திங்கள், 4 செப்டம்பர், 2017

மக்களே சிந்தியுங்கள் 


தமிழ்நாட்டின்எதிர்காலம்கேள்விக்குறியாகிவிட்டது.அதன்வளங்கள்கொள்ளையடிக்கப்படுகின்றன
ஆட்சியாளர்களும் அரசியல் வாதிகளும் மாநில அக்கறைஇல்லை.சுயநலஅரசியலேநடத்துகிறார்கள்.
தமிழக விவசாயிகளும் டெல்லியில் போய் போராட்டம் என்ற பெயரில் நாளுக்கொரு தெருக்கூத்துகள் நடத்தி தங்களையும் மாநிலத்தையும் அசிங்கப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்
 போராட்டம் என்றால்  கருநாடக விவசாயிகள் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் போதெல்லாம் போராடுகிறார்களே அதுமாதிரி இருக்கவேண்டும் அந்த  உறுதியும் வலிமையையும் நம் விவசாயிகளிடம்  இல்லையா?
அவர்கள் அநியாயத்திற்கு துணை போகிறார்கள் அடுத்தவர் உரிமையை பறிக்க  அவர்கள் காட்டும்   தீவிரம் உரிமைக்காக  போராடுபவரிடம் இல்லையென்றால்  எதை அவர் சாதிப்பார்
நம் விவசாயிகள் டெல்லியில் நடத்தும் தெருக்கூத்து  உண்மையில் அவர்களது பலவீனத்தையும் தன்னம்பிக்கை இல்லாமையையும் தான் வெளிப்படுத்துகிறது இதனால் நமக்கு  காவிரி பிரச்சினையில் மேலும் பின்னடைவுதான் ஏற்படும் எதிர்பார்த்த பலன் கிட்டாது
இவர்கள் டெல்லியில் போடும் கூத்து   அங்குள்ளவர்களுக்கு ஒரு நல்ல பொழுது போக்காகத்தான் இருக்கிறது வெட்க  கேடு
இப்போது தமிழக  அரசியலிலும் யார் எப்படி ஆட்சியை பிடிப்பது அல்லது தக்கவைத்துக்கொள்வது என்ற  சூதாடிக்கொண்டு இருக்கிறார்களே தவிர மாநில நலனிலோ மக்கள் நலனிலோ அக்கறை கொள்பவர்களாக இல்லை
இ பி எஸ் ஸும்  ஓபிஎஸ் ஸும் இணையும் போது சசிகலா குடும்பத்தை அரசியலை விட்டே ஒதுக்க வேண்டும் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று நிபந்தனை  போட்ட ஓபிஎஸ் ஆட்சியில் பங்கும் பதவியும்   கிடைத்த பின் அமைதியாகி விட்டார்  தினகரன் (சசிகலா )குரூப்பையும் வளைத்துப்போட குரல்கள் அங்கிருந்தே  வலுக்கின்றன.இப்போது மத்திய அரசின் வியூகத்துடன் தினகரனுடன் சுமூக பேச்சுவார்த்தை துவங்கிவிட்டது அதுவும் கூடிய விரைவில் ஒன்றாகி அதிமுக வலுப்பெற்று விடும் எப்படியாவது திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான் மத்திய அரசு மற்றும் இப்போதைய தமிழக ஆட்சியாளர்களின் நோக்கம் அது நிறைவேறிவிட்டால் மக்களை கை பொம்மைகளாக்கி காசு கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் .மற்றபடி ஓபிஎஸ்ஸுக்கோ இ பிஎஸ்ஸுக்கோ மத்திய அரசுக்கோ மாநில நலனில் அக்கறை கிடையாது ஒருவேளை  திமுக வந்தாலும் இதே சமர்த்துதான் காட்டுவார்கள்
 மக்களுக்கு அடுத்து  எந்த  நல்ல ஆட்சியையும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது
மக்கள் சிந்தித்தாலன்றி இந்த மாநிலம் உருப்படாது
இப்போது நமக்குள்ள ஒரே வாய்ப்பு இப்படித்தான்
திமுக அதிமுக என்று நமக்கு சலித்து விட்டது மாற்றம் வேண்டும் நிச்சயமாக அதிமுகவை ஆட்சியில் இருந்து அகற்றியே ஆக வேண்டும்
தேசீய நீரோட்டத்தில் நாம் முழுக்கவோ அல்லது ஓரளவோ இணைய வேண்டும் கம்யூனிஸ்டுகளுக்கு வாய்ப்புத்தரும் அளவுக்கு தமிழர்களின் மூளை பக்குவப்படவில்லை
திமுகவிடம் முழுமையாக கஜானா சாவியை கொடுக்க முடியாது
எனவே திமுக காங்கிரஸ் சம பலமாக உள்ள ஒரு கூட்டாட்சியை தமிழகத்திற்கு தரலாம் அதுதான் சிறந்தது
மக்களே சிந்தியுங்கள்


அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...