கோவிட் -19-சீனாவின் உயிரியல் போரின் ஒத்திகையா
யுத்தம் என்றாலே அது குண்டு வெடிப்புகளிலும் ஆயுதங்களிலும் பீரங்கி முழக்கங்களிலும் ஓசைகளிலும் விமான இரைச்சல்களிலும் சீறும் ராக்கட்டுகளிலும் தான் தன் பரிணாமத்தை காட்டும் என்று இது நாள் வரை இருந்து வந்த நம் அறிவை வேறு ஒரு புது கோணத்திலும் யுத்தம் என்பது பரிணமிக்க கூடும் என்ற உண்மை நிலைகுலைய வைத்திருக்கிறது.
ஆம் அதுதான் விஷக்கிருமிகளை ஆயுதங்களாக பயன்படுத்தி போரிடும் உயிரியல் யுத்தம் என்ற ஒரு பரிணாமம்
ஆயுதங்களை வைத்து ஆடும் போர் மேடையில் யாருக்கும் யாருக்கும் போட்டி யார் யாரை தாக்குகிறார்கள் யாருக்கு ஜெயம் யாருக்கு தோல்வி என்பதெல்லாம் தெளிவாக தெரிந்து விடும்
ஆனால் நுண் விஷ கிருமிகளை ஆயுதமாக்கி விளையாடும் யுத்த மேடையில் யார் யாரை தாக்குகிறார்கள்,யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி,போர் எங்கே ஆரம்பித்தது எப்போது ஆரம்பித்தது யார் ஆரம்பித்தார்கள்,எங்கே எப்போது எவ்விதம் முடியும் என்பதெல்லாம் கண்ணுக்கும் புலப்படாது அறிவுக்கும் எட்டாது.இதை யுத்தம் என்பதை விட கண்மூடித்தனமான அழிவு என்றே கூறலாம்
ஏனென்றால் நிராயுதபாணிகள் இயலாதவர்கள் இவர்களை எல்லாம் தாக்கக்கூடாது என்ற தர்மங்கள் எல்லாம் இந்த யுத்தத்தில் செல்லாது.
இந்த கட்டுரையில் இப்படி ஒரு யுத்தத்தை சீனா ஆரம்பித்து இருக்கிறதா என்பதை சில செய்திகள் மற்றும் சில சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ஐந்து யூக கோட்பாடுகள் (HYPOTHESES ) வரையப்பட்டு இருக்கின்றன .அவை வெறும் யூகங்கள் தானே தவிர அவை நிரூபணமான நிதர்சனங்கள் அல்ல.இவை பின்னப்பட்டதாகவும் இருக்கலாம் அல்லது உண்மையாகவும் இருக்கலாம் .ஆண்டவனுக்கே வெளிச்சம்.
யூக கோட்பாடு 1:-வைரஸின் தோற்றம்
சீனாவின் மீது சந்தேகம் என்ற மேகம் சூழ்வதற்கு வைரல் விஞ்ஞான அடிப்படையும் ஒரு காரணமாகும்
மேலே உள்ள படத்தை காணுங்கள் அதில் ஒரு RNA யின் அமைப்பு தரப்பட்டு இருக்கிறது
பெரும்பாலும் எந்த ஒரு உயிரினத்திற்கும் அதன் மரபணுவாக ஒரு RNA அல்லது ஒரு DNA என்று ஒன்று இருக்கும்.
இந்த புதிய கொரோனா வைரஸின் மரபணு ஒரு RNA வகையை சேர்ந்தது .
இந்த RNA பட்டை (Ribbon) பல நெளிவுகளாக இருக்கும் .ஒவ்வொரு நெளிவிற்குள்ளும் நான்கு நியூக்ளிக் அமிலங்கள் முறையே யுராஸில்,சைட்டோசின்,அடெனின் மற்றும் குஆனின் என்று பொதியப்பட்டு இருக்கும் (பார்க்க மேலே படம்-சிகப்பு,பச்சை வெளிர் நீலம் ,ஊதா என்று நாலு குச்சிகள் )
இந்த ஒரு நெளிவும் அதனுள் பொதியப்பட்டுள்ள கரு அமிலங்களும் சேர்ந்து ஒரு நியூக்ளியோட்டைடு ஆகும்.எனவே ஒரு RNA யின் நீளம் அதில் எத்தனை நியூக்ளியோடைடுகள் இருக்கிறதோ அதை வைத்து அளக்கப்படும்.
சாதாரணமாக ஒரு RNA யில் 3000 அளவு அதிகபட்சமாக நியூக்ளியோடைடுகள் இருக்கலாம் (அதாவது 3000 நெளிவுகள் வரை இருக்கலாம் )1000 நியூக்ளியோடைடுகளுக்கு ஒரு kilo base (kb) என்பார்கள் வைரஸ் விஞ்ஞானிகள்.எனவே ஒரு RNA 1 முதல் 3 அல்லது 5 kb வரை நீண்டோ அல்லது சுருண்டோ இருக்கலாம்.இதில் சில விதிவிலக்குகள் இருக்கலாம்.
மெகாவைரஸின் DNA நீளம் 130 kb வைரஸ் உலகிலேயே மிகவும் பிரம்மாண்டமான வைரஸ் இதுதான் ஆனால் இந்த வைரஸ் அமீபாக்களை மட்டுமே தாக்கும் அதுவும் இது ஒரு DNA வைரஸ் ஆகும்
ஆனால் இந்த புதிய சீனத்து வைரஸ் 2002 இல் சீனாவிலிருந்து பரவிய SARS Co V (-1)ஐ ஒத்த RNA வைரஸ் ஆகவும் அதை விட பெரிதாகவும் இருப்பதன் மர்மம் தான் புரியவில்லை.இந்த இரண்டு வைரஸ் களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை
இரண்டின் RNA அளவுகளும் ≈30 kb
இரண்டின் விட்டங்களும் ≈100 nm
அதாவது ஒரு பாக்டீரியாவை விட கொஞ்சம் சிறிது .
இதை ஏன் சைனாவிலுள்ள ஆய்வுகூடம் உருவாக்கி இருக்க கூடாது என்பதுதான் வாதம்
அதைத்தான் இனி வரும் யூகங்களில் காணலாம்.
மெகாவைரஸின் DNA நீளம் 130 kb வைரஸ் உலகிலேயே மிகவும் பிரம்மாண்டமான வைரஸ் இதுதான் ஆனால் இந்த வைரஸ் அமீபாக்களை மட்டுமே தாக்கும் அதுவும் இது ஒரு DNA வைரஸ் ஆகும்
ஆனால் இந்த புதிய சீனத்து வைரஸ் 2002 இல் சீனாவிலிருந்து பரவிய SARS Co V (-1)ஐ ஒத்த RNA வைரஸ் ஆகவும் அதை விட பெரிதாகவும் இருப்பதன் மர்மம் தான் புரியவில்லை.இந்த இரண்டு வைரஸ் களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை
இரண்டின் RNA அளவுகளும் ≈30 kb
இரண்டின் விட்டங்களும் ≈100 nm
அதாவது ஒரு பாக்டீரியாவை விட கொஞ்சம் சிறிது .
இதை ஏன் சைனாவிலுள்ள ஆய்வுகூடம் உருவாக்கி இருக்க கூடாது என்பதுதான் வாதம்
அதைத்தான் இனி வரும் யூகங்களில் காணலாம்.
யூகம் -2-சீனாவின் உயிரியல் போர் ஒத்திகையா ?
யாங்கிங் ஈ ,29 வயதான சீனர் .இவரை அமெரிக்க போலீஸ் கைது செய்தது.இவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் விசா மோசடி வெளிநாட்டிற்கு ஏஜெண்டாக செயல்பட்டது ஆகியவை இப்போது இவர் சீனாவில் இருக்கிறார் .
இதற்கு முன்பு 10-12-2019-ல் பாஸ்டன் நகரின் லோகன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சாவோசிங் செங் என்ற 30 வயதான ஒரு சீன ஆய்வாளர் 21நுண்ணுயிர் ஆய்வு திரவ குப்பிகளை சீனாவுக்கு கொண்டுபோகும் நிலையில் கையும் களவுமாக பிடிபட்டார்.இன்னமும் யு.எஸ்.சிறையில் இருக்கிறார். அடுத்து
டாக்டர் சார்லஸ் லீபர். 60 வயதான இவர் தலை சிறந்த ஓர் அமெரிக்க நானோ நுண்ணுயிரியல் ஆய்வாளர்.2008-இலிருந்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் லீபர் ஆய்வுக்குழுவின் தலைமை ஆய்வாளர் பொறுப்பில் இருந்தார்.இவர் நானோ விஞ்ஞானத்தில் (NANO SCIENCE) மிகவும் தேர்ச்சி பெற்றவர்.இவருக்கு இவருடைய ஆய்வுகளுக்காக அமெரிக்க தேசீய சுகாதார நிறுவனம்(NIH) மற்றும் அமெரிக்க பாதுகாப்பு துறை ஆகியவை இணைந்து மாதம் 15 மில்லியன் யு எஸ் டாலர்களை சன்மானமாக அளித்தன.
இந்த சன்மானங்களை பெறுபவர் வேறு எந்த நாட்டிற்கும் எவ்விதத்திலும் சேவை செய்பவராக இருக்க கூடாது.ஆனால் பின்னாளில் லீபர் சில உண்மைகளை மறைத்து இந்த சன்மானங்களை பெற்றது தெரிய வந்தது.
அதாவது இந்த சன்மானங்களை பெரும் நிலையிலேயே லீபர் 2018-19 களிலிருந்து சீனாவில் வூஹான் தொழில்நுட்ப பல்கலைக்கழத்துடன் (WUHAN UNIVERSITY OF TECHNOLOGY) இணைந்த,ஆயிரம் திறமைகள் திட்டம் (THOUSAND TALENT PLAN) என்ற மூன்று வருட திட்டத்தின் கீழ் செயல்படுவது தெரியவந்தது.இதற்கு அவர் பெற்ற சன்மானங்கள் மாதம் U.S.$ 50000/-சம்பளம்,சீனாவில் தங்குவதற்கு ஆகும் செலவுக்காக 1,000,000 சீன யுவான்கள் ,மற்றும் வூஹானில் ஒரு ஆய்வுக்கூடம் உண்டாக்க தேவையான செலவுகளுக்காக 1.5 மில்லியன் யு எஸ் டாலர் என்று எக்கச்சக்கம்.இந்த திட்டத்தின் படி ஒவொரு வருடமும் ஒன்பது மாதங்கள் அவர் சீனாவின் வூஹானில் தங்கி பணிபுரிந்திருக்கிறார் .இந்த உண்மைகள் தெரிய வந்தவுடன் இவற்றை மறைத்ததற்காக 20-01-2020 இல் அவர் கைது செய்யப்படுகிறார்.இப்போது இவர் யு.எஸ் சட்டத்தின் பிடியில்.
இதற்கு முன்பே கனடாவில் கனடிய தேசிய நுண்ணியிரியல் ஆய்வு கூடத்தில் இருந்து மிஸஸ் சிங்குவோ கியூ (Mrs.Xiangguo Qiu)என்பவரின் தலைமையின் கீழ் பணிசெய்து கொண்டிருந்த பத்து சீன ஆய்வாளர்கள் பயங்கர நுண்ணுயிரிகளை சீனாவுக்கு கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைதாயினர் .இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் மிஸஸ் சிங்குவோ கியூ வின் கணவர் சீனாவில் உயிரியல் ஆயுதங்கள் (BIO WEAPONS) சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்டிருந்தார்.
1999 களில் சீனாவின் மக்கள் விடுதலை படை என்ற அமைப்பு
கட்டுப்பாடற்ற போர் (Unrestricted Warfare)
என்ற புத்தகத்தை வெளியிட்டது.இதை சீனியர் கர்னல் கியாவோ லியாங் (Sr.Col.Qiao Liang),சீனியர் கர்னல் வாங் சியாங் சுய் (Sr.Col.Wang Xiang sui) என்ற இரு ராணுவ அதிகாரிகள் எழுதி இருந்தனர்.
இந்த நூல் தான் சீன அரசுக்கு உயிரியல் யுத்தம் (Biological Warfare) பற்றிய ஒரு எண்ணத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
அந்த புத்தகத்தில் அவர்கள் எழுதி இருந்தனர் "கீழை நாடுகள் அணு ஆயுதங்கள் உயிரியல் ஆயுதங்கள் கண்ணி வெடிகள் போன்றவற்றை வைத்திருக்க கூடாது என்பது மேற்கு நாடுகளின் சதி ஆகும்.சீனா இந்த கட்டுப்பாடுகளை தாண்டினால்தான் மேற்கு நாடுகளை தன் காலடியில் விழவைக்க முடியும்" என்ற வெறித்தனம் அதில் இருந்தது.
அந்த புத்தகம் மேலும் கூறியது "இனி எதிர்காலத்தில் யுத்தம் என்பது ஆயுதங்களால் இருக்காது அறிவுபூர்வமாகத்தான் இருக்கும் மேலும் யுத்தம் என்பது கண்மறைவாகவே இருக்கும் " என்று .இதே போல் 2010 இல் சீன செய்தி ஸ்தாபனமான சின்ஹுஆ (XINHUA) ஒத்த கருத்துள்ள வேறு ஒரு புத்தகத்தை வெளியிட்டது.
2015-சீன ராணுவம் வெளியிட்ட ஒருபுத்தகத்தில் வெளிப்படையாகவே "ஒவொரு சீன ராணுவ அதிகாரியும் நுண்ணுயிரியல்(Microbiology) பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும் "என்ற குறிப்பு இருந்தது.
இவற்றை எல்லாம் தாண்டி ஒரு படி மேலே போய் சீனாவின் தேசிய ராணுவ பல்கலைக்கழகம் (Chinese National Military University) ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்தது.அதன் பெயர் புதிய போர் தீவு (New Island of War)இந்த புத்தகம் தான் சைனாவின் ஒரு கோர முகத்தை வெளிப்டுத்தியது. அந்த புத்தகத்தில் சீனா எதிர் காலத்தில் ஒரு வைரஸை உண்டாக்க வேண்டும்.அது வழி வரையறுக்கப்பட்ட ஏவுகணை (Guided Missile) போல ஒரு குறிப்பிட்ட நாட்டை ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டும் தாக்கி அழிப்பது மாதிரி இருக்கவேண்டும் என்று அந்த புத்தகத்தில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.
யூக கோட்பாடு-3(வைரஸ் ஒழுக்கல் கோட்பாடு :-
இந்த கோர வைரஸ் எங்கிருந்து பரவியதோ அந்த வூஹானில் இருப்பதுதான் வூஹான் வைரஸ் விஞ்ஞான பயிலகம் (Wuhan Institute Of Virology).சீனாவிலேயே இந்த வகையில் இது ஒன்றுதான் உள்ளது.நாலு அடுக்கு பாதுகாப்பு பெற்றது.இதோடு இணைந்து இன்னும் இரண்டு ஆய்வு கூடங்களும் அதனுடன் ஒட்டி இருக்கின்றன .அவை 1.வூஹான் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (W.C.D.C&P)
2.தேசீய ஆய்வு கூட பாதுகாப்பு ஆய்வுகூடம் (N.L.S.L.)
இந்த மூன்றுமே ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை .
அதாவது W.I.V யில் வைராலஜிஸ்டுகள் புதிய கொடூரமான வைரஸ்களை உருவாக்கி ஆய்வு செய்வர்
மற்ற இரு ஆய்வு கூடங்களும் தடுப்பு மருந்துகளையும் உபகரணங்களையும் தயாரிப்பர்
அதாவது கம்பியூட்டரில் ஆன்டி வைரஸ் மென்பொருள் உண்டாக்கும் கம்பெனி தானே வைரஸ்களை உருவாக்கி பரவவிட்டு பிறகு அதை அழிப்பதற்கு ஆன்டி வைரஸ் மென்பொருளையும் உருவாக்கி சந்தையில் விற்பனைக்கு விடுவது மாதிரி
தெற்கு சீன தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த இரு விஞ்ஞானிகள் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் தலைநகரான குவாங்ஷேவ் (GUANGZHOU) இலிருந்து இரு திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்டனர்.
அது 2002-இல் எப்படி பெய்ஜிங்கின் ஒரு ஆய்வகத்திலிருந்து SARS Co V வைரஸ் லீக் ஆகி குவாங்டாங் மாகாணத்தை முதலில் தாக்கி பிறகு உலகெங்கும் பரவியதோ அதே போல்தான் நிச்சயமாக இந்த புதிய SARS Co V -2 வைரஸும் வூஹானின் W.I.V. இலிருந்து பரவி இருக்க வேண்டும் என்பது.மேலும் அவர்கள் கூறியது அந்த இன்ஸ்டிடியூட் நாலு அடுக்கு பாதுகாப்பு பெற்றிருந்தாலும் முறையாக பாதுகாப்பு அங்கு கடைபிடிக்கப்படவில்லை என்பது.
அதோடு அங்கு அளவுக்கு அதிகமாக பறவைகளும் விலங்குகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்கின்றன.சுமார் 650 கும் மேலே வெளவால்கள் மட்டும் அங்கு ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.இதில் இன்னொரு செய்தி என்னவென்றால் அங்குள்ள சில விஞ்ஞானிகள் ஆய்விற்கு பயன்படுத்தப்பட்ட விலங்குகளை அருகிலுள்ள ஹுனான் கடல் உணவு மார்க்கட்டில் விற்று மில்லியன்கணக்கில் சம்பாதித்து இருக்கின்றனர்.இப்போது இந்த இரு விஞ்ஞானிகளும் உயிருடன் உள்ளனரா என்பது தெரியவில்லை.
இதே கருத்தை 22-02-2020 தேதியிட்ட நியூ யார்க் போஸ்ட் பத்திரிகையில் ஸ்டிவன் மோக்ஷர் என்பவர் குறிப்பிட்டு இருந்தார்
பல யு எஸ் விஞ்ஞானிகள் சீனாவின் W.I.V. யில் பின்பற்றப்படும் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்து இருந்தனர்
ஆனால் சீன அரசோ கண்ணை மூடிக்கொண்டு இருந்தது . ஜனவரி 20, 2020 வரை மெத்தனமாகவே இருந்தது .
எச்சரிக்கை செய்த தன் சொந்த நாட்டு விஞ்ஞானிகளை கூட வாயை அடைத்துவிட்டது .
அதே நியூயார்க் போஸ்ட் பத்திரிகையில் அதே மோஷர் இன்னொன்றையும் குறிப்பிட்டு இருந்தார்.
21-02-2020 இல் சீன அதிபர் க்ஸி ஜின்பிங் அவசர அவசரமாக கேபினெட்டை கூட்டி நாடு முழுதுமுள்ள உயிரியல் ஆய்வு கூடங்களில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஆணை ஒன்றை பிறப்பித்தார்.
இந்த ஆணை மறுநாள் 22-02-2020 அன்று சீன விஞ்ஞான ஆய்வுகூட அமைச்சகம் மூலம் நாட்டின் அனைத்து ஆய்வு கூடங்களுக்கும் அனுப்பப்பட்டது.உலகமே கோவிட்-19 இல் பரிதவித்துக்கொண்டு இருக்க எந்த நாடும் ஆய்வு கூடம் பற்றி சிந்திக்காத நிலையில் சீன அதிபரின் இந்த நடவடிக்கை பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
23-02-2020 மெயில் ஆன் லைன் தன் வலை தளத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் சீனாவின் W.I.V. யின் பாதுகாப்பு பற்றி எச்சரித்ததை வெளியிட்டது .
ஆனால் சீனா அதை பொருட்படுத்தவில்லை.
மார்ச் 22,2020 தேதியிட்ட நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட எப்படி அது வெளிப்பட்டது (HOW IT GOT OUT) என்ற ஒரு கட்டுரையில் ஜனவரி 1,2020 முதல் வூஹான் புது வருட கொண்டாட்டத்தின் போதும் அதன் பிறகும் லக்ஷக்கணக்கான மக்கள் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் வூஹான் நகருக்குள் வருவதும் வெளியேறுவதுமாக இருந்திருக்கின்றனர்.20-01-20 இல் தான் சீனா நோய் தொற்றை ஒப்புக்கொண்டது.23-01-2020 இல் ஹூபாய் மாகாணத்தில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டது.லாக் டவுனுக்கு முன் ஹுபையை விட்டு வெளியேறியவர் சீனாவுக்குள் பரவி விட்டனர்
மார்ச் 22,2020 தேதியிட்ட நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட எப்படி அது வெளிப்பட்டது (HOW IT GOT OUT) என்ற ஒரு கட்டுரையில் ஜனவரி 1,2020 முதல் வூஹான் புது வருட கொண்டாட்டத்தின் போதும் அதன் பிறகும் லக்ஷக்கணக்கான மக்கள் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் வூஹான் நகருக்குள் வருவதும் வெளியேறுவதுமாக இருந்திருக்கின்றனர்.20-01-20 இல் தான் சீனா நோய் தொற்றை ஒப்புக்கொண்டது.23-01-2020 இல் ஹூபாய் மாகாணத்தில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டது.லாக் டவுனுக்கு முன் ஹுபையை விட்டு வெளியேறியவர் சீனாவுக்குள் பரவி விட்டனர்
லாக் டவுனுக்கு பிறகும் 26-01-2020 வரை சீனா உள்நாட்டு வெளிநாட்டு விமான போக்குவரத்தை லாக் டவுன் செய்யவில்லை.எனவே லாக் டவுனுக்கு முன்னும் பின்னும் கிட்டத்தட்ட 70,00,000 மக்கள் வூஹானிலிருந்து வெளியேறியதாக அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.
யூக கோட்பாடு -4-வியாபார நோக்கு ?
இதுவும் ஒரு யூகம் தான் இந்த யூகத்திற்கும் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற மாதிரி சீனா வெளியிடும் சில மிகைப்படுத்தும் அறிக்கைகள் தான் காரணம்
நாங்கள் இதை கட்டுப்படுத்தி விட்டோம்.வூஹானில் இப்போது எந்த தொற்றும் இல்லை நாடும் நகரமும் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டன.வர்த்தக ஸ்தலங்கள் சகஜமாகி விட்டன.பங்கு சந்தை நிலவரம் உயர்ந்திருக்கிறது சீனாவின் ஏற்றுமதி வர்த்தகம் மேம்பட்டு இருக்கிறது.எந்த நாட்டிற்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கோவிட் -19 நோய் சம்பந்தமான மருந்துகள் மருத்துவ பரிசோதனை கிட்டுகள் உபகரணங்களை நாங்கள் ஏற்றுமதி செய்ய முடியும். செய்கிறோம் என்ற அவர்களது புள்ளி விவரங்கள் நம்மை மலைக்க வைக்கின்றன.எவ்வளவு வேண்டுமானாலும் அளவற்ற நிலையில் சீனா மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முன்னமேயே அது திட்டமிட்டதா என்பது மர்மம் ஆகவே இருக்கிறது.
