வியாழன், 27 ஏப்ரல், 2017

விவசாயத்தின் வீழ்ச்சி

நாசமாகிப்போகும் தமிழகம் 

 

  தமிழக விவசாயிகளின் டெல்லி போராட்டம் 41  நாளில் தொய்ந்து மடிந்து வாபஸ் ஆனது.-செய்தி 
எண்ணி துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவோம் என்பது இழுக்கு
இது வள்ளுவர் வாக்கு.இதை தமிழக விவசாயிகள் மறந்து ஏனோ .டெல்லி வரை சென்று போராட வேண்டியது இருக்கிறதென்றால் அதற்கான சரியான முஸ்தீப்புடன் நீங்கள் செல்ல வில்லை. அள்ளி தெளித்த கோலத்தில்  போராட்டம் என்ற பெயரில் 41 நாட்கள் கூத்து நடத்திவிட்டு ஒரு மாநில முதல்வர் என்ற போர்வையில் பிஜேபியின் பினாமியாக செயல் படும் எடப்பாடி பழனி கொடுத்த குளிர் பணத்தில் மயங்கி போராட்டத்தை வாபஸ் வாங்கி உங்களுக்காக அனுதாபப்பட்ட குரல் கொடுத்த அனைவரின் முகத்திலும் காறித்துப்பி விட்டு வந்து விட்டீர்கள் இங்கே வந்து தமிழக நீர் வளங்களை நாசம் செய்ய தூபம் போட்ட திமுகவின் வலையில் வீழ்ந்து இருக்கிறீர்கள்
உங்கள் இயலாமை புரிகிறது ஆனால் கண் மூடித்தனமாக நீங்கள் செய்யும் இந்த காரியங்களால் மாநிலம் மரியாதை இழந்து நிற்கிறது வளம் பசுமை அத்தனையும் விட்ட மீனும் போய்  பெட்டி மீனும் பறி போன கதை ஆகப்போகிறது
இனி என்ன?தமிழ்நாட்டின் போராட்டங்களுக்கு எதற்கும் இனி மதிப்பு இருக்காது
ஒரு காலத்தில் அறுபதுகளில் தோன்றிய திமுக தமிழக மக்களின் மீது மொழிப்போராட்டம் என்றோரு தேவையற்ற அர்த்தமற்ற போராட்டத்தை திணித்து அவர்களது சக்தியை வீணடித்தது  தமிழரல்லாத கருணாநிதி ஆட்சியை கைப்பற்றினார்.தமிழகத்தின் காவிரி உரிமையை சிதைத்தார்.கருநாடகத்தை சட்ட விரோதமாக மூன்று அணைகளையும் கட்டவிட்டுவிட்டு கட்டி முடியும் வரை காத்திருந்து பிறகு டிரிபியூனல் வேண்டும் என்று  கோர்ட்டில் வழக்கிட்டார்.இதற்கு தமிழக மாடுகள் அவருக்கு கொடுத்த பெயர் சாணக்கியன்.இப்படி அயோக்கியத்தனத்திற்கு பட்டம் கொடுத்து கெளரவிக்கும் தமிழனுக்கு  புத்தியில் அடுத்து வந்த எம்ஜியார் முல்லைப்பெரியாரில் கேரளாவுக்கு சாதகமாக அதன் அளவை குறைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார்.தெலுங்கரான கருணாநிதியின் ஆட்சியிலிருந்தே ஆந்திரா பாலாற்றில் பல அணைகளை கட்டிக்கொண்டது
இதெல்லாம் பழைய கதை என்றாலும் சட்ட பூர்வமாக அவற்றை சந்திக்கும் சில வாய்ப்புகள் நமக்கு இருந்தது
ஆனால் இன்று இந்த விவசாயிகள் டெல்லியில் ஆடி முடித்த கூத்துக்களால் இனி கோர்ட்டு கூட நமக்கு முக்கியத்துவம் தருமா என்ற பயம் ஏற்படுகிறத்து
இவர்கள் டெல்லி போராட்டத்தை இப்படி நிர்கதியாக விட்டு வந்ததால் தொடர்ந்து இனி நெடுவாசல் போராட்டமும் நிர்கதியாகிவிடுமே.
பிறகு முல்லை பெரியார் பவானி என்று ஒவ்வொன்றாக நிர்கதியாகி போகும்
நல்ல வேளை ஜெயிலுக்கு சென்ற சசிகலா நாலு வருடங்களில் திரும்பி வரும்போது மொத்த தமிழகமும் ரியல் எஸ்டேட் களம்  ஆகி இருக்கும் பிறகென்ன மக்கள் மண்ணாங்கட்டிகளான பிறகு மாநிலத்தை கூறு போட கசக்குமா என்ன?
விவசாயம் என்பது ஒரு கண்ணியமான தொழில் அதற்காக  போராடிய நீங்கள் உங்களுக்காக உங்களுடன் போராட வந்த அந்த வாட நாட்டு விவசாயிகளையாவது மதித்து இருக்க வேண்டாமா?அவர்கள் எதிரிலேயே கோவணத்தை அவிழ்த்து போட்டு நிர்வாண கூத்து ஆடினீர்களே யார் இதற்க்கு பின்னணி.வெட்கமாக இல்லையா.
சரி 41 ஆவது நாள் எடப்பாடி  சாமி வந்து பேசினார் என்பதற்காக போராட்டத்தை வாபஸ் வாங்கினீர்களே அந்த அளவுக்கு அவர் நம்பத்தகுந்தவரா?அதற்க்கு ஆரம்பத்திலேயே பொன்  ராதா கிருஷ்ணனை நம்பி இருக்கலாமே குறைந்த பட்சம் ஆரோக்கியமும் செலவழித்த சக்தியும் மிஞ்சி இருக்குமே.பொன்  ராதாவுக்கும் எடப்பாடிக்கும் உள்ள வித்தியாசம் ஒருவர் பிஜேபி மற்றவர் பிஜேபியின் பினாமி
பூசாரியிடம் அடைக்கலம் கேட்ட செம்மறியாடுகள்தான் நீங்கள்.
இப்போது எல்லாம் போச்சு அதோடு மானமும் போய்  விட்டது இனி ஜென்மத்திற்கு உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாது
காவிரி முலை பெரியார் என்று ஒவ்வொன்றும் பறி போகப்போகிறது
அதிமுக மட்டுமல்ல தமிழகத்தின் அத்தனை அரசியல் வாதிகளும் துரோகிகள்
எடப்பாடியுடன் நீங்கள் பேசி இருக்கவே கூடாது அவரை விரட்டி இருக்கவேண்டும்
பார்லிமெண்டுக்குள் நுழைந்து மோடியின் சட்டையை பிடித்திருக்க வேண்டும்
கலகம் வந்தால்தான் நியாயம் பிறக்கும்



அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...