ஞாயிறு, 22 ஜூலை, 2018

நிமோனியா

நிமோனியா-குறிப்புகள் 

நிமோனியா என்பது நுரையீரலில் உள்ள காற்று அறைகளில் (Alveoli) ஏற்படும் அழற்சி மற்றும் எரிதல் (Inflammation) நோய் ஆகும் 
இது சாதாரண அழற்சியினாலோ அல்லது கிருமி தொற்றினாலோ ஏற்படும் 
இதில் எரிந்து சிவத்தல் (Inflammation )கண்டிப்பாக இருக்கும் 
எரிந்து சிவத்தல் இல்லாமல் வெறும் கிருமித்தொற்று மட்டுமே இருக்குமானால் அது சுவாச குழாய் தொற்று (Bronchitis )ஆகும் 
நாட்பட்ட சுவாசக்குழாய் தொற்று நிமோனியா அல்லது புற்று நோயாக மாற வாய்ப்புண்டு 
நிமோனியா எந்த வயதிலும் யாருக்கும் வரும் என்றாலும் கீழ்கண்ட நபர்களுக்கு அது வரும் வாய்ப்பு அதிகம் 
1.ஐந்து வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் 
2.65-வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 
3.எய்ட்ஸ் வியாதியுள்ளவர்கள் 
4.ஆஸ்பெஸ்ட்டாஸ் போன்ற நச்சு ரசாயன தொழிலாளிகள் 
5.ஆஸ்பத்திரியில் வெகுநேரம் வென்டிடேட்டர்,இன்ஹேலர் போன்ற கருவிகளின் பயன்பாட்டில் இருக்கும் நோயாளிகள்
6.அதிக ஸ்டெராய்டு பயன்பாடு 
7.மது பழக்கம் 
8.புகைபிடித்தல் 
10.கஞ்சா அபின் பழக்கம் 
11..நீண்ட கால படுக்கை 
12.ஆஸ்த்மா,சர்க்கரை மற்றும் இதய நோய்கள்
நிமோனியா மூன்று வித கிருமிகளால் ஏற்படும் அவை முறையே,பாக்டீரியா,வைரஸ்,மற்றும் காளான்கள் 
இதில் பாக்டீரியாவினால் ஏற்படும் நிமோனியா மிகவும் கொடூரமாகவும் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறக்கூடியதாகவும் இருக்கும் 
வைரஸ் மூலம் வரும் நிமோனியா அவ்வளவு கடுமையாக இருக்காது இதற்கு ஆன்டிபயாட்டிக்ஸ் கூடாது பத்தியம் இருகால் போதும் தானாகவே குணமாகிவிடும் 

காளான்Fungus)தொற்றினால் ஏற்படும் நிமோனியா பெரும்பாலும் எய்ட்ஸ் போன்ற நோய் எதிர்ப்புத்தன்மை குறையும் நோயாளிகளுக்கு உண்டாகும் 
பெரும்பாலும் எய்ட்ஸ் நோயின் ஆரம்ப அறிகுறியே நிமோனியாவாகத்தான் இருக்கும் 

அறிகுறிகள் 

1.காற்று பைகளில் சீழ் உண்டாவதால் சளிக்கட்டி மூச்சு விட இயலாமை 
2.காய்ச்சல் 
3.தலைவலி 
3.சளியினால் பசியின்மை 
4.இருமல் 
5.எடை குறைதல் 
6.தளர்வு 
7.சோர்வு 
8.கெட்டி சளி 
9.நெஞ்சு வலி  
10.வைரஸ் நிமோனியாவில் இளைப்பு மற்றும் காய்ச்சல் இருக்கும் 
11.பாக்டீரியா நிமோனியாவில் காய்ச்சலுடன் இளைப்பு ,அதிக வியர்வை உதடு மற்றும் நக கண்கள் நீளம் பாரித்து போதல் மற்றும் மன குழப்பம் ஆகியவை இருக்கும்
 Pneumocystis jirovecii இது நிமோனியாவை உண்டாக்கும் ஒருவகை  காளான் ஆகும் இது பெரும் பாலும் எய்ட்ஸ் போன்ற உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் நச்சு மற்றும் சுத்தமில்லா  சூழலில் புழங்குபவர்களுக்கு தொற்றி கொள்ளும் மற்றபடி இது ஆரோக்கிய சூழலில் இருப்பவர்களுக்கு தொற்றாது எனவே எய்ட்ஸ் நோயாளிகளுடன் பழகுபவர்களுக்கு இந்த காளான் தொற்று எளிதில் ஏற்படாது

சிகிச்சைகள் 

1.பாக்டீரியா நிமோனியாவிற்கு மருத்துவ ஆலோசனை படி ஆன்டிபயாட்டிக்குகள் எடுத்துக்கொள்ளவேண்டும் 
2.வைரஸ் நிமோனியாவிற்கு கண்டிப்பாக ஆன்டிபயாட்டிக்குகள் எடுக்க கூடாது

 

வியாழன், 5 ஜூலை, 2018

இரும்பு சத்து

உணவிலிருந்து இரும்பு சத்தை அதிகம் பெறுவது எப்படி ?

இரும்பு சத்து உடம்புக்கு மிகவும் இன்றியமையாதது என்பது நம் அனைவருக்கும் தெரியும் 
இரும்பு சத்து இரத்தத்தை விருத்தி செய்ய உதவுகிறது 
இரும்பு சத்து  குறைவுப்பாட்டால் இரத்தத்தில்  சோகை உண்டாகும் 
இரத்த சோகை உடம்பில் பல நோய்கள் வர வழி வகுத்துவிடும் 
இரும்பு சத்து வேண்டும் என்பதற்காக இரும்பை நாம் உணவாக கொள்ள முடியாது 
இரும்பு சத்து மாத்திரைகள் டானிக்குகள் ஊசிமருந்துகள் என்று எல்லாவற்றிலும் பக்க விளைவுகள் உண்டு 
அவற்றை டாக்டரின் ஆலோசனை இன்றி எடுத்துக்கொள்ள கூடாது 
ஆனால் இறைவன் அற்புதமாக தன்  கருணையினால் நாம் சாப்பிடும் அன்றாட சாதாரண உணவு வகைகளில் கூட இரும்பு சத்தை சரிவிகிதத்தில் பொதிந்து வைத்திருக்கிறான்
அவற்றை முறையாக பயன் படுத்துவதன் மூலம் நாம் இரும்புச்சத்தை எவ்வித குறைவும் இன்றி பெறலாம் 
முதலில் ஒன்றை தெரிந்து கொள்வோம் 
நம் உடலில் சுமார் 65 சதவீத இரும்பு சத்து இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் என்ற புரதத்தில் உள்ளது 
ஹீம் என்ற இரும்பின் கூட்டு பொருளும் குளோபின் என்ற புரதமும் சேர்ந்து உருவாகும் பொருள்தான் ஹீமோகுளோபின் 
இதில் இருக்கும் இரும்பு கூட்டு பொருளான ஹீம் தான் இரத்தத்திற்கு அபாரமான செந்நிறத்தை தருகிறது.இரத்தத்தின் சிவப்பணுக்களுக்கு  நிறமே ஹீம்தான் கொடுக்கிறது
இரும்பு சத்து எவ்வளவு குறைவாக உள்ளதோ அவ்வளவு இரத்தம் வெளிறி இருக்கும் இதனால் இரும்பு சத்து குறைபாட்டினால் தோலும் வெளிறி இருக்கும் இதை வைத்து அனீமியாவை கண்டறியலாம் 

இரும்பு சத்தின் வகைகள் 

பொதுவாக உணவு மூலம் கிடைக்கும் இரும்பு சத்தை இருவகைகளாக பிரிக்கலாம் அவை :-

1.ஹீம் இரும்பு சத்து  

மிருகங்களின் சிவப்பு இறைச்சி (Red Meat) வகை உணவிலும் பறவை மற்றும் மீன் இறைச்சி (White Meat)வகையிலும் காணப்படுகிறது தாவர உணவில் இது முற்றிலும் கிடையாது 
ஹீம் இரும்பு சத்தை உடல்  வெகு எளிதில் உட்கொண்டு தன்மையமாக்கிவிடும் .இதனால் அசைவ உணவு பிரியர்களுக்கு இரும்பு சத்து குறைபாடு வேறு இடையூறுகள் ஏதும் இல்லாத பட்சத்தில் பொதுவாக ஏற்படுவது இல்லை

2.நான் ஹீம் இரும்பு சத்து 

அசைவ உணவில் ஹீம் இரும்பும் நான் ஹீம் இரும்பும் சேர்ந்து இருந்தாலும் காய் கறி  உணவில் நான் ஹீம் இரும்பு சத்து மட்டுமே உள்ளது நான் ஹீம் இரும்பு சத்தை உடல் மிக எளிதாக உட்கொள்ளாது இதனால் சைவ உணவு பிரியர்களுக்கு இரும்பு சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் 
இவர்கள் டாக்டரின் ஆலோசனையுடன் மாத்திரை டானிக்குகளை எடுத்துக்கொள்ளலாம் 

இரும்பு சத்து ஊக்கிகள் 

பொதுவாக உடம்பு உணவிலிருந்து இரும்பு சத்தை உறிய ஊக்கப்படுத்தும் சில பொருட்களை பார்க்கலாம் 

1.வைட்டமின் சி  

உணவு சாப்பிட்ட உடன்  எலுமிச்சை ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடுவதால் அதிலுள்ள வைட்டமின் சி உணவுமூலம் கிடைக்கும் இரும்பு சத்தை உடல் எளிதாக பயன்படுத்துவதை ஊக்க படுத்தும் 

2.பைடேட்டு உப்புகள் 

இவைசாதாரணமாக உடல் இரும்பு சத்தை  உறிவதை  குறைக்கும் என்றாலும் இவற்றை தண்ணீரில் ஊறவைத்தோ நொதிக்க செய்தோ சாப்பிட்ட பிறகு எடுத்து கொண்டால்  இவை இரும்புசத்து உடலில் சேர்வதை ஊக்கப்படுத்துவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது 
பைடேட்டு உப்புகள் சோயா வாதுமை வால்நட்டுகள் முந்திரி போன்ற பருப்பு வகைகளில் அதிகம் இருக்கிறது 
மேலும் துத்தநாகம்,தாமிரம் மாங்கனீசு போன்ற உலோக சத்துக்களும் மிக சிறிய அளவில் Trace Elements சேர்த்துக்கொண்டால் உடல் இரும்பு சத்தை எளிதில் உட்கொள்ள எதுவாக இருக்கும் 
கடைகளில் வாங்கும் இரும்பு சத்து டானிக்குகள் மற்றும் மாத்திரைகளில் இந்த Trace Elements சேர்க்கப்பட்டிருக்கும் 
நாம் சாப்பிடும் சைவ மற்றும் அசைவ உணவுகளிலும் பழங்களிலும் இந்த Trace Elemens இருக்கின்றன 
துத்தநாகம் பிரேசில் ஓட்ஸ்,oyester,முட்டை ஆகியவற்றிலும்,தாமிரம் மாமிசம்,வெண்ணெய்,வேர்க்கடலை போன்ற உணவுகளிலும்,மாங்கனீசு ஓட்ஸிலும் இருக்கின்றன.

தேநீர் கூடாது 

சாப்பிட்டவுடன் ஒரு மணி நேரத்திற்குள்ளாக தேநீர் போன்ற பானங்களை தவிர்ப்பது  நன்று ஏனென்றால் அவற்றில் இருக்கும் டானின் என்ற பொருள் உணவிலிருந்து உடல் இரும்பு சத்தை எடுப்பதை தடுப்பதாக ஆய்வு கூறுகிறது 
தேநீரை பொறுத்தவரை அது பெரும்பாலும் நான் ஹீம் இரும்பு சத்து உறியப்படுவதைத்தான் தடுக்கிறது 
மேலும் தேநீர் ஏற்கனவே இரும்பு சத்து குறைபாடு உடையவர்களை அதிகம் பாதிக்கிறது

இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகள் 

1.ஈரல் 
2.மண்ணீரல் 
3.எலும்பு மஜ்ஜை 
4.சிவப்பு இறைச்சி (ஆடு மாடு மிருகங்கள் )
5.வெள்ளை இறைச்சி (பறவைகள் ,மீன்கள் )
6.உலர்ந்த அத்திப்பழம் 
7.பேரீச்சை 
8.முந்திரி,வாதுமை 
9.முட்டை 
10.பச்சை காய்கறி மற்றும் கீரை வகைகள் 

RDA -தினசரி இரும்பு சத்தின் தேவை :-

1.பெண்கள் (வயது 19 -50)   =18 மி கி 
2.ஆண்கள் (வயது 19 -50)   = 8 மி.கி 
3.கர்ப்பிணி பெண்கள்         = 27 மி கி 
4.பாலூட்டும் பெண்கள்      = 9 மி கி
மேலேயுள்ள தகவல் National  Institute Health  (NIH) இன் சிபாரிசின்படி தரப்பட்டது 

இரும்பு சத்து குறைபாடு சோகையின் அறிகுறிகள் 

1.களைப்பு 
2.சோர்வு 
3.வெளிறிய தோல் 
4.முடி உதிர்தல் 
5.உடல் அரிப்பு எரிச்சல் 
6.பலவீனம் 
7.தூசி கல் மண் இவற்றை தின்ன ஆர்வம் 
8.கால் ஓய்வின்மை 

9.நகம் உடைதல் வளைதல்


வியாழன், 28 ஜூன், 2018

சிந்திப்போம் செயல்படுவோம்

தமிழ்நாடு -நேற்றும் இன்றும்


தமிழ் நாடு நேற்று இன்று நாளை என்று பிரித்து பாப்போம்
இந்தியா சுதந்திரம் அடைந்து குடியராசாகிய பின்
நான்கு மாகாணங்களாக இருந்த அது பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டது
1967 வரை ஒன்றாக இருந்த காங்கிரஸ் மதராஸ் மாநிலத்தை ஆண்டது
மதராசுக்கு பல பெருமைகள் உண்டு
வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நவீன நகரம்
புனித ஜார்ஜ் கோட்டை அகழிகளால் சூழப்பட்டு அமைக்க பட்ட ஒரு பெருமை மிக்க அமைப்பு
இந்தியாவின் முதல் மாநகராட்சி என்ற பெருமையும் லண்டனுக்கு பிறகு வெள்ளையர் சாம்ராஜ்யத்தின் இரண்டாவது மாநகராட்சி என்ற பெருமையும் மதராஸுக்கே உண்டு
உலகின் இரண்டாவது நீளமான அழகிய மெரினா கடற்கரை உள்ள நகரம் மதராஸ்
ஆக்ஸ்போர்ட் ,கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களுக்கு அடுத்து உலகின் மூன்றாவது என்று போற்றத்தக்க மதராஸ் யுனிவர்சிட்டி என்று போற்றப்பட்ட காலம் மாண்புமிகு சதாசிவ முதலியார் வைஸ் சென்சலராக இருந்து உண்ணத்தமிக்க முதலியார் யுனிவர்சிட்டி என்று வெளிநாட்டவர் வியந்து போற்றும் அளவிற்கு மதராஸ் யுனிவர்சிட்டி திகழ்ந்த பொற்காலம் என்றால் அது 1967 க்கு முன்
இன்றும் இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவு மிக பரந்த இடப்பரப்பில் உன்னதமான பிரிட்டிஷ் கட்டிடக்கலையின் பிரமாதத்திற்கு சான்றாக பிரமிப்பூட்டும்படியாக அமைந்து இருப்பதுதான் மதராஸ் உயர்நீதி மன்றம்
இங்கு இன்னமும் இரண்டாவது உலகப்போரின்போது ஜெர்மனியின் எம்டன் கப்பல் போட்ட குண்டின் அடையாளம் இருக்கிறது
இந்தியாவிலேயே மிக முன்னேறிய மாநிலங்களில் மஹாராஷ்டிரா பஞ்சாபி மாநிலங்களுக்கு அடுத்த நிலையில் இருந்த பெருமை சென்னை மாநிலத்திற்கு உண்டு அதாவது 1967 க்கு முன்
பாரம்பரியம் கலாச்சாரம் கல்வி அமைதி இது அத்தனையிலும் சிறந்து விளங்கிய மாநிலம்தான் இது
இந்தியாவின் அமைதி பூங்கா
தொழில் தொடங்குவதற்கு அருமையானதொரு மாநிலம் என்று பலராலும் போற்றப்பட்ட மதராஸ் மாநிலம் 1967 க்கு பின் கொஞ்சன்கொஞ்சமாக சிதைந்து சின்னாபின்னமாகி இன்று அலங்கோலத்திலும் அலங்கோலமாக எங்கும் அரசியல் எதிலும் அரசியல் அராஜகம் போராட்டம் அரசிற்கும் மக்களுக்கும் இடையே எந்த ஒரு புரிந்துணர்வும் இல்லாத ஒரு நிலை ஊழல்,விலைவாசி ஏற்றம் என்று ஐயோ தலை சுற்றுகிறது
பின்னி தொழிற்சாலை மூடப்பட்டதால் ஆரம்பித்து
ஸ்டாண்டார்ட் கார்க்கம்பெனி
பிறகு நோக்கியா
பிறகு ஹூண்டாய் என்று ஒவ்வொன்றாக இழுத்து மூடப்பட்டதே ஏன்
யார் மீது பழியை போடுவது
என்னை பொறுத்தவரை மக்களின் மீதுதான்
1967 இல் ஆட்சியை மாற்றி திராவிடம் என்ற குறுகிய வட்டத்திற்குள் தங்களை சுருக்கிக்கொண்டார்களே அந்த தலை முறை மீதுதான்
நான் திராவிடத்திற்கு எதிரானவன் அல்ல
அது கலாச்சாரம் ஆனால் அதை அரசியலாக்கியதும் அதற்கு மக்கள் துணை போனதும் தான் 1967 இல் மக்கள் செய்த தவறு
திமுக ஒரு நல்ல ஒரு எதிர்கட்சியாகவே கடைசிவரை இருந்திருக்கலாம்
காங்கிரஸையே ஆளவிட்டு  மாநிலம் தேசிய நீரோட்டத்திலிருந்து விலகுவதை தடுத்திருக்கலாம்
மேதை  டர்.அண்ணா அவர்கள் ஒரு பேரறிஞர்.நாவன்மை மிக்கவர் மிகச்சிறந்த எழுத்தர் சாமர்த்தியமும் சாதுர்யமும் மிக்கவர் தமிழின் மீதும் தமிழகத்தின் மீதும் மிகுந்த பற்று உடையவர் இதில் எதிலும் சந்தேகமில்லை
ஆனால் ஏட்டில் அறிவு என்பது வேறு ஆட்சி அனுபவம் என்பது வேறு என்று திமுக 1967 மார்ச்சில் ஆட்சியில் அமர்ந்த உடனேயே திரு அண்ணா அவர்கள் உணர்ந்திருக்கிறார்
ஒரு மிகப்படிக்காத காமராஜருக்கு இருந்த அனுபவ ஞானம் கூட தனக்கு இல்லையே என்று அவர் உணர்ந்திருப்பார்
ஏனென்றால்  காமராஜை பார்த்து கருப்பிட்டி விலை என்னாச்சு என்று ஏளனம் பேசிய அவரால் ஆட்சிக்கு வந்த வுடன் கருப்பிட்டி விலை மாத்திரம் அல்ல படி அரிசி விலையை கூட ஒரு ரூபாய் அளவிற்கு கொண்டு வர முடியவில்லை
மக்களை ஏமாற்றிவிட்டோமோ என்ற மன உளைச்சல் கூட அந்த நல்ல மனிதருக்கு ஏற்பட்டிருக்கலாம்
அது மட்டுமல்ல
தனக்கு பிறகு என்னவாகுமோ என்று கூட அவர் அஞ்சி இருக்கலாம்
காரணம் அவருக்கு கீழே உள்ளவர்களின் நாணயத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இருக்க வாய்ப்பில்லை
காரணம் பொய் சொல்லி பழக்கப்பட்டவர்கள்
மக்களும் பொய்யையும்  சினிமாவையும் உண்மை என்று நம்மபதலைப்பட்டு விட்டார்களே
ஐயோ எல்லாம் மோசம் போய்விடுமே என்று அவர் எண்ணி இருக்கலாம்
அவர் மரணித்து விட்டார்
அண்ணாவின் மரணத்திற்கு பின் தமிழகம் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள துவங்கியது
காவிரி பிரச்சினை முல்லைபெரியார் பிரச்சினை என்று ஒவ்வொரு பிரச்சினைகளாக தலை தூக்க ஆரம்பித்தன
திமுக பல துண்டுகளாக உடைந்து நொறுங்கியதுதான் அது ஆட்சியை கைப்பற்றியதன் பலன்
காங்கிரசை வளர்ப்பதற்கோ மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கோ டெல்லியும் சரி இங்குள்ள காங்கிரஸ்காரர்களும் சரி முனைப்பு காட்டவில்லை
விளைவு தமிழகத்தின் தலை எழுத்து திமுக அ இ.அ தி முக என்று குறுகிய திராவிட வட்டத்திற்குள் சுழல துவங்கியது
அரசியல் என்பது புனிதமானது என்பது போய் பெரும் சூதாட்டக்களம் ஆகியது
மக்களும் ஓட்டிற்கு துட்டு,இலவசங்களுக்கு மயங்கி களமிறங்கி சூதாட தலைப்பட்டுவிட்டனர்
விளைவு மாநிலம் மதிப்பிழந்து
வளங்கள் சூறையாடப்படுகின்றன
பக்கத்துக்கு மாநிலங்களின் கழிவுகளை கொட்ட பயன்படும் குப்பை தொட்டியாக தமிழகம் ஆகிவிட்டது
ஆறுகள் தூர் வரப்படவில்லை
ஆற்று மணல் வரம்பு மீறி கொள்ளை போகிறது
அரசியல் மற்றும் ஆளும் வர்க்கத்திற்கோ மக்களுக்கோ எந்தவிதத்திலும் மாநில அக்கறை என்பது கிஞ்சிற்றும் இல்லாமலேயே போய்விட்டது
விளைவு பக்கத்து மாநிலங்களுக்கு இங்கிருந்து சரக்குகள் ஏற்றிக்கொண்டு போகும் சரக்கு லாரிகள் சரக்குகளை அங்கு இறக்கிவிட்டு அதிக வாடகை கிடைக்கிறது என்பதற்காக அங்கிருந்து அவர்கள் ஏற்றிவிடும் கழிவுகளையும் குப்பைகளையும் இங்கே கொண்டு வந்து தன் சொந்த மாநிலம் என்றுகூட பாராமல் திருட்டுத்தனமாக  கொட்டிவிட்டு  போகிறார்கள்
இவர்களை என்னவென்பது
யாராவது பக்கத்துக்கு வீட்டுக்குப்பைகளை அவர்கள் அதிக பணம் கொடுத்தார்கள்  என்பதற்காக வாரி கொண்டுவந்து தன வீட்டில் கொட்டுவார்களா?
வீடுவரை உள்ள அக்கறை (self or house interest) இந்த தமிழர்களிடம் ஏன் மாநில (state) அளவுக்கு விரிவடைய வில்லை
இத்தனைக்கும் தமிழர்கள் சிறந்த கல்வி அறிவுடையவர்கள் உழைப்பாளிகள் பிறகு என் அவர்களிடம் மாநில அக்கறை இல்லை ஏன் இந்த நிலை
இதை மாநில அக்கறை இன்மை என்பதா  அல்லது பரந்த மனப்பான்மை என்பதா?
எப்படிப்பார்த்தாலும் இந்த அணுகுமுறை இந்த சூழ்நிலையில் அறிவுடைமை இல்லை
காரணம் இன்றைய இந்தியாவில் மாநிலங்களின் கூட்டாட்சி என்றிருந்தாலும் மாநிலங்களிடையே  சுயநலமும் போட்டி மனப்பான்மையும் தான் அதிகமாக இருக்கிறது
கர்நாடகா காவிரியில் தனக்கே உரிமை என்கிறது
கேரளா ஆறுகளை கடலில் பொய் விடுவேன் தவிர விவசாயத்திற்கு திருப்ப மாட்டேன் என்கிறது
ஆந்திரா பாலாற்றில் தடுப்பணை கட்டி  கொண்டு நீர் தரமாட்டேன் என்கிறார்கள்
சேர சோழ பாண்டிய சாம்ராஜ்ஜியங்கள் மாதிரி தமிழகம் இன்று தனி நாடாக இல்லை
பிரிட்டிஷ் ஆட்சிக்கு பிறகு ஏக இந்தியா என்ற கூட்டாட்சி தத்துவத்தில் விரும்பியோ விரும்பாமலோ நாம் சிக்கிக்கொண்டோம்
இந்த நிலையில் நாம் திராவிட மாயையில் இருக்கிறோம்
தனித்தமிழ்நாடு என்ற குறுகிய வட்டத்திற்குள் இருக்கிறோம்
மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தை அவர்கள் மதிப்பதில்லை
காரணம் நம்முடைய இந்த குறுகிய அணுகுமுறைதான்
எனவே இனியாவது தூர நோக்குடன் சிந்திப்போம் செயல் படுவோம்








புதன், 21 பிப்ரவரி, 2018

காவிரியும் அரசியலும்

     அரசியல் என்பது புனிதமானது.இறுதி தூதர் முஹம்மது நபி (இறைவனின் சாந்தியும் சமாதானமும் அவர் மீது உண்டாகட்டும் ) அவர்கள் ஒரு ஆன்மீக வாதியாக மட்டுமில்லாமல் ஒரு அரசியல்வாதியாகவும் ஆட்சி தலைவராகவும் இருந்தார்.ஏனென்றால் ஆன்மிகம் மனிதனை நெறி படுத்துவதற்கு தேவை என்றால் அரசியல் அவன் வாழ்வதற்கு தேவை என்பதை அவர் உணர்ந்து செயல்பட்டார்.அரசியலையும் ஆன்மீகத்தையும் அவர் ஒருநாணயத்தின் இரு பக்கமாகவே  கண்டார்
ஒரு நேர்மையான அரசாங்கத்தை அவர் உருவாக்கினார்.அவரை தொடர்ந்து வந்த ஹஜ்ரத் அபூபக்கர்(இறைவன் அவர்களை பொருந்திக்கொண்டான்),ஹஜ்ரத் உமர் (இறைவன் அவர்களை பொருந்திக்கொண்டான் )ஹஜ்ரத் உஸ்மான் (இறைவன் அவர்களை பொருந்திக்கொண்டான்),ஹஜ்ரத் அலி (இறைவன் அவர்களை பொருந்திக்கொண்டான்)ஆகிய நான்கு கலீபாக்களும் நெறி பிறழாத நல்லாட்சியை மக்களுக்கு வழங்கினார்கள்.ஜாதி மத வேறுபாடின்றி எல்லோரும் நல்லாட்சியை அனுபவித்தார்கள்
மக்களின் உயிர் உடைமைகள் பாதுகாக்கப்பட்டன
அவர்களது உரிமைகள் மதிக்கப்பட்டன
குறிப்பாக பெண்களின் உரிமைகள் பேணப்பட்டு அவர்கள் அச்சமின்றி வாழ்வது உறுதி செய்யப்பட்டது
இவர்களது ஆட்சியை நமது தேச பிதா காந்திஜி அவர்களே சிலாகித்தார்கள்
கலீபா உமரின் ஆட்சி போன்று ஒரு ஆட்சி இந்தியாவில் மலர வேண்டும் என்று அவர் விரும்பினார்
ஆனால் அவரது விருப்பம் நிறைவேறியதா?
அந்த மனிதருள் மாணிக்கம் அற்பத்தனமாக கொல்லப்பட்டாரே அப்போதே அவர் விருப்பத்தோடு அவரையும் தீயிலிட்டு பொசுக்கிவிட்டார்கள்
இன்று பொசுங்கிய ஜநாயகம்தான் நம்மை கருவறுக்கிறது
இந்த ஜனநாயகத்தில் பெயரளவில்தான் ஜனங்கள் நாயகர்களாக இருக்கிறார்கள் மற்றபடி அமைச்சர்களுக்கும் அதிகார்வர்க்கத்திற்கும்  பொறுப்பற்ற முறையில் அதிகாரங்களை வாரி இறைத்திருக்கிறது நமது அரசியல் நிர்ணய சட்டம்.இந்த அபத்த சட்டத்தை உண்டாக்குவதில் எப்படித்தான் அம்பேத்கார் போன்ற மேதைகளும் பங்கேற்றார்களோ தெரியவில்லை
மக்களுக்கு பாதுகாப்பு இல்லை அரசாங்கம் வரி என்ற பெயரில் மக்களை எப்படி எப்படியெல்லாமோ பயமுறுத்தி வகை வகையாக பிடுங்கிக்கொள்கிறது ஆனால் ஒவ்வொரு முறையும் நிதி பற்றாக்குறையையே காரணம் காட்டி மேலும் மேலும் கட்டண உயர்வு கூடுதல் வரி என்று மக்களை வதைக்கிறார்கள்.அரசே மக்களிடம் வியாபாரம் நடத்துகிறது கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள் அதை அதிகார வர்க்கம் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்கிறார்கள்.பிறகு மீண்டும் கொள்ளை மீண்டும் பங்கீடு இப்படி தொடர்கதை இதற்கு பெயர் அரசியலா அல்லது சூதாட்டமா
மக்கள் நீதி மன்றங்களை நாடினால் பெரும் சம்பளங்களில் திளைத்துவீட்ட கோடீஸ்வர நீதிபதி கூட்டம் சாமானிய மக்களின் பிரச்சினைகளை பொருட்படுத்துவதே இல்லை தங்களின் பதவியிலும் பணத்திலும் குறியாக இருந்து அநியாயம் செய்யும் அரசிற்கு சார்பாகவே ஒன்று தீர்ப்பளிப்பார்கள் அல்லது கேஸை இழுத்தடித்தது நீர்த்து போக செய்துவிடுவார்கள்
எங்கும் ஊழல் எதிலும் ஊழல் மேல் மட்ட சிபாரிசுகள் இதில் சாமானியன் எப்படி வாழ்வது
நஷ்டப்பட்டவன் தன்  உரிமைகளுக்காக காவல் நிலையத்தில் போய்  காவல் தேடினால் அங்கும் ஊழல் பயமுறுத்தல்கள்கள்.என்ன செய்வது சரி தன்  உரிமைகளுக்காக போராட்டம் நடத்தினால் ஒருபுறம் போராட்டம் நடத்துங்கள் என்று நம்மை தூண்டி விடும் நம் அரசியல் சட்டம் மறுபுறம் போலீசை தூண்டி விட்டு போங்கள் போய்  தடியடி நடத்துங்கள் கண்ணீர்குண்டு வீசுங்கள் முடிந்தால் போலி என்கவுண்டர் மூலம் நாலு பேரை காவு வாங்குங்கள் என்கிறது இதுதான் ஜன நாயகமா.சரி மீண்டும் கோர்ட்டுக்கு போகவும் என்கிறார்கள் அங்கெ போனால்  ஆயிரம் முறை அல்லது முடிவற்ற கேஸ் ஒத்திவைப்புகள்
உதாரணம் காவிரி பிரச்சினை பாபர் மஸ்ஜித் பிரச்சினை
நீதிமன்றங்களுக்கு நியாயம் எது அநியாயம் எது என்று அப்பட்டமாகவே தெரிந்தாலும் தீர்ப்புகளை தருவதில்லை காரணம் அநியாயக்கார அதிகாரவர்கத்திற்கு பயம்
காவிரி பிரச்சினையில் நியாயம் எது என்று நீதிபதிகளுக்கு தெரியும் ஆனாலும் அவர்கள் நியாயத்தின் பக்கம் தீர்ப்பு தர தயங்குகிறார்கள் காரணம் தரங்கெட்ட அரசியல்
பாபரி மஸ்ஜித் விவகாரத்திலும் அதே கதைதான்
ஒருவேளை நியாயமான தீர்ப்பு வந்தாலும் அதை பார்லிமென்டில் சட்டம் போட்டு தடுத்து விடுகிறார்கள்
இந்த கேடுகெட்ட அரசியல் தாக்கங்களினால் நீதிமன்றங்களில்  குற்றவாளி தப்பிவிடுகிறான் நிரபராதி தண்டிக்கப்படுகிறான்
எனவே போலீசிடம் போகவும் பயமாக இருக்கிறது
நீதிமன்றங்களை நாடவும் தயக்கமாக இருக்கிறது
ஒரு நீதிபதி நியாயமாக நடக்க விரும்ப கூடாது என்பது எழுதப்படாத விதி
உதாரணம் சிபிஐ கோர்ட் நீதிபதி லோயாவின் மர்ம முடிவு
மாநிலத்தில் ஒரு கட்சி மத்தியில் வேறு கட்சி என்று ஆட்சி அமையும் பொழுது மாநிலத்தில் ஆளும் கட்சி மத்தியில் ஆளும் கட்சிக்கு மாநில  உரிமைகளை தொலைத்து விட்டு ஜால்றா போடவேண்டும்.எங்கே தன் ஆட்சி கலைக்கப்பட்டுவிடுமோ தன் பதவி பறிபோய்விடுமோ என்று பயத்துடன் தன் மக்களின் உரிமைகளையும் மாநில நலனையும் மத்திய அரசுக்கு அடகுவைத்து விடவேண்டும் 
நம்முடைய நீதி மன்றங்களும் எப்படி அரசியல் உள்நோக்குடன் செயல்படுகின்றன என்பதற்கு இந்த காவிரி நீர்பங்கீடு குறித்து சுப்ரீம் கோர்ட் அளித்திருக்கும் இறுதி தீர்ப்பு ஒரு உதாரணம்.நீதி தேவனே மயங்கி விழும் அளவிற்கு ஒரு அபத்தமான மோசமான அநியாயமான ஒரவஞ்சனையான தீர்ப்பு இதை நான் ஒரு தமிழகத்த்தை சேர்ந்தவன் என்பதற்காக சொல்லவில்லை.தீர்ப்பளித்த நீதிபதிகள் எவரும்கூட தமிழகத்தை சேர்ந்தவர்களாக இல்லாமல் இருக்கட்டும்.ஆனால் தேசிய  ஜனநாயக கண்ணோட்டத்தில் அவர்கள் இந்தியர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள்  தமிழ் நாட்டையும் இந்தியாவின் ஒரு பகுதி என்ற ரீதியில் தீர்ப்பை தரவில்லை.பேசாமல் வெளிப்படையாகவே தமிழகம் காவிரியை ஒட்டுமொத்தமாக மறந்துவிடவேண்டும் என்று கூறி இருக்கலாம் ஏனென்றால் தீர்ப்பின் உள்நோக்கமே அதுதான்.ஆனால் ரொம்ப புத்திசாலித்தனமாக தமிழகத்திற்கு சில சாதகங்களை உண்டாக்கி இருப்பது மாதிரி தீர்ப்பில் ஒரு தோற்றத்தை உருவாக்கி ஏமாற்றி இருக்கிறார்கள்.
உதாரணமாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு  ஆகியவற்றை ஏற்படுத்தி தரவேண்டும் என்பது தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கை.இதை சுப்ரீம் கோர்ட் தன்  தீர்ப்பில் ஏற்றுக்கொண்டு ஆறு வாரங்களுக்குள் (FEBRUARY 10 2018 இலிருந்து )அதை அமைக்கவேண்டும் என்று மத்திய அரசிற்கு கெடு விதித்து விட்டு மிக புத்திசாலித்தனமாக வாரியம்(BOARD) என்ற சரியான வார்த்தைக்கு பதில் திட்டம் (SCHEME )என்ற வார்த்தையை போட்டு குழப்பி நம்மை ஏய்த்து இருக்கிறார்கள்