யூக கோட்பாடு 5-சீன உளவு
ஜனவரி 20,2020 இல் தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் கிரி வலம் வரும் பாதையில் ஒரு குகை.அதற்குள் மனித வாடையை உணர்ந்த பக்தர்கள் அதற்குள் போக எத்தனிக்க அதனுள் பதுங்கி இருந்த ஒரு சீனர் உள்ளாடையுடன் திடீயென்று வெளிப்பட்டு பக்தர்களின் கைகளில் சிக்காமல் தப்பி ஓட பக்தர்களுடன் வனத்துறையும் சேர்ந்து அவரை விரட்டி பிடித்தனர்.அவரிடம் விசாரித்ததில் தான் சீனாவில் பெய்ஜிங் நகரை சேர்ந்தவர் என்றும்,ஆன்மீக சுற்றுலாவுக்காக இங்கு வந்ததாகவும்
,லாட்ஜில் தங்க இடம் கிடைக்கவில்லை என்பதனால் இந்த குகையை தேர்ந்தெடுத்ததாகவும் கூறினார்.தன் பெயரை யாங் ரூய் என கூறினார்.மூன்று நாட்களில் திரும்ப நினைத்ததாகவும் ஆனால் சீனாவில் லாக் டவுன் ஆனதால் இங்கேயே தங்கி விட்டதாகவும் கூறினார்.இன்று அவர் போலீஸ் பாதுகாப்பில் இருந்தாலும் இவரது வருகை இன்னும் மர்மமாகவே இருக்கிறது
6.சீனாவின் அலட்சியம் -டாக்டர் லீ -யூக கோட்பாடு
யூக கோட்பாடு 5-சீன உளவு
ஜனவரி 20,2020 இல் தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் கிரி வலம் வரும் பாதையில் ஒரு குகை.அதற்குள் மனித வாடையை உணர்ந்த பக்தர்கள் அதற்குள் போக எத்தனிக்க அதனுள் பதுங்கி இருந்த ஒரு சீனர் உள்ளாடையுடன் திடீயென்று வெளிப்பட்டு பக்தர்களின் கைகளில் சிக்காமல் தப்பி ஓட பக்தர்களுடன் வனத்துறையும் சேர்ந்து அவரை விரட்டி பிடித்தனர்.அவரிடம் விசாரித்ததில் தான் சீனாவில் பெய்ஜிங் நகரை சேர்ந்தவர் என்றும்,ஆன்மீக சுற்றுலாவுக்காக இங்கு வந்ததாகவும்
டாக்டர் லீ வேனிலியாங் வூஹான் அரசு மத்திய பண் முக ஆஸ்பத்திரியின் கண் சிகிச்சை பிரிவின் முக்கிய மருத்துவர்.இவர் தன்னுடைய சமூக வலை தளத்தில் ஒரு முக்கிய செய்தியை தனது மருத்துவர் குழுவுக்கு பதிவிட்டு இருந்தார்.அதில் தன்னிடம் கண் சிகிச்சை பெற வந்த நான்கு நோயாளிகளுக்கு 2002 இல் குவாங்டாங்கில் பரவிய சார்ஸ் வைரஸை போல் ஒரு தொற்று இருந்ததை உணர்ந்ததாகவும் அது சார்ஸ் -ஐ விட வித்தியாசமாகவும் வீரியமுள்ளதாகவும் இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார் .ஒரு வாரம் கழித்து அவர் வீடுதேடி வந்த போலீஸ் அவரிடம் தேவையற்ற வீண் வதந்திகளை பரப்பி மக்களை பீதி அடைய வைக்க முயற்சித்த குற்றத்திற்காக கைது செய்கிறோம் என்று கூறி அவரை காவல் நிலையம் கொண்டு சென்றனர்
காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் ஏற்கனவே அச்சிட்டு தயாரித்து வைக்கப்பட்டு இருந்த ஒரு தன்னிலை விளக்க கடிதத்தில் அவரது கையெழுத்தையும் அவரது முத்திரையையும் வாங்கி வீட்டுக்கு அனுப்பினார்.
பத்து நாட்கள் கழித்து அவரது க்ளினிக்கிற்கு கிளாக்கோமா என்ற ஒரு கண் நோய்க்காக சிகிச்சை பெற வந்த ஒரு பெண் நோயாளி மூலம் அவர் எந்த கிருமியை குறித்து அனைவரையும் எச்சரிக்கை செய்ய விரும்பினாரோ அதே கிருமியினால் தாக்கப்பட்டார்.அவர் குடும்பத்திலும் அது பரவியது.
ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன லீ தான் இறுதி கட்டத்தில் இருப்பதை உணர்ந்தார்.தனது நெருங்கிய நண்பர்கள் மூலம் காவல் துறை தன்னிடம் நடந்து கொண்ட விதம் அவர்கள் வற்புறுத்தியதால் தான் ஒப்பமிட்டு கொடுத்த அந்த தன் நிலை விளக்க கடிதத்தின் நகல் ஆகியவற்றை சமூக ஊடகங்கள் மூலம் மக்களறிய வெளிப்படுத்தினார்.பிறகு டாக்டர் லீ இறந்தார் .நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் உட்பட மக்கள் கொதித்தனர்.அரசையும் காவல்துறையையும் கண்டித்து சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் விமர்சனகளும் கண்டனங்களும் குவிந்தன.அரசும் காவல் துறையும் மக்களிடம் மன்னிப்பு கேட்டன.ஆனால் காலம் கடந்து விட்டது.டாக்டர் லீ இறந்து விட்டார்.அவரது நேர்மை இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து கொடுத்துவிட்டது.இன்றைக்கு டாக்டர் லீ சீனாவில் ஒரு பிதா மகன்.
பத்து நாட்கள் கழித்து அவரது க்ளினிக்கிற்கு கிளாக்கோமா என்ற ஒரு கண் நோய்க்காக சிகிச்சை பெற வந்த ஒரு பெண் நோயாளி மூலம் அவர் எந்த கிருமியை குறித்து அனைவரையும் எச்சரிக்கை செய்ய விரும்பினாரோ அதே கிருமியினால் தாக்கப்பட்டார்.அவர் குடும்பத்திலும் அது பரவியது.
ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன லீ தான் இறுதி கட்டத்தில் இருப்பதை உணர்ந்தார்.தனது நெருங்கிய நண்பர்கள் மூலம் காவல் துறை தன்னிடம் நடந்து கொண்ட விதம் அவர்கள் வற்புறுத்தியதால் தான் ஒப்பமிட்டு கொடுத்த அந்த தன் நிலை விளக்க கடிதத்தின் நகல் ஆகியவற்றை சமூக ஊடகங்கள் மூலம் மக்களறிய வெளிப்படுத்தினார்.பிறகு டாக்டர் லீ இறந்தார் .நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் உட்பட மக்கள் கொதித்தனர்.அரசையும் காவல்துறையையும் கண்டித்து சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் விமர்சனகளும் கண்டனங்களும் குவிந்தன.அரசும் காவல் துறையும் மக்களிடம் மன்னிப்பு கேட்டன.ஆனால் காலம் கடந்து விட்டது.டாக்டர் லீ இறந்து விட்டார்.அவரது நேர்மை இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து கொடுத்துவிட்டது.இன்றைக்கு டாக்டர் லீ சீனாவில் ஒரு பிதா மகன்.
முடிவுரை
இந்த கட்டுரையின் நோக்கம் ஒரு நாட்டின் மீது பழி போடவேண்டும் என்பதல்ல.ஆனால் நெஞ்சத்தை நெருடுவது போல் அங்கு தவறுகளும் அரசின் அலட்சிய போக்கும் நிறைந்து இருக்கின்றன.அதே சமயம் இந்த கட்டுரையில் குறிப்பிட்ட சில தகவல்கள் மிகையாகவும் இருக்கின்றன.உதாரணமாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையின் தகவல்.லாக் டவுனுக்கு முன்னும் பின்னும் வூஹானிலிருந்து சுமார் எழுபது லக்ஷம் பேர் வெளியேறினர் என்பது.வூஹானின் மொத்த மக்கள் தொகை ஒருகோடிக்கு மேல் இருக்கலாம்.ஆனாலும் அந்த தகவல் மிகையாகவே தெரிகிறது.
நீதி :-
உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளிலும் உள்ள நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடங்களை கண்காணிக்க ஐ.நா ஒரு விசேஷ துறையை ஏற்படுத்த வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக