூடிய சக்தியை  பெறுவதாக கண்டு பிடித்தார்.
இதை செயலாக்க பசுவின் சீழை தன் வீட்டு வேலையாள் மகனுக்கு செலுத்தினார்.அவனுக்கு அபாரமான பெரியம்மை எதிர்ப்பு சக்தி கிடைத்தது ஜென்னர் சிலரின் விமரிசனங்களுக்கும் ஆளானார்.
ஆனாலும் எட்வார்ட் ஜென்னருக்கு 1821 இல் PHYSICIAN EXTRAORDINARY என்ற பதவி KING GEORGE-IV இனால் தரப்பட்டது.
இருப்பினும் எட்வர்ட் ஜென்னரின் VACCINATION இன்று பல மாற்றங்களுடன் பாதுகாப்பானதாகவே இருக்கிறது.
ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடித்தார்கள் என்பதற்காக அவர்கள் ஒட்டிய விமானத்தை இப்போது நாம் பயன்படுத்த முடியுமா?இப்போது விமானங்கள் புது புது மாற்றங்களுடன் பாதுகாப்பானதாகவே இருப்பது போல் VACCINATION உம் பாதுகாப்பானதாகவே இருக்கிறது.இருப்பினும் ஒரு சில அசம்பாவிதங்கள் நடப்பது உண்மைதான்.
எனவே தடுப்பு ஊசிகளை மிக கவனமாக நம்பிக்கைக்கு உரிய மருத்துவர் மூலம் எடுத்து கொள்ளுங்கள்.இலவசமாக தரப்படுகிறது என்ற நிலையில் கவனமாக இருங்கள்


 

புதன், 1 பிப்ரவரி, 2017

STAPHYLOCOCCUS AUREUS தொற்று

வீரியம் கொண்ட STAPHYLOCOCCUS AUREUS தொற்று 

மேலே தலைப்பிடப்பட்ட S.Aureus என்ற கிருமி சாதாரணமாக எல்லோரிடமும் காணப்படும் ஒரு கிருமி ஆகும்.ஆனால் இது ஒரு மனிதனின் நோய்  எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக இருக்கும் நிலையில் அவர்களை ஒன்றும் செய்வதில்லை.மேலும் சாதாரண எதிர்ப்பு சக்தி உடைய ஒருவரை இது இலேசான பாதிப்புகளுடன் தாக்கும்.தோலில் இலேசான கட்டி,அல்லது மூக்கில் SINUSITIS போன்றவை உண்டாகும்.
ஆனால் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நிலையில் இது ஒருவரை பல கோணங்களில் அபாயகரமாக தாக்கும் வல்லமை படைத்தது.தோலில் கட்டி என்று ஆரம்பித்து அது வீங்கி சீழ் பிடித்து அதன் வழியாக ரத்த நாளங்களினூடே சென்று இதயம் கல்லீரல் சிறுநீரகம் நுரையீரல் என்று எதிர்ப்பட்ட அத்தனை உறுப்புகளையும் தாக்கி சேதப்படுத்திவிடும்.
நீரிழிவு நோயாளிகள்,AIDS நோயாளிகள்,மேலும் அடிக்கடி அறுவை சிகிச்சைக்கு உட்படுத்த படுபவர்கள் பெண்கள் குழந்தைகள் இவையே இக்கிருமிகளின் TARGET கள்  ஆவார்கள்.
மூக்கு சிந்தும்போது தும்மும் போது மூக்கு சளியை தொடும்போது இக்கிருமி தொற்றும் வாய்ப்புகள் அதிகம் 
இக்கிருமி Methicillin என்ற penicillin வகை கிருமி எதிர்ப்பங்களுக்கு (Antibiotics) கட்டுப்பட்டவை ஆக இருந்தன.
ஆனால் இம்மருந்துகளை சரியான முறையில் எடுக்காததாலும்,மருத்துவ வழிகாட்டுதல் இல்லாமல் இந்த ஆண்டிபையாட்டிக்குகளை தவறுதலான முறையில் பயன் படுத்தியதால் இக்கிருமிகள் இப்பொழுது புதிய வீறுகொண்ட வடிவத்துடன் உலக முழுவதும் பரவுகின்றன.இனி இவற்றை methicillin கொண்டு குணப்படுத்த முடியாததால் இவற்றிற்கு Community Acquired -Methicillin Resistant S.Aureus (CA-MRSA) என்கிறார்கள்.
இவை பற்றிய ஒரு சமீபத்திய ஆய்வு ஒரு புதிய தெளிவை வெளிப்படுத்தி உள்ளது.
அதாவது இக்கிருமிகளின் தோலில் அதிக அளவு சர்க்கரை Polymer ஆன Lipoteichoic acid என்ற அமிலம் இருப்பதால்தான் இந்த எதிர்ப்புசக்தி உண்டாகிறது என்று ஒரு புதிய ஆய்வு அறிக்கை கூறுகிறது.இந்த  அமிலம் ஒரு நீரில் கரையக்கூடிய பாஸ்பாரிக் அமிலம் ஆகும்.இது கொழுப்பில் கரையக்கூடிய ஒரு சர்க்கரை சத்துடன் சேர்ந்து(Glycolipid) இந்த பாக்டீரியாவின் தோல்பகுதியை எந்த ஆன்டிபயோட்டிக்கும் தாக்காதவாறு அந்த கிருமிக்கு அபாரமான எதிர்ப்பு சக்தியை தருவதாக கூறும் இந்த புதிய ஆய்வு எதிர்காலத்தில் இந்த வகை கிருமிகளுக்கு நல்லதொரு தீர்வை காண வழிவகை செய்து இருக்கிறது.
இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் ஜெர்மனி சேர்ந்த Tubingen என்ற நகரிலுள்ள Interfaculty Institute Of Microbiology And Infection Medicine,மற்றும் German Center For Infection Research -ஐ சேர்ந்த விஞ்ஞானிகள்.
சாதாரணமாக எதிர்ப்புஇல்லாத S.aureus,
Methicillin,naficillin,oxacillin போன்ற பென்சிலின் வகை கிருமி எதிர்ப் பான்களுக்கும் மற்றும் Cephalosporin களுக்கும் கட்டுப்படும்.ஆனால் CA -MRSA எனப்படும் இந்த புதுவகை கிருமி மேற்கூறிய எந்த மருந்திற்கும் கட்டுப்படாது.
காரணிகள்:-
1.சுத்தம் இல்லாத இடங்கள்.
2.சுகாதாரம் பேணப்படாத கழிவறைகள் 
3.ஆஸ்பத்திரியில் சுகாதாரம் பேணப்படாமை 
4.சிறைச்சாலைகள் 
5.ரோட்டிலும் பிளாட்பாரத்தில் தங்குவார்கள்
6.மிலிட்டரி கேம்புகள் .

வியாழன், 26 ஜனவரி, 2017

கண்ணை காப்போம்

கண்ணை காப்போம் 

நம் உடம்பின் முக்கிய உறுப்புகளில் விலை மதிக்க முடியாதது கண் தான்.இதயம் நின்று விட்டாலும் மூளை செத்து விட்டாலும் மரணம் தான்.கதை முடிந்த்துவிடும்.நிம்மதி.

ஆனால் கண் இருண்டுவிட்டால் வாழ்க்கையே இருண்டு விடும்.
கண்ணில் கோளாறு என்றுவந்து விட்டால் மருந்தகங்களில்  போய் ஒரு மருந்தாளுனரிடம் நம் நோயை சொல்லுகிறோம் அவரும் ஒரு சொட்டு மருந்தையோ அல்லது கண் களிம்பையோ தருவார் 
அதை உபயோகிக்குமுன் அந்த மருந்துகளின் வகைகளையும் அதன் பயன்களையும் நாமும் தெரிந்து  கொள்வோமே.
கண்ணின் அமைப்பு சுருக்கமாக:-
1.கண் இமைகள் இவை மடிப்பு திசுக்களால் ஆன ஒரு அமைப்பு ஆகும் 
2.கண் இமைக்கு அடுத்தாற்போல் இருக்கும் குழி மாதிரி அமைப்பிற்கு CONJUNCTIVAL CUL DE SAC என்று பெயர்.
3.கண் இமையோடு படர்ந்திருக்கும் வெள்ளை நிற தோலுக்கு CONJUNCTIVA என்று பெயர் .
4.கண்ணின் கருவிழிகள் அமைந்திருக்கும் முன்பகுதியை மூடியிருக்கும் கண்ணாடி போன்ற மெல்லிய போர்வைக்கு CORNEA என்று பெயர்.
5.மொத்த கண் உருண்டைக்கு கண் பந்து (EYE BALL )என்று பெயர் 
6.கண்ணின் கருவிழியில் நடுவில் இருப்பது LENS என்ற கண்ணாடி திசுவாகும்.இந்த கண்ணாடியை இருபக்கமாக சமமாக பிடித்து நிற்பவை CELIA தசைகளாகும் 
7.கருவிழியின் கருமைக்கு அதில் அமைந்திருக்கும் IRIS என்ற அமைப்பாகும் இந்த அமைப்பு CAMERA வில் அதன் EXPOSURE ஆடியை கிளிக் என்று திறந்து மூடிக்கொள்ளும் அமைப்பை போன்றது.இது போதுமான அளவுதான் ஒளியை லென்ஸில் பட அனுமதிக்கும் அளவுக்கதிகமான ஒளி லென்சிற்குள் பாய முயலும் போது இது லென்ஸை நிழல் போல் திரை இட்டு பாதுகாக்கும்.உதாரணமாக உச்சி பகல் சூரியனை நாம் பார்க்க முயலும் போது ஒரு பச்சை திரை நம் பார்வையை மறைப்பதை நாம் உணரலாம் இதற்க்கு காரணம் IRIS தான்.
8.கண்ணை வெளி கண் உள் கண் என இரு பகுதிகளாக பிரிக்கும் போது வெளி கண்ணில் கண்ணீர் சுரப்பிகளும் conjunctival cul de sac ம் இருப்பதை அறியலாம்
உள்பகுதியில் sclera என்ற கண் பந்தை மூடியிருக்கும் தோல் ,மற்றும் மேல் கூறிய கருவிழிகள் லென்ஸ் ஐரிஸ் மற்றும் இதர பகுதிகளும் அமைந்துள்ளன 
9.கருவிழியை தாண்டி அதன் பின் பகுதிக்கும் எட்ட இருக்கும் விழித்திரைக்கும் (retina )இடையில் உள்ள இடை வெளியில் ஜெல்லி போன்று தேங்கியவாறு  ஒரு திரவம் நிரம்பி இருக்கும் இதற்கு VIREOUS HUMOUR என்று பெயர்.இதுதான் லென்ஸ் வழியாக வரும் ஒளியை விழித்திரையில் தெளிவாக விழும் அளவில் சரியான தூரத்தில் அதை பிடித்திருக்கும்.இதன் அளவு விரிந்தோ சுருங்கியோ இருந்தால் அதற்கேற்றாற்போல் கிட்டப்பார்வை தூரப்பார்வை என்று குளறுபடி ஏற்படும்.
கண் திசுக்களில் செல்கள் சில நேரங்களில் உதிர்ந்து இந்த VITREOUS-இல்  மிதக்கும்.இவைதான் நம் பார்வையில் நம் முன்னே குமிழிகளாக தெரியும்.
மேலும் மயக்க நிலை அல்லது அடி போன்றவற்றால் இந்த VITREOUS நிலை குலையும் அப்போது நம் கண் முன்னே பூச்சிகள் பறப்பது போன்ற காட்சி விரியும்.
நம் கண்களின் ஓரத்தில் ஒரு சிறு அரிப்பு போன்ற அமைப்பும் அதனை தொடர்ந்து புனல் போன்ற குழாயும் இருக்கும் இவற்றிக்கு பெயர் முறையே TRABECULAR MESHWORK என்றும் CANAL OF SCHLEMM என்றும் பெயர்.இவற்றை நாம் பார்க்க முடியாது இவற்றின் மூலம் தான் நம் கண்கள் அதிக அழுத்தம் கொடுக்கும் நீர்ச்சத்தை வடியவிட்டு வெளியேற்றி விடுகிறது.
1.கண் தொற்று நிவாரணிகள் (ANTI INFECTIVE EYE MEDICINES ):-
இந்த மருந்துகள் கண்ணில் தொற்று நோய் ஏற்பட்டால் உபயோகிக்க கூடியவை.இவற்றில் பெரும்பாலும் கீழ்கண்ட தொற்று எதிர்ப்பான்கள் இருப்பன.
1.SULPHACETAMIDE EYEDROPS
2.CHLORAMPHENICOL  ,,
3.GENTAMICIN                 ,,
4.TOBRAMYCIN                 ,,
5.POLYMIXIN                     ,,
இவை தவிர கீழ்கண்ட வைரஸ் எதிர்ப்பானும் கண் மருந்துகளாக வருகிறது.அது ACYCLOVIR ஆகும் இது சொட்டு மருந்தாகவும் களிம்பாகவும் கிடைக்கிறது.
பொதுவாக மேல்கண்ட மருந்துகளை டாக்டரின் சிபாரிசு இல்லாமல் OTC ஆக எடுக்கலாம் ஆனால் டாக்டரின் ஆலோசனையுடன் எடுப்பதே சிறந்தது.
கீழ்கண்ட கோளாறுகளுக்கு ANTIBIOTIC மருந்துகள் பயனாகின்றன:-
1.STYE (கண்கட்டி ) இதன் அறிகுறிகள் கண் சிவத்தல்,வலி,மற்றும் கண் இமை வீக்கம்.இது கண் இமையில் இருக்கும் வியர்வை சுரப்பிகள் வீக்கத்தால் ஏற்படுகிறது.இது கிருமி தொற்றினால் ஏற்படுகிறது.இது பொதுவாக சூடான ஒத்தடங்களின் மூலம் சுகமாகும்.இருப்பினும் டாக்டரிடம் காட்டி ANTIBIOTIC கண் மருந்துகளை உபயோகிக்கலாம் 
2.கண் இமை அழற்சி (BLEPHARITIS ):-இதற்க்கு டாக்டரிடம் காட்டி ANTIBIOTIC குகள் உபயோகிக்கவும்.இதில் கண் அரிப்பும் சிவப்பும் மிகுதியாக இருக்கும் 
3.கண்ணை சுற்றி கருமை (BLACK EYES):கண்ணிலே பலமான அடி விழுந்தால் இந்த நிலை ஏற்படும்.இதற்கு ஒரு நாள் முழுதும் சூடான் ஒத்தடமும் மறுநாள் முழுதும் ஐஸ் ஒத்தடமும் கொடுத்தகால் சரியாகும் மருந்து தேவை இல்லை.
ஆனால் கண் இமை அடி விழுந்ததில் பாதிக்கப்பட்டு இருந்தால் டாக்டரிடம் காட்ட வேண்டும்.
4.Conjunctivitis எனப்படும் கண் வெள்ளை பகுதி தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தால் கண்  சிவத்தல் வலி போன்றவை இருக்கும்.டாக்டரிடம் காட்டி Antibiotics சொட்டு மருந்தோ களிம்போ  உபயோகிக்கவேண்டும்.
5.Dacryoadenitis:- இது கண்ணீர் சுரப்பிகள் கிருமிகளால் பாதிக்கப்பட்டு இருந்தால் ஏற்படும்.இதன் அறிகுறிகள் கண் சிவத்தல் வலி மற்றும் உருட்டல்.இதற்க்கு டாக்டரிடம் காட்டி Antibiotic சொட்டு மருந்துகள் எடுத்து கொள்ள வேண்டும்.
கடைகளில் கிடைக்கும் சில மருந்து வகைகள் :-
1.Ofloxacin இது ஒரு ஆண்டிபயாடிக் சொட்டு மருந்து ஆகும்.இதை கண்ணில் தொற்று இருந்தால் பயன் படுத்தலாம் 
2.Gatiloxacin (ஆண்டிபயாடிக் ) மற்றும் Dexamethasone (ஸ்டெராய்டு)கலவை.இதை கண்ணில் தொற்று  மற்றும் அழற்சி (Inflammation )இருந்தால் டாக்டரின் துணையுடன் பயன்படுத்தலாம் ஆனால் 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கூடாது.
3.Hypermelose (Tear Naturale )இவ்வகை மருந்துகள் கண் வறட்சிக்கு (Dry Eyes )பயன் படுத்தலாம்.
4.Astringents(திசு சுருக்கிகள்):-இவ்வகை மருந்துகள் திசுக்களில் சுருக்கம் உண்டாக்கி கண் அரிப்பு வலி போன்றவற்றை நீக்கும்.இப்போதைக்கு FDA வினால் அனுமதிக்கப்பட்ட zinc sulphate (25%) கண் மருந்துகளே மிகவும் பாதுகாப்பான astrigent ஆகும்.
5.Demulsants இதை தமிழில் சினித்தகாரி அல்லது மென்மை  படுத்தும் மருந்து எனலாம் இவை வறண்ட கண்களில் செயற்கையாக ஈரப்பதம் உண்டாக்க பயன்படுத்தலாம் பெரும்பாலும் இதில் Methylcellulose வகை ரசாயணிகளும்,டெக்ஸ்டரான்-70,கிளிசரின்,ஜெலாட்டின் ,பாலி எத்திலீன் கிளைக்கால்,பாலி சார்பேட்டு -80,ஹைடிராக்சி எதைல் செல்லுலோஸ்,ஹைடிராக்சி புரோப்பைல் மீத்தைல் செல்லுலோஸ் ,பாலி வினைல் ஆல்கஹால்,போவிடோன் மற்றும் ப்ரொபைலின் கிளைக்கால் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று இருக்கும்.பயன்படுத்துவதற்கு முன் அதன் பாட்டில் லேபில் மீது மேற்கண்ட எதாவது ஒரு மருந்து இருக்கிறதா என்று பார்க்கவும் 
6.Decongestants and Vasoconstrictors:இவற்றை தமிழில் அடைப்பு நீக்கிகள் மற்றும் இரத்தக்குழாய் சுறுக்கிகள் எனலாம்.இவை பெரும்பாலும் அட்ரீனலின் வகையை சேர்ந்தவை ஆக இருக்கும்.இவை ரத்தக்குழாய்களை சுருக்கி இரத்த ஓட்டத்தை குறைத்து கண்ணின் வெண் விழி பகுதியில் ஏற்படும் சிவப்பு,வலி ஆகியவற்றை குணப்படுத்தும்.(உ-ம்).1.Naphazolin Hydrochloride (Clear Eyes)
2.Phenylephrin Hydrochloride (Isopto Frin)
3.Tetrahydrazolin (Murine Plus)
4.Oxymetazolin Hydrochloride (Ocu Clear)
இவை தவிர இவை ஹிஸ்டமின் எதிர்ப்பான் (Anti Histamins)கூட்டிலும்(combination) கிடைக்கிறது அவை ,
1.Naphazolin Plus Solution
2.Naphcon-A
3.Opcon-A
நினைவிருக்கட்டும் மேலே கண்ட மருந்துகள் எதையும் டாக்டரின் கண்காணிப்பு இல்லாமல் அதிகநாள் உபயோகித்தால் மீண்டும் நோய் நிலை திரும்பும்.மேலும் இவை Angle Closed Glaucoma உள்ள நிலையில் உபயோகிப்பது கண்டிப்பாக கூடாது.
7.ஹைப்பர் டானிக் (Hypertonic Solutions) மருந்துகள் 
இவை பெரும்பாலும் 0.9% க்கு கீழுள்ள சோடியம் குளோரைடு கரைசல் ஆகும்.பெரும்பாலும் இக்கரைசல்களில் 2 to 5% சோடியம் குளோரைடு இருக்கும். 
இவை பெரும்பாலும் கண் கருவிழியின் மேலுறையில் (Cornea) ஏற்படும் வீக்கத்தை சுகமாக்கும்.
ஹைப்பர் டானிக் கண் மருந்துகளை கவனக்குறைவாக உபயோகித்தால் Cornea கிழிந்து போகும் எனவே டாக்டரின் ஆலோசனை இல்லாமல் எடுக்க கூடாது.
8.செயற்க்கை கண்ணீர் சொட்டு மருந்துகள் 
இவற்றில் ஹைப்பர் டானிக் சோடியம் குளோரைடு ,ஒரு சமநிலை ஏஜென்ட் (Buffeing),ஒரு விஸ்காஸிட்டி ஏஜென்ட்,ஒரு கிருமிநாசினி (Preservative) இவற்றுடன் நாம் மேலே கண்டவாறு ஏதாவதொரு methylcellulose போன்ற ஒரு Demulsant இருக்கும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் சிலருக்கு இந்த செயற்கை கண்ணீர் சொட்டு மருந்துகளில்  இருக்கும் Preservative களினால்  கண் அரிப்பு ஏற்படலாம்.Benzoylchloride என்ற பொருள்தான் பெரும்பாலும் கண் மருந்துகளில் Preservative ஆக பயன் ஆகிறது.எனவே இப்போது புதிதாக Preservative இல்லாமல் ஒரு நேர (Single Dose) ampule களாக இவை கிடைக்கின்றன.இவற்றை ஒரு ampule ஒரு நேரத்திற்கென்று பயன்படுத்தி கொள்வதால் Preservative தேவை இல்லை.
வறண்ட கண்களுக்கும் Conjunctivitis sicca எனப்படும் கண் வெண் விழிப்படல அழற்சிக்கும் டாக்டரின் ஆலோசனைப்படி எடுத்து கொள்ளலாம்.

மருந்து சீட்டு கண் மருந்துகள் (Prescription Medicines)

1.Atropin: இது ஒரு Anticholinergic மருந்தியல் வகையை சேர்ந்தது.இவை Cholinergic நரம்பு மண்டலத்தை சுருக்கி Adrenergic நரம்பு மண்டலத்தை மிகை படுத்துவதால் ஏராளாமான பக்க விளைவு கொண்டவை.இவை கருவிழியை அகட்டி கண்ணில் ஒருவித மரப்பு நிலையை ஏற்படுத்தும் கண் மங்கலை உண்டாக்கும் இவற்றை கண் பரிசோதனைக்கு முன் ஆஸ்பத்திரிகளில் கண்ணில் இடுவார்கள்.கண் அழுத்தம் அதிகமுடைய நீரிழிவு நோயாளிகள் இதை தவிர்ப்பது நன்று.
 2.Cosopt Eyedrops :-இது ஒரு மிகச்சிறந்த கண்ணழுத்த நோய் நிவாரணி ஆகும் இதில் Timolol மற்றும் Dorzolamide என்ற இரு மருந்துகள் இருக்கின்றன ஒன்று இரத்த அழுத்த நோய்க்கு பயன் ஆகும் பீட்டா அடைப்பான் (Timolol-a beta blocker) வகையை சேர்ந்தது.மற்றது நீர் இளக்கி (Dorzolamide-a diuretic) வகையை சேர்ந்தது.இவற்றை டாக்டரின் உதவியுடன் Glaucoma போன்ற கண் அழுத்த நோயாளிகள் பயன் படுத்தலாம்.
3.கார்ட்டிகோ ஸ்டெராய்டு கண் மருந்துகள் :-
இவை மிகப்பிரபலமாக மருந்து கடைகளில் கிடைக்கும்.கண் சிவத்தல்,அழற்சி,கண் வலி மற்றும் அரிப்பு இவற்றை குணமாக்கும்.இவை நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதால் டாக்டரின் உதவியுடன் எடுப்பதே சிறந்தது.
உதாரணங்கள்:-
1.டெக்ஸ்சாமெத்தசோன் (Dexamethasone)
2.பீட்டாமேதாஸோன் (Betamethasone )
3.ப்ரெட்னிசோன் (Prednisone )
4.ப்ளூரோமேதலோன் (Fluromethalone )(FML)




வியாழன், 19 ஜனவரி, 2017

NEWS UPDATE:GUT APPENDIX IS NOT A WASTE

GUT APPENDIX IS A DEFENCE

It seems we all should have an apology to consider as recent research has confirmed that gut appendix is not a useless waste organ to be removed as in the case of its inflammatory state known as Appendicitis.
In reality far from being a superfluous tissue it may well have silently helped keep our immune system in check all these years.
This study result nullified the previous theory of Dr.Charles Darwin the Evolution Theory Master in the previous century that appendix was used to digesting leaves.
But the latest research has proved that the appendix is nothing to do with our digestive system instead it is a compact package of good bacteria to keep our body to be protected from diseases throughout our life.
In simple words, the appendix is a secondary immune organ of our body that strengthens our primary immune system.
Back in 2007 a group of scientists has first revealed a study result that appendix is acting as safeguard to our body as protection from diseases. This is now confirmed with some more shreds of evidence by the scientist Dr.Heather Smith from Midwestern University Arizona College.
Dr.Smith et al have used 533 mammals for this study and throughout their study that the presence of the organ proved a purpose as once it evolves in the body get never disappeared. This proves that it is not a waste.
The research revealed a closed look of the body tissues which shows more protective lymphoid cells in the samples which have the presence of an appendix.
Then what about those who have been already removed the organ?
Dr.smith replies that it does not matter but they may take a little bit of prolonged recovery time when they fall ill.


புதன், 18 ஜனவரி, 2017

NEWS UPDATE:SHIV SENA Vs.B.J.P.

SHIV SENA REVOLT 

Now Shiv Sena one of the BJP's parliament ally turned its ball against Mody regarding his stupid demonetization process.

The News

 




PM Narendra Modi has turned India into Hiroshima, Nagasaki by dropping demonetization bomb: Shiv Sena

1 / 28

Prime Minister Narendra Modi has turned the country into Hiroshima and Nagasaki by dropping the demonetization bomb, the Shiv Sena has said in its most vicious attack on the government over the shock recall of high-value banknotes.
The Sena, an ally of the ruling BJP at the Centre, has been critical of the government ever since Modi’s November 8 announcement recalling 500 and 1000-rupee notes that sucked out 86% of the banknotes in circulation.
In an editorial in its mouthpiece, Saamana, the Sena also accused Modi of taking decisions unilaterally, besides making the comparison with the two Japanese cities destroyed by atomic bombs dropped by the United States during World War II.
It said Modi was “not in a state” to listen to anyone and has “not taken the counsel” of even the Reserve Bank of India (RBI) governor.
Complete coverage: War on black money
“The the way he has picked deaf and dumb parrots to sit on his cabinet meetings, he has also chosen the RBI governor and turned the country’s economy into shambles,” the editorial said.
The party’s taunts a came day after it attempted to push the BJP into a corner and beat its ally with the same transparency stick it was using against the Sena amid seat-sharing talks for the forthcoming civic body polls in Mumbai.
The BJP has been insisting that the Sena commit itself to transparency in administration as a key factor for a pre-poll alliance between the two parties. The BJP move is being seen as an attempt to distance itself from graft allegations against the Sena.
The Sena on Tuesday hit out at the BJP, saying it was fully on board in wanting transparency in administration, but it should be seen in the Central and state governments too, and decisions should not be unilateral.
In the Saamana editorial, the Sena also criticized Nationalist Congress Party (NCP) chief Sharad Pawar for first welcoming the demonetization decision and then back-tracking once it stifled the cooperative sector, where the NCP has always had a strong grip.
The Sena lashed out at the Modi government for not allowing district cooperative banks to accept demonetized currency notes, saying farmers suffered the most because of the decision.
ALSO ON MSN:

வியாழன், 12 ஜனவரி, 2017

முந்திரிப்பருப்பின் பயன்கள்

முந்திரியின் நற்பலன்கள் 

முந்திரியின் நற்பலன்கள் மிக அற்புதமானவை.நம்மில் சிலர் முந்திரியை கொலஸ்ட்ரால் என்றும் ஜீரணக்கோளாறுகளை உண்டாக்கும் என்றும் தவறாக எண்ணி ஒதுக்குகின்றனர்.ஆனால் மருத்துவ ஆய்வில் முந்திரிப்பருப்பு மற்றும் அதன் எண்ணெய் அதன் பழம் ஆகியவை மிகவும் ஆரோக்கியமான பலன்களை அளிப்பதாக கண்டிருக்கிறார்கள்.

இதயம் மற்றும் இரத்த ஓட்டம் 

முதலாவது முந்திரி பருப்பில் அபரிமிதமான ஒமேகா-3 அபூரித கொழுப்பு அமிலங்கள் உள்ளன இவை இரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை (LDL) சுத்தீகரித்து நல்ல கொழுப்பாக (HDL )மற்ற வல்லவை.மேலும் முந்திரியில்  மலிந்திருக்கும் ARGININE என்ற பொருள் தமனி இரத்த குழாயின் உள் சுவரை பலப்படுத்துகிறது 
மேலும் முந்திரியை பொதிந்திருக்கும் பொட்டாஷியம்,வைட்டமின் -இ ,வைட்டமின் -பி மற்றும் போலிக் அமிலம் ஆகியவை இதயத்திற்கும் இரத்த ஓட்டத்திற்கும் புத்துயிர் அளிக்கின்றன 

இரத்தம் 

முந்திரியில்  தாமிர சத்து உள்ளது இது நம் உணவில் உள்ள இரும்பு சத்தை இரத்தத்தில் சரியான முறைகள் தன்மையை மாகவைக்கும் எனவே இரும்பு சத்து குறைவினால் ஏற்படும் சோகை நோய் நம்மை தாக்காது.மேலும் முந்திரியில் இரும்பு சத்தும் உள்ளது 

உயர் ரத்த அழுத்தம் 

முந்திரியை இருக்கும் மக்னீஷியம் சத்து நம் இரத்த ஓட்டத்தை சீர் படுத்தி high B.P எனப்படும் உயர் இரத்த அழுத்தம் உண்டாகாமல் பார்த்து கொள்ளும்

 

கண் 

தினமும் நாலைந்து முந்திரிப்பருப்புகளை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும் .காரணம் முந்திரியை உள்ள leutin மற்றும் zeaxanthin என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட் பிக்மென்ட்டுகள் இவை கண்களின் விழித்திரையை பாதுகாக்கின்றன.இதனால் விழித்திரையில் நடுப்பகுதியில் உள்ள macular என்ற அமைப்பு புற  ஊதா கதிர்களினால்  சீர்குலையாமல் பாதுகாக்கப்படும்

எடை குறைப்பு 

ஒருநாளைக்கு இரண்டு வேளை ஒரு சிட்டிகை வீதம் ஒழுங்காக முந்திரி சாப்பிடுபவர்களுக்கு இதிலிருக்கும் ஒமேகா -3 அபூரித்த கொழுப்பு அமிலங்கள் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுவதாக  ஒரு ஹாவார்ட் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது.எனவே ஆரோக்கியமான எடை குறைப்பு கிடைக்கும் 

புற்று நோய் எதிர்ப்பு 

முந்திரியை தினமும் நாலைந்து சாப்பிடுவதால் இதிலுள்ள proanthrocyanindins என்ற ஒருவகை flavanoid களும் மற்றும் இதிலுள்ள தாமிர சத்தும் புற்று நோயை உண்டாக்கும் செல்களை அழித்து விடுகின்றன.முக்கியமாக குடல் புற்று வராமல் தடுக்கும் .மேலும் முந்திரியை இன்னும் ஏராளமான ஆன்டி ஆக்சிடண்டுகள் இருக்கின்றன 

தலை முடி கருமை 

 முந்திரியை தினசரி ஒழுங்காக சாப்பிடுபவர்களுக்கு அதிலுள்ள தாமிர சத்து தலை முடி கரு கரு வென செம்மையாக வளர உதவும் 

எலும்பு உறுதி 

முந்திரியை உள்ள கால்ஷியமும் மக்னீஷியமும் எலும்புகளுக்கு நல்ல உறுதி தருபவை 
மேலும் மக்னிஷியம் அதிகப்படியான கால்ஷியம் எலும்பிலிருந்து உருகுவதை தடுப்பதால் எலும்பு உறுதியடையும் நரம்பு மண்டலமும் இரத்த மண்டலமும் அதிகப்படியான கால்ஷியத்தினால் பாதிக்கப்படாமல் காக்கப்படும் இதனால் migrain போன்ற ஒற்றை தலைவலி தொல்லை தராது
இன்னும் முந்திரி யை வயது முதிர்ந்த பெண்கள் எடுத்துக்கொண்டால் தங்களது மாத விடாய் நிற்கும் காலத்தில் உண்டாகும் தூக்கமின்மை நிவர்த்தியாகும்
மேலும் முந்திரி பித்தப்பை கட்டிகள் (GALLSTONES )உண்டாகாமல் தடுக்கும் 
மேல் கூறிய காரணங்களால் முந்திரியை தினசரியோ அல்லது வாரம் ஒருமுறையோ எடுத்துக்கொண்டால் மிகுந்த நம்மை கிடைக்கும்


 

வெள்ளி, 6 ஜனவரி, 2017

THE MYSTERIOUS DEATH OF A CHIEF MINISTER-CONTD..

LESSONS FROM THE C.M.'s DEATH

There are many lessons that we should learn from the mysterious death of the former Tamil Nadu C.M. Miss Jayalalitha.
1. First Lesson Good Faith in Almighty God.
Because Miss. Jeyalaitha did not have good faith in the Mightiness of God.
Her religious faiths are all only doing some worthless rituals.
That is why she had thirst for power, and she herself imitated the incarnation of a Goddess and enjoyed to reign ruthless and pseudo-party men and ministers and happily made them fall on her foot in every function.
2. Second Lesson Good Relationships
Confidence is essential for life. But overconfidence is dangerous and it will bring bad and ruthless friendships like the one between Miss. Jayalalitha and Mrs.Natrajan.
3. Love Thy Neighbours
Jayalalitha did not have any contact or relationships with any of her neighbors in that area either within Poes Garden or surrounding the area but did have a relationship with the Mannargudi Family which does not have any residence there.
4. Love Thy Family.
Jayalalitha blocked all contact with any of the remaining members of her own blood relative, because of her prejudiced mentality.
5. Head weight and Ego
It is good for anybody to be proud of himself or herself as being a creature of God but it is bad for anybody to have head weight and ego towards His creatures. Jayalalitha invited her own bad destiny through her own head weight and ego.
6. Knowledge and Wisdom
Choose friendships by using your knowledge and wisdom and not by your thirst for power and greediness. Jayalalitha chose her friendship with Sashikala not by wisdom but by greed and bad sense.
7. Carefulness
When we get up a mistake it is advisable to correct it by taking advice from others or by using our own sense of care. But Jayalalitha neither was in a position to take advice from others nor used her own sense of care when she got up the mistake of her relationship with Sashikala Natrajan.
8. Self-Praising and Boasting
Both are worthless and unhealthy for a person to lead her life smoothly. Jayalalitha's most ugly weakness was her self-praising and boasting mentality. Even though these are common in all our Indian politics but Jayalalitha was a blind and little bit more. By using these weaknesses Mrs.Narajan and her family conveniently and easily admired her to push her to disaster.
9. Safe Residence
Do not allow strangers into your residence while you are alone. Jayalalitha allowed Mrs.Natrajan to enter her house at the very first sight when she was spotted at the main gate. This was her foolishness.
10. At last, Choose a safe hospital
Nowadays safety is of great concern to getting medical treatments in super facility hospitals. 
 Chennai Apollo Hospital totally has lost its credit unless they break its spooky silence regarding what happened in Jayalitha's Death.
*Business is the first preference and service is the next, will these hospitals really take care of our health is a question?
There was an old hit movie known by the title COMA with a story that many terminally ill patients died in mysterious situations in a famous multispeciality hospital. All of them before attained their death would go first into a mysterious irreversible coma stage for several days and then to death. The novel is familiar and is written by the famous novelist Robin Cook. The purpose of the induced coma is to steal their internal organ for black market sales.
Now many big hospitals are seen with attractive glass buildings and their business is flourishing. Every big superstar hospital is owned by big VIPs who are multi-billionaires and Dhadhas.
Now our C.M.Miss Jayalalitha was all in all well in health up to 21 st of Sept.
2016. But on the 22nd of the next day at night at 10.30, she was moved to Apollo Hospital in Greens Road Chennai mysteriously and suddenly and admitted there as a patient without anybody's consent except Mrs.Sasikala Natrajan.
The hospital sources released a confirmed statement that Miss. Jayalalitha was admitted as a patient of dehydration with little fever. She had some difficulty breathing as her lungs were infected and the trachea was filled with pus.
Further, they continued that C.M.was normalized, with good consciousness and cooperation, and she, was breathing with a breathing aid and was put in ICU-ward.
Many days passed without any news about her and the hospital did not allow anybody else to see her except Mrs.Natrajan.The Apollo Chief Dr.Prathap Reddy gave a pleasant statement after a vast silence, that Mrs.Jayalalitha improved well and now she took solid foods and breathed normally without any aid.
Many days passed. Again Dr.Prathap Reddy told that Miss. Jayalalitha was completely cured and she was transferred to the normal ward from ICU.
Mrs.Natrajan further added to the ecstasy that our Amma cured well, recognized everybody, and uttered a word that "I take a new birth"
In between, no one was an eyewitness and nobody was allowed in to see her including ministers and the Governor.
From this, we learn that in such big hospitals anything will happen against the common principles and disciplines.
Carbon Monoxide is used in many high-graded hospitals. This gas can be used in controlled and careful doses to get several medical benefits from infections to organ transplantation. But at the same time, it can pollute our breath as a silent killer. Carbon Monoxide can be used to induce brain death and coma to keep the body alive for several months to be used for organ removal for sales in the black market. See the motion picture Coma.
Propofol is a sedative used in many super specialty hospitals as a powerful pain killer with careful usage under strict medical supervision. This drug can be misused to finish a person's life without a trace as in the death case of the famous singer late Mr.Mike Jackson.
But it is not the purpose of this article to doubt every hospital. There are many hospitals and clinics offering dedicated medical services. But care should be taken before getting into a medical faculty for treatments, especially for surgical treatments.
Whenever going to a hospital for treatments take with you at least two trusted caretakers who is having some experience in hospital surroundings. Better they should be trustworthy and close blood relatives.
Go to a trusted doctor with manners and kindness. Choose hospitals with openness and good hospitality.
Choose hospitals that have minimum and reasonable charges.
Ask for reasons for every examination and test prescribed. Do not accept frequent radio examinations such as X-radiations.
Take care during the blood collection from your vein that the nurse is using new syringes and needles.
If an injection is prescribed do not accept the medicine after drawn inside the syringe and kept on the table for some time.  

Moral

Hence Head Weight, Power Thirsty, and Ego will lead life into disaster. This is the moral lesson one should learn from the death of Miss. Jayalalitha. 

 முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தரும் பாடம் 

இறைநம்பிக்கை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இப்போது இல்லை.ஆணவமும் அகங்காரமும் கர்வமும் தனக்கே உரியது என்ற கடவுளின் மமதையுடன் நிமிர்ந்து நின்ற அவரை மரணம் வீழ்த்தி விட்டது.
அவரது வீழ்ச்சியில் நாம் பெரும் பாடம் என்ன?எவ்வளவுதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மரணம் ஒருவரை வீழ்த்தியே தீரும் .திரு குர்ஆனில் the hypocrites (Al Munafiqun)என்ற அத்தியாயத்தில் 11 ஆவது வசனத்தில் இறைவன் கூறுகிறான் "தவணை வந்து விட்டது என்றால் ஒருவரது உயிரை எடுப்பதில் இறைவன் ஒரு போதும் பிற்படுத்த மாட்டான்"
ஜெயலலிதா மட்டுமல்ல எவரும் மரணத்தை எப்போது வரும் என்று அறிந்தவரல்ல.ஜெயலலிதா சரியான இறைநம்பிக்கை கொள்ள தவறிவிட்டார்.

அகந்தையும் ,கர்வமும்

அது பரவாயில்லை ஒருவருக்கு அகந்தையும் கர்வமும் வந்து விட்டதென்றால் அவர் நிச்சயிக்கப்பட்ட மரணத்தை விரும்புபவராக இருக்க மாட்டார்.அவர் விரும்பாத நிலையில் மரணம் வரும் போது அது  எவ்வளவு வேதனை தரும் என்பதை மரணிப்பவரே அறிவார்.காரணம் அகந்தை அறிவுக்கண்ணை மறைத்துவிடும்.சொந்த பந்தங்கள் இரத்த உறவுகளை கூட புறக்கணித்துவிடும்.நம்பத்தகாதவர்களை நம்பவைத்துவிடும்.இந்த நிலையில்தான் ஜெயலலிதா மரணம் அடைந்தார்.சிந்திப்பவர்கள் சிந்திப்பீர்களாக 
அது மட்டுமல்ல நாம் கொண்ட மமதை நல்லவர்களை கூட நம்மிடம் நெருங்க விடாது.பொறாமைக்காரர்கள் பகைவர்கள் ஆகியோரது பார்வையை நம் மீது திருப்பிவிடும்.நம்முடைய அகந்தை பகைவர்களை தேடித்தரும் .அவர்கள் நம்மை வீழ்த்தி நம் அதிகாரத்தை பறிக்க சந்தர்ப்பத்தை எதிர் பார்க்க வைத்துவிடும் .இதுதான் ஜெயலலிதாவின் வாழ்க்கையிலும் நடந்தது.
அகந்தையை விட்டுவிடுங்கள் .அனைவரையும் மதியுங்கள்.மரியாதை கொடுத்து மரியாதையை பெற்றுக்கொள்ளுங்கள்.மற்றவரின் சிறு சிறு தவறுகளை மன்னியுங்கள்.கர்வமும் பெருமையும் உங்களை ஆதரவற்றவராக்கிவிடும். ஆபத்தில் கொண்டு விட்டுவிடும்.தீயவர்களின் வலையில் வீழ்த்திவிடும்.

நல்ல நம்பிக்கை

நம்பிக்கையே வாழ்க்கை என்றாலும் அதிகப்பிரசங்கித்தனமான நம்பிக்கை ஆபத்தில் கொண்டு விட்டு விடும் என்பது ஜெயலலிதாவின் மரணம் தரும் ஒரு பாடம் 

குடும்ப உறவுகள்

அதிகார மமதையில் தன்  இரத்த உறவுகளை புறக்கணித்தார் பேராசையூட்டிய கூடாத நட்பினை தன்னுடன் சேர்த்துக்கொண்டார்.

புகழாசை 

சென்னை நகரமே பெரும் வெள்ளத்தில் தவித்தபோது உதவிக்கரங்கள் நீட்ட வந்த அனைவருக்கும் அம்மாவின் ஸ்டிக்கர் ஒட்ட நிர்பந்திக்கட்டது.இதை செய்தவர்கள் ஜெயலலிதாவின் கூட நட்பினர்.அவரது தற்பெருமையை அறிந்தே அவர்கள் இப்படி ஒரு கேவலமான காரியத்தில் இறங்கினர்.ஜெலலிதாவின் புகழாசை அவரது கண்ணை மறைத்தது.மக்கள் பணத்தில் வாங்கிய மடிக்கணினிகள் தன் படத்தை போட்டு மமதை அடைந்தார்.அந்த மமதையும் இறுமாப்பும் இறுதியில் எந்த பலனையும் தரவில்லை ஒரு பிச்சைக்காரனை விடவும் மோசமாக ஆஸ்பத்திரியில் அடைபட்டு கிடந்தது வேதனைகளை அனுபவித்து கடைசியில் மாண்டதுதான் மிச்சம்.

அதிகாரமும் திமிரும்

அதிகாரமும் ஆங்காரம் அடுத்தவர்களை இழிவு படுத்துவதும் இந்த உலகத்தை விட்டு போகும் நேரத்தில் எந்த லாபத்தையும் எடுத்துப் போக விடாது 
மொத்தத்தில் அம்மா அப்பாவையும் தன்  சகோதரனையும் இழந்த ஜெயலலிதா,கல்யாண சுகமும் பொய்யாகிப்போனதில் வெறுப்படைந்து தன் வாழ்வை முடித்துக்கொள்ள அவர் தேர்ந்தெடுத்த பாதை கண்மூடித்தனமானது. தன்னை ஒரு சுதந்திரப்பறவையாக்கிக்கொண்டது . எல்லா நியதிகளையும் உடைத்து யுகதர்மங்களையும் மீறி ஒருவித அதிகார போதையில் மிதந்தது.
அந்த போதை தலைக்கேறியதால்தான்  தனக்கிருந்த ஆதரவான எம்ஜியாரை மும்முறை பகைத்துக்கொண்டார்.
எனவே பேராசையும் தான்தோன்றித்தனமும் ஒருவரை எவ்வளவு பெரிய ஆபத்திலும் கொண்டு விட்டுவிடும் என்பது  ஜெயலலிதாவின் மரணம் தரும் மிகச்சிறந்த பாடம் ஆகும்



 

திங்கள், 2 ஜனவரி, 2017

முதல்வர் ஒருவரின் மர்ம மரணம் தொடர்கிறது

 தமிழ் நாடு -நரகத்தை நோக்கி 

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது ஒரு போதும் கருணாநிதியுடனும் திமுக வுடனும் பரிவோ சமாதானமோ பாராட்டியதில்லை .அவர்களது துயரங்களில் கூட பங்கெடுத்ததுமில்லை பகிர்ந்து கொண்டதுமில்லை முரசொலி மாறன் மரணம்,கருணாநிதி நோய்வாய் பட்டு சக்கர நாற்காலியில் அமர்ந்தது என்று எதையும் அவர் பொருட்படுத்தியதில்லை முரசொலி மாறன் மரணத்திற்கு போயஸ் தோட்டத்தில் இனிப்பு பரிமாற்றத்துடன் கொண்டாட்டங்கள் நடந்ததாக கூட செய்திகள் கசிந்தன.கருணாநிதியின் சக்கரநாற்காலி உலாவை பொதிமூட்டையை நாற்காலியில் சுற்றவைத்திருப்பதுபோல் இருக்கிறது என்று ஜெயலலிதா கிண்டல் பண்ணியதாக கூட சில வதந்திகள் பரவின.
ஆனால் சமீபத்தில் கருணாநிதியை காவேரி ஆஸ்பத்திரியில் சேர்த்த போது  சசிகலா தம்பிதுரையை அங்கு அனுப்பி துயரத்தை பகிர்ந்து கொண்டார் ஜெயலலிதாவை ஸ்டாலின்  அப்போலோ வந்து விசாரித்து சென்றதற்கு பகரம் என்றாலும் ஒரு நெருடல் இருக்கத்தான் செய்கிறது.பார்த்தீர்களா நான் ஜெயலலிதா மாதிரி இல்லை.நாகரீகம் தெரிந்தவள் என்று சொல்வது மாதிரி இல்லை?எனவே நமக்குள் மோதல் வேண்டாம்.எங்கள்  முதுகை நீங்கள் சொரிய வேண்டாம் உங்கள் முதுகை நாங்கள் சொரிய மாட்டோம் ஏனென்றால் நம் இருவர் முதுகிலும் அவ்வளவு அழுக்கு மண்டிக்கிடக்கிறது.
இந்த compramise க்கு திமுக எவ்வளவு தூரம் ஒத்து வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
ஏனென்றால் சசிகலாவின் துவக்கம் திமுகவிலிருந்துதான் ஆரம்பிக்கிறது.அவரின் ஆதிக்கம் ஜெயலலிதாவில்  துவங்குகிறது அதன் உச்சம் ஜெயலலிதாவின் மரணத்திலிருந்து துவங்குகிறது.எனவே சசிகலாவின் ஒவ்வொரு கட்டமும் வேறு வேறு கோணங்களில் இருந்து துவங்குகிறது எனவே ஜெயலலிதாவில் இருந்து இவர் வித்தியாசமானவர்.
இப்பொழுது ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் சசிகலாவுக்கு ஒரு சோதனை.அது எப்படியாவது மறக்கப்பட வேண்டும் அப்போதுதான் எல்லாம் சரியாகும்
இதில் திமுகவை சரிகட்டிவிட்டால் போதும் மற்றபடி தமிழ்நாடு என்பது 99% மண்டூகங்களை கொண்ட ஒரு மாநிலம்.இந்த கழிசடை மாக்கள் கருணாநிதியின் அழிச்சாட்டியங்களையே மறந்து மன்னித்தவர்கள்.ஜெயலலிதா கொலையுண்டிருந்தால் கூட அதை அவர்கள் பொருட்படுத்த போவது இல்லை.அவர்களுக்கு கீதாவையும் தெரியாது.தீபாவையும் தெரியாது.இந்த மாக்களை ஆட்சி செய்ய எத்தனை கொலை கொள்ளைகளை செய்தாலும் குவாட்டரும் தீனியும் கொடுத்தால் போதும் ஒட்டு வாங்கிவிடலாம்
நிலைமை இப்படி இருக்க மத்தியிலுள்ள பிஜேபி வேறு கோணத்தில் இருந்து இவர்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம்.அதை சசிகலா சுலபமாக சமாளித்து விடுவார்.இப்போதே மத்திய திட்டங்களில் எதை எல்லாம் ஜெயலலிதா எதிர்த்தாரோ அதிலெல்லாம் மவுனமாக ஓ பி எஸ் அரசு தலையாட்டி கையெழுத்திட்டிருக்கிறது
ஆனால் காவிரி முல்லை பெரியார் போன்ற நதி நீர் பிரச்சினைகளில் என்ன செய்யப்போகிறார்களோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.
நிச்சயமாக ஓபிஎஸ் மத்திய அரசை பகைக்க முடியாது ஆனால் அதே நேரம் சசிகலாவுக்கு அடங்கியே இருக்க வேண்டும் காலப்போக்கில் அவர் பதவியை சசிகலாவிடம் இழக்கவும் நேரிடலாம்
சசிகலாவை பொறுத்தவரை ஜெயலலிதாவின் மரணத்திலுள்ள மர்மங்கள் வெளிப்படாதவரை அவர் சந்தேகத்திற்கு உரியவர்.அவர் பின்னால் இருந்து இயக்குபவர் அவரது கணவர் நடராஜன்.சசிகலாவின்  மூளையாக இயங்குபவர்.சூத்திரங்கள் அமைத்துக்கொடுக்கும் சூத்திரதாரி ஒரு குள்ள நரி.
வினைக்கு துணை போனவனும்  வினை அறுப்பான் என்ற நிலைதான் ஒபிஸிற்கு.ஜெயலலிதாவை ஒழிக்க சசியுடன் துணை நின்றதால் தக்க சமயத்தில் அவர் பதவியையே பறிகொடுக்கப்போகும்  நிலையில் இப்போது  தவிக்கலாம் இல்லை என்றால் அவருக்கும் ஜெயலலிதாவின் கதியே ஏற்படும்
ஓபிஎஸ் தானும் சசிகலாவின் தேவர் குளத்தை சேர்ந்தவன் என ஆறுதல் அடையலாம்.ஆனால் மிஸஸ் நடராஜனுக்கு குடும்பம் தான் பெரிதே தவிர குலமெல்லாம் இரண்டாம் பட்சம்தான் என்று போக போக தெரிந்துகொள்வார்
இனி தமிழகம் ஒரு மாபியா கும்பலின் கைகளில் முழுக்க முழுக்க போவதை யாராலும் தடுக்க முடியாது
சசிகலா நடராஜன் கட்சி பொறுப்பேற்பதை ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பவர்களில் ஒருவர் முன்னாள் அதிமுக எம்பி சசிகலா புஷ்பா.இவரது கணவர் லிங்கேஸ்வரன்.இருவரும் சேர்ந்து சசிகலா நடராஜன் மீது அவர் கட்சியில் சேர்ந்து ஐந்து வருடங்கள் கூட ஆகாத நிலையில் அவர் கட்சி தலைமை பொறுப்பு ஏற்க முடியாது என்று சென்னை ஹைகோர்ட்டில் போட்ட வழக்கின் தீர்ப்பு வர இருக்கிறது.இதற்கிடையில் கட்சி தலைமைப்பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்ய கட்சி தலைமையகத்திற்கு சென்ற இடத்தில் சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன் மற்றும் அவரது வக்கீல் ஆகியோர் கொலை வெறியுடன் அதிமுக மெம்பர்களால் தாக்கப்பட்டு இருக்கிறார்கள் இதுவும் கோர்ட்டில் தெரிவிக்க பட்டு இருக்கிறது.
தீர்ப்பு எப்படி இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை
ஏனென்றால் இந்தியாவில் நீதிபதிகள் நீதிபதிகளாக இல்லை.நீதி வளைந்து கொண்டேதான் இருக்கிறது குற்றவாளிகள் சாட்சியங்களை வளைத்து தப்பித்துக்கொள்கிறார்கள்.பணம் நீதியை கொன்றுவிடுகிறது.நீதிபதிகளும் மேலிடங்களை பகைத்துக்கொள்ள தயங்குகிறார்கள் .
மக்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்.அதிலும் குறிப்பாக தமிழக மக்கள் எதையும் தூர நோக்குடன் பார்ப்பதில்லை.குறுகிய கண்ணோட்டம் உடையவர்கள்.எதையும் மாநில கண்ணோட்டத்துடன் பார்ப்பதில்லை தன்  வீடு,தன் சம்பாத்தியம்,தன்  குடும்பம் தன்  மக்கள் என்ற சுயநல குறுகிய கண்ணோட்டமே இவர்களிடம் இருக்கிறது.பக்கத்தில் உள்ள மாநிலத்தவரை பார்த்தும் கூட இவர்கள் பாடம் படிப்பதில்லை.ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் தான் மகா புத்திசாலி என்று காட்டிக்கொள்ள அவனை வாரி விடக்கூட தயங்க மாட்டான்.ஆனால் இன்னொருத்தன் காலை நக்கி தன சுய நலன்களை பார்த்துக்கொள்வான்.அதனால்தான் தமிழர்களை நாம் 99%சுரணைகெட்ட மாக்கள் என்று இதே கட்டுரையில் நாம் முன்னர் குறிப்பிட்டு இருந்தோம்
இதோ பாருங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் ஏன்? எதற்க்காக? எப்படி நடந்தது? என்று அறிய எந்த ஒரு தமிழனும் கொதித்து எழவில்லை.இது தங்களுக்கு தேவையற்றது என்று நினைக்கிறார்கள் ஆனால் இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது.இதில் நம்முடைய மாநிலத்தின் எதிர்காலமே அடங்கி இருக்கிறது.இவர்களுடைய இந்த மெத்தனப்போக்கால் எவ்வளவு அசிங்கங்களை கேவலங்களும் அரங்கேறுகின்றன.அரசியலுக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத இந்த சசிகலா சின்னம்மா என்ற பட்டத்துடன் அதிமுக பொது செயலாளராக பதவி ஏற்கிறார் .அவரது எழுதிக்கொடுக்கப்பட்டு வாசிக்கப்பட்ட கன்னி ப்பேச்சில் "மக்களால் நான் .." என்கிறார்.இவரை எந்த தொகுதி மக்கள் எங்கே எப்போது தேர்ந்தெடுத்தார்கள் இவர் மக்களால் நான் என்று புழுகுவதற்கு .காரணம் நாம் கொடுக்கிற தைரியம்தான்.
அது மட்டுமல்ல மீடியாக்களும் பணம் பொறுக்கித்தின்னும் பொறுப்பற்ற நாய்களாகவே இருக்கின்றன.
ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை என்ன? 75 நாட்கள் அப்போல்லோவில் என்ன நடப்பு? என்ற கேள்விகளுக்கெல்லாம் மனம் திறக்கிறார் சசிகலா அத்தனை கேள்விகளுக்கும் செருப்படி பதில் என்ற தலைப்பில் ஊடகங்களில் வந்த செய்திகளை கண்டு நாமும் துணுக்குற்றோம் ஆனால் அந்த செய்திகளில் வரிக்கு வரி மனம் திறக்கிறேன் என்ற பெயரில் ஒப்புக்கு சப்பாணி கொட்டி இருந்தார்  சசிகலா.
உண்மையில் இந்த காரியத்தில் சசிகலா உண்மையாளர் ஆக இருந்தால் செப் 22 முதல் டிசம்பர் 5 ஆம் தேதி வரை நடந்த ஜெயலலிதா சம்பந்தப்பட்ட அத்தனை நடப்புகளையும் வீடியோ காட்சிகளுடன் ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு இருக்க வேண்டும்.இதை எல்லாம் நாம் கேட்பதற்கு ஆர்ப்பரிக்க வேண்டாமா?
அதை விட்டு விட்டு ஜல்லிக்கட்டு வேண்டும் என்று ஆர்ப்பார்க்கிறீர்களே.வெட்கமாக இல்லை.தமிழனின் வீர விளையாட்டு என்கிறீர்கள் உடனே நீதிபதி அப்படியானால் ஒரு சிங்கத்தை தருகிறோம் உங்கள் வீரத்தை காட்டுங்கள் என்றவுடன்  டோனை மாற்றி இல்லை இல்லை எங்கள்  பாரம்பரிய விளையாட்டு என்கிறீர்கள் வெட்க கேடு .
இப்படி மற்றவர்கள் நம்மை ஏளனப்படுத்தும் அளவுக்கு ஏன் நடந்து கொள்ள வேண்டும் ஜல்லிக்கட்டு ஒரு வீர விளையாட்டு என்றே வைத்து கொள்வோம் அது நடக்க வில்லை என்றால் தமிழத்திற்கு என்ன நஷ்டம் ஒரு நஷ்டமும் இல்லை
அதே சமையம் காவிரி உட்பட மேற்கிலிருந்து பாயும் நதிகள் அடை  பட்டால் நமக்கு பெருத்த நஷ்டம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர் ஜெயலலிதா.அவர் நோய்  வாய்ப்பட்டதிலிருந்து அவர் எப்படி இறந்தார் என்பது வரை ஒரு பெரிய கேள்விக்குறி நம் முன் சிலையாக நிற்க அது பற்றி நாம் ஆர்ப்பரிக்க வில்லை என்றால் நம்மை நாமே நரகத்திற்கு இட்டு செல்வது ஆகாதா.
எவ்வளவு பெரிய பூசணிக்காயை சோற்றில் மறைக்கப்பார்க்கிறார் சசிகலா.இவர் நம்மை நாளை ஆளப்போகும் முதல்வர் ஆகவும் முடி சூடுவார் என்றால் நிச்சயம் இந்த மாநிலம் நரகத்தை நோக்கித்த்தான் போகும் என்பதில் சந்தேகம் இல்லை





வியாழன், 29 டிசம்பர், 2016

முதல்வர் ஒருவரின் மர்ம மரணம்-உணர்வுக்கு ஒரு மறுப்பு

 உணர்வுக்கு ஒரு மறுப்பு 

மறைந்த தமிழக முதல்வரின் மரணத்தில் மர்மம் ஏதும் இல்லை அது இயற்கையாக நோய்வாய் பட்டு இறந்ததுதான் .அதில் திருமதி சசிகலாவுக்கோ அல்லது வேறு யாருக்குமோ ஏதும் பங்கு இருக்க முடியாது.மற்றபடி அதற்க்கு பின் நடந்த அத்தனை சம்பவங்களும் யதார்த்தமானதுதான்.இப்படி ஒரு சில ஊடகங்கள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றன.
நாம் இங்கு தெரிவிக்கும் அபிப்பிராயம் அதற்க்கு நேர் மாறாகவே இருக்கும்.ஆனால் நாம் யாருடைய சார்பிலும் இல்லை.யாருக்கும் எதிராகவும் இல்லை.
சமீபத்தில் வெளிவந்த உணர்வு பத்திரிகையில் ஜனாப் பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் ஜெயலலிதாவின் மரணம் எதார்த்தமானதுதான் அதில் சந்தேகப்படும்படி எதுவும் இல்லை என்று சில  விவரங்களை தந்திருக்கிறார் அதோடு அதில் நாம் திருப்தி பட்டால் சரி இல்லை என்றால் மவ்னம் காக்கவும் என்று எழுதி இருக்கிறார் அது ஏன் என்று புரியவில்லை.ஒரு வேளை உண்மையை கூறினால் ஆபத்து என்ற எச்சரிக்கையா என்னவோ தெரியாது.எனவே அவர் கூட சரியான நிலையை எடுக்க தயங்கி இருப்பார் போலும்.ஆனால் மர்மத்தை கண்டு நாம் தலை குனிந்து மவுனியாக இருக்க முடியாது.
முதலாவது  ஜெயலலிதா ஒரு நடிகை சும்மா வீட்டில் இருக்கும் போதே நவநாகரீக மேக்கப்புடன் ஜொலித்துக்கொண்டிருப்பார்.எனவே நீண்ட நாள் ஆஸ்பத்திரி  சிகிச்சையில் வாடி வதங்கிப்போன தன் உடலை விளம்பரப்படுத்த அவர் விரும்ப மாட்டார் இந்த எண்ணத்தில் ஒரு வேளை  அவரை சசிகலாவை தவிர வேறு யாரும் பார்க்கவோ பேசவோ அல்லது காட்சிகளாக வெளிப்படுத்தவோ தயங்கி இருக்கலாம் என்று பிஜே அவர்கள் எழுதி இருக்கிறார்கள்.இது அவரது யூகம் .ஆனால் அவரது யூகம்  எவ்வளவு பெரிய தவறு என்பதை ஜெயலலிதா சந்தனப்பேழையில் சவமாக தளதள மினு மினு ஜொலிப்புடன் எந்த வாட்டமும் மெலிவும் இல்லாத பொலிவுடன் வெளிப்பட்டதை அவர் ஊடகங்களில் காண வில்லையா?
அவர் நோய்  வாய் பட்ட மாதிரியோ அல்லது அசதி களைப்பு மெலிவு வாட்டம் என்ற எந்த நிலையிலும் அவரது மேனி காட்சி தரவில்லையே..வாய் மட்டும் மூட முடியாத நிலையில் இருந்ததே ஏன்?எதை கண்டு வாய் பிளந்தார்?அல்லது என்ன செய்து வாய் பிளக்கப்பட்டது?
லண்டன் டாக்டர்களாக இருக்கட்டும் எய்ம்ஸ் டாக்டர்களாக இருக்கட்டும் அவர்களும் ஆசா பாசங்கள் நிறைந்த மனிதர்கள் தானே அப்போலோ நிர்வாகியும் மருத்துவருமான டாக்டர் பிரதாப் ரெட்டியே நம்பகத்தன்மை இல்லாது முன்னுக்குப்பின் முரணான அறிக்கைகளை தந்தந்தை நாம் காண்கிறோமே?டெல்லி அப்பல்லோ ஆஸ்பத்திரி தவறான பிரசவ அறுவை சிகிச்சை செய்து ஒரு பெண்ணின் இறப்புக்கு காரணமாகி கோர்ட்டில் ஒரு கோடி ரூபாயை அபராதமாக வாங்கி கட்டிக்கொண்டதுதானே இவர்களை நம்பச்சொல்கிறீர்களா?
சரி ஒரு பேச்சுக்கு வைப்போம் லண்டன் டாக்டரும் எய்ம்ஸ் டாக்டர்களும் சுத்தமான ஜென்மங்கள் என்றே வைப்போம்.ஆனால் அவர்கள் வந்தது பார்த்தது எல்லாம் மரணம் நிகழ்வதற்கு ஒரு நீண்ட நாட்களுக்கு முற்பட்டவை ஆகும் .பிறகு நிகழ்ந்தது என்ன?
அவர் உறுப்புகள் நன்றாக இயங்குகின்றன.,சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைக்கிறார் திட உணவுகளை சாப்பிடுகிறார். சுய நினைவுடன் இருக்கிறார் நான் மறு  பிறவி எடுத்திருக்கிறேன் என்றார் இந்த நிலையில் தான் இடைத்தேர்தல் வருகிறது ஆனால் தேர்தல் விண்ணப்பங்களில் அவர் கை  ரேகை இட்டதேன்?நன்றாக பேசும் அளவு திடமிருக்கும் போது  கையெழுத்து போடலாமே?
75 நாட்களில் சசி கலா வைத்தவிர ஒருவரையும் பார்க்க அனுமதிக்காதது ஏன்?சசிகலா என்ன டாக்டரா அல்லது ரத்த உறவா?
ஜெயலலிதா சசிகலா கூட்டத்திற்கு ஒரு பொன் முட்டை இடும் வாத்து எனவே அவர்கள் அவரை கொல்லும்  அளவிற்கு போக மாட்டார்கள் என்று ஜனாப் பிஜே அவர்கள் யூகித்திருக்கிறார்கள்
ஒன்று  சொல்கிறேன்.ஜெயலலிதா ஒரு பொன்  முட்டை போடும் வாத்தாக இருந்திருக்கலாம்.ஆனால் அவர் பொன் முட்டை இட்டது சசிகலாவை தன்  வசதிக்கு பயன் படுத்திக்கொள்ளலாம் என்றுதான்.ஆனால் சசிகலாவின் பின்பலத்தை ஜெயலலிதா சரியாக கணக்கிடவில்லை.தன்  விருப்பத்திற்கு அவரை வெளியேற்றலாம் அல்லது சேர்த்துக்கொள்ளலாம் என்று தப்புக்கணக்கு போட்டிருக்கிறார்.
ஒரு முறை சசிகலாவை வெளியேற்றியும் இருக்கிறார்.அதாவது ஒரு முறை வாத்து என்னால் கூமுட்டையும் தர முடியும் என்று காட்டி இருக்கிறது.அந்த தடவை சசிகலா சரியான முன் தயாரிப்புடன் இருந்திருக்க மாட்டார்.வெளியேறி இருப்பார்.பிறகு ஜெயலலிதாவின் மனமறிந்து ஒரு நாடகமாடி அழுது மன்னிப்புக்கடிதம் தந்து சரியான பின் பலத்துடன் சரியான தருணத்தை எதிர்பார்த்து மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்திருக்கிறார்.
2011 -இல் வெளியேற்றப்பட்டார்.அதே ஆண்டு மீண்டும் உள்ளே வந்தார்.2012 இல் சசிகலா ஜெயலலிதாவிற்கு மெல்ல கொல்லும்  விஷம் தந்ததாக தெஹல்காவில் ஒரு செய்தி.வெறும் யூகம் தான் ஆதாரம் இல்லை ஆனால் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு சசிகலாவின் அசைவுகள் அந்த யூகத்தை ஊர்ஜிதப்படுத்துகிற மாதிரி உள்ளனவே
இரவு பதினோரு மணிக்கு மரணச்செய்தி வெளிவருமுன் அதே 5-12-16 மாலை மூன்று மணிக்கு அவசர அவசரமாக அதிமுக பொது குழு  கூடுகிறது மாலை 5.30க்கு இன்னார் இன்னார் மந்திரிகள் என்று முடிவெடுக்கப்படுகிறது மறுநாள் பன்னீர் எந்த துக்கமும் இல்லாமல் முதல்வராக முடி சூட்டிக்கொள்கிறார் இன்று சசிகலா அதிமுகவின் தலைமை பொறுப்புக்கும் வந்து நிற்கிறார்  ஜெயலலிதாவின் வாரிசுகள் உயிருடன் இருக்க ஜெயலலிதாவின் அம்மா வாங்கிய நிலத்தில் ஜெயலலிதா சினிமா நடிகையாக உழைத்து சம்பாதித்த அவரது வீட்டை இரத்த சம்பந்தமில்லாத யாரோ ஒரு சசிகலா சொந்தமாக்கிக்கொண்டாரே.இது ஒன்று போதாதா ஜெயலலிதாவின் சாவு மர்மம் நிறைந்ததுதான் என்று சொல்ல.
மேலும் 5-12-16 பின்னேரம் இரவு 11.30 க்கு இறந்ததாக அறிவிக்கிறார்கள்.மறுநாள் 6-12-16 மாலை 4.30 க்கு அடக்கம் பண்ணிவிட்டார்கள் ஒரு 12 மணிநேரம் கூட முழுசாக இல்லையே.பின்னே எதற்கு வருடக்கணக்கில் பிரேதத்தை கெடாமல் காக்கும் EMBALMING செய்து அவரது உடலை பத்திரப்படுத்த வேண்டும்.யாருக்காக ஜெயலலிதாவின் ஜொலிக்கும் அழகை பக்கத்திலே படுத்திருக்கும் எம்ஜியார் பார்த்து பூரிக்கவா?
ஜெயலலிதாவின் சாவுக்கு விடை சசிகலாவின் முகத்திலும் நடராஜனின் கண்களிலும் எழுதி அப்பி ஒட்டப்பட்டு இருக்கிறது

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...