நாட்பட்ட சிறுநீரக கோளாறு(CKD)&இறுதி நிலை சிறுநீரக செயலிழப்பு(ESKD)
![]() |
படம் 1 |
நாட்பட்ட சிறுநீரக கோளாறு குறுகிய கால கோளாறு போல் இல்லாமல் சிறுநீரகம் படிப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக செயலிழப்பது.இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முதன்மையான இரு காரணங்கள் 1.நாட்பட்ட உயர் இரத்த அழுத்தம் 2.நாட்பட்ட சர்க்கரை மிகு நோய் (சர்க்கரை நீரிழிவு அல்லது ஹைப்பர் கிளைசீமியா-Hyperglycemia)
உயர் இரத்த அழுத்தம் சிறுநீரக இரத்த ஓட்டத்தை குறைத்து அதனால் சிறுநீரகம் நலிவடைந்து கோளாறுகளுக்கு ஆளாகும்
உயர் சர்க்கரை நிலையில் சிறுநீரகத்தின் நெப்ரான்கள் (சிறுநீரக சுத்தீகரிப்பான்கள்)சேதமடைந்து இத்தகைய கொடிய நோயை உண்டாக்கும்
மற்றபடி குறுகிய கால சிறுநீரக கோளாறை (AKD) உண்டாக்கும் அனைத்து காரணிகளும் இந்த நாட்பட்ட சிறுநீரக கோளாறுக்கும் (CKD) பொருந்தும்.
நாட்பட்ட சிறுநீரக கோளாறின் நிலைகள் :-
1.சாதாரண நிலை:இதில் சிறுநீரகத்தின் கழிவு நீக்கும் திறன் சாதாரண நிலையிலிருந்து அதி சாதாரண நிலைவரை இருக்கும்.இதை தொழில் நுட்ப மருத்துவ மொழியில் GFR-100 மில்லி/நிமிடத்திற்கு(மி/நி) என்று அளவீடு செய்யலாம்.
2.மித நிலை :-GFR- 60 to 99 மி/நி
3.இடை நிலை A :- GFR:49 to 59 மி/நி
இடைநிலை B :- GFR :35 to 49 மி /நி
4.கடுமை நிலை :-GFR :19 to 29 மி/நி
5.இறுதி நிலை :- GFR :19க்கு கீழ் <19 19="" font="" nbsp="">
முதல் இரண்டு நிலைகளிலும் நாம் உடனேயே காலத்துடன் சரியான மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் இந்த கோளாறை சரிசெய்ய முடியும்.ஆனால் இந்த இரு நிலைகளிலும் நோய் எந்த அறிகுறியும் காட்டாது.எனவே சிகிச்சையிலிருந்து தவறலாம்
மூன்றாவது நான்காவது நிலைகளுக்கு நோய் கடந்துவிட்டால் மீள்வது கடினம்.ஏனெனில் அந்த நிலைகளில் சிறுநீரகம் ஏறக்குறைய 50%க்கு மேல் தன் ஆரோக்கியத்தை இழந்திருக்கும்.
அறிகுறிகள் :-
CKD ஐ பொறுத்தவரை AKD போன்றே அறிகுறிகள் இருந்தாலும் அவை சிறிது சிறிதாகத்தான் வெளிப்பட துவங்கும்
1.குமட்டல் வாந்தி பசி இன்மை ஜீரண கோளாறு
2.பலவீனம் மன குழப்பம்
3.களைப்பு, சோர்வு
4.ஆரம்பத்தில் அடிக்கடி சிறுநீர் கழியும் பிறகு படிப்படியாக அது குறைந்து விடும்
5.சிறுநீரில் நுரை மற்றும் இரத்தம்
6.இதயத்தை சுற்றி நீர் காட்டுவதால் நெஞ்சு வலி மற்றும் இறுக்கம்
7.நுரையீரலில் நீர் காட்டுவதால் மூச்சு முட்டுதல்
8.நீர் இரத்தத்தில் தேங்குவதால் இரத்த அழுத்தம் உயர்தல்
9.தூக்கமின்மை
10.யூரிக் அமிலம் யூரியா மற்றும் பாஸ்பரஸ் கழிவுகள் உடலில் தேங்குவதால் தோலில் அரிப்பு உண்டாகுதல்.தோல் கறுத்தல்,படை சிரங்கு போல் செதில் செதிலாக தோல் மாறுதல்
11.சதை வலி சுளுக்கு .
மேல் கண்ட அறிகுறிகள் அது சிறுநீரக கோளாறுதான் என்றில்லாவிட்டாலும்
தீர பரிசோதித்துக்கொள்வது நல்லது.
காரணிகள் :-
1.சர்க்கரை நோய் (நாட்பட்ட)
2.நாட்பட்ட உயர் இரத்த அழுத்தம்
3.சிறுநீரக குழாய்களில் தொற்று (Tubule Infections)
4.சிறுநீரக வடிகட்டிகளில் தொற்று (Glomerulonephritis)
5.முன் சிறுநீர் சேமிப்பு குழாயில் கோளாறு.இதனால் சிறுநீர் மீண்டும் சிறுநீரகத்தை நோக்கி திரும்பி பாய்தல் (Vesicoureteral Reflux)
6.சிறுநீரக கட்டிகள் (Renal cysts)
7.சிறுநீர் பின் குழாயில் அழுத்தம் மற்றும் புராஸ்டேட் சுரப்பி வீக்கம் (Pressure in urethra & enlarged prostate)
8.நாட்பட்ட சிறுநீரக தொற்று நோய்கள்
இடர் காரணிகள் :-
1.முதுமை
2.புகைப்பழக்கம்
3.ஆல்கஹால் மற்றும் போதை வஸ்துக்கள்
4.உடல் பருமன் (Obesity)
5.கவனிக்கப்படாத இதய மற்றும் இரத்தக்குழாய் கோளாறுகள் (உயர் இரத்த அழுத்தம்)
6.கவனிக்கப்படாத நாட்பட்ட சர்க்கரை நோய்
7.பாரம்பரிய சிறுநீரக கோளாறுகள்
சிக்கல்கள் (பழுதுகள்):-
பெரும்பாலும் கீழ்கண்ட பழுதுகள் இறுதிக்கட்ட சிறுநீரக கோளாறின் அறிகுறியாகும்
![]() |
படம்-2 |
சிறுநீரக்கோளாறுகள் பொதுவாகவே உடலின் அனைத்து பாகங்களையும் தாக்க கூடியதாகும்.காரணம் ,
1.பொட்டாசியம் அளவு இரத்தத்தில் அதிகரித்தல் (இதய பாதிப்புகள் )
2.இரத்தத்தில் பாஸ்பரஸின் அளவு அதிகரித்தல் (தோல் பிரச்சினைகள் )
3.இரத்தத்தில் கால்ஷியம் அளவு அதிகரித்தல் (சிறுநீரக கல் ,எலும்பு பலஹீனம் மற்றும் இருதய கோளாறுகள்)
4.நீர் தேங்குதல் (நுரையீரல் மற்றும் இருதய வீக்கமுயற் இரத்த அழுத்தம் )
5.இரத்த சோகை
6.பாலுணர்வு குறைபாடுகள்.தாம்பத்திய உறவில் நாட்டமின்மை
7.மூளை மற்றும் மத்திய நரம்புமண்டல பாதிப்புகள்.மன நலம் குன்றுதல்
8.நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் ,உடல் பல வித தொற்று நோய்களுக்கு ஆளாதல்
9.இதய மேலுறை தொற்று நோய்-Pericarditis.
இதனால் பெரிகார்டிய பையில் நீர் தேங்கி இதயம் வீங்குதல் (படம் 2)
6.பாலுணர்வு குறைபாடுகள்.தாம்பத்திய உறவில் நாட்டமின்மை
7.மூளை மற்றும் மத்திய நரம்புமண்டல பாதிப்புகள்.மன நலம் குன்றுதல்
8.நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் ,உடல் பல வித தொற்று நோய்களுக்கு ஆளாதல்
9.இதய மேலுறை தொற்று நோய்-Pericarditis.
இதனால் பெரிகார்டிய பையில் நீர் தேங்கி இதயம் வீங்குதல் (படம் 2)
CKD யில் இரத்த சோகை கோட்பாடு(Anemia Concept) எரித்ரோபோய்டின்-Erythropoietin (EPO):-
![]() |
படம்-3 |
சிறுநீரகம் கழிவு உறுப்பாக மட்டும் செயல்படாமல் நம் உடலில் இரத்த சிவப்பணுக்கள் சீராக இருக்க உதவும் எரித்ரோபோய்டின் என்ற ஹார்மோனையும் உற்பத்திசெய்கிறது.இந்த வகையில் இது ஒரு நாளமில்லா சுரப்பியாக செயல்படுகிறது. படம் 3-இல் இது கீழ்கண்டவாறு விவரிக்கப்பட்டுள்ளது:-
1.சிறுநீரகத்திலிருந்து EPO வெளியாகிறது
2.நேரடியாக இரத்த ஓட்டத்துடன் கலந்து எலும்பு மஜ்ஜைக்கு உத்தரவிடுகிறது
3.எலும்பு மஜ்ஜை உத்தரவுப்படி சிவப்பணுக்களை இரத்த ஓட்டத்திற்குள் வெளியாக்குகிறது .
குழந்தை பருவத்தில் EPO 100% கல்லீரலிலிருந்து உற்பத்தியானாலும் வயது ஆக ஆக இந்த நிலை மாறி சிறுநீரகமே 90% EPO வை தயாரித்து இரத்தத்தில் வெளியிடுகிறது.எனவே வயதான காலத்தில் கல்லீரலின் EPO உற்பத்தி 10% கீழேயே இருக்கும்
எனவேதான் இறுதி கட்ட சிறுநீரக செயலிழப்பில் EPO குறைபாட்டினால் சோகை மிக வேகமாக உண்டாகும்.
எரித்ரோபொயட்டின் அல்லது EPO கடல் மட்டத்திலிருந்து உயரத்தில் இருப்போருக்கும் குளிர் பிரதேசத்தில் வசிப்போருக்கும் அதிக அளவில் சுரக்கப்படும்.காரணம் இங்கு காற்று வெளியில் ஆக்சிஜன் அளவு குறைந்து இருக்கும் எனவே இரத்தத்திற்கு அதிக அளவு சிவப்பணுக்கள் தேவைப்படும்
எரித்ரோபொயட்டின் அல்லது EPO கடல் மட்டத்திலிருந்து உயரத்தில் இருப்போருக்கும் குளிர் பிரதேசத்தில் வசிப்போருக்கும் அதிக அளவில் சுரக்கப்படும்.காரணம் இங்கு காற்று வெளியில் ஆக்சிஜன் அளவு குறைந்து இருக்கும் எனவே இரத்தத்திற்கு அதிக அளவு சிவப்பணுக்கள் தேவைப்படும்
பரிசோதனைகள் :-
1.EPO அளவு :சாதாரணமாக இதன் அளவு 4 டு 40 IU /L இருக்கவேண்டும்
2.இறுதி நிலை கோளாறை (ESKD )உறுதிப்படுத்த 24 மணிநேர சிறுநீர் பரிசோதனை அவசியம்
3.கிரியாட்டினின் பரிசோதனை -இரத்தத்தில் இதன் அளவு சாதாரணமாக 0.7 டு 1.2 வரை இருக்கலாம்
4.KIM பரிசோதனை
மேலே கூறிய அனைத்து பரிசோதனைகளையும் விட குறுகிய கால மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய்களை இந்த பரிசோதனையின் மூலம் மிக துல்லியமாக அறிய முடியும்.
KIM என்பது நோய்ப்பட்ட சிறுநீரக முன் சுருள் குழாயின் (PCT)உள்பகுதி தோலில் இருந்து உதிர்ந்து சிறுநீரில் வெளியாகும் மூலக்கூறு ஆகும் இது ஒரு புரத வகையை சேர்ந்தது
இது சிறுநீரில் வெளிப்பட்டால் சிறுநீரகம் பழுதடைந்து இருப்பதாக அர்த்தம்
நுண் ஆல்புமின் யூரியா பரிசோதனை :
இதுவும் ஓரளவு சிறுநீரக கோளாறை அறிய உதவும்.ஆல்புமின் என்பது இரத்தத்தில் இருக்கும் புரதமாகும் இது சாதாரணமாக சிறுநீரில் வெளியேறாது.ஆனால் சிறுநீரகத்தில் கோளாறோ அல்லது கிருமி தொற்றோ இருந்தால் இது சிறுநீரில் வெளியேறும்
KIM மற்றும் நுண் அல்புமின்யூரியா பரிசோதனைகள் 24 மணி நேர சிறுநீர் பரிசோதனையில் தெரியவரும்
எரித்ரோபோய்டின் சிகிச்சை
இந்த வகை ஊசிகள் சிறுநீரக கோளாறின் போது ஏற்படும் சோகை நோயை சரி செய்ய நோயாளிக்கு தர வேண்டும்
நோயாளி டயாலிசிஸ் செய்தாலுமோ அல்லது இல்லாவிட்டாலுமோ வாரம் மூன்று முறையாவது தர வேண்டும்.
டோஸ்களை டாக்டரே நிர்ணயிப்பார்
ஹீமோகுளோபின் அளவு இரத்தத்தில் டெசிலிட்டருக்கு 10 கிராமுக்கு கீழே இரங்கத்துவங்கும் போதே சிகிச்சையை ஆரம்பித்துவிடவேண்டும்
அதன் பிறகு டோஸை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்ளலாம்
டோஸேஜ் அளவு :- 50 டு 100 யூனிட்ஸ் /கிலோ கிராம்
ரூட் :ஊசி மூலம் சிரையிலோ (Intra venus) அல்லது தோலுக்கு ஒட்டிய சதைப்பகுதியிலோ(subcutaneous) செலுத்தலாம்.
ஹீமோடயாலிசிஸ் மற்றும் பெரிடோனியல் டயாலிசிஸ் பற்றி விரிவாக தனித்தனியான பதிவுகளில் பார்க்கலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக