வெள்ளி, 21 மே, 2021

வைரஸ்களில் மரபணு மாற்றம் -தடுப்பூசி பற்றி விளக்கம்

 கோவிட்-19-இல் இயல்பு மாறாமலே மரபணு மாற்றம்

(பொறுப்பு துறப்பு :-இந்த தளத்தில் சேர்க்கப்பட்டுள்ள தகவல்கள் கல்வி  நோக்கங்களுக்காக மட்டுமே அன்றி மருத்துவ சிகிச்சைக்கு  உரியதல்ல. தனித்துவமான தனிப்பட்ட தேவைகள் காரணமாக, வாசகரின் நிலைமைக்கான தகவலின் தகுதியை தீர்மானிக்க வாசகர் தங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.) 

படம்-1

மேலே கண்ட தலைப்பு சுருக்கமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே விளக்கமில்லாமல் தரப்பட்டிருக்கிறது உண்மைதான். அதாவது இயல்பு என்பது என்ன  என்பதை புரியும்படி விளக்கவேண்டும்.
பொதுவாக எந்த ஒரு உயிரினமும் சூழ்நிலை தனக்கு எதிராக மாறும்போது ஒன்று அதை தவிர்த்து கொள்ளும் அல்லது அதற்கு ஏற்றாற்போல் தன்னில் ஒரு மாற்றம் ஏற்படுத்திக்கொண்டு அதை எதிர் கொள்ளும்.
அதுவே நுண்ணுயிர்களிலும் வைரஸ்களிலும் நிகழும் போது அதற்கு மரபணு மாற்றங்கள் (GENETIC MUTATIONS) என்று பெயர்.
இந்த மாற்றங்கள் சூழ்நிலை கடுமையாகும் போது வீரியமுள்ளதாகவும் சூழ்நிலை எளிதாகும் போது எளிதானதாகவும் அமையும்.
வைரஸ்களில் இன்ப்ளூயன்ஸா
படம்-2

வைரஸ் மிகவேகமாக மரபணு மாற்றத்துடன் தன் இயல்புகளையும் மாற்றிக்கொள்ளும் தன்மையுடையது. அதனால்தான் அதற்கு நிலையான ஒரே தடுப்பூசியை உண்டாக்க முடியவில்லை. சீசனுக்கு தகுந்த மாதிரியும் அதன் இயல்பு மாற்றங்களுக்கு ஏற்ற மாதிரியும்  இன்ப்ளூயன்சா தடுப்பூசியை புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
வைரஸின் இயல்பு மாற்றங்கள் இருவகைப்படும்.
1.காப்பு மூலம் (ANTIGENIC DRIFT) சறுக்கல் 
2.காப்பு மூலம் (ANTIGENIC SHIFT) மாற்றம் 
இந்த இரண்டு இயல்பு மாற்றங்களுமே ஒன்று அதை கடும் வீரியமுள்ளதாக்கும் அல்லது பலஹீனமானதாகவும் மாற்றும்.
இதில் Drift எனப்படும் சறுக்கல் மிக முக்கியமானது. Shift எனப்படும் மாற்றம் மிக அரிதாகத்தான் நடைபெறுகிறது. அதிலும் இந்த புதிய கொரோனா வைரஸில் அப்படிப்பட்ட மாற்றம் நிகழ வாய்ப்பில்லை.(விளக்கம் பெற தொடர்ந்து படிக்கவும்)
Drift எனப்படும் சறுக்கல் புதிய கொரோனாவிலும் (Novel Corona) நிகழ்கிறது. ஆனால் கால தாமதமாக நிகழ்கிறது. கரணம் வேறு எந்த வைரசுக்குமே இல்லாத ஒரு விசேஷ குணம் இதற்கு இருக்கிறது. அதாவது அது மனித செல்களுக்குள் பல்கி பெருகும் போது நிறுத்தி நிதானமாக பிழை திருத்தம் (Proof Reading) செய்துதான் தன்னுடைய மரபு அணுக்களை பிரதி எடுக்கிறது. எனவே அதற்கு காலதாமதம் எடுத்துக்கொள்கிறது. இது தடுப்பூசி துறைக்கு ஒரு நன்மையாகும். காரணம் ஒரே  தடுப்பூசியையே திரும்ப திரும்ப எத்தனை அலைகள் வந்தாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். தடுப்பூசி சூத்திரத்தை புதுப்பிக்கத்தேவை இல்லை.
(விளக்கம் கீழே)

1.காப்பு மூலம் சறுக்கல்அல்லது பிறழ்வு (ANTIGENIC DRIFT):-
படம் -3

ஒரு வைரஸ் தன்னை  நகலெடுக்கும்போது, ​​அதன் மரபணுக்கள் சீரற்ற “நகலெடுக்கும் பிழைகளுக்கு ” (அதாவது மரபணு மாற்றஙளுக்கு) உட்படுகின்றன. காலப்போக்கில், இந்த மரபணு நகலெடுக்கும் பிழைகள், வைரஸின் பிற மாற்றங்களுக்கிடையில், வைரஸின் மேற்பரப்பு புரதங்கள் அல்லது ஆன்டிஜென்களில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
ஆனால் நமது நோயெதிர்ப்பு அமைப்போ (ANTIBODIES)  இந்த ஆன்டிஜென்களை வைத்து  வைரஸை அடையாளம் கண்டு போராட பயன்படுத்துகிறது. எனவே, நமது நோயெதிர்ப்பு மண்டலத்தைத் ஏய்ப்பதற்கு ஒரு வைரஸ் தனது ஆன்டிஜென்களை மாற்றினால் என்ன ஆகும்? (படம்-2 மேலே)
இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களில், மரபணு மாற்றங்கள் குவிந்து அதன் ஆன்டிஜென்களை “சறுக்கல்” ஆக்குகின்றன - அதாவது பிறழ்ந்த (Drifted) ஆன்டிஜனைக் கொண்ட வைரஸின் மேற்பரப்பு அசல் வைரஸை விட வித்தியாசமாக தெரிகிறது.
இன்ப்ளூயன்ஸா வைரஸ் மரபணு சறுக்கலில் (Antigenic Drift) நகரும் போது வைரஸின் பழைய நிலைகளுக்கு (STRAINS) எதிரான தடுப்பூசிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி புதிய திசையில் மரபணு மாறிய இன்ப்ளூயன்சா வைரஸிற்கு எதிராக வேலை செய்யாது. ஏற்கனவே பழைய இன்ப்ளூயன்சா தடுப்பூசி போட்ட எவரும் இந்த புதிய வைரஸ் தொற்றுக்கு ஆளாக நேரிடும்.
எனவே இன்ப்ளூயன்சா தடுப்பூசி ஒவ்வொரு ஆண்டும் மதிப்பாய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படவேண்டும்.
இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று காப்பு மூல சறுக்கல் (ANTIGENIC DRIFT) ஆகும் .
இந்த மரபணு பிறழ்வுகள் பெரும்பாலும் வைரஸை பலவீனமாக்குவதாகவே இருப்பதால் உண்மையில் சில பிறழ்வுகள் வைரஸை குறைவான தொற்று நோயாகவும் மாற்றக்கூடும். 
இயற்கையான அல்லது தடுப்பூசி மூலம் வெளியேறும் நோயெதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்க வைரஸ்கள் எவ்வாறு மாறுகின்றன என்பது பற்றிய நமது அறிவின் பெரும்பகுதி இன்ஃப்ளூயன்ஸா வைரஸைக் கவனிப்பதிலிருந்தும், தொடர்ந்து இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகளைப் புதுப்பிப்பதிலிருந்தும் தெரிய வருகிறது. இந்த உதாரணத்தின் மூலம் 
கொரோனா வைரஸ்கள் மற்றும் இன்ப்ளூயன்ஸா காய்ச்சல் (INFLUENZA) வைரஸ்களுக்கு இடையிலான ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளின் ஒப்பீடு, கோவிட்-19 தடுப்பூசிகளை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.

இது SARS-CoV-2 உடன் கூட நடக்குமா?
படம்-4

SARS-CoV-2 இன் மரபணு பரிணாமம் குறித்து இதுவரை ஆய்வு செய்ததில் , மற்ற ஆர்.என்.ஏ வைரஸ்களுடன் ஒப்பிடும்போது இந்த கோவிட்-19 வைரஸ் ஒப்பீட்டளவில் மெதுவாகவே  உருமாறும் என்று தெரிகிறது.
இதற்கு காரணம் மரபணு பிறழ்தலின் போது உருவாகும் நகல்களை பிழை திருத்தும் (Proof Reading) திறன்  இந்த வைரஸிற்கு இருப்பதால்தான் இந்த தாமதமான உருமாற்றம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்களாம் (படம்-4). இது போன்ற திறன் இதுவரை வேறு எந்த RNA வைரசுக்கும் இருப்பதாகத் தெரியவில்லை என்று அவர்களே ஒப்புதல் வாக்குமூலமும் கொடுக்கிறார்கள். அப்படியானால் இந்த புதிய வைரஸ் ஆய்வு கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டதா? அதில் சந்தேகமே இல்லை. எனவேதான் எத்தனை உருமாற்றங்களுடன் வந்தாலும் பரவாயில்லை, எத்தனை அலைகள் வீசினாலும் பரவாயில்லை தயாரிக்கப்பட்ட பழைய தடுப்பூசியே எல்லா அலைவரிசைகளுக்கும் பொருந்தும் என்று இவர்கள் கூசாமல் கூறி தடுப்பூசி வியாபாரம் செய்கிறார்கள். SARS-CoV-2 க்கான பிறழ்வு ஒப்பீட்டளவில் மெதுவாக இருப்பதால் சோதனையில் மற்றும் விற்பனையில்  இருக்கும் ,அனைத்து  SARS-CoV-2 தடுப்பூசிகளும்  நீண்ட காலத்திற்கு பாதுகாப்பை வழங்கும் என்று நம்புகிறோம். என்கிறார்கள்.
இவர்களே திட்டமிட்டு உருவாக்கிய வைரஸாக இருப்பதால்தான் அது எப்படி உருமாறும் எப்போது உருமாறும் என்பதை எல்லாம் துல்லியமாக கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். அது எந்த வேகத்தில் உருமாற வேண்டும் என்பதையும் அதன் மரபணுவில்  பதிந்து இருக்கிறார்கள். அப்போதுதான் இவர்கள் தயாரித்து வைத்திருக்கும் தடுப்பூசியை நிதானமாக விற்று தீர்க்க முடியும். அதனால்தான் வைரஸின் மரபணு மாற்றத்திலும் நிதானத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் போலும். இதற்கு மேலும் கூடுதலாக அவர்கள் தரும் ஒப்புதல் வாக்குமூலத்தை பாருங்கள்.
"SARS-CoV-2 பிறழ்வாக இருந்தாலும், இதுவரை, இது காப்பு மூல நகர்வு (ANTIGENIC DRIFT) கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. எவ்வாறாயினும், SARS-CoV-2 என்பது மனிதர்களுக்குப் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்னும் பல இந்த வைரஸ் பற்றி  அறியப்படாதவை உள்ளன, மேலும் SARS-CoV-2 வைரஸ் குறித்த நமது புரிதல் தொடர்ந்து வளர்ந்து வருகிறது"
படம்-5
Novel Corona Vaccine Hypothesis

காப்பு மூல நகர்வு (ANTIGENIC DRIFT) வேகமாக இல்லை என்பதும் ஒரு தவறான கணிப்பாக போகலாம். இவர்கள் சொல்வதைப்போல உருமாற்றம் அவ்வளவு மெதுவாக இல்லை 2019 இல் ஆரம்பித்த முதல் அலை 2021 முடிவதற்குள் மூன்றாவது அலையாக உருவெடுத்து பயமுறுத்திக்கொண்டு இருக்கிறது.
சில விஞ்ஞான கற்பனை (ScFi) திரைப்படங்களில் வருவதுபோல் விஞ்ஞானிகளாலேயே உருவாக்கப்பட்ட சில பூதங்கள் அந்த விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டையும்  மீறி வெளியேறி எல்லாவற்றையும் அழித்து நாசம் செய்வதுபோல் ஆகிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது.

2.காப்புமூல மாற்றம் (ANTIGENIC SHIFT)- -(COVID-19 வைரஸ் Vs இன்ப்ளூயன்ஸா வைரஸ்) :-
படம்-6

இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் ஆன்டிஜெனிக் மாற்றத்திற்கு ANTIGENIC SHIFT) உட்படுகின்றன, இது வைரஸின் ஆன்டிஜென்களில் ஏற்படும் திடீர், பெரிய மாற்றமாகும், இது ஆன்டிஜெனிக் சறுக்கலைக் (ANTIGENIC DRIFT) காட்டிலும் குறைவாகவே நிகழ்கிறது.

இது இரண்டு வெவ்வேறு, ஆனால் தொடர்புடைய, இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் விகாரங்கள் (STRAINS)  ஒரே நேரத்தில் ஒரு ஹோஸ்ட் செல்லை  பாதிக்கும்போது நிகழ்கிறது. இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் மரபணுக்கள் ஆர்.என்.ஏவின் 8 தனித்தனி துண்டுகளால் (“மரபணு பிரிவுகள்” என அழைக்கப்படுகின்றன) உருவாகின்றன, சில சமயங்களில் இந்த வைரஸ்கள் இனச்சேர்க்கை போல் ஒன்றோடு ஒன்று இணைந்து மறுசீரமைப்பை உருவாக்கலாம். இந்த  மறுசீரமைப்பின் போது, ​​இரண்டு இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களின் மரபணு பிரிவுகளும்  ஒன்றிணைந்து ஒரு புதிய  இன்ஃப்ளூயன்ஸா வைரஸின் புதிய விகாரத்தை (NEW STRAIN) உருவாக்கலாம்.(படம்-6 மேலே)
ஒரு காப்பு மூல (ANTIGENIC SHIFT) மாற்றம் நிகழும்போது, ​​இதன் விளைவாக வரும் புதிய வைரஸுக்கு எதிராக பெரும்பாலானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவோ அல்லது இல்லாமலோ போய்விடும்   ஆன்டிஜெனிக் மாற்றத்தின் (ANTIGENIC SHIFT) விளைவாக வெளிவரும் வைரஸ்கள் தான் பெரும்பாலும் தொற்றுநோயை (PANDEMIC) ஏற்படுத்துகின்றன.
ஆனால் கொரோனா வைரஸ்கள் இன்ப்ளூயன்ஸா வைரசைப் போல்  பிரிக்கப்பட்ட மரபணுக்களைக் கொண்டிருக்கவில்லை. எனவே இதில்  மறுசீரமைப்பு (REASSORTMENT) செய்ய முடியாது.
 கொரோனா வைரஸ் மரபணு பிரிவுகளில்லாத மிக நீண்ட ஒற்றை,  ஆர்.என்.ஏவால் ஆனது. இருப்பினும், இரண்டு கொரோனா வைரஸ்கள் ஒரே செல்லை பாதிக்கும்போது, ​​அவை  ஒன்றிணைய முடியும், இது மறுசீரமைப்பை விட வேறுபட்டது. மறுசீரமைப்பில், ஒரு புதிய ஒற்றை ஆர்.என்.ஏ மரபணு இரண்டு "பெற்றோர்" கொரோனா வைரஸ் மரபணுக்களின் துண்டுகளிலிருந்து ஒன்றாக இணைக்கப்படும். இது கிட்டத்தட்ட ஒரு ஆணும் பெண்ணும் கலந்து புதிய ஒரு குழந்தையை பெற்றெடுப்பதுமாதிரி. ஆனால்  கொரோனாவில் இதுமாதிரி மறுசீரமைப்பைப் போல எதுவும் இல்லை.  ஆனால் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ்கள் இயற்கையில் இணைந்ததாக நம்புகிறார்கள். (பார்க்க மேலே படம்-6)
இங்கு இனச்சேர்க்கை இல்லை. மறுசீரமைப்பு இல்லை. இணைவு மட்டும்தான் இருக்கிறது. எனவே மாற்றம் (SHIFT) இல்லை. ஆனால் தொற்று வீரியம் (PANDEMIC POWER) மட்டும் எப்படி வந்தது.?

கோவிட் -19 -பற்றிய புரியாத புதிர்கள்  

1.இந்த வைரஸ் மிக மிக மெதுவாகத்தான் காப்பு மூல பிறழ்வு அடைகிறது (Slow antigenic drift)
2.காப்பு மூல மற்றம் என்பது இந்த வைரஸில் இல்லை (No antigenic shift ). ஆனால் எப்படி அலை அலையாக உருமாறி வருகிறது.?
3.புதிய வைரஸ் (Novel virus) என்கிறீர்கள். அப்படியானால் இது தானே உருவாக்கியதா? அல்லது உருவாக்கப்பட்டதா ?
4.தடுப்பூசிகள் போட்டும் கட்டுப்படவில்லையே. மூன்றாவது அலை வருகிறதே ஏன்?
5.RNA நகல்களை சரிபார்த்தல் (Proof Reading) செய்வதற்கான திறன் இந்த புதிய கொரனவைரஸிற்கு மட்டுமே இருக்கிறது வேறு எந்த RNA வைரசுக்கு இல்லை என்றால் இந்த வைரஸ் எங்கிருந்து?, எப்போது ? எப்படி வந்தது.? இதற்கு விஞ்ஞானிகள் பதில் தரவேண்டும்?




அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...