இது மட்டுமல்ல காவிரி யாருக்கும் சொந்தமில்லை அது தேசிய சொத்து என்று தீர்ப்பில் சொல்லிவிட்டு ஏற்கனவே தீர்ப்பாயத்தில் தமிழகத்திற்கு தரப்பட்ட ஆண்டின்  ஒட்டு மொத்த நீர் அளவான 192 TMC யிலிருந்து 14.5 TMCஐ 
குறைத்து அதை கர்நாடகாவிற்கு வழங்கி தங்களது தேசப்பற்றை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் இதற்கு அவர்கள் கூறியுள்ள காரணம் எந்த ஒரு உண்மை தேசியவாதியையும் கொதிப்படைய வைக்கும் அதாவது காவிரியின் தமிழக எல்லையில் சுமார் 20TMC நீர்வளம் இருப்பதை தீர்ப்பாயம் கணக்கில் கொள்ளவில்லை அதையும் நாம் கணக்கில் கொண்டால் அதுவும் இதுவும் tally ஆகிவிட்டது எனவே தமிழகம் அதில் 10 TMC வரை எடுத்துக்கொள்ளலாம் என்று காரணம் சொல்லி இருக்கிறார்கள் . ஆனால் ஒன்றை வசதியாக மறந்து விட்டார்கள்.வழக்கு கர்நாடகாவிலிருந்து எவ்வளவு நீர் தமிழகத்திற்கு வரவேண்டும் என்பதற்கு தானே தவிர தமிழகத்தின் நிலத்தடிநீர் பற்றியதல்ல அப்படியானால் கர்நாடக எல்லையிலும் நிலத்தடி நீர் இருக்குமே அதை ஏன் கணக்கில் கொள்ளவில்ல.
இந்த தீர்ப்பை கொஞ்சமும் சிந்திக்காமல் நாம் வரவேற்பது நம் தலையில் நாமே மலத்தை அள்ளி  போட்டுக்கொள்வதற்கு சமம் 
இதில் நமக்கு சாதகமாக எதுவுமே இல்லை .நம்மை ஏமாற்றிவிட்டார்கள்
இந்த தீர்ப்பின் ஒரே ஒரு அம்சத்தை அதாவது தமிழகத்திற்கு தரவேண்டிய நீரின் அளவை குறைப்பதைமட்டுமே கர்நாடகம் ஏற்றுக்கொள்ளும் இருந்தாலும் அதிலும் அவர்கள் குளறுபடி செய்வது தொடரும் அதற்கு மத்திய அரசும் துணை போகும.அதுதான் தேசியம் அதுதான் ஜனநாயகம் இன்னும் ஒரு வேடிக்கை என்னவென்றால் இப்படி ஒரு அநியாயம் நடக்கும் பட்சத்தில் பாதிக்கப்படக்கூடியது தமிழகம்தான் ஆனால் இதை எதிர்த்து எந்த கோர்ட்டிலும் மேல்முறையீடும் செய்ய முடியாது ஏனென்றால் தீர்ப்பில் அப்படித்தான் இருக்கிறது
அது மட்டுமல்ல 15 வருடம் வரை இந்த தீர்ப்பு அமலில் இருக்கும் அதுவரை தமிழகம் கருநாடகத்தையோ அல்லது மத்திய அரசையோ எதிர்த்து ஒரு மயிரையும் பிடுங்க முடியாது
சரி 15 வருடத்திற்கு பிறகு இந்த பிரச்சினையின் முடிவு என்ன ?தெரியாது தீர்ப்பில் எதுவும் சொல்லப்படவேயில்லை
ஆனால் 15 வருடங்களுக்கு பிறகு காவிரி தமிழகத்திற்கு தேவைப்படாது.அதை கர்நாடகமே முழுவதும் பயன்படுத்திக்கொள்ளட்டும்
ஏனென்றால் அதற்குள் தமிழகத்தில் குறிப்பாக காவிரி டெல்டா பகுதியில் பெட்ரோல் கிணறுகள்,எண்ணெய் குழாய் பாதிப்புகள்,ஹெலோஜன் திட்டம் நியூட்ரினோ திட்டம் என்று செயல்படுத்தி விவசாயத்தை பாழ்படுத்தி அந்த மண்ணை மலடாக்கி இனி காவிரிக்கு அங்கு அவசியம் இருக்காது என்ற நிலையை உருவாக்கிவிடுவோம் என்பது அந்த தீர்ப்பில் எழுதப்படாத வரிகள்
இது அப்பட்டமான பாசிசமா? அல்லது தேசியமா ?
இனி நம்மவர்கள் இதை எப்படி அணுகினார்கள் என்று பார்க்கவேண்டாம் ஏனென்றால் அது கன்றாவி மேலும் முடிந்து போன கதை.காவிரியை நமது மக்களின் மெத்தனமும் முன் சென்ற ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறைகளும்தான் இவ்வளவு பூதாகரமான பிரச்சினையாக ஆக்கிவைத்தது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை
இனி என்ன செய்யவேண்டும் என்று பார்க்கலாம்
வருகிற FEB 23 2018 ஆம் தேதி காவிரி சம்பந்தமாக ஒரு அணைத்து கட்சி கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார் முதல்வர் பழனிசாமி
கேட்க நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் இது எந்த அளவு பயன்தரும் என்று தெரியவில்லை
காரணம் திமுகவும் அதிமுகவும் எக்காலத்திலும் மாநில நன்மையை கருதி ஒருத்தருக்கொருவர் மனம்விட்டு கருத்துக்களை பரிமாறிக்கொண்டதுமில்லை விட்டுக்கொடுத்ததுமில்லை
அதனால் அவர்கள் குறுகிய நோக்கில் பலனைந்திருப்பார்களே தவிர தொலை நோக்கில் அவர்கள் எந்த பலனும் அடைந்ததில்லை அதில் அவர்களுக்கு அறிவுமில்லை அக்கறையுமில்லை
தொலை நோக்கு நன்மை என்பது மாநில உரிமைகளுடன் தங்களையும் முன்னேற்றி கொள்வது இதை மற்ற மாநிலங்களில் செய்கிறார்கள்
ஆனால் இந்த அறிவுஜீவிகளோ மாநில உரிமை மாநில நலன் என்பதெல்லாம் பின்னே முதலில் நான் என் ஆட்சி பதவி சுகங்கள் எனக்கு மட்டுமுள்ள  பொருளாதாரம் என் வீடு வாசல் இதற்காகத்தான் நான் அரசியலுக்கே வந்தேன் என்ற ரீதியில் செயல்பட்டு எல்லாவற்றையும் குட்டிச்சுவர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்
குட்டிச்சுவர்களுக்கு நடுவே என்ன செல்வசுகங்களில் மிதந்தாலும் அது உண்மையில் சுகம் அல்ல என்ற அறிவு கூட இங்கு ஆள்பவர்களிடம் இல்லை
அமெரிக்காவை குட்டிச்சுவர் ஆக்கிவிட்டு அதை ஆள்பவர்கள் மட்டும் தனித்தீவாக சுகப்படமுடியுமா.முடியாது எனவே அவர்கள் தன் நலனுடன் நாட்டு நலனையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.இதுதான் உலகின் எல்லா பகுதிகளிலும் ஏன் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் கூட இப்படித்தான்.
பக்கத்திலிருக்கும் கேரளாவை பாப்போம்
அவர்கள் கூறுகிறார்கள் நாங்கள் சினிமா தியேட்டர்களில் போய் முதல்வர்களை தேர்ந்தெடுக்கமாட்டோம் என்று எவ்வளவு எதார்த்தம் அவர்கள் சினிமாவை சினிமாவாகத்தான் பார்ப்பார்கள் அதில்வரும் ஹீரோக்களை ஹீரோ வொர்ஷிப் பண்ணுவதில்லை ஏனென்றால் மாநில நலன்
ஆந்திராவை பாருங்கள் ஒரு ஐந்து வருடம்தான் நடிகர் NTR இடம் ஆட்சியை தந்தார்கள் அதன் பிறகு கழட்டி விட்டார்கள் காரணம் மாநில நலன்
கர்நாடகாவை பாருங்கள் அங்கு ராஜ்குமார் இருந்தவரை அவர்தான் பெரிய ஹீரோ அதற்காக அவரை முதல்வராக்கினார்களா இல்லை காரணம் அதனால் மாநிலத்திற்கு என்ன நன்மை என்ற தொலை நோக்கு
சினிமா என்பது பொழுதுபோக்கு
ஆனால் அரசியல் நம் வாழ்வாதாரம்
அதில் சினிமா என்ற மாயையை புகுத்தலாமா கூடாது
ஆனால் அதில் நாம் தவறு செய்தோம் அதை அனுபவிக்கிறோம்
இப்போது இந்த சர்வகட்சி கூட்டத்தில் திமுக ஒத்துபோனாலும் அதிமுக ஒத்து வருமா என்பது சந்தேகம்தான்.
இந்த சந்தேகத்தையும்தாண்டி எல்லோரும் ஒத்த கருத்துக்கு வந்தால் அது நன்மைதான் ஆனால் அது அதிசயம்
முதலில் கூட்டம் தொடங்கும் முன்  முதல்வர் பழனிசாமி ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும் மற்ற கட்சிகள் அதிருப்தி அடைவது மாதிரி எந்த ஒரு கருத்தையும் தான்தோன்றித்தனமாக அவர் திணிக்க முயலக்கூடாது.ஒரு புத்திசாலி முதலில் மற்றவர்களை பேசவிட்டுதான் தான் பேசுவான் என்பது நினைவிருக்கட்டும்.திரு பழனிசாமி ஆட்சிக்கு முதல்வராக இருக்கலாம் ஆனாலும் மந்திரிதான் மன்னரல்ல என்பது கவனமிருக்கட்டும்
அத்தனை கட்சிகளும் தங்கள் உள்கருத்து வேறுபாடுகளை களைந்து மாநில நன்மை ஒன்றையே பிரதானமாக கொண்டு நல்ல முறையில் ஆலோசித்து ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும் என்று எதிர்பார்ப்போம்






