பிடிவாத சிந்தனை சுழற்சிக் கோளாறு (OCD)
(மறுப்பு: - இந்த தளத்தில் சேர்க்கப்பட்டுள்ள தகவல்கள் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, இது மருத்துவ சிகிச்சைக்காக அல்ல.)
![]() |
Fig-1 |
வீட்டை சரியாகப்பூட்டி இருக்கிறோமா என்று ஒன்றுக்கு பத்து முறை திரும்பத்திரும்ப வந்து பூட்டை இழுத்து பார்ப்பவரா நீங்கள்?
வீட்டை பூட்டி விட்டு புறப்படும் போது திரும்பத்திரும்ப வந்து வீட்டை திறந்து உள்ளே பெட்டியையும் பீரோவையும் சரியாகத்தான் பூட்டி இருக்கிறோமா என்று திருப்பித்திருப்பி செக் செய்பவரா நீங்கள் ?
அளவு மீறி தேவை இல்லாமல் கைகளை கழுவி சுத்தம் செய்பவரா நீங்கள்?
உரையாடலின்போது தேவை இல்லாமல் ஒரே வாசகத்தை திரும்பதிரும்பக்கூறுபவரா நீங்கள்?
தேவையில்லாமல் அளவு மீறி காரியங்களில் ஒழுக்கத்தை பேணுபவரா நீங்கள் ?
அப்படியானால் உங்களுக்கு OCD என்ற இந்த சிந்தனை சுழற்சி நோய் இருக்கலாம். இந்த மனநோய்
உங்களை வெறுப்புக்கு ஆளாக்கி விடும். விரக்தியின் எல்லைக்கே கொண்டு போய் தோல்வி மனப்பான்மையிலும் தற்கொலை உணர்விலும் விட்டுவிடும்.
ஒ.சி.டி.யால் பாதிக்கப்பட்ட பலர் தங்கள் செயல்கள் நியாயமற்றவை என்பதை அறிந்திருக்கிறார்கள், ஆனால் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்ய வேண்டும் என்ற வெறியை அவர்கள் புறக்கணிக்க முயற்சிக்கும்போது, அவர்கள் கட்டாயத்திற்குத் தள்ளும் வரை அவர்களின் கவலை அதிகரிக்கும்.
அதாவது வெறித்தனமான பிடிவாத சிந்தனை கோளாறு என்பது வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டங்களிலும் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் அவற்றினால் நமக்கு ஏற்படும் அனுபங்கள் ஆகியவை சிறிது சிறிதாக நம் எண்ணங்களில் புகுந்து குழப்பி ஒரு நோயாக உருவெடுக்கும் நிலை ஆகும். இதை மருத்துவ மொழியில் Obsessive-Compulsive Disorder (OCD) என்பர்.
இதை இப்படியும் விளங்கலாம். அதாவது இதில் ஒரு நபர் சில எண்ணங்களை மீண்டும் மீண்டும் ("ஆவேசங்கள்" -obsession) எண்ண தோன்றவோ அல்லது சில நடைமுறைகளை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய அவசியத்தையோ உணர்கிறார் ("கட்டாயங்கள்"-compulsion). இந்த பிடிவாத எண்ணங்களும் உணர்வுகளும் அவருக்கு பெரும் துன்பத்தை உருவாக்கும் அல்லது அவரது செய்ய வேண்டிய மிக அவசியமான காரியங்களிலிருந்து அவரை மறக்கடிக்க செய்து அந்த செயல்பாட்டை புறக்கணிக்க வைத்துவிடும். .
உதாரணமாக திரும்பத்திரும்ப கைகழுவுதல் பொருட்களை திரும்பத்திரும்ப எண்ணுதல், பெட்டி பூட்டப்பட்டிருக்கிறதா என்று திரும்பத்திரும்ப போய் சரிபார்த்தல் ஆகிய செயல்களில் சில சமயம் அவர் ரயிலை கோட்டை விட்டுவிடுவார். முக்கியமான காரியத்தை மறந்துவிடுவார். அரிதாக இந்த நிலை அவரை விரக்தியின் உச்சத்திற்கு கொண்டு போய் தற்கொலைக்கு கூட தயாராக்கிவிடும்.
இந்த நோய் பெரியவர்களுக்கு மட்டுமல்ல இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் கூட ஏற்படும்.
சுருக்கமாக இதில் மக்கள் மீண்டும் மீண்டும், தேவையற்ற எண்ணங்கள், யோசனைகள் அல்லது உணர்வுகள் (ஆவேசங்கள்) கொண்டிருக்கிறார்கள், அவை மீண்டும் மீண்டும் ஏதாவது செய்யத் தூண்டுகின்றன (நிர்பந்தங்கள்).
தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, அமெரிக்காவில் மட்டும் வயது வந்தோரின் 1% ஐ ஒ.சி.டி பாதிக்கிறது. ஒ.சி.டி பாகுபாடு காட்டாது மற்றும் இனம், பாலினம் அல்லது வயது ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் யாரையும் பாதிக்கலாம். இது ஒரு நபரின் வாழ்க்கைத் தரத்தில் பெரும் தாக்கங்களைக் கொண்டுள்ளது மற்றும் அவர்களின் உணர்ச்சி ஆரோக்கியம், கல்வி, தொழில் மற்றும் அவர்களின் சமூக மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையையும் கூட பாதிக்கக்கூடும், ஏனெனில் அவர்களின் ஆவேசங்கள் பல மணிநேர வெற்றுச் சடங்கு செயல்களுக்கு வழிவகுக்கும், இதனால் அவர்கள் மற்ற விஷயங்களைச் செய்வதை விட்டும் தடுக்கப்படுவார்கள்..
வகைகள் :-
1.அழுக்கு மற்றும் அதை கழுவுதல்
2.தற்செயலான தீங்கு பற்றிய சந்தேகம் & அதை சரிபார்ப்பு
3.சரியான OCD - சமச்சீர்மை, ஏற்பாடு மற்றும் எண்ணுதல்.
4.ஏற்றுக்கொள்ள முடியாத தடை எண்ணங்கள் மற்றும் மன சடங்குகள்.
5.மன மாசுபாடு.
6.பதுக்கல்
7.வதந்திகள்.
8.ஊடுருவும் எண்ணங்கள்
அறிகுறிகள் :
OCD யின் அறிகுறிகளை கீழ்கண்டவாறும் வகைப்படுத்தலாம்.
- தனது நடத்தைகள் பகுத்தறிவற்றவை என்பதை ஒருவர் உணர்ந்தாலும், அந்த நடத்தைகள் அல்லது எண்ணங்களைக் கட்டுப்படுத்த இயலாமை
இத்தகைய நடத்தைகள் மற்றும் எண்ணங்களுக்காக ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மணிநேரம் அவர் வீணாக செலவிடுவார்
-பதட்டத்திலிருந்து குறுகிய கால நிவாரணம் பெற சில சடங்குகளைச் செய்வார் (விருப்பத்திற்கும் திருப்திக்கும் மாறாக)
மோட்டார் நடுக்கங்கள் (Motor Tics) அல்லது திடீர் மீண்டும் மீண்டும் இயக்கங்கள் (எ.கா.) கண் சிமிட்டுதல், தோள்பட்டை சுருட்டுதல், முகம் சுறுசுறுப்பு, தோள்பட்டை அல்லது தலை குலுக்கல், முனகல், முணுமுணுப்பு.
அறிகுறிகள் காலப்போக்கில் குறையலாம் அல்லது மோசமடையக்கூடும். சில ஒ.சி.டியால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கோளாறுகளைத் தூண்டும் பொருள்கள் அல்லது சூழ்நிலைகளிலிருந்து தள்ளி இருக்க விரும்புகிறார்கள். மற்றவர்கள் தங்களை அமைதியாக வைத்திருக்க மருந்துகள், ஆல்கஹால் அல்லது இரண்டையும் தேர்வு செய்கிறார்கள்
காரணிகள் :-
1. கொடுமையாகவும்,பாரபட்சத்துடன் அநீதமாகவும் நடத்தப்படும் குழந்தைகள், இளைய மற்றும் முதிய தலைமுறையினர்.
3.அடிக்கடி மனஉளைச்சல்கள் மனச்சோர்வுகளுக்கு ஆளாவது.
4.மரபணுக்கோளாறுள்ள ஒரே மாதிரி உருவத்தில் பிறந்த இரட்டையர்கள்.
5.திரும்பத்திரும்ப பயப்படும்படியான சூழ்நிலைக்கு ஆளாக்குதல்.
ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த டேவிட் எல். பால்ஸ் மற்றும் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையின் மனநல மற்றும் நரம்பியல் வளர்ச்சி மரபணு ஆராய்ச்சி படி ஒ.சி.டி.யால் பாதிக்கப்படுபவர்களின் உடனடி குடும்ப உறுப்பினர்கள் இதே கோளாறு உருவாகும் அபாயம் அதிகம்.
ஒ.சி.டி ஒரு உயிரியல் கோளாறு:-
ஒ.சி.டி மற்றும் தொடர்புடைய கோளாறுகள் பற்றிய ஆய்வுகள், ஒ.சி.டி மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சேதம் ஏற்படுவதால்தான் உண்டாவதாக கூறுகின்றன. அந்த பகுதி பாசல் கேங்க்லியா (Basal Ganglia) என்று அழைக்கப்படுகிறது.(படம்-2)
பாசல் கேங்க்லியாவுடன் தொடர்பு கொள்ளும் இரண்டு மூளை கட்டமைப்புகள் ஒ.சி.டி நோயாளிகளுக்கு மிகவும் சுறுசுறுப்பாக உள்ளன. இந்த இரண்டு கட்டமைப்புகளும் ஆர்பிட்டோஃப்ரன்டல் கார்டெக்ஸ் (ORBITOFRONTAL CORTEX-OFC) மற்றும் முன்புற சிங்குலேட் கைரஸ் (ANTERIOR CINGULATE GYRUS-ACG) என அழைக்கப்படுகின்றன. (படம்-2B)
![]() |
படம்-2B |
சிகிச்சைகள்.-
1.அறிவாற்றல்-நடத்தை சிகிச்சை:-
பயமற்ற சூழ்நிலையை உருவாக்குவது.
நோயாளியிடம் அன்பாக நம்பிக்கை ஏற்படும்படியாக நடந்துகொள்வது.
அதன் மூலம் அவர் மனதில் ஏற்படும் ஆவேசமான பயமூட்டும் எண்ணங்களை போக்குவது, இறுதியாக பிடிவாதமான திரும்பத்திரும்ப செயல்படத்தூண்டும் எண்ணங்களை மாற்றுவது. இந்த சிகிச்சை ஒரே நாளில் செய்யக்கூடியது அல்ல. பல நாட்கள் பல மாதங்கள் ஏன் பல வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் மருந்து மாத்திரைகளை விட இதுவே மிகவும் சிறந்த சிகிச்சை ஆகும். பின் விளைவுகள் இல்லாதது. டாக்டரின் உதவி தேவை இல்லை.
ஆபத்தான மருந்து மாத்திரை சிகிச்சைகள்.
ஆங்கில சிகிச்சை முறையில் இந்த நிலைக்கு மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் செரட்டோனின் என்ற ஹார்மோன் பற்றாக்குறையே இதற்கு காரணம் என்பர். எனவே சைக்கியாட்ரிஸ்ட்டிடம் இந்த நோய்க்கு சிகிச்சை என்று போனால் SSRI (SEROTONIN SPECIFIC REUPTAKE INHIBITORS) என்ற மனசோர்வு மருந்துகளைத்தந்து நம்மை நிரந்தர நடமாடும் நோயாளிகளாக மாற்றி விடுவர்.
SSRI-மருந்துகளும் அவற்றின் பின்விளைவுகளும் :-
இவை எல்லாமே தொடர்ந்து சாப்பிடப்படும் பொழுது மத்திய நரம்புமண்டலத்தையும் மூளையையும் சிதைக்கின்றன . அதுமட்டுமில்லாமல் தானியங்கி நரம்பு மண்டலத்தையும் கீழ்கண்டவாறு பெரும் பாதிப்புகளுக்கு ஆளாக்குகின்றன.
2.ஆல்பா அட்ரீனெர்ஜிக் அழுத்த உயர்வு (புராஸ்டேட் பிரச்சினை உள்ளவர்கள் கவனம்)
3.இதயத்துடிப்பு அதிகரித்தல்
4.ஒழுங்கற்ற இதயத்துடிப்பு.
SSRI பற்றி விரிவாக தொடர்ந்து அடுத்த பதிவில் தொடர்ந்து காணலாம்
அடுத்த பதிவை தொடர்ந்து காண இங்கு ↓க்ளிக் செய்யவும். அடுத்த பதிவு SSRI - தொடரும்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக