திங்கள், 1 ஜூலை, 2019

வெற்று நீரிழிவு -DIABETES INSIPIDUS (DI)

வெற்று சிறுநீரிழிவு டயாபடீஸ் இன்சிபிடஸ்



நீரிழிவு என்றாலே நமக்கெல்லாம் பெரும்பாலும் தெரிந்தது சர்க்கரை நீரிழிவு நோய் பற்றித்தான் 
ஆனால் நாம் இங்கே பார்க்கப்போவது அதற்கு முற்றிலும் வேறுபட்ட ஒரு நீரிழிவு நோய் ஆகும் 
இதில் வெறும் நீர்சத்து மட்டுமே சிறு நீரில் வெளியேறிக்கொண்டு இருக்கும் 
எப்படி இன்சுலின் குறைபாடு சர்க்கரை நீரிழிவிற்கு காரணமோ அது மாதிரி இந்த நீரிழிவிற்கு வாஸோப்ரஸின் (Vasopressin ) எனப்படும் ஹார்மோன் குறைபாடே காரணமாகும் 
நம் சிறுநீரகம் சிறுநீர் உற்பத்தியாகி வெளியேறும் நிலையில் கிட்டத்தட்ட 90% நீர்ச்சத்தை மீண்டும் உறிஞ்சி ரத்தத்தில் சேர்த்துவிடும் இதற்கு காரணம் நம் மூளைதான் 
நம் உடலின் நீர்ச்சத்தை சமன்பாட்டுடன் நிர்வகிப்பதில் மூளைக்கு பெரும்பங்கு உண்டு இல்லை என்றால் நம் உடல் நீர்ச்சத்து முழுவதும் வெளியேறி மரணம் சம்பவித்துவிடும் 
மூளை இதை எப்படி செய்கிறது என்பதை சுருக்கமாக பாப்போம் 
நம் மூளையின் அடிப்பகுதியில் ஹைப்போ  தலாமஸ் என்ற ஒரு சுரப்பி இருக்கிறது.இதில் இருந்துதான் வாஸோப்ரஸின் (Vasopressin) என்றோரு ஹார்மோன் உற்பத்தியாகிறது இதற்கு ஆன்டி டையூரட்டிக் ஹார்மோன் (Anti Diuretic Hormone) என்றும் சுருக்கமாக A.D.H. என்றும் கூறுவார்கள் .இது இரத்தத்தில் நீர்ச்சத்தை அதிகரித்து இரத்த அழுத்தம் குறையாமல் பார்த்துக்கொள்ளும் அதனால்தான்தான் இதற்கு வாஸோப்ரஸின் என்று பெயர்.
இந்த ஹார்மோன் ஹைபோதலாமஸில் உற்பத்தியாகி கீழ்நிலை பிட்யூட்டரியில் (Posterior Pituitary) சேகரிக்கப்பட்டு மூளையின் தூண்டுதலால் அங்கிருந்து வெளியாகி சிறுநீரகத்திற்கு நீரை திரும்ப உறிஞ்சும்படி கட்டளை இடுகிறது.
இந்த அமைப்பில் கோளாறு ஏற்படும் பட்சத்தில் Diabetes Insipidus எனப்படும் வெற்று சிறுநீரிழிவு என்ற கொடிய நிலை ஏற்படும்.
வெற்று சிறுநீரிழிவு என்ற இந்த நோய் மிகவும் அரியது என்றாலும் இது மிகவும் ஆபத்தானது ஆகும் .
இந்த நோய் ஆரம்பநிலையில் பெரும்பாலும் எந்தவித அறிகுறிகளையும் காட்டாது.எல்லாம் நார்மலாகவே இருக்கும் பிறகு நாட்பட நாட்பட அடிக்கடி சிறு நீர் கழிவதும் கடுமையான தாகம் களைப்பு என்று படிப்படியாக இதன் அறிகுறிகள் ஆரம்பமாகும்.நோய் முற்றிய நிலையில் இது ஆளை படுக்கையில் முடக்கிவிடும்.குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் வரை சிறுநீர் பிரியும் 
லிட்டர் கணக்கில் தண்ணீர் குடித்தாலும் தாகம் தீராது.உடலிலிருந்து வெறும் நீர் மட்டும் வெளியேறுவதால் நீரில் கரையக்கூடிய தாதுக்கள் குறிப்பாக சோடியம் உடலிலேயே தங்கி சோடியம் மிகைப்பாட்டின் தாக்கங்களை உண்டாக்கும் 

நோய் வகைகளும் காரணிகளும் :-

A .மத்திய நரம்பு மண்டல வெற்று நீரிழிவு (CENTRAL DI ):-இது பிட்யூட்டரியிலிருந்து அதாவது மூளையிலிருந்து வாஸோப்ரஸின் சரியாக சுரக்காமல் இருப்பது.இதற்கு கீழ்கண்ட காரணிகளை வகைப்படுத்தலாம்.
1.தலையில் அடிபடுதல் இதனால் ஹைப்போதலாமஸ் பிட்யூட்டரி போன்ற உறுப்புகள் சேதமடைதல் 
2.மரபு அணுக்கள் கோளாறு 
3.தலை மற்றும் மூளைப்பகுதியில் ஏற்படும் புற்று நோய் கட்டிகள் 
4.தலையில் அறுவைசிகிச்சை 

B .சிறுநீரக கோளாறு (NEPHROGENIC DI):-இந்தவகையில் மூளையிலிருந்து வாஸோப்ரஸின் மூலம் மூளை கட்டளை இட்டாலும் சிறுநீரகம் அதை பொருட்படுத்தாமல் இருப்பது.

இதற்கு காரணம் ,
1.சிறுநீரக கோளாறு 
2.சிறுநீரக கற்கள் 
3.உயர் இரத்த அழுத்தம் (High B.P.)
4.தாழ்வுநிலை இரத்த அழுத்தம் (Low B.P.)
5.சர்க்கரை நோய் (Hyperglycemia)

C.அதிக நீர்ச்சத்து எடுப்பதால் வருவது (Dipsogenic DI):-இந்த வகை நீரிழிவு மிகவும் அலாதியானது இதில் வாஸோப்ரஸின் சுரப்பு ஒழுங்காகவே இருக்கும்.சிறுநீரகத்தில் குறிப்பிட்டு எந்த பாதிப்பும் இருக்காது இருப்பினும் சிறுநீரகம் மூளையின் கட்டளையை புறக்கணிக்கும் இதற்கு காரணம் தேவையில்லாமல் நீண்ட காலங்களுக்கு அளவு மீறி நீர் ஆகாரங்களை எடுத்துக்கொள்வது அதிலும் குறிப்பாக மது பானங்கள் குளிர் பானங்கள் என்று ப்ரீயாக கிடைக்கிறதே என்று சகட்டு மேனிக்கு பீப்பாய் பீப்பாயாக வயிற்றுக்குள் பானங்களை பாய்ச்சுவது இதனால் சிறுநீரகம் பாதிப்படைவதோடு இதுமாதிரி வெற்று நீரிழிவிற்கும் வழிவகுக்கும் அதனால்  உண்ணுங்கள் அளவோடு பருகுங்கள் அளவு மீறினால் அமிர்தமும் நஞ்சு 

D.கர்ப்பகால  DI (GESTAGENIC DI):-

இந்த வகை நோய் கர்ப்ப காலத்தில் மட்டும் இருக்கும் பிரசவத்திற்கு பிறகு தானாகவே நோய் நீங்கிவிடும் ஆனால் மீண்டும் அடுத்த கர்ப்ப காலத்தில் வரலாம் இது அவ்வளவு கடுமையாக இருக்காது.

நோய் அறிகுறிகள் (பொது)

1.ஒருநாளைக்கு மூன்று லிட்டர் வரை வெறும் தண்ணீரே சிறுநீராக வெளியேறும் அதில் நிறம் மணம் சுவை இருக்காது 
2.அடிக்கடி கட்டுப்பாடில்லாமல் சிறுநீர் வெளியேறும் 
3.அடங்காத தாகம் 
4.வாய் வறட்சி 
5.களைப்பு பலஹீனம் 
6.தாழ்வுநிலை ரத்த அழுத்தம் (Low Pressure) மற்றும் இதயம் செயலிழப்பு(Heart Failure)
7.தோல் வறட்சி 
8.மலச்சிக்கல் 

பரிசோதனைகள் :-

1.சிறுநீர் பரிசோதனை 
2.ரத்தத்தில் சோடியம் அளவு 
3.ADH பரிசோதனை (இரத்தத்தில் )

சிகிச்சைகள் :-

இந்த நோய்க்கு நிவாரணம் இல்லை ஆனாலும்  கீழ்கண்ட சிகிச்சைகள் மூலம் கட்டுப்படுத்தலாம் 
1.Desmopressin
2.Vasopressin 
மேலே கண்ட மருந்துகள் மூக்கில் உறியக் கூடிய ஸ்ப்ரே ஆக கிடைக்கின்றன 
மருத்துவ மேற்பார்வையில் அவற்றை பயன்படுத்தி கொள்ளலாம் 


  


வியாழன், 27 ஜூன், 2019

சோடியம் மிகைபாடு -ஹைப்பர் நேற்றிமியா

உடலில் சோடியம் மிகைப்பாடு


நம் உடலின் சோடியம் அளவு சாதாரணமாக 130mEq  முதல் 140 mEq வரை இருக்கலாம் இந்த அளவீட்டிற்கு மேல் இருந்தால் அது சோடியம் மிகைப்பாடு அல்லது Hypernatremia என்னும் நோய்க்குறி ஆகும் 
இதுபற்றி விபரமாக நாம் பார்க்கலாம் 
நம் உடலின் ஒவ்வொரு பாகமும் இயங்குவதற்கோ அல்லது இயக்குவதற்கோ சோடியம் இன்றியமையாதது என்றுநாம் இதற்கு முந்திய  பதிவுகளில்  பார்த்தோம்.மீண்டும் அதை நாம் விவரிக்க போவது இல்லை 
சோடியம் மிகைப்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் பற்றி மட்டுமே பார்க்கலாம் 

