நோய் தடுப்பு மருத்துவம் -VACCINOLOGY
நோய் தடுப்பு மருத்துவம் என்பது உடலில் நோய் எதிர்ப்பாற்றலை தூண்டி அதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்று நோயை தடுப்பதற்காக உடலினுள் அதே நோய் கிருமியை பலஹீனப்படுத்தியோ, செயலற்றதாக்கியோ, அதனை பகுதியாகவோ,அல்லது அதன் நஞ்சையோ செலுத்தி மருத்துவம் செய்யும் முறை ஆகும்.
தடுப்பேற்ற வகைகள்
அ.உயிருள்ள வீரியம் குறைக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் :-
இவற்றில் எந்த நோய்க்கு தடுப்பு தேவையோ அந்த நோய் கிருமிகளையே பல வழிகளில் பாதித்து அதன் வீரியத்தை குறைத்து வைத்து தயாரிப்பது ஆகும்.
(உதாரணங்கள்):-
MMR (Measles, Mumps, Rubella) வேக்சின்,
தட்டம்மை, சின்னம்மை, வைசூரி, ரோட்டா வைரஸ் வேக்சின், மஞ்சள் காய்ச்சல் தடுப்பு (Yellow Fever Vaccine)
தயாரிக்கும் பொறியியல்
 |
படம் -1 |
இந்த பொறியியலில் வீரியமுள்ள வைரஸை முதலில் கோழி முட்டை கருவின் நார்முகை (FIBROBLAST CELLS) செல்களில் திரும்பத்திரும்ப செலுத்தி அந்த செல்களை பாதிக்கிறார்கள்.முதன் முதலில் அந்த செல்களுக்குள் சென்ற வைரஸ் திகைத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக தன் உருவத்தையும் பாரம்பரியத்தையும் புதிய சூழலுக்கு ஏற்ற மாதிரி மாற்ற துவங்குகிறது. இவ்வாறு கோழிக்கருவை தாக்கும் முகமாக அதன் வீரியம் மாற மாற மனித செல்களை பாதிக்கும் அதன் வீரியம் மங்கத்துவங்குகிறது.கோழிக்கரு செல்களை தாக்குவதற்காக ஒரு தட்டையான வட்டக்கிண்ணத்தில் அந்த செல்களை பரப்பி ஆயிரக்கணக்கில் வைரஸ்களை அதில் மேய விட்டாலும் பெரும்பாலான வைரஸ்கள் அதை தாக்குவதில்லை.சில நூறு வைரஸ்களே அதனுள்ளே போகின்றன.அவ்வாறு போகும் வைரஸ்களைத்தான் அவர்கள் பிரித்தெடுத்து திருப்பி திருப்பி செல்களை வரிசையாக ஊடுருவ வைத்து அதன் வீரியத்தை குறைக்கிறார்கள் (படம் -1).குறிப்பிட்ட இலக்கில் அதன் வீரியம் குறைந்த பிறகு அதை கொண்டு வேக்சின் தயாரிக்கிறார்கள்.
இந்த தடுப்பு முறையின் நன்மை தீமைகள் :-
அ .நன்மைகள்
1.உயிருள்ள வைரஸ் இதில் இருப்பதால் உடலில் எதிர்ப்பு சக்தி உடனடியாகவும் நீண்ட காலம் நிலைத்திருக்குமாறும் உண்டாகும்
2.இவ்வகை வேக்சின்களை ஊசி மூலம் மட்டுமில்லாமல் வாய்,மூக்கு மற்றும் தோல் ஒட்டு பிளாஸ்திரி போன்ற வசதிகள் மூலமும் செலுத்தலாம்.
3.சளி யில் ஏற்படும் IgA மற்றும் இரத்தத்தில் இருக்கும் IgG போன்ற நோய் எதிர்ப்பான்களும் அபரிமிதமாக உற்பத்தியாகும்
4.உடலின் இயல்பு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
5.விஷக்கிருமிகளை அழிக்கக்கூடிய T-cell வெள்ளை அணுக்களும் உற்பத்தியாகும்
6.ஒரு டோஸ் போதும் நீண்ட நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்
ஆ தீமைகள் :-
1.உயிரோடு வீரியம் குறைந்த நிலையில் இருந்தாலும் திரும்பவும் பழைய வீரியம் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு
2.பலவீனமானார்கள் ,எயிட்ஸ் போன்ற நோயாளிகள் ,உறுப்பு மாற்றம் செய்தவர்கள் இவர்களுக்கு இந்த முறை ஏற்றதல்ல.
கொரோனாவிற்கு இந்த முறையை இதுவரை யாரும் பயன்படுத்தவில்லை
ஆ உயிரற்ற தடுப்புமருந்துகள் :
இந்த வகை தடுப்பு மருந்துகளில் நோய் கிருமியை முற்றிலும் செயலிழக்கவைத்து தயாரிக்கிறார்கள் .
இந்தியாவில் கோவிட் 19 நோய்க்காக ஐதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் இண்டெர்நேஷனல் லிமிடட் கம்பெனி (BBIL) இந்திய மருத்துவ கழகத்தின் வழிகாட்டுதலுடன் இதை தயாரித்து இருக்கிறார்கள்.
இதன் தயாரிப்பு பொறியியல் :
 |
படம் -2 |
பல முறைகளில் வைரஸை செயலிழக்கச்செய்கிறார்கள்.அவற்றில் மூன்று முறைகளை மட்டும் இங்கு நாம் பார்க்கலாம்.1.வெப்பமூட்டுதல் :
ஒரு மிகச்சிறிய 320μl அளவு தீநுண்கிருமி திரவத்தை 1.5ml பாலிப்ரோபைலினாலான ஒரு கிரையோ டியூபில் எடுத்துக்கொண்டு அதை 75 டிகிரி செல்ஸியசில் 45 நிமிடம் அடைகாக்கவேண்டும் (INCUBATION). பார்க்க படம் -2.
2.புறஊதாக்கதிர் முறை :
இந்த முறையில் படம் -2 இல் உள்ளதுபோல் 2மில்லி அளவு வைரஸ் கரைசலை 24 தட்டைகளில் வைத்து புறஊதாக்கதிரை அவற்றின் மீது பாய்ச்ச வேண்டும்.
முதலில் ஒவொரு பிளேட்டிலும் வைரஸ் கரைசலை 1செ.மீ உயரத்திற்கு ஊற்றி புறஊதாக்கதிர் விளக்கை தட்டின் அடியிலிருந்து 3செ.மீ உயரத்தில் இருக்கும்படி வைக்கவேண்டும்.சுமார் 250நானோமீட்டர் அலைநீளமுள்ள புறஊதா -C கதிர்வீச்சை அதில் சுமார் 15 நிமிடங்கள் பாய்ச்ச வேண்டும்.
3.பார்மாலிடிஹைடு முறை:-
இந்த முறையில் பார்மாலிடிஹைடு 1:4000 அடர்த்தியில் 37டிகிரி செல்ஷியஸில் 24 மணிநேரம் வைரஸ் கரைசலை இன்குபேட் செய்யவேண்டும் .
நன்மைகள் :-
1.மிகவும் பாதுகாப்பானது
2.சுலபமாக தயாரிக்கலாம்
3.குழந்தைகள் முதல் பெரியவர் நோயாளிகள் பலஹீனர்கள் என்று எல்லோருக்கும் பொருந்தும்
4.சுலபமாக சேமிக்கலாம்.
5.நீண்ட நாள் கெடாமல் இருக்கும்
பிரதிகூலங்கள்:
1.பலஹீனமான நோய் எதிர்ப்பு சக்தி
2.குறுகியகால நோய் எதிர்ப்பு சக்தி
3.பூஸ்டர் டோஸ்கள் தேவைப்படும்
இ .மறுசீரமைப்பு தடுப்பு மருந்துகள்
 |
படம்-3 |
இந்த முறை மிகவும் பாதுகாப்பான முறை ஆகும்.
ஆக்ஸ்பார்ட் பல்கலைக்கழகம் கொரோனா வைரஸ் வாக்சினை இந்த முறையில்தான் தயாரித்திருக்கிறார்கள்.
