இந்த பகுதியில் மருத்துவம் மற்றும் மருந்தாளுமை சம்பந்தமாக சில ஆலோசனைகள் சொல்லப்பட்டாலும் வாசகர்கள் முக்கியமாக இதை ஒரு மேலோட்ட அறிவாகவே கொள்ளவேண்டுமே தவிர டாக்டரின் ஆலோசனையே இறுதியானது:-
அறிமுகம் :-
இந்த காலத்தில் மக்கள் மருத்துவத்திற்காகவும் மருந்துகளுக்காகவும் ஏராளமாக செலவு செய்கிறார்கள்.காரணம் எல்லோருக்கும் வாழ வேண்டும் சாவை தள்ளி வைக்கவேண்டும் என்ற ஆசை.ஆனால் பெரும்பாலும் ஏன் 90% அவர்கள் செலவு செய்ததற்கு எட்டில் ஒரு பலனைத்தான் அனுபவிக்கிறார்கள்
காரணம் மருத்துவ துறை இப்போதெல்லாம் பொருளாதார லாபத்தை மட்டுமே குறிக்கோளாக்கி கொண்டதுதான்.விதம் விதமான மருந்துகள் பற்றிய விளம்பரங்கள் கவர்ச்சிகரமான பேக்கிங்குகள்,வாசம் மனம் ருசியுள்ள தயாரிப்புகள் என்று மருந்து கம்பெனிகள் போட்டி போட்டுக்கொண்டு சந்தையில் இறங்கி இருக்கிறார்கள்.இவர்கள் எல்லோருக்கும் உங்கள் பையில் இருக்கும் பணம்தான் முக்கியமே தவிர உங்கள் ஆரோக்கியம் அல்ல என்பது மிக வேதனையான விஷயம்
இன்னொரு பக்கம் மருத்துவர்கள் கை தேர்ந்த வியாபாரிகளாகி விட்டார்கள்.ஒவ்வொருவரும் அரசாங்க ஆஸ்பத்திரியில் வேலை பார்த்துக்கொண்டு ஓய்ந்து போன நேரத்தையும் வீணாக்காமல் அதையும் பணமாக்க சொந்தமாகவே கிளினிக் வைத்து அதில் சொந்தமாக ஒரு மருந்தகம் வேறு வைத்து வசதியாகவே நம்மிடம் பணம் பிடுங்கி கொள்கிறார்கள்.இன்னும் மருந்து கம்பெனிகளுடன் ஒரு கள்ள தொடர்பு.வேறு.தங்களது கள்ள உறவுடைய அந்த குறிப்பிட்ட கம்பெனிகளின் தயாரிப்புகளை மட்டும் இவர்கள் மருந்து சீட்டில் தன் மருந்தகத்தில் வேலை பார்ப்பவர்கள் மட்டும் புரிந்து கொள்கிற மாதிரி எழுதுவார்கள்.ஆக மருந்தை நம் வசதி போல எங்கும் வாங்கலாம் என்ற உங்கள் சுதந்திரமும் பறிபோய் விட்டது.
விளம்பரங்களில் தங்கள் மருந்துகளின் நல்ல பாகத்தை மட்டும் குறிப்பிட்டு அதன் எதிர்விளைவுகளை மறைத்து பத்திரிகைகளிலும் நவீன விளம்பரதட்டிகளிலும் பரத்துகிறார்கள்.ஊழல் நிறைந்த இந்தியாவில் சுமார் 10 வருட காலம் காலாவதியான மருந்துகளை விற்றிருக்கிறார்கள் என்றால் என்ன கொடுமை இது
மக்களிலும் சிலர் தங்களது அசட்டுத்தனத்தால் மருத்துவ ஆலோசனை பெற விரும்பாமல் சுயமாகவே மருத்துவம் செய்யப்போய் இப்போது டாக்டர் சீட்டுக்கு மட்டுமே கிடைத்த மருந்துகள் எல்லாம் கல்லாவில் நேரடியாகவே கிடைக்க தொடக்கி விட்டன இன்னும் மருந்து கம்பெனிகள் ஆபத்தான மருந்துகளை கூட மிட்டாய் விளம்பரம் போல் பட்டி தொட்டி எல்லாம் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்.இதன் நோக்கம் என்ன ஒன்று அவர்கள் தாங்களாகவே தின்னட்டும் இல்லை டாக்டர்களிடம் போனால் இந்த மருந்தை அவர்களிடம் அறிமுகம் செய்யட்டும் என்பதுதான்.