காரணிகள் :-

1.இன்ட்ரா க்ரேனியல்  ப்ரெஷர் எனப்படும் கொடூர தலைவலி  அல்லது உடல் நீர் கட்டுகள் அல்லது வீக்கங்கள் மற்றும் கிளாக்கோமா என்ற கண் அழுத்த நோய்  இவற்றிற்காக பயனாகும் சில வகை சிறுநீர் இளக்கிகள் (OSMOTIC DIURETICS )அதாவது இந்த வகை சிறுநீர் இளக்கிகள்   சிறுநீரில் அதிக அளவு நைட்ரோஜன் கழிவுகள் மற்றும் சர்க்கரையை  நீருடன் வெளியேற்றி சோடியம்  போன்ற உப்புக்களை மீண்டும் இரத்தத்திலேயே சேர்த்துவிடும் இதனால் இரத்தத்தில் சோடிய அளவு கூடிவிடும் (உம்)Mannitol & Isosorbide 
2.வீரிய ஸ்டெராய்டு மருந்துகள் (Male Sex Hormones,Anabolic Steroids)
3.கருத்தடை மருந்துகள் (Female Sexhormones and Progestins) 
4.அட்ரினல் இயக்கு நீர் ஸ்டெராய்டு (Adreno Cortico Tropic Hormone)
5.Glucocorticoids இந்த வகையில் ஏராளமான ஸ்டெராய்டுகள் இருக்கின்றன 
ஆஸ்துமாவிற்காக மூக்கிலோ அல்லது வாயிலோ உறியப்படும் சில வகை ஸ்பிரேக்களில் பயனாகும் Fluticasone,Beclomethasone,Budesonide ஆகியவையும் வீக்கம் தோல் சிவத்தல் அரிப்பு போன்றவற்றிக்கு மாத்திரையாகவோ அல்லது களிம்பு மற்றும் க்ரீம்களாகவோ பயன்படும் Betamethasone,Dexamethasone Triamcinolone,Prednisolone Methylprednisolone போன்றவையும் இயற்கையில்  சுரக்கும் Cortisol,Hydrocortisone ஆகியவையும் இவ்வகையை சேர்ந்தவையாகும் 
நினைவிருக்கட்டும் ஆஸ்த்மா மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு glucocorticoids தவிர்க்க முடியாதவை ஆகும்.
 மேல் கண்ட அனைத்து மருந்துகளும் ரத்தத்தில் சோடியம் அளவை அதிகரிக்க செய்யும் 
6.வெற்று நீரிழிவு நோய் (DIABETES INSIPIDUS )இந்த நோய் ரத்தத்திலும் உடல் நீரிலும் சோடியம் அளவை அதிகரிக்க செய்வதுடன் மிக ஆபத்தானதும் கூட இதுபற்றி நாம் பின்னர் ஒரு பதிவில் தனியாக காணலாம்.

சோடியம்  அதிகம் உள்ள உணவுகள் :-

1.இறால் மீன்கள் (Shrimps)
2.ரெடிமேட் புட்டிங்குகள் (Instant Puddings)
3.காட்டேஜ் சீஸ் (Cottage Cheese)
4.சலாடுகள் (Salads)
5.பீஸ்சா (Pizzas)
6.உப்பு (Table Salt)
மேல் கண்ட உணவுகளை நீங்கள் சோடியம் மிகை நோய் உள்ளவராக இருந்தால் தவிர்த்து கொள்வது நல்லது 

அறிகுறிகள் :-

1.நீங்கள் வெற்று நீரிழிவு நோயாளியாக இருந்தால் முக்கியமாக சோம்பல் (Lethargy),மற்றும் மனக்குழப்பம் இவை ஏற்படும் காரணம் இவை மூளையில் ஒரு பகுதி சிதைவதால் ஏற்படுவதாகும்.இது பற்றி நாம் விபரமாக அடுத்து வரும் தனிப்பதிவில் வெற்று நீரிழிவு என்ற தலைப்பில் பாப்போம்.
2.உப்பு ஆர்வம்,அதாவது அதிக உப்பு சாப்பிடுவதில் நாட்டம் இம்மாதிரி தகிப்பு ஏற்பட்டாலே நம் உடம்பில் சோடியம் அளவு மீறி இருக்கிறது என்று அர்த்தம்.
3.மிகுந்த தாகம் எவ்வளவு நீர் அருந்தினாலும் திருப்தி இருக்காது 
4.அடிக்கடி நீர் பிரிதல் 
5.வீக்கம் 
6.தலைவலிகள் 
7.பசித்தாலும் உணவு உள்ளே இறங்காது கொஞ்சம் சாப்பிட்டாலும் போதும் என்றாகிவிடும் 

பரிசோதனைகள் :-

1.இரத்தம் 
2.சிறுநீர் 

மருத்துவம் :-

1.குறுகிய கால நோய்க்கு (Acute cases )5% க்ளுகோஸ் கரைசலை சிரைக்குழாயில் ட்ரிப் மூலம் மெதுவாக செலுத்துவது.கவனம் வேகமாக செலுத்தினால் மூளை பாதிக்கப்படும் 
2.நாட்பட்ட நோய்க்கு 0.045% சோடியம் குளோரைடை சிரை குழாயில் செலுத்துவது 
மேல் கண்ட சிகிச்சைகளை டாக்டரின் மேற்பார்வையில் ஆஸ்பத்திரியில் எடுத்துக்கொள்ளவேண்டும் 







ஞாயிறு, 23 ஜூன், 2019

சோடியம் குறைபாடு -ஹைபோ நேற்றெமியா

சோடியம் குறைபாடு -ஒரு பார்வை



நம் உடம்பில் ரத்தத்திலும் செல்  மற்றும் செல் இடை திரவங்களிலும் நம் உடல் இயக்கத்திற்கான அநேக தாது உப்புகள் சேர்ந்து இருக்கின்றன இவை பெரும்பாலும் அயனிகளாகவே இருக்கின்றன.அவற்றில் ஒன்றுதான் சோடியம் அயனி.
சோடியம் மிக மெலிதான எளிதில் துண்டுபடக்கூடிய ஒரு உலோகமாகும் இது மிக வீரியமிக்க காரவகை வேதி கூட்டு பொருட்களை உண்டாக வல்லது (Basic Metal )
உதாரணம் சோடியம் ஹைட்ராக்ஸைடு (NaOH)இது ஒரு வீரியமிக்க காரமாகும் 
அதே சமயம் நம் உடம்பில் சோடியம் பெரும்பாலும் 
சோடியம் குளோரைடு மற்றும் சோடியம் பைகார்போனேட் உப்புக்களாகவுமே இருக்கிறது 
இந்த உப்புகள் கூட்டு பொருட்களாக இருந்தாலும் அவை எலெக்ட்ரானிக் கூட்டுக்களாக இருப்பதால் அந்த கூட்டு மிகவும் பலகீனமானதே எனவே அவை நேரத்திற்கு தகுந்தாற்போல் இடத்திற்கு தகுந்த மாதிரி சில சமயம் கூட்டு பொருட்களாகவும் சில சமயம் தனித்தனி அயனிகளாகவும் இருக்கும் 
இதை கீழ்கண்டவாறு வேதி சமன்பாடுகள் மூலம் விளங்கலாம் 
Na+  + Cl- >reversible< NaCl (sodium chloride)
Na+  + HCO3->reversible< NaHCO3(sod.bicarbonate)
 உடம்பின் மொத்த சோடியம் அளவு 130mEq -140mEq வரை  இருக்கலாம்.இந்த வரையறைக்கு கீழே போனால் அதாவது 120mEq க்கு கீழே இறங்கினால் சோடியம் குறைபாடு அதாவது Hyponatremia என்ற நிலை உண்டாகும்.
சோடியம் நம் உடம்பில் பெரும்பாலும் செல் இடை திரவத்தில்தான் (intercellular fluid) மிகுந்து இருக்கும் 
சோடியம் நம் உடல் இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாதது 
நம் உடலின் ஒருபகுதியை இயக்கவேண்டும் என்றால் உதாரணமாக நாம் கைகளை அசைக்க வேண்டும் என்றால் அந்த பகுதியிலுள்ள நரம்பு மண்டலம்  நிலைக்கு வரவேண்டும் இந்த நிலைக்கு action potential என்பர் இந்த நிலைக்கு வர சோடியம் அயனிகள் நரம்பு செல்களுக்குள் பாயும் அதே அளவு பொட்டாசியும் வெளியேறும் இருபுறமும் இருக்கும் குளோரைடு அயனிகள் அவற்றை ஈரத்து கொள்ளும்.இதை கீழ்கண்ட வரைவு மூலம் விளங்கலாம் 
Note that sodium enters the intracellular and depolarize the electrical shift to cause an action potential for excitation.
சோடியம் நம் உடல் அசைவுகளுக்கு மிகவும் அவசியமாதலால் அதன் குறைபாடு கீழ்கண்ட விளைவுகளை உண்டாக்கும் :-

அறிகுறிகள் :-

1.களைப்பு 
2.குமட்டல் ,தலை சுற்றல் 
3.வாந்தி 
4.தலைவலி 
5.எரிச்சல் மனா உளைச்சல் 
6.தசை வலி வீக்கம் 
7.வலிப்பு மற்றும் கோமா நிலை 