வியாழன், 25 ஜனவரி, 2018

எங்கே ஜனநாயகம்

எங்கே ஜனநாயகம்

அதிமுகவின் அரிய முத்தாய்ப்பு சாதனையாக போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு 780 கோடி ரூபாய் பொங்கல் பரிசாக ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுவிட்டது.ஆனால் கஜானாவில் பணம் இல்லை அதை இலவசங்கள் எம்ஜியார் நூற்றாண்டுவிழா மஹாபலிபுரம் ரிசார்ட்டில் அடைபட்டு போட கூத்துக்ள்,MLA களின் சம்பள உயர்வு மற்றும் இதர செலவுகள் என்று மாநிலத்தின் அத்தியவசிய  நலன்களுக்காக செலவு பண்ணி தீர்ந்த்துபோய்விட்டது
எனவே இருக்கவே இருக்கிறது அட்சைய பாத்திரம் அதாவது மக்களின் பை அது எவ்வளவு அள்ளினாலும் தாங்கும் சும்மா ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கூத்தடிப்பார்கள் எதிர்க்கட்சிகளும் தூண்டி விடுவார்கள் கொஞ்ச நாள் அப்படிதான் இருக்கும் பிறகு வேறு வழியின்றி அமைதியாகி விடுவார்கள் எனவே உயர்த்து கட்டணத்தை அதுவும் அதிரடியாக இரவோடு இரவாக வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியாகி சனிக்கிழமை கட்டண உயர்வு அமல் படுத்தப்படுகிறது
இதையெல்லாம் பார்த்து இந்த  மக்களின் மீது அனுதாபப்படுவதா அல்லது ஆளும் வர்க்கத்தின் மீது கோபப்படுவதா அல்லது இரண்டுதரப்பினரையும் பார்த்து சிரிப்பதா அல்லது காறித்துப்புவதா என்றால் நான்காவதைத்தான் செய்யத்தோன்றுகிறது
ஆம் நம் மீது நாமே காறித்துப்பிக்கொள்ள வேண்டியதுதான்
இப்படிப்பட்ட ஆட்சியாளர்களை அவர்கள்தரும் இலவசங்களுக்கும் ரூபாய் நோட்டுகளுக்கும் ஆசைப்பட்டு அருமந்த ஓட்டு உரிமையை குறுகிய கண்ணோட்டத்துடன் விற்று தேர்ந்தெடுத்ததுதான் காரணம்
இந்த போக்குவரத்து மந்திரி திரு விஜயபாஸ்கரின் திமிருக்கு நாம்தான் நம்பிக்கை கொடுக்கிறோம்
எவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் செய்தாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்குதான்.ஏனென்றால் கஜானா காலி .பாத்திரத்தில் பண்டம் இல்லை போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்தே ஆக வேணும் எனவே இப்போதைக்கு இந்த உயர்வு தவிர இந்த அரசிற்கு வேறு வழி பற்றி சிந்திக்க தெரியவில்லை அல்லது மனம் இல்லை
ஒரு நல்ல அரசிற்கு எப்போதும் மக்கள் நலனே பிரதானமாக இருக்கும்
ஆனால் இப்போதைய ஆட்சியாளர்களும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இல்லை சமய சந்தர்ப்பங்களினால் பதவிக்கு வந்தவர்கள்
எவ்வளவுதான் தண்ணீர் ஊற்றினாலும் ஓட்டை பானை நிறையாது
அது மாதிரிதான் போக்குவரத்து துறையும்
அது சரியாக நிர்வகிக்கப்படவில்லை என்பதற்கு பெரிய ஆய்வு எல்லாம் தேவை இல்லை அதன் ஓட்டை உடைசல் பஸ்களே சாட்சி
மழை நேரங்களில் அந்த பஸ்களில் பயணம் செய்தாலே போதும் உட்காருவதற்கு ஒழுகலில் நனைந்த இருக்கைகள் நிற்பதற்கும் முடியாமல் எங்கும் ஓட்டைகளும் ஒழுகலும் .இத்தனைக்கும் சேரும் இடமும் வழியும் ஒன்றாக இருந்தாலும் தனியார் பஸ்ஸை விட  கட்டணம் அதிகம்
பெயருக்கு SFS என்றும் சொகுசு பஸ் என்றும் ஓட்டை உடைசல் டப்பாகளை பஸ்கள் என்ற பெயரில் ஓட்டி பகல் கொள்ளை அடிப்பு இதுமாதிரி இந்தியாவில் எந்த மாநிலத்திலும்  கிடையாது
கர்நாடகா ஆந்திரா கேரளா என்று எல்லா இடங்களிலும் நல்ல தரமான நிலையிலேயே பஸ்கள் ஓட்டப்படுகின்றன அதற்கு ஏற்றாற்போல் கட்டணங்களும் இருக்கின்றன
ஆனால் இங்கு பஸ்களின் தரத்தை உயர்த்தாமல் கட்டணங்களை மட்டும் சகட்டு மேனிக்கு உயர்த்துகிறார்கள்
போன முறை ஜெயலலிதா இரண்டு ரூபாய் கட்டணத்தை ஐந்து ரூபாய் மற்றும் ஏழு ரூபாயாக கொஞ்சமும் ஈவு இரக்கம் இல்லாமல் உயர்த்தினார் இப்போது அவரை தொடர்ந்து வந்தவர்கள் ஏழு ரூபாயை பத்து மற்றும் பதினைந்து ரூபாயாக உயர்த்துகிறார்கள்
இதற்க்கு மக்களின் மெத்தனமும் காரணம்
அன்றே இந்த ஆர்ப்பாட்டங்களை செய்திருக்க வேண்டும்
தமிழ்நாடு தம் உரிமைகளை பேணுவதில் அல்லது தமிழர்கள் தன்  நியாயமான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் அல்லது தன்  உரிமைகளை கேட்பதில் மற்ற மாநிலங்களை விட பின்தங்கியே இருக்கிறார்கள்
உதாரணமாக எழுபதுகளில் கல்கத்தாவில் ஓடும் டிராம் வண்டிகளில் முதல் வகுப்புவகுப்பு கட்டணம் 25 பைசா இரண்டாம் வகுப்பு கட்டணம் 20 பைசா.டிராம் போக்குவரத்துதான் இன்னமும் அங்கு பிரதான போக்குவரத்து இருப்பினும் அது நஷ்டத்திலேயே இயங்கி வந்தது எனவே அரசு அதன் கட்டணங்களை 5 பைசா உயர்த்துவது என அறிவித்தது உடனே ஆர்ப்பாட்டம் வெடித்தது டிராம்கள் மறிக்கப்பட்டன எனவே புத்திசாலியான அரசு உடனே உயர்வை வாபஸ் பெற்றது வாகனங்கள் சேதப்படாமல் தப்பின.இந்த உதாரணம் இப்போதைய நிலையில்  சற்று வித்தியாசமானதாக இருந்தாலும் மக்களின் விழிப்புணர்வு எவ்வளவு தூரம் உடனடியாக இருந்தது என்பதற்காகவே கூறினேன் வெறும் 5 பைசாவுக்கு அவர்கள் உடனடியாக காட்டிய விழிப்புணர்வு அவர்களை இதுமாதிரி துயரங்களில் இருந்து இப்போதும் காக்கிறது
ஒருமுறை சென்னை வந்த அப்போதைய பிரதமர் திரு மொரார்ஜி தேசாய் இனிமேல் மத்திய அரசின் நிர்வாக பழுவை குறைக்க யூனியன் பிரதேசங்களை அந்தந்த மாநிலங்களுடன் இணைக்கலாம் என்று நிருபர்களுக்கு வெறும் பேட்டிதான் கொடுத்தார் புதுச்சேரியில் உடனே கலவரம் வெடித்தது திரு மொரார்ஜி அவர்கள் அந்த திட்டத்தை கைவிட்டார்
இப்படி பல மாநிலங்களை சொல்லலாம் ஆனால் இங்கே தேவை இல்லாத விஷயங்களுக்கெல்லாம் கூப்பாடு போடுவதும் ஆர்ப்பாட்டம் பண்ணுவதுமாக நம் சக்திகளை நாம் வீணடித்துவிட்டோம் இப்போது தேவைக்கு போராட சக்தியில்லை
ஜல்லிக்கட்டுக்கும்  இந்தி எதிர்ப்புக்கும் காட்டிய வீரியத்தை இப்போது பார்க்க முடியவில்லையே ஏன்?
இப்போது போராடுவதும் போலீஸ் தடியடியால் கலைந்து போவதுமாகத்தானே இருக்கிறது
அன்று இந்தி எதிர்ப்பின் தீவிரத்திலும் ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற வீரியத்தில் தேவையில்லாமல் காயப்பட்டோமே பல உயிர்களையும் ஏதோ சுதந்திர போராட்ட தியாகிகளை போல் பலிகொடுத்தோமே என்ன பிரயோஜனம்?
ஜல்லிக்கட்டு வந்தது ஆறுகளில் நீர் வந்ததா ?பசுமை வந்ததா?ராக்கட் தளம் வந்ததா?காவிரி முல்லை பெரியார் பாலாறு என்று பிரச்சினைகள் தீர்ந்தனவா?
மாறாக இந்தி தடை இன்றி வந்தது .பண மதிப்பிழப்பு  என்ற துயரம் வந்தது.GST என்ற நெருக்கடி வந்தது இப்போது நியாயமில்லா பஸ் கட்டண உயர்வும் வந்து சேர்ந்திருக்கிறது
இதற்கெல்லாம் காரணம் ?
மக்களுக்கு தன் தேவைகள் தன் உரிமைகள் எவை என்று இன்னும் தெரியவில்லை
எதற்கு போராட வேண்டுமோ அதில் போராடுவதில்லை
எதற்கு தேவை இல்லையோ அதற்கு போராடி தனது மரியாதை கெளரவம்,சக்தி அத்தனையையும் விரயமாக்குகிறார்கள் குறிப்பாக தமிழகத்தில்
அதனால்தான் இப்போது காலம் கடந்து போராடும்போது அதற்கு எந்த மதிப்பும் இல்லை
அன்று ஜெயலலிதா Rs 2/-லிருந்து சகட்டு மேனிக்கு Rs7/-க்கு உயர்த்தினாரே அப்போது கொதித்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது
ஓட்டுக்கு பணம் தருகின்றோம் என்னும்போது அவர்களை புறக்கணித்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது
சினிமாக்காரர்களையும் வீரவசனகர்த்தாக்களையும் தமிழ், திராவிடம் என்று பேசி இந்தி எதிர்ப்புக்கு தூண்டி விட்டார்களே அவர்களையும்  அன்றே அலட்சியப்படுத்தி இருந்தால் இன்று தமிழ்நாடு ஜொலித்துக்கொண்டிருக்கும்
ஜனநாயகம் வெறும் கேலிக்கூத்து
இதில் ஜனங்களின் உணர்வுகளுக்கு மதிப்பில்லை
அதிகார வர்க்கம் மக்களை ஆட்டுவிக்கிறது
இந்த பஸ் கட்டணம் அநியாயமானது
ஏழை எளிய மக்களை வதைக்கக்கூடியது
யாரிடம் நீதி கேட்பது கோர்டிடம் தானே
ஆனால் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜட்ஜ் திருமதி இந்திரா பானர்ஜி இது சம்பந்தமாக போடப்பட்ட ஒரு வழக்கிற்கு அளித்த தீர்ப்பின் விசித்திரத்தை பாருங்கள் "பஸ் கட்டண உயர்வு நியாயமற்றதுதான்.இருப்பினும் இது அரசின் கொள்கை சம்பந்தப்பட்டது எனவே கோர்ட் இதில் தலையிடமுடியாது"என்று கை விரித்துவிட்டார்"
இதை விட கொடுமை என்ன இருக்கிறது
வன்முறையும் தீவிர வாதமும் தலைதூக்க இதுபோன்ற தீர்ப்புகளே காரணம்
மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு மக்களின் சிரமங்களை கோர்ட் கூட தீர்க்க முன்வருவதில்லை என்றால் எங்கே ஜனநாயகம்?

 

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

அழிவு நெருங்குகிறது

அழிவு நெருங்குகிறது


ஆண்டாள் பற்றி ஒரு பெரிய சர்ச்சை இப்போது கிளப்பிவிடப்பட்டிருக்கிறது கவிஞர் வைர முத்து தினமணி ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் ஆண்டாள் பற்றி  ஒரு சர்ச்சை குரிய  கருத்தை பதிவு செய்த்துவிட்டார்.இது சம்பந்தமாக சங்க் பரிவார்கள் வைரஃமுத்துவின் மீதும் தினமணி ஆசிரியர் மீதும் வழக்கு பதிவு செய்ததுடன் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் மிக மோசமான எதிர் கோஷங்களும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் பத்திரிகைகள் மூலமாகவும் கிளப்பிவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்
இதில் முன்னணியில் இருப்பவர் பிஜேபியை சேர்ந்த எச்.ராஜா இவர் வைர முத்துவின் மீது ஒற்றை படையில் திட்டி அறிக்கைகள் வெளியிடுகிறார் பேட்டியும் கொடுக்கிறார் வழக்கமாக முஸ்லிம்களையும் இவர் சீண்ட தயங்கவில்லை ஆனால் பிராமணரான திரு ஞாநி அவர்கள் இது பற்றி எவ்வளவு யதார்த்தமாக தன்  நிலைப்பாட்டை பதிவு செய்திருக்கிறார் என்பதே மேல்கண்ட வீடியோ
அருமையான ஒவ்வொருவரும் காண வேண்டிய பதிவு.இந்த பதிவிற்கு பிறகு அவர் உயிருடன் இல்லை என்பது ஒரு சோகம்
இந்த சர்ச்சையின் மூலம் ஒரு விஷயம் என்னவென்றால் ஆண்டாளை பற்றி தெரியாதவர்கள் எல்லாம் தெரிந்து கொண்டதுதான்
இத்தனைக்கும் திரு வைரமுத்து பெருந்தன்மையுடன் மன்னிப்பும் கேட்டு கொண்டார்
இப்போது விஷயம் என்ன வென்றால் ஆண்டாள் ஒரு தேவதாசி அல்லது தேவடியாள் குலப்பெண்மணி என்று ஒரு ஆங்கில நூலை மேற்கோள் காட்டி திரு வைரமுத்து பேசியதுதான்
இப்பொழுது நாம் கேட்பது மேற்கண்ட வார்த்தைகள் கெட்ட வார்த்தைகளா எச்.ராஜா பதில் சொல்லட்டும்
ஆம் என்றால் களங்கம் இல்லாத இந்த வார்த்தைகளை கெட்ட வார்த்தைகள் ஆக்கியது யார்?சந்தேகமே இல்லாமல் கோயில் பூஜாரிகளும்,தர்மகர்த்தாக்களும் கோயில் நிர்வாகிகளும்தான்
இறை சேவைக்காக தங்களை அர்பணித்துக்கொண்ட இளம் பெண்களை ஏய்த்து அவர்களை தங்கள் சுகபோகத்த்திற்காக  பயன்படுத்த்திக்கொண்டது அவர்கள்தான் மற்றபடி ஆதிகாலங்களில் இப்படி இறை சேவைக்காக ஆண்களும் பெண்களும்  தங்களை அர்ப்பணித்து கொண்டிருக்கிறார்கள்
அவர்கள் புனிதர்களாகவே கருதப்பட்டனர்
இப்படி ஒரு நிலையில் இருந்தவர்கள்தான் ஏசு அவர்களின் தாயார் புனித மேரி அவர்கள் அவர்களின் மீது யூதர்கள் களங்கம் கற்பிக்க முயன்றனர் ஆனால் இறைவன் அவற்றை மறுத்து வேதங்களில் அவர்களை புனிதவதி என்றே கூறுகிறான் என் தாய் களங்கமற்றவள் நான் அற்புதமாகவே என் தாயின் கருவறையில் உருவானேன் நான் தேவனின் தூதனாக இருக்கிறேன் என்று அன்று பிறந்த பச்சிளம் பாலகனாக புனித ஏசு இருக்கும் பொழுதே அவரை இறைவன் பேச வைத்தான் இந்த அற்புத செய்தி முஸ்லிம்களின் புனித நூலான குர் ஆனால் கூறப்பட்டிருக்கிறது
எனவே தேவதாசிகளும் தேவடியாள்களும் புனிதர்களாகவே ஆதி காலங்களில் இருந்திருக்கின்றனர்.அந்த வார்த்தைகளும் தவறான அர்த்தங்களை தரவில்லை
ஆண்டாள் தேவதாசி குலத்தில் பிறந்த நிலையில் குழந்தையாக பெரியாழ்வாரால் தத்தெடுக்கப்பட்டார் என்பது உண்மையானால் அக்கால கட்டங்களில் கல்யாணமாகி குழந்தை பெற்றெடுத்த நிலையில் கூட சில பெண்கள் தங்களை இறை பணிகளுக்காக அர்ப்பணித்து இருக்கிறார்கள் என்பது தெரிகிறது
இது ஒருபுறமிருக்க மேற்கண்ட வீடியோவில் திரு ஞாநி அவர்கள் ஆண்டாள் என்பதே பெரியாழ்வாரால் கற்பனையாக புனையப்பட்ட ஒரு பெயர்தான் என்றும் அந்த பெயரில் அவரே திருப்பாவை போன்ற பாடல்களை புனைந்தார் என்றும் திரு இராஜாஜி அவர்களின் ஒரு குறிப்பை மேற்கோள்காட்டுகிறார்
இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது இந்த ஆண்டாள் சர்ச்சையை கிளப்பிவிட்டவர்கள் வெறும் உரலைத்தான் இடிக்கிறார்கள் என்பது தெளிவு
இதை கிளப்புபவர்கள் அனைவரும் தமிழகத்தின் நலனில் அக்கறை இல்லாதவர்கள்.எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் பார்ப்பவர்கள்
 துட்டுக்கொடுத்தது ஓட்டு வாங்கி ஆட்சியை பிடித்தவர்கள் ஆட்சி என்ற பெயரில் அராஜகத்தை பஸ் கட்டணங்களை சகட்டு மேனிக்கு உயர்த்தி அரங்கேற்றிவிட்டார்கள்
இன்னொரு பக்கம் காவிரியில் கர்நாடகமும் மத்திய அரசும் செய்யும் துரோகம்
வேறொருபக்கம் முல்லை பெரியாறில் கேரளம் செய்யும் அக்கிரமம்
தமிழகத்திற்கு வரும் பெரும் பெரும் தொழிற்சாலைகளை எல்லாம் வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடும் கொடுமை காரணம் கமிஷன்
மீத்தேன் திட்டம் ஹைடிரோகார்பன் திட்டம் விளை நிலங்களில் வாயுக்குழாய்களை பதித்தல் .
இதையெல்லாம் விட்டுவிட்டு இப்போது ஒன்றும் இல்லாததற்கு சர்ச்சை
சாரி தமிழ் நாடு
உனக்கு அழிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது
 

சனி, 30 டிசம்பர், 2017

A VIDEO MYSTERY

ஒரு வீடியோ மர்மம் 

Seyed1951                        
ஜெயலலிதா பற்றிய ஒரு வீடியோவை டிடிவி தினகரன் அணியை சேர்ந்த வெற்றிவேல்  என்பவர் வெளியிட்டார்.வெறும் இருபது வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோவில் ஆஸ்பத்திகிரியில் இருந்த போது ஜெயலலிதா உயிருடன்தான் இருந்தார்.ஜூஸ்  குடித்தார் என்பது போல் வீடியோ காட்சி இருந்தது 
இந்த வீடியோ வெளியாகி பலரின் விமரிசனத்த்திற்கும் கண்டனங்களுக்கும் காரணமாகியது என்னவோ உண்மைதான்.வெளியிட்டவர்கள் நோக்கங்களில் அதுவும் ஒன்று.இந்தவகையில் அவர்கள் எதிர்பார்த்தது நடந்தாலும் அவர்கள் எதிர்பாராததும் நடந்தது அது ஜெயலலிதாவின் ஆஸ்பத்திரி மரணத்தின் மர்மம் பற்றிய சந்தேகத்தை அந்த வீடியோ மேலும் ஊர்ஜிதப்படுத்துகிற மாதிரி பல விமர்சனங்களும் எழுந்ததுதான்.இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை 
இந்த விமர்சனங்களை நீர்த்துப்போக செய்ய அவர்கள் ஒரு நாடகத்தை இப்போது அரங்கேற்றுகிறார்கள் 
அதாவது இந்த வீடியோவை  வெற்றிவேலின்  கையில் நான் கொடுக்கவில்லை அதை வெளியிடவும் நான் சொல்லவில்லை என்று தினகரன் அடிக்கும் பல்டி நாடகம் நம்பர் ஒன்று 
தன்னை கொலைகாரி என்று தூற்றும் போது கூட சசிகலா அதை வெளியிடவில்லை தினகரன் எப்படி வெளியிடலாம் என்று அதே குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ணபிரியா தினகரனுக்கு எதிராக கிளம்பி இருப்பது நாடகம் நம்பர் இரண்டு 
சசிகலா வீடியோ வெளியீட்டில் அதிருப்தியடைய அவரை சமாதானப்படுத்த தினகரன் பெங்களூர் சென்றது நாடகம் நம்பர் மூன்று.இதில் ஆர்கே நகர் தொகுதியில் தினகரனின் அபார வெற்றியினால் சசிகலா மகிழ்ச்சியடைந்ததது எடப்பாடி ஆட்சி கவிழ வேண்டும் என்று சசிகலா மெளன விரதம் இருப்பது எல்லாம் வேறு விஷயம் அதெல்லாம் தான் ஆடவில்லை என்றாலும் சதை ஆடும் என்பார்களே அது மாதிரி.தானியங்கி.Autunomic 
இப்படியெல்லாம் உட்பூசல் நாடகமாடி வீடியோ விலுள்ள பெரும் அபத்தங்களை மறைக்க நினைக்கிறார்கள் 
எனினும் அந்த வீடியோவின் அமைப்பு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது மாதிரி ஒரு கெட்ட நோக்கம் ஒரு விபரீதம் நடக்கவிருப்பதை சொல்லாமல் சொல்கிறது 
ஜெயலலிதாவை பிணமாகத்தான் ஆஸ்பத்திரியில் நாங்கள் அட்மிட் செய்தோம் என்று எங்கள் மீது அநியாயமாக பழி போட்டார்கள் இப்போது பார்த்தீங்களா பார்த்தீங்களா அம்மா ஆஸ்பத்திரியில் உயிரோடு இருந்து ஜூஸ் குடிப்பதை எனவே நாங்கள் அவரை ஒன்றும் செய்யவில்லை அதாவது எங்கப்பன் குதிருக்குள் இல்லை 
சரி இப்போது வீடியோவை ஆராய்வோம் 
இந்த வீடியோ அப்போல்லோவில்தான் எடுக்கப்பட்டதா? இது பற்றி அப்போல்லோ நிர்வாகம் கப்சிப் 
எனவே இந்த வீடியோ அப்பல்லோ நிர்வாகத்தின் அனுமதியுடன் எடுக்கப்படவில்லை 
இந்த வீடியோவில் ஜூஸ் குடிக்கும் அம்மா ஒரு ஒப்புக்கு கூட கேமராவுக்கு முகம் திருப்பவில்லை எனவே இது அம்மாவின் கவனத்திலும் எடுக்கப்படவில்லை.
ஒரு எதிர்பாராத தருணத்தில் வெறும் இருபது வினாடிகளில் அவர் ஜூஸ் குடிக்கும்போது ஏதோ  ஒரு கெட்ட காரியம் அரங்கேற்றத்தின் முத்தாய்ப்பாக இது எடுத்து முடிக்கப்பட்டு இருக்கிறது 
இதன் பிறகு வந்த நாட்களில் நடந்தவை என்ன என்ற கேள்வியைத்தான் இந்த வீடியோ அழுத்தமாக எழுப்புகிறது 
ஒரு பேச்சுக்கு இந்த வீடியோ ஜெயலலிதாவின் அந்த 75 நாட்கள் அப்பல்லோ மர்ம வாசத்தில் எதோ ஒரு இருபது வினாடிகளில் எடுக்கப்பட்டதென்றே வைத்துக்கொள்வோம் .இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது 
ஜெயலலிதாவை அட்மிட் செய்யும் போதிலிருந்து அந்த வீடியோவை எடுத்து முடியும்வரை உயிருடன் இருந்தார் இல்லை இல்லை உயிருடன் வைக்கப்பட்டார் என்று மட்டும் தெரிகிறது அதன் பிறகு என்னவெல்லாம் நடந்தது என்பது ஒரு கேள்வி 
அடுத்து செப்டெம்பர் 21,2016 வரை நன்றாக இருந்தவர் பொது காரியங்களில் பங்கேற்றவர் திடீரென்று செப்டெம்பர் 22,2016 இரவு வீடியோவில் கண்டமாதிரி  எப்படி நிலைகுலைத்தார் என்பதும் ஒரு கேள்வி 
சொல்லிவைத்த மாதிரி ஜெயலலிதாவின் வீட்டிலும் ஆஸ்பத்திரியிலும் அந்த 75 நாளும் சிசிடிவி கேமராக்கள் வேலைசெய்யவில்லையே ஏன் என்பது அடுத்த கேள்வி 
வெறும் ஏதோ ஒரு இருபது வினாடி வீடியோ எடுத்தவர்கள் உண்மையிலேயே அம்மாவின் மீதும் அவரை தேர்ந்தெடுத்த மக்களின் மீதும் அக்கறை பட்டிருந்தால் அந்த 75 நாட்களும் ஒவ்வொருநாளாக புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுத்து வெளியிட்டு இருக்கலாமே ஏன் செய்யவில்லை என்பது அடுத்த கேள்வி இப்படி பல கேள்விகள் 
எனவே இந்த வீடியோ அவர்களுக்கு எதிராகவே இருக்கிறது 
எட்டு நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்

திங்கள், 18 டிசம்பர், 2017

பய உணர்வும் செரிமானமும்

பய உணர்வும் செரிமானமும் 

நம்முடைய சில உணர்ச்சிகள் உதாரணமாக,பயம்,அதிர்ச்சி,பீதி,போன்ற உணர்வுகள் கூட நம்முடைய ஜீரணமண்டலத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.உதாரணமாக இந்த உணர்வுகளின்போது நம் இரத்தத்தில் அட்ரீனலின் சுரப்பு அதிகரிக்கிறது நமது தானியங்கி நரம்புகளின் முனையிலிருந்து ஜீரண மண்டல திசுக்களுக்கு நாரெட்ரீனலின் என்ற பொருள் சுரப்பு அதிகரிக்கும் 
இதன் விளைவு குடல் தசைகள் தளரும் குடலின் அசைவுகள் தளரும் வாயில் அதிக பசை தன்மையுள்ள உமிழ்நீர் சுரக்கும் ஜீரணமண்டலத்தை உட்சுவரில் படர்ந்திருக்கும் ம்யூஸின் என்ற பசை மேலும் கெட்டியாகும் 
இதனால் மலச்சிக்கல் உண்டாகும் உணவு சத்துக்கள் மற்றும் மருந்துகள் சரியாக வயிற்றிலும் குடலிலும் உறிஞ்சப்படாது Seyed1951

செவ்வாய், 12 டிசம்பர், 2017

சில முக்கிய மருத்துவ செய்தி துணுக்குகள்

சில முக்கிய மருத்துவ செய்தி துணுக்குகள் 

1.கேன்சருக்கு warfarin 

இரத்தம் சீராக ஓடுவதற்கும் இரத்தம் அங்கங்கே குழாய்க்குள் அடைத்து கொள்ளாமல் இருப்பதற்கும் பயனாகக்கூடிய WARFARIN இப்போது கேன்சர் செல்களை அழிப்பதற்கும் பயன் ஆகலாம் என்று ஓர் ஆய்வு கூறுகிறது

2.கிரியாட்டினின் 

கிரியாட்டினின் பற்றி ஒரு குறிப்பு.பொதுவாக இது உடலின் நைட்ரோஜன் கழிவுகளில் ஒன்றாகும் கிரியாட்டின் என்ற அமினோஅமிலம் உடலினால் பயன்படுத்தப்பட்ட பிறகு கிரியாட்டினின் என்ற கழிவாக மாறி சிறுநீரகம் மூலம் வெளியேற்றப்படும் சிறுநீரகத்தின் வேலைத்திறன் கிரியாட்டினின் வெளியேற்றத்திலிருந்து கணிக்கமுடியும் இதற்கு கிரியாட்டினின் கிளியரன்ஸ் என்பர்,இரத்தத்தில் பொதுவாக கிரியாட்டினின் அளவு 1.2 வரை இருக்கலாம் 
ஆனால் இப்போது ஒரு புதிய ஆய்வு கூறுகிறத்து.இரத்தத்தின் கிரியாட்டினின் அளவு அசாதாரண சூழலில் குறைவாக காணப்பட்டால் அதற்கு  வேறு சில பிரச்சினைகள் காரணமாக இருக்கலாமாம் 
உதாரணமாக ஈரல் கோளாறு,தசை பலவீனம் மற்றும் எடை குறைவு காரணமாக இருக்கலாம்.

3.இனிப்பு  பானம் 

வாரத்தில் இரண்டு இனிப்பு பானங்கள் அருந்தினால் போதும் அது உங்கள் இரத்தத்தில் அளவுக்கு மீறி சர்க்கரையை உயர்த்த காரணமாகிவிடும் 

4.டீன் ஏஜ் தாய்மை 

தி ஜர்னல் ஆப் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.அதாவது இளம் வயதிலேயே (teen age )தாய்மை அடைவது இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுவார்களாம் 

5.தோல் அரிப்பும் நீரிழிவு நோயும் 

எல்லா தோல் அரிப்புகளும் நீரிழிவின் காரணிகள் இல்லை எனினும் நிச்சயமாக நீரிழிவு நோய் கடுமையான தோல் அரிப்பை உண்டாக்கும் 
காரணம் உயந்த சர்க்கரை அளவு தோல் நரம்புகளை பாதிப்பு அடைய செய்யும் இப்படி செய்யும் போது தோல் அரிப்பு பொருட்களான cytokines அதிக அளவில் சுரந்து தோல் சிவத்தல் மற்றும் அரிப்பு ஆகியவற்றை உண்டாக்கும் 

6.ஆன்டிபயாட்டிக் கேடுகள் 

ஒரு சமீத்திய ஆய்வின்படி ஆண்டிபையாட்டிக்குகள் அதிகமாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கூறுகிறது.இதனால் கோலிஸ்டின் போன்ற சக்திமிக்க ஆண்டிபையாட்டிக்குகள் கூட வலுவிழந்துவிட்டதாக கூறுகிறார்கள் 

7.சோயா பீன்ஸும் புராஸ்டேட் கேன்சரும் 

ஒரு சமீபத்திய ஆய்வின்படி அதிக அளவு சோயாபீன்ஸ் பயன்படுத்துவதால் புராஸ்டேட் கேன்சர் வரும் வாய்ப்புகள் அதிகம்.காரணம் அதில் இருக்கும் ஐசோ பிளேவோன்ஸ் என்ற பொருட்கள்தான் காரணம்

8.வேக நடை 

அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வின் படி முதிய வயதுடைய பெண்களின் ஆயுள் வேகமாக நடத்தல் இன்னும் ஓரளவு கடினமான உடற்பயிற்சிகள் மூலம் அதிகரிக்குமாம் 

9.இரத்த ஓட்டமும் ஞாபக சக்தியும் 

வயது முதிர்ந்த நிலையில் இரத்த ஓட்டம் மூளைக்கு செல்வது மெதுவாக்குவதால் ஞாபக சக்தியும் குறைவதாக டென்னஸியிலுள்ள நாஷ்வில் நகரின் வாண்டபில்ட் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது 

10.தூக்கமின்மை 

டஸ்கலுசா நகரின் அலபாமா யூனிவர்சிட்டி மனோதத்துவ புரஃபஸர் கூறுகிறார் தூக்கமின்மையை விட அதுபற்றிய எண்ணம் மிக மோசமாக உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறதாம்

 


வெள்ளி, 17 நவம்பர், 2017

ஆல்கஹால் சில உண்மைகள்

ஆல்கஹால்-சில முக்கிய குறிப்புகள்

ஆல்கஹால் என்றாலே நமக்கு நினைவில் வருவது போதை தரும் பீர் ,பிராந்தி,விஸ்கி,ரம் ,ஜின் என்று மேல்நாட்டு மது வகைகளும் நாட்டு சரக்குகளான சாராயம் கள்ளு இவைகள்தான் ஆம் இவற்றில் இருக்கும் போதை பொருளான ஈதைல் ஆல்கஹால் பற்றி மட்டுமே நாம் இங்கு பார்க்கப்போகிறோம் 
ஆல்கஹாலில் ஆயிரம் வகைகள் இருந்தாலும் பொதுவாக ஈதைல் ஆல்கஹால் மட்டுமே சமூக நிகழ்வுகளிலும் இன்னும் பிற கொண்டாட்டங்களில் புழங்கப்படுகிறது .ஏனென்றால் இது மீத்தைல் ஆல்கஹால் போல் உடனடி விஷம் அல்ல அதோடு இது போதையுடன் சுவையாகவும் இருக்கும் 

மெட்டபாலிசம் 

ஆல்கஹால் அருந்தியவுடன் வயிற்றின் மூலம் 20% அளவு இது இரத்தத்த்தில் உறிஞ்சப்படுகிறது .மீதியில் 80% சிறுகுடல் மூலமாக இரத்தத்தில் உறிஞ்சப்படுகிறது.உடம்பினால் தன்மயமாகாத ஆல்கஹால் உமிழ்நீர் ,சிறுநீர்,மற்றும் வியர்வை மூலம் வெளியேறிவிடும் 
இரத்தத்தில் சேர்ந்த ஆல்கஹால் ஈரலில் தன்மயமாகிறது இந்த ஆக்ஸீகரண  கிரியையில் ஆல்கஹால் அசிடால்டிஹைடு என்ற விஷப்பொருளாக மாறி பிறகு உடனடியாக அசிடால்டிஹைடு மேலும் ஆக்ஸீகரணமாகி  ஆபத்தில்லாத அசிட்டிக் அமிலமாகி பிறகு அசிடேட் உப்புக்களாக சிறு நீரில் வெளியேறிவிடும்
பொதுவாக ஈரல் ஒரு அவுன்ஸ் ஆல்கஹாலை ஒரு மணி நேரத்தில் ஆக்ஸீகரணம் செய்துவிடும் 
ஆல்கஹாலின் போதை அது இரத்தத்தில் இருக்கும் போதும் திசுக்களில் சேரும் போதும் வெளிப்பட்டு விடும் 
ஆல்கஹால் அளவுக்கு அதிகமாக அதாவது  ஒருமணிநேரத்திற்குள் பத்து அவுன்ஸ் ஆல்கஹாலை ஒருவர் மொடாக்குடியாக குடிக்கும் பட்சத்தில் ஈரலின் ஆக்ஸிகரணிக்கும் தன்மை ஒழுங்கரு\ற்று தாறுமாறாக போய்விடும் இதனால் ஆல்கஹால் சரியாக ஈரலில் ஆக்சீகரணம் அடையாமல் உடலில் பல இடங்களில் தேங்கத்தொடங்கும் 
ஆல்கஹாலின் இரத்த அளவீடு BAC எனப்படும் அதாவது BLOOD ALCOHOLIC CONCENTRATION .
ஒருவரின் BAC அளவுக்கு மீறினால் கீழ்கண்ட தீமைகள் ஏற்படும் 
1.தள்ளாட்டம் 
2.நினைவு மாறாட்டம் 
3.உளறல் 
4.குழம்பிய மனநிலை 
5.கவனக்குறைவு 
6.மூச்சு திணறல் 
7.குமட்டல்,வாந்தி 
8.நிலையற்ற தளர்வு 
9.எரிச்சல் 

ஆல்கஹால் ஆக்ஸீகரணத்தில் தாக்கம் உண்டாக்கும் காரணிகள்

வயது 
முதுமை வயதில் ஆல்கஹாலை ஈரல் ஆக்ஸீகரணிக்கும் தன்மை குறையும் இதனால் ஆல்கஹால் ஈரலில் அதிகம் தேங்கும் 
இதற்கு காரணங்கள்  முதிய வயதில் இரத்த ஓட்டம் மெதுவாக இருப்பதாலும் முதியவர்கள் அதிகம் மருந்துகள் எடுத்து கொள்வதாலும்  இருக்கலாம் 
இதனால் உடலில் அதிக ஆல்கஹால் தேங்கும் வாய்ப்பு ஏற்படும் 

பாலினம் 

ஆண்களை விட பெண்களின் உடலில் ஆல்கஹால் அதிகம் தேங்கும் வாய்ப்பு உள்ளது இதன் காரணம் பெண்களின் உடலில் அதிக கொழுப்பு சத்து உள்ளது.இது எல்லா பெண்களுக்கும் பொருந்தாது என்றாலும் பெரும்பாலும் பெண்களின் உடம்பில் அதிகம் கொழுப்பு சத்து உள்ளது இது பெரும்பாலும் அவர்களிடம் அதிகம் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற பெண்மை ஹார்மோனினாலும் இருக்கலாம் 

உணவு   

ஆல்கஹால் வயிற்றின் மூலமாகவும் உறிஞ்சப்படுவதால் வெறும் வயிற்றைவிட உணவு நிறைந்த நிலையில் வயிறு அதனை உறிஞ்சுவதில் தாமதம் அல்லது குறைவு ஏற்படலாம் 

இனம்   

சில கிழக்கு ஆசிய இனங்களில் ஆல்கஹாலை ஆக்ஸீகாரணிக்க வைக்கும் ஹார்மோன்கள் குறைபாடு இருக்கலாம் இதனால் இவர்களுக்கு முகம் வீங்குதல்,குமட்டல்,சோர்வு தலைவலி உயர் இதய துடிப்பு போன்ற கோளாறுகள் ஏற்படலாம் 

பாரம்பரியம் 

ஜீன்களும் சூழ்நிலையும் சிலருக்கு பார்ப்பரியமாகவே ஆல்கஹாலை ஆக்ஸீகணிக்கும் தன்மையில் மாற்றங்கள் ஏற்படலாம் 

உடல் பருமன் 

பருமனான உடலுடையவர்களை விட மெலிந்த உடலுடையவர்கள் ஆல்கஹாலினால் அதிகம் தாக்கப்படுவர் 

ஆல்கஹால் ஆக்ஸீகரணத்தில் தாக்கம் உண்டாக்கும் மருந்துகள்      

1.தூக்க மருந்துகள் --diazepam 
2.மன உளைச்சல் மருத்துகள் --Amitriptyline 
3.ஆண்டிபையாட்டிக்குகள் 
4.அலர்ஜி மருந்துகள் 
5.நீரிழிவு நோய் நிவாரணிகள் 

ஆல்கஹால் உடலில் தங்கும் இடங்களும் நேரங்களும் 

1.இரத்தம் 

இரத்தத்தில் BAC யின் அளவைக்கொண்டு ஆல்கஹால் தங்கும் நேரத்தை அளவிடலாம் 
பொதுவாக இரத்தம் ஆல்கஹாலை ஒரு மணிக்கூறில் 0.015 மில்லி கிராம்  வெளியேற்றுகிறது இதனால் ஒருமனிதரின் இரத்தத்தில் BAC  0.08 மில்லி கிராம்  இருக்கும் பட்சத்தில் அதை வெளியேற்ற இரத்தம் ஆறு மணி நேரம் எடுத்து கொள்ளும்

2.சிறு நீர் 

சில ஆய்வுகளின் படி ஆல்கஹால் சிறு நீரில் 3 முதல் நான்கு நாட்கள் வரை இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது 

3.மயிர்

ஆல்கஹால் கடைசியாக அருந்தியத்திலிருந்து சுமார் மூன்று மாதங்கள் வரை முடியில் அது இருக்கும் என்று சரியான ஹேர் டெஸ்டுகள் மூலம் தெரிய வருகின்றது 

4.மூச்சு 

கடைசி பெக் மது அருந்தியத்திலிருந்து 24 மணி நேரம் வரை ஆல்கஹால் நம் மூச்சு காற்றில் இருக்கும் என்று அடிக்கொருமுறை எடுக்கும் Breathing Tests மூலம் அறியலாம் 

5.முலை பால் 

மது அருந்தியவுடன் ஆல்கஹால் எத்தனை மணி நேரம் இரத்தத்தில் இருக்கிறதோ அவ்வளவு நேரம் அது குழந்தை அருந்தும் முலை பாலிலும் இருக்கும்.இங்கு ஒன்றை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும் இரத்தம் ஆல்கஹாலை முழுவதும் வெளியேற்றிய உடன் முலை பாலிலிருந்தும்  அது வெளியேறிவிடும் . இது அனிச்சை செயல் என்பதால் தன்னிச்சையாக முலை பாலை வெளியேற்ற வேண்டிய அவசியமில்லை

உமிழ் நீர் 

கடைசி டோஸ் மது அருந்தியத்திலிருந்து 24 மணி நேரம் உமிழ் நீரில் சிறுக சிறுக ஆல்கஹால் தென்படும் 

நாட்பட்ட பெரும் குடியால் வரும் தீமைகள் 

1.வாய் புற்று 
2.தொண்டை புற்று 
3.முலை புற்று 
4.ஸ்ட்ரோக் 
5.இருதய கோளாறுகள் 
6.மூளை மற்றும் நரம்பு மண்டல கோளாறுகள் 
7.விபத்துகள் 
சுருக்கமாக 
1.ஆல்கஹால் வயிற்றிலிருந்து இரத்தத்திற்குள் உறிஞ்சப்படுகிறது எனவே காலி வயிற்றில் மது அருந்துவது கூடாது 
2.ஆல்கஹால் பெரும்பாலும் ஈரலில்தான் செரிமானம் அடைகிறது ஒரு மணிநேரத்தில் ஈரலால் 30 மில்லி வரை ஆல்கஹாலை எரிக்க முடியும் ஈரல் பாதிப்பு உள்ளவர்கள் கவனம் பகுதி எரிக்க பட்ட நிலையில் ஆல்கஹால் கொடிய விஷமான அசிட்டாலடிஹைடு  ஆக மாறிவிடும் இது உடனே மேலும் எரிக்கப்பட்டு ஆபத்தில்லாத அசிடேட் உப்புக்களாக மாற வில்லை என்றால் பெரும் தீங்கு ஏற்படும் 
3.மதுவின் போதை ஆல்கஹால் இரத்தத்திலும் திசுக்களில் இருக்கும் வரை நீடிக்கும் 
4.மது குடித்ததும் ஆல்கஹால் இரத்தம் வியர்வை,மூச்சு,சிறுநீர் முலைப்பால் இவற்றில் சேர்நது விடும்
    
       
 
  

வியாழன், 7 செப்டம்பர், 2017

 நீலத்திமிங்கலமும் வெள்ளை சுறாவும் 


நீலத்திமிங்கல விளையாட்டு பல சிறுவர்களை வாலிபர்களை  தற்கொலை செய்ய  தூண்டி சாகடித்த ஒரு விபரீத விளையாட்டு.பெரும்பாலும் 13 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளையே இது குறி வைக்கிறது.இதை விளையாட்டு என்பதை  விட இதை ஒரு கொலை பொறி என்றே சொல்லலாம்
இன்றைக்கு சமூக ஊடகங்களில் இது  பற்றிய செய்திகள் வராத நாளே கிடையாது 
இந்திய அரசு இதை தடை பண்ணி இருக்கிறது அதாவது ஏட்டளவில் ஏனென்றால் ஆன் லைன் விளையாட்டான இதை அவ்வளவு எளிதாக வலைதளத்தில் தடை பண்ண முடியவில்லை.
மற்ற வீடியோ கேம்களை போல் இது பதிவிறக்கம் செய்யப்படக்கூடிய செயலியாக இல்லை மாறாக இது ஆன் லைனில் வரக்கூடியதாக வித்தியாச வித்தியாசமான லிங்குகளையும் கொண்டிருப்பதால் இதை வலைத்தளத்திலிருந்து நீக்க முடியவில்லை 
ஆனால் இந்த பொறியில் அகப்படாமல் இருக்க வேண்டுமானால் வலைத்தளம் உபயோகிப்பவர்கள் அடிக்கடி வாட்ஸ் ஆப் ,முகநூல் ட்வீட்டர் மெஸ்ஸெஞ்சர்  ஈ மெயில் என்று மூழ்கிக்கிடப்பவர்கள் இந்த சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு அனுப்பப்படும் எந்த ஒரு அனாமதேய லிங்கையும் க்ளிக் செய்யவேண்டாம்  உடனே போலீசுக்கு தெரியப்படுத்துங்கள் பிறகு அதை டெலிட் செய்து விடுங்கள் 
இந்த கோர மரண தூண்டில் 50 நாள் சவால்களை கொண்டது 
ஒருநாளைக்கு ஒரு சவால்.விளையாட்டை துவங்குமுன் உங்கள் போட்டோ உட்பட உங்கள் முழு பயோடேட்டாவையும் கேட்டு பதிந்து கொள்வார்கள்
முதல் நான்கு நாட்கள் உங்களை பொறியில் சிக்க வைக்க மிக சுவாரஸ்யமான அட்வென்ச்சர் டாஸ்குகளை கொடுப்பார்கள் ஒவ்வொருநாளும் விளையாட்டின் நேரம் இரவு ஒரு மணிக்கு மேல்தான் 
நள்ளிரவுக்கு மேல் ஆன்லைனில் பேய் படங்கள் பார்க்க சொல்வார்கள் 
உயரமான இடத்தில் இருந்து த்ரில்லாக செல்பி எடுத்து அனுப்பச்சொல்வார்கள் 
இப்படி ஆரம்பித்து ஐந்தாவது நாள் விபரீதத்தின் துவக்கத்திற்கு வருவார்கள் 
உங்கள்  உடம்பில் ஏதோ ஒரு பகுதியை கத்தியால் கீறி அதை போட்டோ எடுத்து அனுப்பச்சொல்வார்கள் 
மேலும் உங்கள் கைகளில் கத்தியால் கீறி திமிங்கலத்தின் படத்தை வரைந்து படமெடுத்து அனுப்பச்சொல்வார்கள் 
இந்த விபரீத நிலைக்கு பிறகும் நீங்கள் இந்த விளையாட்டை தொடர்வீர்களானால் நீங்கள் ஒரு முட்டாள் தானே 
எனவே அவர்கள் ஐதீகப்படி நீங்கள் இந்த உலகத்திற்கு தேவையற்றவர் 
சாகடிக்கப்பட வேண்டியவர் 
எனவே படியாக உங்களை மூளை சலவை செய்து சாவதற்கு பண்படுத்தி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டாஸ்க்குகளாக கொடுத்து ஐம்பதாவது நாள் நீங்களே மீளமுடியாத அளவு தற்கொலை வெறி உச்சமடைய உங்களை சாகும்படி ஒரு கடைசி டாஸ்க் அனுப்ப  நீங்களும் செத்துவிடுவீர்கள் 
இதுதான் விளையாட்டு
இப்போது கதைக்கு வருவோம்
அதிசயமாக மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த விபரீதத்திற்கு எதிராக தாமாகவே முன்வந்து ஒரு வழக்கை பதிவு செய்து இந்த விபரீதத்தை விளையாடுவது குற்றம் என்றும் இதுபற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும் இதை தடை செய்ய வேண்டும் என்றும் காவல்துறையை பொறுப்பு சாட்டி தீர்ப்பளித்திருக்கிறார்கள் வரவேற்போம்.
அவர்கள் கூறியுள்ள காரணம் ஒருவரது மரணத்திற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காரணங்களை ஏற்படுத்துவது கொலைக்கு சமம்.அது குற்றமாகும் என்பதுதான்.முற்றிலும் சரி
அப்படியானால் 2016 நவம்பர்மாதம் 8 ஆம் நாள் ஒரே இரவில் திடீரென்று எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வெறும் ஆறுமணி நேர அவகாசத்திற்குள் பெரும் புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு நோட்டுகளை ரிசர்வ் பாங்க் மூலமாகக்கூட இல்லாமல் நிதியமைச்சர் வாய் மொழியாகவும் இல்லாமல் நான் பிரதமர் என்ற இறுமாப்பில் தான்தோன்றித்தனமாக செல்லாது என்று அறிவித்து விட்டு மறுநாள் சுகமாக ஜப்பான் பறந்து போனாரே அந்த விளையாட்டில் எத்தனையோ பேர் மாண்டார்களே அப்படியும் தான் செய்தது சரிதான் என்றும் மக்கள் மாண்டது சொற்ப இழப்புதான் அதைவிட பெரிய நன்மை நமக்கு கிடைத்திருக்கிறது என்று சால்ஜாப்பு காட்டுகிறார்களே  இது நீலத்திமிங்கலத்தைவிட கொடுமை இல்லையா ?
நீதிபதிகளே இவரை என்ன செய்யப்போகிறீர்கள் ?
நீலத்திமிங்கலத்தை தடை செய்யலாம் ஆனால் கூட இருந்தே குழிபறிக்கும் இந்த சுறாமீன் விளையாட்டை தடை செய்வீர்களா ?
இந்த சுறாமீன் இப்போது நீட் தேர்வு என்ற பெயரில் மாணவி அனிதாவை போல் இன்னும் எத்தனை இளம் உயிர்களை காவு கொள்ள வேண்டும்?
காவிரியில் இனி தண்ணீர் வராது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம் விவசாயிகள் எப்படி போராடினாலும் தமிழ்நாட்டு விவசாயிகளை நான் பார்க்க வரமாட்டேன் என்று மத்தியில் பிரதமரும் மாநில முதல்வரும் பாராமுகமாக இருந்து அவர்களை தற்கொலைக்கு தூண்டிவிட்டுக்கொண்டிருக்கும் இந்த வெள்ளை சுறாமீன் விளையாட்டை நீதிமன்றமே உனக்கு சுரணை இருந்தால் தாமாகவே முன்வந்து தட்டி கேட்க வரமாட்டீர்களா?
நெடுவாசலில் மீத்தேன் திட்டம் விவசாய பூமியில் எண்ணெய்  கிணறுகள் தோண்டும் திட்டம் என்று தமிழ்நாட்டையே ஆளும் வர்க்கம் நரகமாக்க விளையாடும் திட்டம் நீலத்திமிங்கலத்தைவிட கொடியது.
ஏ நீதிமன்றங்களே வாருங்கள் தாமாக முன்வந்து கேஸ் ஆடி எங்களை இந்த வெள்ளை சுறாக்களிடம் இருந்து காப்பாற்றுங்கள்
ஆனால் வர மாட்டீர்கள் கரணம் பொருள் ஆசை பதவி ஆசை
உங்களுக்கு நட்டமில்லாத காரியங்களில் தாமாகவே முன்வந்து கேஸ் ஆடி பெருமை பேசுவீர்கள்
மேலிடத்து சம்பந்தமான காரியங்கள் என்றால் முகம் பார்த்து தீர்ப்பு சொல்வீர்கள்
இல்லை கேஸை கிடப்பில் போட்டு இழுத்தடிப்பீர்கள்
ஆமாம் நீலத்திமிங்கலம் உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது
ஆனால் வெள்ளை சுறா மேலிடத்து சம்பந்தம் கொண்டது
புரிந்து கொள்ளுங்கள் மக்களே

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...