சனி, 30 டிசம்பர், 2017

A VIDEO MYSTERY

ஒரு வீடியோ மர்மம் 

Seyed1951                        
ஜெயலலிதா பற்றிய ஒரு வீடியோவை டிடிவி தினகரன் அணியை சேர்ந்த வெற்றிவேல்  என்பவர் வெளியிட்டார்.வெறும் இருபது வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோவில் ஆஸ்பத்திகிரியில் இருந்த போது ஜெயலலிதா உயிருடன்தான் இருந்தார்.ஜூஸ்  குடித்தார் என்பது போல் வீடியோ காட்சி இருந்தது 
இந்த வீடியோ வெளியாகி பலரின் விமரிசனத்த்திற்கும் கண்டனங்களுக்கும் காரணமாகியது என்னவோ உண்மைதான்.வெளியிட்டவர்கள் நோக்கங்களில் அதுவும் ஒன்று.இந்தவகையில் அவர்கள் எதிர்பார்த்தது நடந்தாலும் அவர்கள் எதிர்பாராததும் நடந்தது அது ஜெயலலிதாவின் ஆஸ்பத்திரி மரணத்தின் மர்மம் பற்றிய சந்தேகத்தை அந்த வீடியோ மேலும் ஊர்ஜிதப்படுத்துகிற மாதிரி பல விமர்சனங்களும் எழுந்ததுதான்.இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை 
இந்த விமர்சனங்களை நீர்த்துப்போக செய்ய அவர்கள் ஒரு நாடகத்தை இப்போது அரங்கேற்றுகிறார்கள் 
அதாவது இந்த வீடியோவை  வெற்றிவேலின்  கையில் நான் கொடுக்கவில்லை அதை வெளியிடவும் நான் சொல்லவில்லை என்று தினகரன் அடிக்கும் பல்டி நாடகம் நம்பர் ஒன்று 
தன்னை கொலைகாரி என்று தூற்றும் போது கூட சசிகலா அதை வெளியிடவில்லை தினகரன் எப்படி வெளியிடலாம் என்று அதே குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ணபிரியா தினகரனுக்கு எதிராக கிளம்பி இருப்பது நாடகம் நம்பர் இரண்டு 
சசிகலா வீடியோ வெளியீட்டில் அதிருப்தியடைய அவரை சமாதானப்படுத்த தினகரன் பெங்களூர் சென்றது நாடகம் நம்பர் மூன்று.இதில் ஆர்கே நகர் தொகுதியில் தினகரனின் அபார வெற்றியினால் சசிகலா மகிழ்ச்சியடைந்ததது எடப்பாடி ஆட்சி கவிழ வேண்டும் என்று சசிகலா மெளன விரதம் இருப்பது எல்லாம் வேறு விஷயம் அதெல்லாம் தான் ஆடவில்லை என்றாலும் சதை ஆடும் என்பார்களே அது மாதிரி.தானியங்கி.Autunomic 
இப்படியெல்லாம் உட்பூசல் நாடகமாடி வீடியோ விலுள்ள பெரும் அபத்தங்களை மறைக்க நினைக்கிறார்கள் 
எனினும் அந்த வீடியோவின் அமைப்பு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது மாதிரி ஒரு கெட்ட நோக்கம் ஒரு விபரீதம் நடக்கவிருப்பதை சொல்லாமல் சொல்கிறது 
ஜெயலலிதாவை பிணமாகத்தான் ஆஸ்பத்திரியில் நாங்கள் அட்மிட் செய்தோம் என்று எங்கள் மீது அநியாயமாக பழி போட்டார்கள் இப்போது பார்த்தீங்களா பார்த்தீங்களா அம்மா ஆஸ்பத்திரியில் உயிரோடு இருந்து ஜூஸ் குடிப்பதை எனவே நாங்கள் அவரை ஒன்றும் செய்யவில்லை அதாவது எங்கப்பன் குதிருக்குள் இல்லை 
சரி இப்போது வீடியோவை ஆராய்வோம் 
இந்த வீடியோ அப்போல்லோவில்தான் எடுக்கப்பட்டதா? இது பற்றி அப்போல்லோ நிர்வாகம் கப்சிப் 
எனவே இந்த வீடியோ அப்பல்லோ நிர்வாகத்தின் அனுமதியுடன் எடுக்கப்படவில்லை 
இந்த வீடியோவில் ஜூஸ் குடிக்கும் அம்மா ஒரு ஒப்புக்கு கூட கேமராவுக்கு முகம் திருப்பவில்லை எனவே இது அம்மாவின் கவனத்திலும் எடுக்கப்படவில்லை.
ஒரு எதிர்பாராத தருணத்தில் வெறும் இருபது வினாடிகளில் அவர் ஜூஸ் குடிக்கும்போது ஏதோ  ஒரு கெட்ட காரியம் அரங்கேற்றத்தின் முத்தாய்ப்பாக இது எடுத்து முடிக்கப்பட்டு இருக்கிறது 
இதன் பிறகு வந்த நாட்களில் நடந்தவை என்ன என்ற கேள்வியைத்தான் இந்த வீடியோ அழுத்தமாக எழுப்புகிறது 
ஒரு பேச்சுக்கு இந்த வீடியோ ஜெயலலிதாவின் அந்த 75 நாட்கள் அப்பல்லோ மர்ம வாசத்தில் எதோ ஒரு இருபது வினாடிகளில் எடுக்கப்பட்டதென்றே வைத்துக்கொள்வோம் .இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது 
ஜெயலலிதாவை அட்மிட் செய்யும் போதிலிருந்து அந்த வீடியோவை எடுத்து முடியும்வரை உயிருடன் இருந்தார் இல்லை இல்லை உயிருடன் வைக்கப்பட்டார் என்று மட்டும் தெரிகிறது அதன் பிறகு என்னவெல்லாம் நடந்தது என்பது ஒரு கேள்வி 
அடுத்து செப்டெம்பர் 21,2016 வரை நன்றாக இருந்தவர் பொது காரியங்களில் பங்கேற்றவர் திடீரென்று செப்டெம்பர் 22,2016 இரவு வீடியோவில் கண்டமாதிரி  எப்படி நிலைகுலைத்தார் என்பதும் ஒரு கேள்வி 
சொல்லிவைத்த மாதிரி ஜெயலலிதாவின் வீட்டிலும் ஆஸ்பத்திரியிலும் அந்த 75 நாளும் சிசிடிவி கேமராக்கள் வேலைசெய்யவில்லையே ஏன் என்பது அடுத்த கேள்வி 
வெறும் ஏதோ ஒரு இருபது வினாடி வீடியோ எடுத்தவர்கள் உண்மையிலேயே அம்மாவின் மீதும் அவரை தேர்ந்தெடுத்த மக்களின் மீதும் அக்கறை பட்டிருந்தால் அந்த 75 நாட்களும் ஒவ்வொருநாளாக புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுத்து வெளியிட்டு இருக்கலாமே ஏன் செய்யவில்லை என்பது அடுத்த கேள்வி இப்படி பல கேள்விகள் 
எனவே இந்த வீடியோ அவர்களுக்கு எதிராகவே இருக்கிறது 
எட்டு நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...