காரணிகள் :-

கீழ்கண்ட காரணிகளை வகைப்படுத்தலாம் 
1.சிறுநீர் இளக்கிகள் (Diuretics,like thiazide மற்றும் loop diuretics )
2.மனஉளைச்சல் மருந்துகள் (Anti Depressants )
3.வலி நிவாரணிகள் 
4.CHF எனப்படும் இதய செயற்பாடு தோல்வியடைதல் 
5.கல்லீரல் செயல் குறைபாடு 
6.SHAH (SYNDROME OF HIGH SECRETION OF ANTI DIURETIC HORMONE )எனப்படும் உயர் சுரப்பு ஆன்டி டையூரெடிக் ஹார்மோன் இது சிறுநீரகம் அதிக நீர்ச்சத்தை உடலுக்குள் உறிஞ்சி இழுத்துவிட்டு உடல் சோடியம் அளவை நீர்க்க செய்துவிடும் 
7.நாட்பட்ட வயிற்றுப்போக்கு வாந்தி மற்றும் அதிக வியர்வை வெளியேற்றம் ஆகிவையும் உடல் சோடியம் அதிகாகமாக இழப்பதற்கு காரணமாகும் 
8.அதே நேரம் அளவுமீறி திரவ  குடிப்பதும் உடல் சோடிய சத்தை  நீர்க்க செய்துவிடும் 
9.அட்ரீனல் செயல்பாடு குறைவு (அடிசனின் நோய்)
இந்த நிலையில் அல்டோஸ்ட்டிரான் என்ற ஹோர்மோன் கோளாறினாலும் உடல் சோடியம் நிலை பாதிக்கப்படும் 
10.தைராய்டு குறைபாடு 
11.அதிக அளவு amphetamin போன்ற தூக்கத்தை கெடுக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வது 

Diagnosis (நோய் அறிதல் ):-

1.ரத்த பரிசோதனை 
2.சிறுநீர் பரிசோதனை 

மருத்துவம் :-

1.சிறுநீர் இலக்கிகள் சாப்பிடுபவர்கள் டாக்டரின் ஆலோசனை பெற்று அதன் டோஸ் மாற்றம் சேது கொள்ளலாம் அவர்கள் திரவ உணவு எடுப்பதிலும் டாக்டர் ஆலோசனை பெற்று அளவை குறைத்துக்கொள்ளலாம் 
2.சோடியம் IV ட்ரிப் களை  டாக்டர் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளலாம் 
A HALF NORMAL SALINE DRIP (0.45% Sodium chloride)
3.அவசர நிலை இல்லை என்றால் உப்பு நீர் திரவம் எடுத்துக்கொள்ளலாம் 
ஓன்று முக்கியம் சோடியம் அளவை மெது மெதுவாகத்தான் உயர்த்தவேண்டுமே வேண்டுமே தவிர மொத்தமாக ஏற்றினால் அது மூளை மண்டலத்தை பாதிப்படைய செய்துவிடும் 

கேன்சர் மார்க்கர் :-

சோடியம் அளவு குறைபாடு சில சமயம் கீழ்கண்ட புற்று நோய்களின் மார்க்கர் ஆகும் 
1.நுரையீரல் புற்று 
2.கல்லீரல் புற்று 
3.மூளை புற்று 
4.கணைய புற்று 
5.சிறு நீராக புற்று 
6.உணவு குழாய் புற்று 
7.தொண்டை புற்று 
8.ஹாட்கின்  அல்லாத லிம்போமா 


திங்கள், 13 மே, 2019

போதை வஸ்துக்களை விட்டால் வரும் நன்மைகள்

 போதையை விட்டால் 10 நன்மைகள் 


போதை வஸ்துக்களான ஆல்கஹால் கஞ்சா அபின் போன்ற வஸ்துக்களை தவிர்த்தால் குறைந்தது பத்து நன்மைகளாவது நமக்கு கிட்டும் அவை :-
1.தினமும் ஆல்கஹால் குடிப்பது ஆரோக்கியம் என்று கருதுவது  ஒரு பேதைமை 
ஒரு ட்ரின்க் ஒருநாளைக்கு என்று கருதினால் கூட அத்துடன் நின்றுவிடாது தொடரக்கூடும் 
ஆனால் இதை தவிர்ப்பதால் 
1.நம் இதயத்துடிப்பு ஆரோக்கியமாக இருக்கும் இரத்த அழுத்தம் நேர்த்தியாக இருக்கும் 
2.கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும் 
3.மூளையும் நரம்பு மண்டலங்களும் பாதுகாப்பாக இருக்கும் 
4.ஜீரண மண்டலம் வலுப்பெறும் 
5.தூக்கமின்மை ஒழுங்கற்ற தூக்கம் இவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும் 
6.சமூக உறவுகள் சுமுகமாக இருக்கும் 
7.விபத்துகளுக்கு ஆளாகாமல் தவிர்த்துக்கொள்ளலாம் 
8.உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.காரணம் ஒரு கிளாஸ் பீரில் 150 கலோரியும் ஒரு கிளாஸ் ஒயினில் 130 கலோரியும் இருக்கிறது அது மட்டுமல்லாமல் ஆல்கஹால் பசியை தூண்டிவிட்டு இன்னும் அதிக கலோரிகளை விழுங்க வைக்கும் 
9.புற்று நோய் போன்ற கொடிய நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் 
10.குடும்ப உறவுகள் மற்றும் கணவன் மனைவி இடையே தாம்பத்திய உறவுகள் சீராகும் 

வியாழன், 25 ஏப்ரல், 2019

ரத்தத்தில் உயர் நிலை பொட்டாசியம்

இரத்தத்தில் உயர் நிலை  பொட்டாசியம்     

  

        பொட்டாசியம் என்பது காரத்தன்மை நிறைந்த எளிதில் உடையக்கூடிய ஒரு மெது உலோகமாகும் 
இந்த வகையில் சோடியத்திற்கு அடுத்த நிலையில் இது இருக்கிறது வேதியியலில் பொட்டாசியம் மற்ற மூலகங்களுடன்  கூடும்போது தனது அணுவிலிருந்து ஒரு மின்துகளை (ELECTRON) இழந்து நேர்மின் அயனி ஆகிறது இதன் இரசாயன வலு எண்(VALENCY) ஒன்று ஆகும்.எனவே இதன் ஒவ்வொரு அயனியும் தன தலையில் ஒரே ஒரு நேர்மின் அடையாளத்தை சுமந்து கொண்டு இருக்கும்.இதன் அர்த்தம் இந்த அயனிக்குள்  ஒரு புரோட்டான் (நேர் மின் துகள்) மிகையாக இருக்கிறது அதனை எதிர்கொள்ள ஒரே ஒரு எலெக்ட்ரான்(எதிர் மின் துகள் )தேவை என்பதாகும் 
பொட்டாசியம் அயனியின் அமைப்பு கீழே தரப்பட்டு இருக்கிறது 
   

நமது உடலில் பொட்டாசியம் பெரும்பாலும் க்ளோரைடு அல்லது பைகார்போனேட் உப்புக்களாகவே இருக்கிறது 
நமது திசு செல்களுக்குள் இருக்கும் திரவம் பெரும்பாலும் நேர் மின்  பொட்டாசியம் அயனிகளை கொண்டிருக்கும் அதேவேளை செல்களுக்கு வெளியே அல்லது இடையே உள்ள திரவத்தில் பெரும்பாலும் நேர் மின்  சோடியம் அயனிகள் நிறைந்திருக்கும் 
இரண்டு திரவங்களிலும் எதிர் மின் துகள் கொண்ட  குளோரைடு அயனிகள்  ஏற்ற தாழ்வுகளுடன் இருக்கும் 
இப்பொது ஒரு செல் துடிப்பு அடைய வேண்டுமென்றால் முதலில் அது முனைவு நீக்கம் (DEPOLARIZATION)அடைய வேண்டும் 
ஒரு செல்லை மின் முனைவு நீக்குவதில் சோடியம் மிக வீரியம் கொண்டது ஆகும்  .மிகவும் பலஹீனமானது குளோரைடு அயனி ஆகும் 
இதை கீழ்கண்டவாறு  உணரலாம் 

Na+  > > Ca++ >> K+ >>> Cl--

          Na+  ---- sodium ion
       Ca++ --- Calcium ion
       K+   ---- Potassium ion
       Cl--   = = Chloride ion
எனவே மேலேயுள்ள வரிசைப்படி நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் ஒரு செல் உசுப்பப்பட அல்லது துடிக்கவேண்டுமென்றால் சோடியம் அதற்குள் பாய வேண்டும் அதே அளவு பொட்டாசியம் வெளியேற வேண்டும் 
இப்பொது செல் துடித்து செயல்படும் செயல் பாடு முடிந்து அது நிதானம் அடையும் போது மீண்டும் மின் முனைவு   ஆக்கம் (REPOLARIZATION) நடைபெறும் இப்பொது மீண்டும் இடம் மாறிய அயனிகள் மீண்டும் பழைய நிலைகளுக்கு திரும்பும்.மேல் கூறிய கோட்பாட்டிலிருந்து நாம் விளங்கிக்கொள்வது ஒரு தசை இயங்கவேண்டும் என்றால் அதன் திசுமண்டலத்திலுள்ள செல்களுக்குள் சோடியம் பாய வேண்டும் பொட்டாசியம் நீங்க வேண்டும் எனவே சோடியம் ஒரு உந்து (EXCITATORY ) அயனி ஆகும் பொட்டாசியம் ஒரு தடுக்கும் (INHIBITORY) அயனி ஆகும் 
 இதுதான் ஒரு பொதுவான கோட்பாடு இதையே எல்லா தானியங்கி அல்லது நாம் இயக்கும்  தசைகளும் பின்பற்றுகின்றன 
இப்பொது நாம் தலைப்பிற்கு வருவோம் 
நம் இரத்தத்தில் பொட்டாசியம்   அளவு பொதுவாக 3 இலிருந்து 5 மில்லி மோல்  இருந்தால்  போதும் 
இதுவே 7 மில்லி மோலுக்கு  மேல் அதிகரித்தால் அந்த நிலைக்கு உயர்   நிலை பொட்டாசியம் என்பர் இதை  மருத்துவ மொழியில் HYPERKALEMIA என்பர் 
பொதுவாக இதன் ஆரம்பகட்ட அறிகுறிகள் தெரியாது முற்றிய நிலையில்தான் இது கீழ்கண்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும் 

அறிகுறிகள் :-

1.தசை பலஹீனம் 
2.களைப்பு 
3.குமட்டல்  வாந்தி 
4.சதை பிடிப்பு ,வலி 
5.மூச்சு திணறல் 
6.ஒழுங்கற்ற இதய துடிப்பு 
7.நெஞ்சு வலி 
காரணிகள் :-
1.நாட்பட்ட சிறுநீரக கோளாறு (ESKD )
2. கட்டுப்படுத்தப்படாத உயர்  சர்க்கரை நிலை(HYPERGLYCEMIA ) ,நீரிழிவு 
3.கீழ்கண்ட சிலவகை மருத்துகள் :-
A .வலி மருந்துகள் 
B.ட்ரிமேதோப்ரிம் (சல்பா  ஆண்டிபயாடிக்)
C.கேன்சர் மருந்துகள் (சைக்ளோஸ்போரின்)
D.ரத்த கொதிப்பு மருந்துகள்:- (--PRIL மருந்துகள்  ,--lol மருந்துகள் )
E.அமிலோடிப்பின், நிபிடிப்பின்,வெரப்பாமில் டில்டியாஜிம்  போன்ற கால்சியம் அயனி அடைப்பான் மருந்துகள் 
F.சக்சினில்கோலின் 
G.ஹெப்பாரின் 
H.டிகாக்சின் 
I .மன்னிட்டால் 
4.சிறுநீரக கோளாறு 
5.உடலில் ஏற்படும் காயங்கள் 
6.ஆல்டோஸ்ட்டிரோன் ஹார்மோன் குறைபாடு 

பொட்டாசியம்  அதிகம் உள்ள பண்டங்கள் :-

1.சர்க்கரை வள்ளி கிழங்கு 
2.டின்னில் அடைக்கப்பட்ட தக்காளி பண்டங்கள் 
3.உருளைக்கிழங்கு 
4.புரதங்கள் :-பீன்ஸ்,கொடுவா மற்றும் டூனா மீன்கள்
5.தோலுரிக்கப்படாத ,காய்கறிகள் பழங்கள் 
6.தயிர் 
7.காரட் ஜூஸ் 
8.உலர்த்திய பிளம் (PRUNE)  மற்றும் அதன் ஜூஸ் 
9. உலர்த்திய ஆப்ரிகாட் மற்றும் பீச் பழம்   
10. பீட் ரூட்டின் பசும் இலைகள் 

பரிசோதனைகள் :-

1.முதலில் டாக்டர் சிறுநீரகத்தை பரிசோதிப்பார் 
2. இதய பரிசோதனைகள் 
3.நீர்ச்சத்தின்  அளவு    பரிசோதனைகள் 

சிகிச்சை முறை :-

1.இறுதிக்கட்ட சிறுநீரக நோயாளிகள் (ESKD) டயாலிசிஸ் செய்துகொள்வது அவசியம் 
2.குறுகிய சிறுநீரக நோயாளிகளுக்கு கீழ்கண்ட சிகிச்சைகள் அளிக்கலாம் :-
a)கால்சியம் ஊசி (IV )
b)இன்சுலின் ஊசி (IV)10 யூனிட் அதை தொடர்ந்து 25கிராம் க்ளுகோஸ் IV ஊசி 
c)albuteral இது ஒரு ஆஸ்துமா மருந்து ஆகும் .சிலருக்கு இதை உபயோகிக்கலாம் 
                
   



வியாழன், 31 ஜனவரி, 2019

முக்கிய மருத்துவ குறிப்புகள்

மிக முக்கிய சில ஆரோக்கிய  குறிப்புகள் 

1.அந்த 7 இடர் காரணிகள் :-

 இதய நோய்க்கான அந்த ஏழு இடர் காரணிகளையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் இதய நோய் மட்டுமல்லாமல் சர்க்கரை நோயையும் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் 
அவை 
1.உடற்பயிற்சி 
2.எடை 
3.உணவு 
4.இரத்த சர்க்கரை அளவு 
5.இரத்த கொலஸ்ட்ரால் அளவு 
6.புகைப்பழக்கம் 
7.இரத்த அழுத்தம் 

2.அல்ஜெய்மர் கோளாறு 

 மனக்கோளாறுகளில் மிக கொடுமையானது அல்ஜெய்மர் நோய் ஆகும் 
இது மூளை செல்களை பீட்டா அமைலாய்டு என்ற புரதம் கட்டுக்கோப்பு இல்லாமல் குவிந்து அழிப்பதனால் ஏற்படுவது 
பொதுவாக பீட்டா அமைலாய்டு எல்லா ஆரோக்கியமான மூளை செல்களில் இருக்கும் .சில நேரங்களில் அதிக மனஉளைச்சல் ஏற்படும்போது இது ஒழுங்கற்ற முறையில் மூளையின் சில இடங்களில் குவிந்து அந்த செல்களை அரித்து விடும் இதுவே அல்ஜெய்மர் நோய் காரணியாகும் 
இதை தடுப்பதற்கு விஞ்ஞானிகள் வேறு ஒரு புரதத்தை பயன்படுத்த ஆய்வு மேற்கொண்டு உள்ளனர் 
அதன் பெயர் 3K3A-APC என்பதாகும்.இது ஒரு மாற்றியமைக்கப்பட்ட C-புரதம் ஆகும் 
இது அவ்வளவு எளிதாக உறையாது எனவே இது இப்பொது அல்ஜெய்மர் நோயை வராமல் தடுக்க கூடிய ஒரு செல் பாதுகாப்பு காரணியாக பயன்படுத்தப்படலாம் 
நீண்ட நாட்கள் ஆழ்ந்த நித்திரை இல்லை என்றால் அது அல்ஜெய்மர் நோயின் அறிகுறியாக இருக்கலாம் 
கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் Sabreena Islamoska என்பவரின் ஆய்வின்படி நாட்பட்ட மனஉளைச்சல் அல்ஜெய்மர் நோய்க்கான ஒரு காரணியாகும் என்று கண்டறியப்பட்டு உள்ளது

3.எலும்பு சூப் 

ஒரு சமீபத்திய ஆய்வின்படி எலும்பு சூப் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கண்டறியப்பட்டு இருக்கிறது 
குறிப்பாக எலும்பு சூப் இதயத்திற்கு வலு ஊட்டுகிறதாம் 
எலும்பை நீரில் நிதானமான நெருப்பில் காய்ச்சும்போது அதில் சிறிது வினீகரை சேர்க்கவேண்டும் அப்போதுதான் எலும்பின் சத்து  முழுவதும் சூப்பில் ஏறும் 

4.போரக்ஸ் (Borax )

இது இயற்கையில் கிடைக்கும் ஒரு தாது உப்பு ஆகும் இதன் இரசாயனப் பெயர் சோடியம் டெட்ரா போரேட் 
இது பொதுவாக வீடுகளீல் ஒரு கிளீனிங் பவுடர் ஆக பயன் ஆகிறது 
மேலும் இது டிடர்ஜண்ட் சோப்புகளிலும் டால்கம் பவுடர்களிலும் காஸ்மெடிக்ஸ் ஆக பயன்படுத்தப்படுகிறது 
சில  வீடுகளில் இதன் ஆபத்தை அறியாமல் குழந்தைகள் பொம்மை செய்து விளையாடும் களிகளாக (CLAY,SMILE) குழந்தைகளின் கைகளில் கொடுக்கிறார்கள் 
இது முறையல்ல ஏனென்றால் குழந்தைகள் இதை தெரியாமல் தின்று விட்டால் கீழ்கண்ட பக்க விளைவுகள் ஏற்படும் 
1.வயிற்று போக்கு 
2.ஷாக் 
3.வாந்தி 
4.மரணம் 

5.குடலில் இருக்கும் நல்ல கிருமிகள் 

நம் குடலின் மொத்த மேற்பரப்பு (surface area ) சுமார் 300 இலிருந்து  400 சதுர மீட்டர் ஆகும் 
அதாவது நம் உடலுக்கும் நம் உடலின் உட்சுற்று சூழலுக்கும் இடையே இது ஒரு மிகப்பெரும் இடை முகம் (INTERFACE ) ஆகும் 
ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலத்தில் சுமார் 50 மெட்ரிக் டன் உணவு இதன் வழியே பயணிக்கிறது .இந்த உணவுடன் ஒரு மிகப்பெரும் அளவில் கிருமிகளும் குடலினூடே பயணிக்கின்றன 
இந்த கிருமிகளில் உயிருக்கே உலைவைக்கும் கிருமிகளும் உண்டு அதே சமயம் நல்லவையும் உண்டு 
சில ஆரோக்கியமான குழந்தைகளின் குடலில் இருக்கும் நல்ல கிருமி கொத்து (GOOD BACTERIAL FLORA) அந்த குழந்தைக்கு உணவில் ஒவ்வாமை வராமல் காக்கிறது 
டாக்டர்.நாகர் மற்றும் குழுவினரின் ஒரு ஆய்வின் படி closteridium வகையை சேர்ந்த caccae என்ற கிருமிகள் சிலவகை nuts களின் மூலம் ஒவ்வாமை ஏற்படுவதை தடுக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது 
இதிலிருந்து சில கிருமிகளின் metabolic கழிவுகளில் இருந்து மருந்து ஒவ்வாமைக்கான மருந்துகளை தயாரிக்க முடியும் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்திருக்கின்றனர் 
6.ஹைட்ரஜன் சல்பய்டும் வயது முதிர்வும் 
முதுமையை பற்றி ஒரு சுவாரஸ்யமான ஆய்வு பிரிட்டனில் உள்ள எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது 
இந்த ஆய்வு முதுமை எப்படி ஏற்படுகிறது என்பது பற்றிய உண்மையை நோக்கி  மேலும் ஒரு அங்குல நெருக்கத்தை உண்டாக்கி இருக்கிறது 
இந்த ஆய்வில் ஹைட்ரஜன் சல்பய்டு வாயு செல்கள்கள் முதிர்வடைவதை தடுப்பதாக ஒரு அதிசய முடிவுக்கு வந்திருக்கிறார்கள் 
பொதுவாக நம் உடலின் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் (MITOCHONDRIA )என்று சில அமைப்புகள் உண்டு இவை நீள் வட்டத்தில் rods போல் இருக்கும் இவை  ORGANELLES என்ற நூல் பின்னல்கள் போல்  இருக்கும் ஒரு செல்லுக்குள் சுமார் 2000 இலிருந்து 4000வரை MITOCHONDRIA இருக்கும் 
ஈரல் செல்களில்தான் அதிகபட்சம் இருக்கும் 
இவை அடினோசின் திரி பாஸ்பேட் என்ற இராசயனியை உடைத்து அதிலிருந்து சக்தியை வெளியாக்கி செல்களுக்கு தருகிறது 
வயது முதிர முதிர இந்த MITOCHONDRIA பலஹீனப்படுவதால் செல்களும் முதிர்வடைகின்றன இப்படி முதிர்வடைவதற்கு மருத்துவ மொழியில் SENESCENCE என்பர் இப்படி முதிர்வடைத செல்களுக்கு SENESCENT செல்கள் என்பர் 
ஆய்வில் இரண்டு புரதங்கள் SRSF2,மற்றும் HNRNPD என்ற பெயரில் MITOCHONDRIA வில் கண்டுபிடித்து உள்ளனர் இவைதான் வயது முதிர்வின் போது செல்களில் மாற்றங்கள் உண்டாக்குவதாகவும் கண்டுபிடித்து உள்ளனர் 
இவைதான் MITOCHONDRIA வின் உந்து சக்திகள் ஆகும் 
வயது முதிர்வின் போது இந்த உந்து சக்திகள் பின்னடைவு ஆகின்றன 
எனவே விஞ்ஞானிகள் இரண்டு இரசாயனிகளை (AP 39,AP 123) உண்டாக்கி இருக்கிறார்கள் 
இவற்றை எலிகளில் கொடுத்து ஆய்வு செய்யும்போது இவை செல்களில் இருக்கும் MITOCHONDRIA விற்கு மிக சொற்ப (MINUTE) அளவில் ஹைட்ரஜன் பெராக்ஸைட் வாயுவை செலுத்தி அதிலுள்ள சக்தி ஊக்கிகளை உசுப்பி விட்டு செல்கள்கள் முதிர்வடையாமல் செய்கின்றன என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள் 
இதற்காக ஹைட்ரஜன் பெராக்ஸைடு வாயுவை உட்கொள்ளலாமா என்று நினைக்காதீர்கள் 
அது ஒரு விஷ வாயு ஆகும் 

7.மார்பக புற்று 

ஸ்விஸ் நாட்டிலுள்ள பேசல் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வில் மார்பக புற்றின் போது புற்று நோய் செல்கள் மேலும் பரவாமல் இருக்க அவற்றை கொழுப்பு செல்களாக மாற்றி தடுத்து சாதனை புரிந்திருக்கிறார்கள் இதற்கு அவர்கள் பயன்படுத்திய மருந்து கூட்டு நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தும் ROSIGLITAZONE உம் புற்றுநோய் மருந்தான ARCITGENIN என்ற மருந்தும் ஆகும்

8.உடற்பயிற்சி 

 ஐரோப்பியன் ஹார்ட் ஜர்னலில் பிரசுரமான ஒரு ஆய்வு அறிக்கையில் ஒழுங்கான தினசரி உடற்பயிற்சி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மைபயப்பதாகவும் ,குறிப்பாக இதயம் கணையம் கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகள் பாதுகாக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது 
மிக முக்கியமாக தினசரி நடைப்பயிற்சி திசுக்களில் இன்சுலின் நன்றாக பயன்படுத்தப்பட உதவுகிறதாம் இதனால் திசுக்களில் இன்சுலின் எதிர்ப்பு நிலை தவிர்க்கப்படுகிறதாம் 

9.பல் நாடா (DENTAL FLOSS)

 தினசரி பல் நாடாவைக் கொண்டு பல் இடுக்குகளை சுத்தம் செய்வதால் நம் உடம்பில் தேவையில்லாத விஷ வேதிப்பொருள்கள் சேரும் அபாயம் உண்டு என்று  ஒரு ஆய்வு கூறுகிறது காரணம் 90% பல் நாடாக்கள் பாலி புளோரோ அல்கயில் என்ற விஷப்பொருள்களாலேயே நெய்யப்படுகின்றன என்று ENVIRONMENTAL  PROTECTION AGENCY என்ற ஒரு அமைப்பின் செய்தி குறிப்பு கூறுகிறது 
எனவே இந்த பல் நாடாக்களை அதிகம் பயன்படுத்தாதீர்கள் 

10.விரதம் 

கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வில் அடிக்கடி விரதம் இருப்பதால் நம் உடல் நன்றாக இயங்குகிறது என்றும் அதன் சிர்க்காடின் துடிப்பு (Circadian Rhythm)மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் கண்டிருக்கிறார்கள் 
 





சனி, 10 நவம்பர், 2018

மருந்தே விஷம் -5

விஷமாகும் மருந்துகள்-வலி நிவாரணிகள்-COX-2 என்சைம் முடக்கிகள் 

இவ்வகை மருத்துகள் ஆஸ்பிரின் Brufen ,மற்றும் Voltaran -ஐ போல் வயிற்று உபாதைகளை உண்டாக்குவதில்லை என்ற விளம்பரத்துடன் வருகின்றன 
இவை மிக நவீனமானவை பிறகென்ன அல்சர் நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்தானே.அவர்கள் உடல்வலி தலைவலி காய்ச்சல் என்றுவந்தால் இதை மிட்டாய் மாதிரி வாங்கி விழுங்காலாமில்லையோ பத்தியம் கிடையாதுதானே என்று கன்னா பின்னா வென்று உங்கள் இஷ்டம்போல் கற்பனை செய்வீர்களேயானால் அது எவ்வளவு பெரிய தவறு என்பதை இனி பார்க்கலாம் 
இவ்வகை மருந்துகளை டாக்டர்களும் பார்மசிஸ்ட்டுகளும் COXIB மருந்துகள் என்று செல்லமாக அழைப்பார்கள் காரணம் அவற்றின் இரசாயன பெயர்கள்தான் 
CELECOXIB (CELEBREX ),ETORICOXIB(ARCOXIA),ROFECOXIB (VOIOXX ),மற்றும் VALDECOXIB என்று பட்டியல் நீளும்
நாம் ஏற்கனவே போன கட்டுரையில் COX-2 என்சைம் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டோம்
இந்த என்சைம் சாதாரணமாக  ஆரோக்கிய  உடல் நிலையில் இயங்காது அதாவது ஆக்டிவ் ஆக இருக்காது  ஆனால் இது நம் உடலின் தோல் உட்பட அனைத்து பகுதிகளிலும் இருக்கும்
ஆனால் உடலில் பாதிப்பு ஏற்படும் போது அந்த பகுதியில் மட்டும் இது ஆக்டிவ் ஆகி ப்ரோஸ்டாக்ளான்டினை உற்பத்தி செய்யும் எனவே அந்த பகுதியில் வலியும் எரியும் சிவத்தலும் வீக்கமும் உண்டாகும்
ஆனால் ஒன்று இந்த COX-2 ப்ரோஸ்டாசைகிளின் என்ற இரத்தம் உறையாமல் தடுத்து இரத்த ஓட்டத்தை சீராக பாதுகாக்கும் புரதமும் உற்பத்தியாக காரணி ஆகிறது என்பதை மறந்து விடக்கூடாது
இப்போது இந்த என்சைமை மாத்திரம் முடக்குவதால் நிச்சயம் உடல் வலி வேதனை,வீக்கம்,எரிவு போன்றவற்றிலிருந்து சுகம் அடைகிறது என்பது உண்மைதான் எனினும் இதை தவறாக அளவுக்கு மீறி எடுத்துக்கொண்டால் நிச்சயம் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படலாம் உயர் ரத்த கொதிப்பினால் பாதிப்பு உண்டாகலாம்
அளவு மீறி இதை உட்கொள்ளும்போது இது COX-1 என்ஸைமையும் முடக்கி வயிற்று கோளாறுகள் அல்சர் போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தும்
பொதுவாக செப்டறான் போன்ற சல்பா மருந்து அலர்ஜி உள்ளவர்கள் COX முடக்கிகளை எடுக்கக்கூடாது இதுவும் அலர்ஜி உண்டாக்கும்
தலை சுற்றல் வாந்தி குமட்டல் தூக்கமின்மை தருமன் சைனஸ் போன்ற இதர பிரச்சினைகளும் இந்த மருந்துகளை தவறாக எடுத்துக்கொள்வதால் உண்டாகலாம்
எனவே முடிவாக எந்த மருந்தாக இருந்தாலும் வயதான காலத்தில் சுய மருத்துவத்தில் ஈடுபடாதீர்கள்


வியாழன், 8 நவம்பர், 2018

மருந்தே விஷம்-4

விஷமாகும் மருந்துகள்-ஸ்டிராய்டு அல்லாத வாத மற்றும் எரிவு மருந்துகள் 

இந்த வகை மருந்துகளை மருத்துவர்கள் NSAIDs (NON STEROIDAL ANTI INFLAMMATORY DRUGS ) என்று ஆங்கிலத்தில் டெக்னீக்கல் ஆக கூறுவார்கள் 
காரணம் பொதுவாக எரிவுகளுக்கு (INFLAMMATIONS) ஸ்டிராய்டுகளே பொருத்தமான மருந்துகளானாலும் அது ஒத்து கொள்ளாதவர்களுக்கு பகரமாக இந்த வகை மருந்துகளை தருவார்கள் 
இவை IBUPROFEN (BRUFEN),NAPROXEN(PROXEN),KETOPOPROFEN (KETOFEN)INDO METHACIN  (இண்டோஸிட் ),DICLOFENAC (VOLTAREN),ACECLOFENAC (ACEBLAC),PIROXICAM (FELDENE )இப்படி ஒரு பட்டியல் நீண்டு கொண்டே போகும் 
உண்மையில் ஆஸ்பிரினும்,பாராசிட்டமாலும் இவ்வகையை சேர்ந்தவைதான் எனினும் நாம் அவற்றை சில காரணங்களுக்காக தனித்தனியாக பிரித்து விட்டோம்.
மேல் சொன்ன மருந்துகள் அனைத்துமே அபாயகரமானவை
எப்போதாவது ஒரு முறை எடுத்துக்கொண்டால் பரவாயில்லை
ஆனால் அடிக்கடி அல்லது தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் போது கண்டிப்பாக டாக்டரின் மேற்பார்வை அவசியம்
சைக்ளோ ஆக்சிஜனேஸ் -1,மற்றும் -2 என்று இரு வகை என்சய்ம்கள் நம் உடலுக்குள் இருக்கின்றன .
இவற்றை COX-1, COX-2 என்பர்
இவை இரண்டுமே ப்ராஸ்டாகிளான்டின் மற்றும் ப்ரோஸ்டாசைக்ளின் போன்ற உடல் இயக்கு புரதங்களை சுரக்க வகை செய்கின்றன
அராக்கிடோனிக் அமிலம் என்றோரு ஒமேகா -3 கொழுப்பு அமிலத்திலிருந்துதான் ப்ரோஸ்டாக்ளான்டின் உற்பத்தி ஆகிறது இதற்கு டெக்கனிகலாக Ecosa Tetranoic Acid என்பார்கள்

இவ்வகை ஒமேகா -3 கொழுப்பு அமிலம் மிருக வகைகளில் மனித உடலில் மட்டும்தான் சுரக்கிறது என்பது தனிச்சிறப்பு இந்த அமிலம்தான் ப்ரோஸ்டாக்க்ளான்டின் உற்பத்தியின் மூலப்பொருள்
இப்போது பாராசிட்டமால் -ஐ தவிர்த்து மேலே கூறப்பட்ட அனைத்து  வலிநிவாரணிகளும் இந்த COX-1 ,COX-2 என்சைம்களை முடக்கி ப்ரோஸ்டாக்ளான்டின் சுரப்பை நிறுத்துகின்றன
COX-1 மூலம் சுரக்கப்படும் ப்ரோஸ்டாக்ளான்டின் நிரந்தரமானது இது நம் உடல் சீராக இயங்குவதற்கு துணை புரிகிறது.மேலும் வயிற்றின் உட்புற சுவர் அமிலத்தினால் அரிக்கப்படாமல் காக்கும் ஒருவித பிசுபிசுப்பான மியூகஸ் திரவம் சுரப்பதற்கும் சிறுநீரகம் கல்லீரல் போன்ற  முக்கிய உறுப்புகள் சீராக இயங்குவதற்கும் இந்த COX-1 மூலம் சுரக்கப்படும் புரோஸ்டாக்ளான்டினே காரணம் ஆகும்
ஆனால் COX-2 மூலம் சுரக்கப்படும் ப்ரோஸ்டாக்ளான்டின் உடலில் ஏதேனும் ஒரு பகுதி பாதிப்புக்கு ஆளாகும்போது உடல் அந்த பாதிப்பை வேதனை எரிவு ஒவ்வாமை போன்றவற்றின் மூலம் வெளிப்படுத்த இந்த ப்ரோஸ்டாக்ளான்டின்  உதவு கிறது.அதோடு இந்த COX-2 என்ஜைமும் பாதிப்பு நேரங்களில் மட்டுமே இயங்குகிறது
ஆனால் மேலே கூறப்பட்ட  இந்த வலி நிவாரணிகள் அனைத்தும் COX-1,மற்றும் COX-2 ஆகிய இரண்டு என்சய்ம்களையும் முடக்குவதால் வலியும் வாதமும் குணமானாலும் இவை வயிற்றின் உட்சுவற்றையும் சிறுநீரகம் கல்லீரல் மண்ணீரல்  போன்ற முக்கிய உறுப்புகளையும் பாதுகாப்பற்றவையாக்கிவிடுகின்றன காரணம் அவற்றை பாதுகாக்கும் COX-1 என்சய்மும் முடங்குவதால்.
COX-1 என்சைமை முடக்காமல் COX-2 என்சைமை மட்டும் முடக்க கூடிய வலி நிவாரணிகளை நாம் பின்னால் பார்க்க இருக்கிறோம்
இந்த வலி மருந்துகளில் புரூபென் சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த வலிமருந்து ஆகும் இதன் அதிக பட்ச டோஸ் அளவு ஒரு நாளைக்கு 2400 மிகி -3200 மிகி ஆகும் இப்பொது புரூபன்  200 மிகி -800மிகி வரை மாத்திரைகளாக கிடைக்கிறது
இதை இதய நோயாளிகள்,கல்லீரல் மற்றும் சிறுநீரக நோயாளிகள் மிக கவனமாக டாக்டரின் ஆலோசனையின் பேரில் கையாள வேண்டும்
இந்த மருந்துகளை ஆல்கஹாலுடன் சாப்பிடக்கூடாது சாப்பிட்டால் ஈரல் சிறுநீரகம் ஆகியவை பாதிப்புக்கு ஆளாகும்
வயிற்றில் இரத்த கசிவு அல்லது இரத்த போக்கு உண்டாக்குவதில் INDOMETHACIN DICLOFENAC ,மற்றும் ACECLOFENAC  ஆகியவை மிகவும் தீவிரமானவை
கீழேயுள்ள ஒரு சிறு பட்டியலில் சிலவற்றின் அதிக பட்ச டோஸ்களை பதிந்துள்ளேன்
DICLOFENAC டோஸ் அளவு        75 மிகி முதல்      150 மிகி வரை
INDOMETHACIN டோஸ் அளவு 50 மிகி  முதல்      150 மிகி வரை
IBUPROFEN டோஸ் அளவு          1200 மிகி முதல்  1800 மிகி வரை
NAPROXEN  டோஸ் அளவு          500 மிகி முதல்    1000 மிகி  வரை
PIROXICAM  டோஸ் அளவு          10 மிகி  முதல்     20 மிகி    வரை
மேலே குறிப்பிட்ட டோஸ் அளவு அனைத்தும் பெரியவர்களுக்கானதாகும்
10 வயதுக்கு கீழ்பட்டவர்களுக்கு டாக்டர்கள்தான் சிபாரிசு செய்யவேண்டும்
மேலே குறிப்பிட்ட டோஸ் அளவுகள் அனைத்தும் வெறும் கோட்பாட்டு அளவுகள்தான்
நடைமுறையில் இந்த அளவுகள் நோயாளிகளின் உடலமைப்புகளுக்கு மற்றும் தேவைக்கு ஏற்ப மாறும் அனாலும் மேல் குறிப்பிட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டே இருக்கும்
டாக்டரின் சிபாரிசு இல்லாமல் எப்போதாவது சாப்பிடுபவர்கள் எப்போதும் குறைந்த பட்ச டோஸ்களையே எடுக்க வேண்டும்
இந்த மருந்துகள் அனைத்தும் கவனமாக கையாளப்படவேண்டும்
இவற்றை தவறான  முறையில் பயன்படுத்தினால் அது கொலை அல்லது தற்கொலைக்கு சமம்
இவை அனைத்துமே கல்லீரல்,,இதயம் சிறுநீரகம் வயிறு ஆகியவற்றை பாதிக்க கூடியவை
பெரும்பாலும் இவை வெறும் வயிற்றில் நன்றாக பலன் கொடுக்கும் ஆயினும் வயிற்றுக்கு கெடுதல் செய்யும்
எனவே இவற்றை சாப்பிட ஒரு பத்து நிமிடங்களுக்கு முன் எடுத்துக்கொண்டு நிறைய நீர் அருந்த வேண்டும் கூடவே ஒன்றிரண்டு பிஸ்கட்டுகள் சாப்பிடலாம்
பத்து நிமிடங்களில் நன்றாக ஆகாரம் எடுத்து கொள்ளலாம்

திங்கள், 29 அக்டோபர், 2018

மருந்தே விஷம் -3

விஷமாகும் மருந்துகள் -ஆஸ்பிரின் 

வலி நிவாரணம் வாத உளைச்சல் மற்றும் காய்ச்சல் போன்றவற்றிற்கு ஆஸ்பிரின் ஒரு அற்புதமான நிவாரணி 
ஒரு காலத்தில் இது குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் தெரிந்து வைத்த ஒரு மருந்து 
தலைவலியா ஒரு ஆஸ்ப்ரோ சாப்பிடுங்கள் தலைவலி மாயமாக நீங்கி விடும் என்று பட்டி தொட்டிகளிலெல்லாம் விளம்பர படுத்தப்பட்டு  பெட்டி கடைகளில் கூட கிடைக்கப்பட்ட மருந்து 
ஆஸ்பிரின்,ஆஸ்ப்ரோ,டிஸ்பிரின்,டிஸ்பிரில் என்றெல்லாம் விளம்பரப்படுத்த பட்டாலும் இதன் இரசாயன பெயர் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம் என்பதாகும் 
பாராசிட்டமால் மாதிரி  இல்லாமல் இது ஒரு அமிலம் ஆகும் 
இது ஒரு பலவீனமான அமிலம் தான் என்றாலும் இதன் வீரியம் வயிற்றின் உட்புற மெல்லிய தோலை அரித்தெடுக்க போதுமானது 
இது இரத்தம் உறைவதையும் கட்டுவதையும் தடுத்து இரத்தத்தை நீர்த்து போக செய்யும் ஆற்றலுடையது  எனவே ஓவர் டோஸ் எடுத்து கொண்டால் வயிற்றில் புண் உண்டாவதோடு உள் இரத்த போக்கையும் (INTERNAL BLEEDING ) ஏற்படுத்தும்.மேலும் இதை தினசரி சாப்பிடக்கூடிய  இதய நோயாளிகள் மற்றும் பிரஷர் நோயாளிகள் உடலில் பலத்த காயங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.ஏனென்றால் இரத்தம் உறைவதை குறைக்கும் இந்த மருந்து பலத்த காயங்களிலிருந்து அதிக இரத்தப்போக்கை (EXTERNAL BLEEDING) உண்டாக்கும்.
பல் ஈறுகளில் இரத்தம் கசிவு இருந்தால் ஆஸ்பிரினை  டாக்டரின் ஆலோசனையுடன் கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும் 
மேலும் மூட்டு வலி உடையவர்கள் ஆஸ்பிரினை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
ஏனென்றால் ஆஸ்பிரின் யூரிக் அமிலம் சிறுநீரில் வெளியேறுவதை தடுக்க கூடியது இது ஒரு ANTI URICOSURIC  ஆகும் 
எனவே மூட்டு இடுக்குகளில் அதிகமான யூரேட் உப்புக்கள் தேங்கி வலியை அதிகரிக்கும் இவர்கள் மற்ற வலி நிவாரணிகளை குறிப்பாக ப்ரூபன், ,நெப்ரோக்ஸன், இன்டோஸிட் போன்றவற்றையோ  அல்லது ஸ்டெராய்டுகளையோ டாக்டரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளலாம்.
இப்போதெல்லாம் ஆஸ்பிரினை குழந்தைகளுக்கு அதுவும் ஐந்து வயதிற்கு கீழ் பட்ட குழந்தைகளுக்கு டாக்டர்கள் எழுதுவதில்லை 
காரணம் GRAY BABY எனப்படும் RYE'S SYNDROM என்ற கொடிய வியாதி இது ஒரு RARE SYNDROM தான் என்றாலும் இது ஒரு கொடிய வியாதி ஆகும் குழந்தைகளுக்கு ஆஸ்பிரின் ஏற்படுத்தும் இந்த கொடிய வியாதியால் குழந்தைகள் இறந்து விடும் 
எனவே பேபி ஆஸ்பிரின் என்ற பெயரில் இப்பொது ஆஸ்பிரின் மார்க்கெட்டில் இல்லை ஆனால் அதே பேபி ஆஸ்பிரின் 75கிராம் 80 கிராம்களில் இதய நோயாளிகளுக்கு மாத்திரைகளாக வருகின்றது 
பிரசவ காலங்கள் முழுவதும் ஆஸ்பிரினை எடுக்காமல் இருக்க வேண்டும் 
குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் ஆஸ்பிரின் எடுத்து கொண்டால் குறை பிரசவம் ஏற்படும் 
நஞ்சு உண்டாவதில் பிரச்சினை ஏற்படும் உள் இரத்தப்போக்கு ஏற்படலாம் குழந்தைக்கும் பாதிப்புகளை உண்டாக்கும்
ஆஸ்பிரின் ஜாக்கிரதை
பொதுவாகவே எந்த மருந்தாக இருந்தாலும் அதை மருந்தாகவே பாருங்கள்
அது வைட்டமின் மாதிரியாகவே இருக்கட்டும்
வைட்டமின் மாத்திரைகளை கூட அஜாக்கிரதையாக பயன்படுத்தினால் அதுவும் விஷமாகவே முடியும் இது பற்றி நாம் பின்னால் பார்க்கலாம்


வியாழன், 25 அக்டோபர், 2018

மருந்தே விஷம் -2

விஷமாகும் மருந்துகள் -வலிநிவாரணிகள் 

1.பாராசிட்டமால் :-

இந்த மருந்து யு எஸ்ஸில் Acetaminophen என்றும் இந்தியா போன்ற நாடுகளில் Paracetamol  என்றும் மார்க்கெட்டிங் செய்யப்படுகிறது 
தலைவலி காய்ச்சல் மற்றும் உடல்வலி போன்ற உபாதைகளுக்கு இது ஒரு அற்புதமான வலிநிவாரணி 
இதை சிறுவர் முதல் பெரியவர் வரை குறிப்பாக வயிற்று கோளாறு வாய்வு பிரச்சினை அல்சர் நோயாளிகள் என்று யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் 
இது வாத உளைச்சல் சிவப்பேறுதல்  (INFLAMMATION )போன்ற உபாதைகளுக்கு பயன்படுத்த கூடாது ஏனென்றால் பிரயோஜனம் இல்லை

 இது வலி மற்றும் காய்ச்சல் உஷ்ணத்தை குறைப்பதே அலாதியானது
இது மற்ற வலிநிவாரணிகள்  போல் செயல்படுவதில்லை
வயிற்று கோளாறுகளை உண்டாக்குவதில்லை
ஆனால் மத்திய நரம்பு மண்டலத்தின் மூலமாகத்தான் இது வேலை செய்கிறது மூளையில் உள்ள Hypothalamus பகுதியில் உஷ்ணத்தை சமன்படுத்தும் thermostat அமைப்பு உண்டு இது நம் உடம்பில் உஷ்ணம் அதிகரிக்கும் போது வியர்வை சுரப்பிகளை தூண்டிவிட்டு உஷ்ணத்தை கட்டுப்படுத்தும்.ஆனால் காய்ச்சலின் போது இந்த அமைப்பு உடலில் உண்டாகும்  pyrogen  புரதத்தினால்  அதிகப்படியான prostaglandin என்ற புரதத்தை சுரந்து உடல் உஷ்ணத்தை கூட்டும்  பாராசிட்டமால் இந்த thermostat அமைப்பை தூண்டி விட்டு அதிக வியர்வை மூலம் காய்ச்சலை கட்டுப்படுத்துகிறது .
இதே முறையில் இது வலியையும் கட்டுப்படுத்தும்
பாராசிட்டமால் இப்படி மத்திய நரம்பு மண்டலத்தின் மூலம் hypothalamus அமைப்பை மட்டுமே கட்டுப்படுத்துவதால் வயிற்று கோளாறுகளை உண்டாக்குவதில்லை
ஆனாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்ற கதைதான் இம்மருந்தை நம் இஷ்டத்திற்கும் எடுத்து கொண்டால்
இது panadol,Dolo என்ற பல பெயர்களில் 250 மி.கி ,500 மி .கி ,மற்றும் 600 மி.கி என்ற அளவுகளில் கிடைக்கிறது
குழந்தைகளுக்கு ரோஸ் மில்க் போன்ற கலரில் 125 மி.கி ஸிரப் பும் கிடைக்கிறது
இதற்கான கவர்ச்சிகரமான விளம்பரங்களும் மீடியாக்களில் பட்டி தொட்டியெல்லாம் காட்சியாகின்றன
மருந்துகளை விளம்பரம் செய்யும் போது அதன் அனுகூலங்களை மட்டும் ஹைலைட் பண்ணிவிட்டு பிரதிகூலங்களை மறைத்து விடுவார்கள்
இது எல்லா மருந்துகளுக்கும் குறிப்பாக இதய நோய் ,ரத்த அழுத்தம்,தைராய்டு ,வாத நோய் மருந்துகளுக்கும் இப்படித்தான் விளம்பரங்கள் செய்கிறார்கள்
சிகரெட் விளம்பரத்திற்கு கூட "சிகரெட் புகைப்பது உடலுக்கு கேடு என்று ஒரு சிறு குறிப்பு போடுவார்கள்
ஆனால் இந்த நச்சு விளம்பரங்களில் வெறும் வியாபார நோக்குதான் இருக்குமே தவிர ஒரு சிறு எச்சரிக்கை குறிப்பு கூட இருக்காது
இப்பொது வருவோம் பாராசிட்டமால் ஒரு அற்புதமான காய்ச்சல் நிவாரணிதான்
டாக்டர் எப்போதோ சிபாரிசு செய்தார் என்பதற்காக காய்ச்சல் வரும்போதெல்லாம் வைட்டமின் டானிக் மாதிரி குழந்தைக்கு பாரசிட்டமால் ஸிரப்பை  கொடுக்கலாமா?என்ன செய்ய குழந்தைக்கு மேலசூடு சும்மா நச் நச் என்று அழுதுகிட்டே இருக்கிறான் ஒரு வேலையும் செய்யமுடியவில்லை இதை ஒரு டோஸ் ஊற்றிவிட்டால் கொஞ்ச நேரமாவது தொல்லை இருக்காது காய்ச்சல் குறைந்து பிள்ளை தூங்கி விடுவான் நிம்மதியாக மற்ற வீட்டு வேலைகளை கவனிக்கலாம் மீண்டும் காய்ச்சல் ஏறினால்  இன்னொரு டோஸ் கொடுத்து தூங்க வைத்துவிடுவேன் ரோஸ் மில்க் மாதிரி டேஸ்ட்டாக இருப்பதால் இடக்கு பண்ணாமல் பிள்ளை குடித்துவிடுவான்
இது சில தாய் மார்களின் அங்கலாய்ப்பு ஆஹா என்ன ஒரு அறிவு ஜீவிகள்
ஏனென்றால் இது செல் போன் யுகம் அஞ்சறை பெட்டியும் பாட்டி  காலத்து இஞ்சி கஷாயமும் தாழ்ந்து போய்விட்டன அந்த காலத்து கிழவிகள் மாதிரி பிள்ளையை துரத்தி பிடித்து காலுக்குள் சிக்கவைத்து சங்கிலே இஞ்சி சாறை குழந்தையின் வாயில் திமிர திமிர ஊற்றுவதற்கு இந்த காலத்தில் யாருக்கு இயலும் காரணம் அந்த காலத்து கிழவிகள் மாதிரி இந்த காலத்தில் யாருக்கும் ஆரோக்கியமும் இல்லை நாட்டு மருத்துவ அறிவும் இல்லை
அதனால்தான் ஷாப் மருந்து வியாபாரிகளுக்கு அடித்தது யோகம்
பிள்ளைகளின் உடல் நலனுக்கு தோஷம்
பெரியவர்கள் கூட இந்த மருந்தை மாத்திரைகளாக தலைவலி காய்ச்சல் வரும்போது வாங்கி விழுங்குகிறார்கள்
எப்போதாவது சாப்பிடுவதில் பிரச்சினை இல்லை ஆனால் அடிக்கடி சாப்பிடும்போது ஓவர் டோஸ் ஆவதற்கு வாய்ப்பு உண்டு
பாராசிட்டமால் ஓவர் டோஸ் பக்க விளைவுகள் கொடுமையானவை
1.தலை சுற்றல்
2.வாந்தி
3.தோல் அரிப்பு
4.மயக்கம்
5.அல்சர்
6.குடல் பாதிப்பு
7.சோகை நோய்
8.உதடுகள் சிவத்தல்
மேலே கண்ட அத்தனை பக்க விளைவுகளும் ஈரல் பாதிப்பின் அறிகுறிகள்
ஆம் பாராசிட்டமால் ஒரு ஈரலை பாதிக்கும் கொடிய விஷம் ஆகும்
சாதாரணமாக நாம் சாப்பிடும் பாராசிட்டமால் ஈரலில்தான் சிதைக்கப்படுகிறது
அப்படி சிதையும் பொழுது 10% பாரசிட்டமால்  N -Acetyl p-Benzo Quinone Imine (NAPBQI )என்ற  நச்சாக மாறுகிறது இதை நம் ஈரல் தன்னிடமுள்ள Glutothione என்ற ஆஸீகரண எதிர்ப்பான (ANTIOXIDANT) மூலம் செயலற்றதாகிவிடும் ஆனால் இதுவே பாராசிட்டமால் ஓவர் டோஸ் ஆகும் பொழுது இந்த விஷத்தை முறிக்கும் அளவு க்ளூடோத்தியோனை ஈரலினால்
உற்பத்தி செய்யமுடியாமல் போய் அந்த NAPBOI விஷம் ஈரல் செல்களை தாக்கி அரித்துவிடும் பெரியவர்களுக்கே இப்படி என்றால் குழந்தைகளுக்கு கேட்க வேண்டியதே இல்லை
பெரியவர்கள் ஒருநாளைக்கு ஒரு வேளை 500 மி.கி.யிலிருந்து 1000 மி.கி வீதம் 4000 மி.கி.வரை எடுத்து கொள்ளலாம் எனினும் நிதானம் வேண்டும்
இரண்டு வயதுக்கு கீழ் பட்ட குழந்தைகளுக்கு டாக்டரின் கண்காணிப்பு இல்லாமல் இதை கொடுக்காதீர்கள்
மாத தீட்டு வலிக்கு இதை சாப்பிடலாம் ஆனால் கர்ப்பம் உண்டாகி விட்டால் இதை சாப்பிடக்கூடாது
இதை சாப்பிட்ட பிறகு அரிப்பு போன்ற அலர்ஜி ஏற்பட்டால் நிறுத்தி விடவும்
சிறுநீரகம் ஈரல் கோளாறுகள் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதை சாப்பிடவேண்டாம்
நீரிழிவு நோயாளிகள் டாக்டரின் ஆலோசனையின் பெயரில் இதை சாப்பிடலாம்
மது வருந்தும்போது மற்றும் புகைக்கும் போது இதை  சாப்பிட்டால் புற்று நோய் வர வாய்ப்பு உண்டு



புதன், 10 அக்டோபர், 2018

மருந்தே விஷம் -1

விஷமாகும் மருந்துகள் -1

சமீபத்தில் ஒரு பெண் சென்னையில் தன் கள்ளக்காதலுக்கு இடையூறு என்று கருதி தன் குடும்பத்தையே கொலை செய்ய முயன்றாள்  அதில் அவள் கணவன் தெய்வாதீனமாக தப்பித்துக்கொண்டான்.ஆனால் அவள் இரண்டு குழந்தைகளும் மாண்டன.இந்த செய்தியின் முழு விபரம் இந்த தலைப்புக்கு அவசியம் இல்லை என்றாலும் அதில் அவள் கொலை செய்ய பயன்படுத்திய அந்த மருந்து மிக முக்கியம் ஏனென்றால் அது தூக்க மாத்திரையோ அல்லது மூட்டை பூச்சி மருந்தோ இல்லை வெறும் கர்ப்பத்தடை மாத்திரை தான்.
இந்த டெக்கினிக்கை அவளுக்கு கூறியது அவளது கள்ள காதலன்தான் அவன் மருந்து கடை சட்டங்களை ஓரளவு தெரிந்தே வைத்திருக்கிறான் 
ஆம் தூக்க மாத்திரையோ பூச்சி மருந்துகளோ வாங்க வேண்டும் என்றால் மருந்தாளுனரிடம் டாக்டர் சீட்டை காட்டவேண்டும் அல்லது அதற்கான சில விவரங்களை காட்டவேண்டும் அப்படியே இல்லாமல் தெரிந்தவர் மூலம் அதை வாங்கினாலும் அது மிகப்பெரும் சிக்கலை பின்னால் பார்மஸிக்கும் வாங்கியவருக்கு உண்டாகலாம் 
இதனால் அவன் மூளை கருத்தடை மாத்திரைக்கு திரும்பி இருக்கிறது 
சாதாரண அல்லது டாக்டரின் வழிகாட்டுதலின் பெயரில் இந்த மாத்திரைகளை யாரும் பயன்படுத்தலாம் எந்த பிரச்சினையும் இல்லை பார்மஸியில் இதை OTC யில் டாக்டர் சீட்டு இல்லாமலே தருவார்கள் இதனால் எந்த சந்தேகமும் வராது 
ஆனால் ஒன்றை மறந்து விடக்கூடாது 
அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷமாகும் 
விருந்தும் மருந்தும் மூன்று நாள்தான் 
அதன் அர்த்தம் அளவுக்கு மீறி விருந்து சாப்பிட்டால் உடலுக்கு எவ்வளவு கேடோ அது போல்தான் அளவுக்கு மீறி எடுக்கப்படும் மருந்தும் உடலுக்கு கேடே 
மேலே கண்ட அந்த கொலை செய்தியில் கொலைகாரி தன் ஐந்து வயது குழந்தையை கொல்ல  ஐந்து மாத்திரைகளை பாலில் போட்டு கொடுத்தவளுக்கு பத்து வயது இன்னொரு குழந்தையை கொல்ல பத்து மாத்திரைகள் தேவைப்பட்டு இருக்கிறது 
ஒரு கருத்தடை மாத்திரை பேக்கில் 21 மாத்திரைகள் இருக்கும் 
இந்த மாத்திரைகளை ஒவ்வொரு மாதவிடாய் காலங்களில் ஒவ்வொரு நாளும் ஒரு மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும் 21 நாட்கள் இவ்வாறு சாப்பிட்ட பின் 7 நாட்கள் இரத்த போக்கு இருக்கும் வரை மாத்திரை ஏதும் சாப்பிட வேண்டாம் .அந்த 7 நாட்கள் மாத விடாய் நின்ற பிறகு மீண்டும் அடுத்த மாதவிடாய் கால ஆரம்பத்தில் மீண்டும் தொடர வேண்டும் இதுதான் அதன் நியதி 
சரி இப்போது அந்த மாத்திரைகளில் என்னதான் மருந்துகள் இருக்கிறதென்று விபரமாக பாப்போம் 
இவற்றில் பெரும்பாலும் இரண்டு வகையான ஹார்மோன்கள் தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ இருக்கும் 
அவை ப்ரோஜெஸ்டின் மற்றும் ஈஸ்ட்ரோஜென் வகை ஹார்மோன்களாகும் 
இவை பெரும்பாலும் செயற்கையாக (SYNTHETIC) உருவாக்கப்பட்டவை ஆகும் இவை இயற்கை ஹார்மோன்களை விட வீரியம் குறைந்தவை என்றாலும் தவறுதலாக பயன்படுத்தினால் ஆபத்தை விளைவிக்கும் 
பொதுவாக கர்ப்பத்தடை மாத்திரைகளில் ஏராளமான பக்க விளைவுகள் இருந்தாலும் அதில் மிக முக்கியமானவை 1.இரத்தம் குழாய்க்குள் உறைந்து சிறு சிறு உறைவுகளாக (CLOTS) மாறி அங்கங்கே இரத்தக்குழாய்களை அடைத்துக்கொள்ளுதல் இதில் முக்கியமானது நுரையீரல் இரத்தக்குழாய் அடைப்பு.இதற்கு PULMONARY  EMBOLISM என்பார்கள் மூச்சு முட்டி மரணம் சம்பவிக்கும் 
2.ஹார்ட் அட்டாக் 
3.ஈரல் வீக்கம் 
4.இரத்த கொதிப்பு 
சிறுவர்கள், சிகரெட் புகைப்பவர்கள் ,இதய நோயாளிகள் ,இன்னும் புற்று நோயாளிகள் இந்த மாத்திரைகளை கண்டிப்பாக எடுத்து கொள்ள கூடாது 

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...