திங்கள், 17 ஆகஸ்ட், 2020

தேனின் அற்புதங்கள் -2-ராயல் ஜெல்லி

 ராயல் ஜெல்லி 

படம் 1

தேனீயின் அற்புதங்களில் தேனுக்கு அடுத்தபடியானது ராயல் ஜெல்லி ஆகும். இது மனித உபயோகத்தில் தேனுக்கு அடுத்தபடி என்றாலும் சில காரியங்களில் இது தேனையும் மிகைத்ததாகும்.
தேனீக்களில் ராணித்தேனீயின் பிரதான உணவு  ராயல் ஜெல்லியே.
பணியாள் தேனீயின் தொண்டை பகுதியில் உணவுக்குழாயின் வாய் (HYPO PHARYNX) பகுதியிலுள்ள ஒரு சுரப்பியிலிருந்து இது சுரக்கிறது. இது வெளிறிய நீளம் கலந்த வெள்ளை நிறத்தில் ஜெல்லி போல் இருக்கும். இதை தேனடை பால் என்றும் கூறலாம். இதில் தேனை விட அதிக நீர்ச்சத்து இருப்பதால் (67%) தேன் போன்று இது கெட்டித்தன்மை உடையது அல்ல.சீக்கிரம் தேன் போன்று உறையாது. 
ராணித்தேனீயானது தன் வாழ்நாளில் ஒரு நாளைக்கு 2000 முட்டைகளை இடும் தன்மை கொண்ட வளமான சினை உறுப்புகளை கொண்டது.அதற்கு இவ்வளவு வளமான சினை உறுப்புகள் அமைவதற்கு காரணம் அது வாழ்நாள் முழுக்க உட்கொள்ளும் ராயல் ஜெல்லியே ஆகும்.
ராணித்தேனீ இடும் முட்டைகள் புழுக்களாக வெளியே வரும் போது பணியாள் தேனீ அதனை புழுப்பருவத்திலேயே ராணிப்புழு, ராஜாப்புழு, பணியாள்புழு  என்று இனம் கண்டு பிரித்து தனித்தனி அறைக்குள் வைத்து விடுகிறது. (பார்க்க படம் 1)
இதன் பிறகு பணியாள் தேனீ புழுக்களுக்கு தன் தொண்டை பகுதியிலிருந்து சுரக்கும் இந்த பால் போன்ற ராயல் ஜெல்லியை புகட்டுகிறது.
அப்போது ராணிப்புழுவின் அறையில் மிகுதமாக ராயல் ஜெல்லியை சுரக்கிறது.இதனால் ராணிப்புழுவின் அறையில் மிகுதமாக ராயல் ஜெல்லி சேர்க்கிறது. இந்த நிலை மற்ற புழுக்களுக்கு கிடைக்காது.மற்ற புழுக்களுக்கு வாயில் புகட்டப்படும் ராயல் ஜெல்லியை தவிர அந்த அறைகளில் எதுவும் சேமிதமாகாது.
மேலும் மற்ற புழுக்களுக்கு மூன்று நாட்களுக்குத்தான் ராயல் ஜெல்லி புகட்டப்படும்.அதன் பிறகு அவற்றின் உணவு தேனாகத்தான் இருக்கும்.ராணித்தேனீக்கு மட்டும்தான் அதன் புழுப்பருவத்திலிருந்து இறுதிவரை ராயல் ஜெல்லி உணவாகப்புகட்டப்படும்.
அது இருக்கும் அறைகளில்தான் ராயல் ஜெல்லி சேமிக்கவும் படும்.
அதனால்தான் ராயல் ஜெல்லி விளைவிப்பவர்கள் செயற்கை தேனீக்கூடுகள் உண்டாக்கி அதில் நிறைய ராணித்தேனீக்களை உற்பத்தி செய்து அறைகளில் வைத்து விடுவார்கள்.பிறகு அவற்றிற்குள் பணியாள் தேனீக்களை விட்டு ராயல் ஜெல்லியை சுரக்கச்செய்வார்கள்.இதுபற்றி நாம் பின்னால் பார்க்கலாம்.
படம் 2
தேனீக்கள் மூன்று வகையாக ஒரு குடும்பமாக வசிக்கின்றன. ஒரு தேன் கூடு ஒரே  குடும்பத்தாலானது.
1.ராணித்தேனீ  :-இதுதான் தேனீ குடும்பத்தில் மிகப்பெரியதும் மிக நீண்ட ஆயுளையும் கொண்டதாகும்.
வளமான சூலகங்களை கொண்டது. தன் ஆயுட்காலத்தில் ஒருநாளைக்கு 2000 முட்டைகளை இடும் அபாரமான சக்தியுடையது அதன் சூலகம் . இந்த அபாரமான சக்தி ராணித்தேனீக்கு அது காலமுழுக்க உணவாக எடுத்துக்கொள்ளும் ராயல் ஜெல்லி மூலமாகவே கிடைக்கிறது.
ராணித்தேனீக்கு முள் இல்லாத விஷம் இல்லாத மென்மையான கொடுக்கு அதன் பின் புறம் இருக்கிறது. பொதுவாக ராணித்தேனீ கூட்டை விட்டு வெளிவருவதில்லை. எனவே இது மனிதர்களை கொட்டும் வாய்ப்பு அதிகமில்லை.ஆனால் மற்ற பூச்சிகளை இது திருப்பி திருப்பி கொட்டும். ஆனால் சாகாது.(படம் 2)
ராஜாத்தேனீ :-இதுதான் தேனீ குடும்பத்தில் அடுத்த பெரிய தேனீ எனினும் மிக குறைந்த ஆயுளை கொண்டது. இதற்கு கொட்டும் கொடுக்கு கிடையாது. ஆனால் இனச்சேர்கையில் மிகவும் வீரியமுடையது. இது தன் ஆயுளில் ஒரே ஒரு முறைதான் இனச்சேர்கையில் ஈடுபட முடியும். அந்த இனச்சேக்கையின் போது ஏற்படும் உச்ச கட்ட நிலையில் (CLIMAX) விந்து முழுவதும் பாய்ந்து வெளிப்படும் வேகத்தில் அதன் ஆணுறுப்புகள் வெடித்து (BURST) சிதைந்து தேனீ இறந்துவிடும் (படம்-2)
ராஜத்தேனீக்கு மூன்று நாட்கள்தான் ராயல் ஜெல்லி உணவாகப் புகட்டப்படும். பிறகு அதன் உணவு தேன்தான். எனவேதான் ஆண்மை விருத்திக்கு சிறந்தது ராயல் ஜெல்லியா அல்லது தேனா அல்லது இரண்டும் சேர்ந்த கலவையா என்ற கேள்விகளுக்கு சரியான விடைகள் இதுவரை இல்லை. எனினும் ராயல் ஜெல்லியும் தேனும் கலந்த கலவை என்பது ஒருவேளை சரியாக இருக்கலாம் .(படம் -2)
பணியாள் தேனீ :-
இதற்கு வீட்டு தேனீ அல்லது செவிலியர் தேனீ என்றும் கூறலாம்.இவை மலட்டு பெண் தேனீக்களாகும். இவை உருவத்தில் மிகச்சிறியவை என்றாலும் எண்ணிக்கையில் மிகைத்தவை. இவற்றின் பின்புறமிருக்கும் கூறிய முள் முனையுடைய கொடுக்கு விஷமுடையதாகும். இவை கோபமடைந்தால் மிகவும் வீரியமாக கொட்டும் தன்மை கொண்டவை. இவைதான் தேன் குடும்பத்தையே பாதுகாக்கும் பெண் வீராங்கனைகளாகும். இவை ஒரு முறைதான் கொட்டும். பிறகு இறந்துவிடும்.
இந்த செவிலியர் தேனீக்கள் மூன்று  குழுக்களாக மாறி மாறி பிரிந்து செயல்படும்.
ஒரு குழு வெளியே சென்று மலர்களில் இருந்து தேனை சேகரித்து வரும்.
மற்றொரு குழு அதை வாங்கி அடைகளில்  சேமித்து வைக்கும்.
மூன்றாவது குழு ராணித்தேனீ இடும் முட்டைகளை தனித்தனியாக முறையாக பிரித்து தனித்தனி அறைகளில் வைத்து போஷிக்கும்.ராயல் ஜெல்லியின் முக்கிய மூலப்பொருள்களில் ஒன்று மலர்களில் இருந்து தேனுடன் செவிலியர் தேனீ கொண்டுவரும் மகரந்த தூள் ஆகும்.இந்த மகரந்த தூள்தான் ராயல் ஜெல்லிக்கும் தேனுக்கும் கிடைக்கும் புரத மூலமாகும் (Protein Source). இந்த செவிலியர் தேனீயின் தொண்டை பகுதியில் இருக்கும் உணவுக்குழாயின் ஆரம்ப பகுதிக்கு முன் உணவுக்குழாய் (PHARYNX) என்று பெயர்.இதன் அடிப்பகுதியில் (HYPOPHARYNX) இருக்கும்  சுரப்பியில் இருந்துதான் ராயல் ஜெல்லி சுரக்கிறது. தேன் என்பது செவிலியர் தேனீயின் வயிற்றிலிருந்து சுரக்கப்படுகிறது. ராயல் ஜெல்லி என்பது  தொண்டைப்பகுதியில் இருந்து சுரக்கப்படுகிறது.(படம் 2)
ராயல் ஜெல்லியின் சத்து கூறுகள் :-
நீர்ச்சத்து                                         =67%
புரதம்                                               = 13%
எளிய சர்க்கரைச்சத்துக்கள்  =12%
(க்ளூகோஸ் & ∴ப்ரக்ட்டோஸ்)
கொழுப்பு அமிலங்கள்             =06%
ஹைட்ராக்சி டெக்னோயிக்
                                        அமிலம்  =02%
கிருமிஎதிர்ப்பான்கள்                =சொற்பம் 
வைட்டமின் B5 & B6                   =சொற்பம்
வைட்டமின் C                            =சொற்பம் 
ராயல் ஜெல்லியில் தேனைப்போல் கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின்கள் (A, D, E,&K) எதுவும் கிடையாது.
புரதம்தான் ராயல் ஜெல்லிக்கு பிரதான உணவு மதிப்பீட்டை கொடுக்கிறது.
ராயல் ஜெல்லி தயாரிப்பு :-
பலகையில் செற்கையான முறையில் செய்யப்பட்ட தட்டு தட்டாக உருவி எடுக்கக்கூடிய வகையில் தேன் கூடுகள் பலகையில் இருக்கின்றன.ஒவ்வொரு தட்டிலும் பல அறைகள் இருக்கும்.அந்த அறைகள் ஒவ்வொன்றிலும் குறைந்த பட்சம் 4நாட்கள் வயதுடைய ராணிப்புழுக்களை வைப்பார்கள். மேலும் அதற்குள்  18 நாட்கள் வயதுடைய செவிலி தேனீக்களை போகவிடுவார்கள். அவை ராணிப்புழுக்கள் இருக்கும் அந்த கூடுகளில் ஏராளமான ராயல் ஜெல்லியை சுரக்கும்.
நல்லமுறையில் செயல்படுத்தப்பட்ட ஒரு ராணித்தேனீயின் அறையில் 5 இலிருந்து 6 மாதத்திற்குள் 600கிராம் ராயல் ஜெல்லியை சேகரிக்க முடியும்.
ராயல் ஜெல்லி மனிதப்பயன்பாட்டிற்கு உகந்ததா?
ராயல் ஜெல்லியை  மனிதர்கள் பயன்படுத்தும் போது எவ்வளவு பலன் கிடைக்கிறது என்பதுபற்றி ஒரு சிலவற்றை தவிர அதிகம் குழப்பமான நிரூபணமாகாத தகவல்களே கிடைக்கின்றன.
 ராயல் ஜெல்லியின் சத்துக்கூறுகளில் புரதங்கள் கொழுப்பு அமிலங்கள் விட்டமின்கள் தாது உப்புக்கள் என்று ஏராளமாக இருந்தாலும் பெரும்பாலும் அவை சொற்ப ஒரு தேனீக்கு உரிய அளவுகளிலேயே இருக்கின்றன. 
ராயல் ஜெல்லியில் இருக்கும்  கொழுப்புகள் இதயத்தையும் இரத்த ஓட்டத்தையும் பாதுகாப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
இன்னும் ராயல் ஜெல்லியின் புரத மற்றும் கொழுப்பு சத்துக்கள் ஆண்மை விருத்திக்கு நல்லது என்கிறார்கள்.
மாதவிடாய் நின்ற பிறகு உண்டாகும் சில அசெளகர்யங்களை இலேசாக்குவதாக கூறுகிறார்கள்
சரியாக நிரூபிக்கப்படாத பயன்கள்:-
1.நீரிழிவு கால் புண்கள் (DIABETIC FOOT ULCERS):-  சில பழைய ஆய்வுகளின் படி ராயல் ஜெல்லி மற்றும் பந்தனால் (PANTHENOL) கலந்த கலவையை களிம்பாகவோ கிரீமாகவோ தயாரித்து தினமும் ஆறுமாதத்திற்கு புண்ணை சுத்தமாக்கி அதன் கழிவு திசுக்களை அகற்றியபின் இட்டு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைப்பதாக கூறுகிறார்கள்.
2.மலட்டுத்தன்மை (INFERTILITY):
Asthenozoospermia என்ற நிலை ஆணின்  விந்து பெண்ணின் யோனிக்குள் சரியான வேகத்துடன் ஊர்ந்து செல்ல முடியாமல் போய் கருத்தரிக்கமுடியாத நிலை ஆகும்.ஒரு பழைய ஆய்வின்படி ராயல் ஜெல்லி,தேன்,மற்றும் மகரந்தம் ஆகியவற்றை கலந்து பெண் யோனியின் உள்ளும் புறமும் இரண்டு வாரங்களுக்கு தடவினால் நல்ல பலன் கிட்டும் என்று கூறப்படுகிறது.
3.கொலஸ்ட்ராலை குறைக்கிறது 
4.ஒவ்வொரு மாதவிடாய்க்கு முன் ஏற்படும் அசெளகர்யங்களை இலேசாக்குகிறது.ராயல் ஜெல்லி ,மகரந்தம் மற்றும் சூலக சாறு இவை கலந்த மருந்தை இரண்டு மாதவிடாய் காலங்களுக்கு சாப்பிட்டுவரவேண்டும்.
5.ஆஸ்த்மா 
6.கல்லீரல் பிரச்சினைகள் 
7.கணைய வீக்கம் 
8.தூக்கமின்மை 
9.வயிற்றுப்புண் 
10.சிறுநீரக வியாதிகள் 
11.எலும்பு பலகீனம் மற்றும் எலும்பு முறிவு 
12.தோல் வியாதிகள் 
13.வழுக்கை 
14.நோய் எதிர்ப்புசக்தி குறைவு 
பாதுகாப்பு எச்சரிக்கைகள் :-
1.ஆஸ்துமா நோயாளிகள் ராயல் ஜெல்லி மற்றும் அதனுள் அடக்கிய தயாரிப்புகளை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.ஒருவேளை ஒவ்வாமை ஏற்பட்டால் மூச்சு முட்டல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
2.தொண்டை அடைப்பு போன்ற ஒவ்வாமை கிரியைகள் உண்டாகலாம் 
3.பொதுவாக ராயல் ஜெல்லி சருமத்திற்கு நல்லது என்றாலும் தலை தோலுக்கு பெரும்பாலும் ஒவ்வாமை உண்டாக்கும்.
4.தொண்டையில் அலர்ஜி ஏற்படலாம் 
5.ராயல் ஜெல்லி இரத்த அழுத்தத்தை குறைப்பதால் பிரஷர் மாத்திரை சாப்பிடுபவர்கள் அதனுடன் ராயல் ஜெல்லியையும் சாப்பிடக்கூடாது.
6.தோல் அழற்சி மற்றும் வீக்கம்  உள்ளவர்கள் ராயல் ஜெல்லியை சாப்பிடவேண்டாம் 
சிலருக்கு ராயல் ஜெல்லி வயிற்றுவலி மற்றும் வயிற்று போக்கை உண்டாக்கலாம்.
முரண்பாடுகள் (CONTRAINDICATIONS)
1.Warfarin-இரத்த உறைவு எதிர்ப்பான் 
2.B.P.மருந்துகள் 
3.Co-Enzyme-Q
4.மீன் எண்ணெய் 
5.கேசின் புரதம் -அமினோ அமிலங்கள் 
6.எல்.ஆர்ஜினின் -       ,,          ,,
7.Lycium                    -        ,,          ,,
8.Stinging Nettle        - தொட்டால் எரிச்சலூட்டும் செடி 
9.Theanine                 -   அமினோ அமிலம் 
நிரூபிக்கபட்ட பயன்கள் :-
1.நீங்கள் ஆரோக்கியமாக இருக்கும் நிலையில் ராயல் ஜெல்லி 150 மிகி தினசரி எடுத்துக்கொள்வதால் உங்கள் இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
2.ராயல் ஜெல்லி இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது.
3.ராயல் ஜெல்லியில் ஆக்ஸீகரண எதிர்ப்பான்கள் (ANTIOXIDANTS) அதிகம் இருப்பதால் புற்று நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது.
4.ராயல் ஜெல்லி ஒரு சிறந்த அழற்சி நிவாரணி (ANTI-INFLAMMATORY) ஆகும்.
5.புரதச்சத்து நிறைந்தது.
6.ரத்த சர்க்கரையின் அளவுகளை சீராக்குகிறது.
7.நுண்ணுயிர் எதிர்ப்பானாகவும் (ANTIBACTERIAL) பயன்தருகிறது.
8.மாதவிடாய் நின்ற பெண்களுக்கு சுகம் தருகிறது.
தேனுக்கும் ராயல் ஜெல்லிக்கும்  உள்ள வேறுபாடுகள் :-







 


கருத்துகள் இல்லை:

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...