இந்த முறையில் தயாரிக்கப்படும் தடுப்பு மருந்து ஓரளவு பாதுகாப்பானதுதான். இதன் தயாரிப்பு முறையை பார்க்கலாம்.
சிம்பன்சி அடினோவைரஸ் என்ற வைரஸ்தான் இதன் அடிப்படை. இந்த வைரஸ் ஆபத்தில்லாதது. இது மனிதன் மற்றும் ஆபிரிக்க சிம்பன்சி குரங்குகளுக்கு சாதாரண ஜலதோஷத்தை உண்டாக்கக்கூடியதாகும்.
கொரோனா வைரஸில் நான்குவகை புரதங்கள் உண்டு.
1.மேல் கூடு
2.உட்கூடு
3.உட்கூட்டினுள் இருக்கும் RNA என்ற கரு அமிலம்
4.மேல்கூட்டின் மேல் சிறு சிறு முட்கள் போல் படர்ந்திருக்கும் Spike எனப்படும் S-புரதங்கள்.
இந்த ஒவ்வொரு புரதங்களிலும் விதம் விதமாக விசேஷ மரபுக்குறிப்புகள் பொதியப்பட்டு இருக்கும்.
அதில் மிக விசேஷமாக மரபுக்குறிப்புகள் பொதியப்பட்ட இடம் தான் S-புரதங்களாகும்.
இந்த S-புரதங்களில் ஒருசிலவற்றை அதன் மரபுக்குறிப்புகளோடு பிரித்தெடுத்து இந்த சிபென்சி அடினோவைரஸுடன் இணைத்து உருவாக்கியதுதான் இந்த
AZD1222 என்ற இந்த வாக்சின்.
சூத்திரம் :-
 |
படம் 3அ |
இந்த தடுப்பு மருந்தைஆக்ஸ்பார்ட் பல்கலைக்கழகம் மார்ச் 2020 மாதம் தயாரித்து முடிந்துவிட்டது.இந்த தயாரிப்புக்கு சூத்திரம் அமைத்து கொடுத்தது ஆக்ஸ்பர்ட்டின் துணை நிறுவனமான
VACCITECH என்ற நிறுவனமாகும்.
இதன் உரிமத்தை ASTRA ZENICA என்ற சுவிஸ் பிரிட்டிஷ் மருந்து கம்பெனி கடந்த ஏப்ரல் மாதம் 2020 இல் பதிவு செய்து பெற்றுக்கொண்டது.இந்தியாவில் இதை தயாரித்து வெளியிட சீரம் இந்தியா லிமிடெட்(SIL) விண்ணப்பித்து இருக்கிறது.இப்போதைக்கு இதன் பரிசோதனை முயற்சிகள் இரண்டு கட்டங்களாக நிறைவேறி இருக்கின்றன.மூன்றாவது கட்டம் இப்பொழுது நடைமுறையில் இருக்கிறது.இது இந்த கட்டுரையின் இறுதியில் தெளிவாக காணலாம். இந்த வாக்ஸினுக்கு முதலில் ChAdOx1nCoV என்ற பெயர் வைக்கப்பட்டது. பிறகு அதை மாற்றிAZD-1222 என்று பெயரை மாற்றினார்கள். இப்போது அதையும் மாற்றி COVISHIELD என்று பெயர் மாற்றி இருக்கிறார்கள்
DNA தடுப்புமருந்து பொறியியல்  |
படம் 4 |
இந்த வகை தடுப்பு மருந்துகள் தயாரிப்பதற்கு மிக எளிமையானவை மட்டுமல்ல மிக மலிவாக தயாரிக்கலாம். ஆனால் இவை மனித உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை அளிக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.மேலே படம் -4ஐ கவனிக்கவும் இதன் தயாரிப்பு முறையின் வடிவமைப்பு தரப்பட்டு இருக்கிறது
எல்லா செல்களுக்குள்ளும் அதன் கருவில் இரண்டு வகையான DNA கருஅமிலங்கள் இருக்கின்றன.
1.குரோமோசோம் டி.என்.ஏ
2.பிளாஸ்மிட் டி.என்.ஏ
இந்த பிளாஸ்மிட் DNA தான் இந்த தயாரிப்பில் பயன்படுகிறது. காரணம் அது ஆபத்தான நோய் உண்டாக்கும் முறையில் விருத்தி அடையாது.மற்றபடி ஒரு தீநுண்கிருமிக்கு உண்டான அத்தனை மரபுக்குறிப்புகளும் அதில் இருக்கிறது.இந்த பிளாஸ்மிட் DNA செயற்கையாகவும் நுண்ணுயிரியல் சந்தைகளில் கிடைக்கின்றன.இதனுடைய சூத்திரம் மிகவும் சுலபம் தான் (பார்க்க படம் 4 )
ஒரு செல்லிலிருந்து பிளாஸ்மிட் DNA வை ரெஸ்ட்ரிக்ஷன் என்டோநியுக்ளி யேஸ் என்ற நொதியை பயன்படுத்தி பிரித்தெடுக்கிறார்கள் (படம்-4). அதே மாதிரி நொதியை பயன்படுத்தி எந்த வைரஸிற்கு எதிர்ப்புசக்தியை உண்டாக்கவேண்டுமோ அந்த வைரஸின் மரபணுக்குறிப்புகளை பிரித்தெடுக்கிறார்கள்.இதற்கு DNA INSERT என்று பெயர்.பிறகு இந்த DNA INSERT -ஐ பிளாஸ்மிட் DNA க்குள் DNA LIGASE என்ற நொதியை பயன்படுத்தி செருகி ஒரு புதிய செயற்கை வைரஸை உருவாக்குகிறார்கள் (படம் 4)
 |
படம் 4அ |
இந்த DNA தடுப்புமருந்தை ஊசி மூலம்தான் குத்த வேண்டும் என்பதில்லை.இதை மூக்கின் மூலம் உறிஞ்சக்கூடிய வகையில்
1. nasal spray ஆகவும் தயாரிக்கலாம்.
2.தோலில் ஒட்டும் வகையில் பிளாஸ்திரி போலும் தயாரிக்கலாம்
3.இந்த தடுப்பு மருந்தை தங்கத்துகள்களில் பதியவைத்து அந்த துகள்களை மிகு வேக ஹீலியம் வாயுக்கற்றைகள் மூலம் ஊசி இல்லாமல் உடலுக்குள் செலுத்தலாம் (படம் 4அ ).
தடுப்பு மருந்துகள் பரிசோதனை முயற்சிகள் :-
பொதுவாக தடுப்பு மருந்துகள் தயாரிப்பிலிருந்து அது சந்தைக்கு விற்பனைக்கு வருவதற்கிடையில் குறைந்த பட்சம் ஐந்து பரிசோதனைகளில் அது தேறி இருக்கவேண்டும். இதற்கு குறைந்த பட்சம் 18 மாதங்கள்.அதிக பட்சம் 5 வருடங்கள்.அதன் பாதுகாப்பின் உத்திரவாதம் அப்படிதான் நிர்ணயிக்கப்படவேண்டும் ஏனென்றால் மனித உயிர் என்பது பரிசோதனை பந்தாட்டத்தின் விளையாட்டுப்பொருள் அல்ல.
பரிசோதனை முயற்சிகள் எப்படி நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று குறிப்புகளாக பார்க்கலாம்
1.க்ளினிக்முன் முயற்சிகள் (PRECLINICAL TRIALS)
1.இது பொதுவாக வாக்சின் தயாரிப்பு கம்பெனிகள் தங்களுடைய பரிசோதனை கூடங்களில் மனிதனல்லாத பிற உயிரினங்களை மாதிரிகளாக கொண்டு நடத்தப்படுவது (உ-ம்)சுண்டெலிகள்,சீமை பெருச்சாளிகள்).இதை அவர்கள் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் முயற்சிக்கலாம்
2.முதல் மனித மாதிரி முயற்சி (பாதுகாப்பு முயற்சி) CLINICA TRIALS-Phase -I: (EFFICACY)
குறைந்த பட்சம் 25 பேர் கொண்ட ஒரு சேவகர் குழுவை உருவாக்ககவேண்டும் அதில் ஆரோக்கியமான நோய் நொடி இல்லாத 25 to 50 வயதிற்குட்பட்ட நபர்கள் இருக்கவேண்டும்.இது 1 முதல் 3மாதங்கள் வரை நடைபெறும்.இந்த முயற்சியில் அதிக பட்ச பலன்தரும் குறைந்தபட்ச மருந்தளவு (Minimum Dose with Maximum effect)கணிக்கப்படும்.
3.Phase -II : (SAFETY& EFFICACY)
இந்த முயற்சியில் 100 முதல் 300 பேர் வரை வயது வரம்பை தளர்த்தி (20 -85) ஒரு 3 முதல் 6 மாதங்கள் பரிசோதனை நடத்துவார்கள்.
4.Phase-III(Safety, EFFICACY, & EXTENDED ):
இந்த முயற்சியில் 3000 முதல் 5000 பேர் வரை வயது வரம்பு இல்லாமல் பரிசோதனை நடத்துவார்கள்.இதற்கு 1-5 வருடங்கள் வரை காலம் நிர்ணயிக்கப்படும்.
இதன் பிறகு மருந்து விற்பனைக்கு வரும்.
5.Post Clinical Trial
இந்த நிலை ஒரு வேறுபட்ட பரிசோதனை முயற்சியாகும்.அதாவது மேற்கூறிய நான்கு பரிசோதனை நிலைகளும் முடிந்த பிறகு தடுப்பு மருந்து மார்க்கெட்டுக்கு வந்துவிடும். இருப்பினும் அதன் செயல்பாடுகளை ஒரு ஐந்து வருடத்திற்கு உன்னிப்பாக கவனிப்பார்கள். அதில் திரட்டப்படும் தகவல்களை வைத்து அதை மேலும் தொடரலாமா அல்லது வேண்டாமா என்ற முடிவுக்கு வருவார்கள்
இப்போது ஒரு விஷயம் நாம் சிந்திக்கவேண்டும்.
கொரோனா என்பது ஒரு கொடிய நோயா இல்லையா என்பது ஒருபக்கம் இருக்கட்டும். இது வரை இந்த தொற்றுக்கு மருந்தும் கண்டுபிடிக்க படவில்லை என்று கிட்டத்தட்ட பத்து மாதங்களாக உலக சுகாதார நிறுவனம் உட்பட மருத்துவ உலகமே கையை விரித்தபடி நிற்கிறது.நிவாரணத்தை கண்டுபிடிப்பதைவிட தடுப்பூசியை கண்டுபிடிப்பதில்தான் உலக மருத்துவ வர்த்தகர்கள் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றனர்.எல்லாமே வர்த்தக மயம்.
வந்த கொரோனாவை நிவர்த்திக்க மருந்தில்லை.
ஆனால் இனி வரப்போகும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தயாரிப்பதிலிருந்து அதை விற்பனைக்கு கொண்டு வருவதில் இத்தனை அவசரம் காட்டுவது ஏன்?
நிவாரண மருத்துவத்தில் அல்லது சிகிச்சையில் அவசரம் காட்டுவதைவிட தடுப்பு மருந்தில் காட்டும் அவசரம் எவ்வளவு ஆபத்தானது என்பது மருத்துவ உலகத்துக்கே தெரியும்.ஆனாலும் வர்த்தக எண்ணம்.
திடீரென்று ரஷ்யா அரைகுறையான நிலையில் வேக்சினை விற்பனைக்கு வெளியிடுவதாக பிரதமர் புட்டின் மூலம் அறிவிப்பு வெளியாக்கி உலக பொருளாதாரத்தையே ஸ்தம்பிக்க வைத்தனர். அவர்களது நோக்கமும் அதுதானே தவிர தடுப்பு மருந்து வெளியிடுவதல்ல.
இந்தியாவும் டிசம்பர் மாதம் வேக்சினை வெளியிடப்போவதாக பயமுறுத்துகிறார்கள்.
இப்படி இவர்கள் பயமுறுத்துவதை பார்த்தால் ஏதாவது ஒரு நோக்கமாக இருக்குமோ என்று அச்சமாக இருக்கிறது.