அட்லாண்டாவை சேர்ந்த எமோரி பல்கலைகழக ஆய்வாளர்கள் OTC அதாவது பார்மஸி கவுண்டரில் டாக்டர் சீட்டு இல்லாமல் வாங்கும் வலிநிவாரணிகள் பற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள் அவர்களது ஆய்வில் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்த வயிற்றில் இரத்தப்போக்கு மற்றும் அல்சர் நோயாளிகளில் சுமார் 56%பேர் வலிநிவாரண NSAID வகையை சேர்ந்த ஆஸ்பிரின் brufen போன்ற மாத்திரைகளை தங்கள் இஷ்டத்திற்க்கும் வாங்கி விழுங்கியவர்கள் ஆவர் என்று அறிந்தனர் .Dr.James Fries என்பவர் ஒரு நிபுணர் .இவரின் ஆய்வுப்படி இந்த NSAID வலிநிவாரணிகள் அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு வருடமும் சுமார் 70000 பேர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்புகின்றன அதில் சுமார் 7000 பேர் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.அதே சமயம் போதை மருந்துகளான கோகைன்,ஹிரோயின்,மரிஜுவானா,LSD இவற்றினால் வருடத்தில் சாகிரவரின் எண்ணிக்கை வெறும் 3562 பேராகவே இருக்கிறது (Courtesy-People's Pharmacy,by Graedon Enterprises Inc.1996.Revised Edition).
இன்னும் முக்கியமாக டாக்டர்கள் கோழி கிறுக்குவது மாதிரி மருந்து சீட்டுகளை தருவது அதில் லத்தீன் மொழியில் b.i .d (தினசரி இரண்டு வேளை )என்று எழுதுவது.உண்மையில் இது சர்வதேசக்குற்றமாகும் .இதற்காக அமெரிக்காவில் சாதரணமாக போலீசில் புகார் செய்யலாம்.டாக்டர் சீட்டுகளில் எல்லோருக்கும் புரியும் படியே எழுத வேண்டும்
இன்னும் விளம்பரங்கள் ஆபத்தான இரத்த அழுத்தம் இதய நோய் மருந்துகள் கூட எதோ மிட்டாய் விளம்பரங்கள் மாதிரி பட்டி தொட்டிகள் வாராந்தர நாலாந்தர பத்திரிகைகள் என்று பரத்தப்படுகின்றன.ஜாக்கிரதை விளம்பரத்தில் வருகிறதென்று நீங்களாகவே வாங்கி தின்று விடாதீர்கள்.
எலுமிச்சம்பழம்
"ஒரு கிளாஸ் வெந்நீரில் சூடாக்கிய எலுமிச்சைத் துண்டுகள் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களைக் காப்பாற்றும்" என்று பெய்ஜிங் இராணுவ மருத்துவமனையின் தலைமை நிர்வாகி பேராசிரியர் சென் ஹொரின் கூறுகிறார்.
நீங்கள் பிஸியாக இருந்தாலும், இந்த செய்தியைப் பார்த்து மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டும்!
சூடான எலுமிச்சை புற்றுநோய் செல்களை அழிக்கும்!"
எலுமிச்சையை மூன்று துண்டுகளாக வெட்டி ஒரு கோப்பையில் வைக்கவும், பிறகு சூடான நீரை ஊற்றவும், அது (கார நீர்) மாறும், ஒவ்வொரு நாளும் குடிப்பது நிச்சயமாக அனைவருக்கும் பயனளிக்கும்.
சூடான எலுமிச்சை ஒரு புற்றுநோய் எதிர்ப்பு மருந்தை வெளியிடலாம்.
சூடான எலுமிச்சை சாறு புற்றுநோய் கட்டிகள் மீது ஒரு தாக்கத்தைக் கொண்டிருக்கிறது
இது அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் சிகிச்சையாகும் .
இந்த சாறுடன் சிகிச்சையளிப்பது வீரியம் மிக்க புற்று செல்களை மட்டுமே அழிக்கும் மற்றும் ஆரோக்கியமான செல்களை பாதிக்காது.
எலுமிச்சை சாற்றில் உள்ள அமிலங்கள் மற்றும் மோனோகார்பாக்சிலிக் அமிலம் உயர் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதோடு குறுகிய தமனிகளைப் பாதுகாக்கவும், இரத்த ஓட்டத்தை சரிசெய்யவும் மற்றும் இரத்த உறைதலைக் குறைக்கவும் முடியும்.
பாலுடன் இருமல் மருந்து சேர்க்கலாமா ?
பாலுடன் இருமல் மருந்து கலந்து சாப்பிட்டதில் நான்கு குழந்தைகள் இறந்தன என்ற சமூக வலைத்தளங்களில் பரவிய செய்தி மிகவும் பொய்யான தகவல் ஆகும்.
பொதுவாக பெரும்பாலான வீரியமுள்ள மருந்துகளை பாலுடன் சாப்பிட்டால் அதன் வீரியம் மட்டுப்படுத்தப்படலாம் அல்லது பாதுகாப்பாகக்கூட அமையலாம். ஆனால் சூடான பாலுடனோ அல்லது வேறு எந்த பானத்துடனுமோ சேர்த்து சாப்பிடும்போது அந்த மருந்தின் பலன் சிதைந்து போகலாம் அல்லது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால் உடனடி மரணத்தை ஏற்படுத்தும் அளவு விஷமாக மாறாது என்பது நிச்சயம்.
பூஞ்சை காளானும் அயோடினும்
உங்கள் உடம்பில் எந்த இடங்களிலும் காளான் தொற்று ஏற்படலாம். மிக முக்கியமாக பாதங்களிலுள்ள விரல் இடுக்குகளில் மிக சாதாரணமாக இது ஏற்படும். காரணம் தேங்கிக்கிடக்கும் மழை நீர், குளம் குட்டைகளில் பாதங்கள் நனைவதால் இது உண்டாகிறது.
தொற்று ஏற்பட்ட இடத்தில குத்துவது போன்று வலி இருக்கும்.
வீக்கம் ஏற்படும்
நகம் ஒழுங்கற்று வளரும்
சிகிச்சை
1.தொற்று உண்டாகிய இடத்தை ஈரம் படாமல் உலர்ந்த நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்
2.தினசரி போவிடோன் அயோடினை களிம்பாகவோ அல்லது திரவமாகவோ பயன்படுத்திக்கொள்ளலாம்
பார்க்கின்சன் நோய் Vs பார்கின்சனிசம்
பார்கின்சனிசம் பார்க்கின்சன் நோய் இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி அறிகுறிகளை காட்டினாலும் இரண்டுமே வேறு வேறு காரணங்களினால் வருவது
பார்க்கின்சன் நோய் அடிக்கடி மன உளைச்சல் மனச்சோர்வு போன்றவற்றால் அடிமூளையிலுள்ள நரம்பு செல்கள் பாதிக்கப்பட்டு டோபமைன் குறைபாடு ஏற்படுவது
இது படிப்படியாகவே உண்டாகும்
டோப்பமின் செல்களில் சேதம் பெரும்பாலும் நிரந்தரமாக இருப்பதால்
இந்த நோய் முற்றிலும் குணமாவது சிரமம்.
லீவோடோப்பா+கார்பிடோப்பா கூட்டு ,செலேஜிலின் மற்றும் ரஸாஜிலின் போன்ற MAO -முடக்கிகள் மிகச்சிறந்த சிகிச்சை ஆகும்
இது பெரும்பாலும் வயதானவர்களையே தாக்குகிறது.
பார்க்கின்சனிசம் :-இந்த நோய் எந்த வயதிலும் ஏற்படலாம்.இந்த நிலை உடனடியாக உண்டாகும்
தலையில் அடிபடுதல் ,மனவெறி தணிப்பான்கள் போன்ற டோப்பமின் எதிர்ப்பான்கள், தூக்க மாத்திரைகள், ஆல்கஹாலிசம் போன்ற காரணங்களினால் டோப்பமின் குறைபாடு அல்லது டோப்பமின் பலஹீனம் ஏற்பட்டு இந்த நிலை உண்டாவது
அறுவை சிகிச்சை,ஆழ் நரம்பு தூண்டுதல்,டோப்பமின் தூண்டிகள்
நச்சு பொருள்களை விலக்குதல் மூலம் இந்த நிலையை மாற்ற முடியும்.
லீவோடோப்பா சிகிச்சை இதற்கு பலன் தராது.
மனச்சோர்வை இயற்கை வழியில் தீர்க்க:-
டிரிப்டோபான் (TRYPTOPHAN) அதிகமுள்ள கீழ்கண்டவைகளை உங்கள் உணவுடன் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள் :
1.ஆடையுடன் கூடிய பால்
2.சூறை மீன் (TUNA)
3.கோழி,வான்கோழி இறைச்சி
4.ஓட்ஸ்
5.பருப்புகள் (NUTS)-நிலக்கடலை
6.கொட்டைகள் (SEEDS)
7.சீஸ் கட்டி
8.முழு ரொட்டி (WHOLE BREAD)
உங்கள் மூளையில் திருப்தியும் உற்சாகமும் அமைதியும் தரக்கூடிய செரட்டோனின் என்ற ஹார்மோன் இந்த டிரிப்டோபேனிலிருந்துதான் உருவாகிறது.
MAOI மருந்துகளுடன் சாப்பிடக்கூடாத உணவுகள்
தைராமின் (TYRAMINE) அதிகமுள்ள உணவுகளான
1.பால்கட்டி (CHEESE)
2.கோழி ஈரல்
3.பீர்
4.சிவப்பு ஒயின்
இந்த உணவுகளை MAOI மருந்துகளுடன் எடுத்துக்கொண்டால் மிகவும் ஆபத்தான உயர் இரத்த அழுத்த நெருக்கடி (HYPERTENSIVE CRISIS) நிலை உண்டாகும்.அதன் அறிகுறிகள்,
1.தீவிர மார்வலி
2.தீவிர தலைவலி ,குழப்பம்,பார்வை மங்குதல்
3.குமட்டல் வாந்தி
4.கடும் மனஉளைச்சல்
5.மூச்சுத்திணறல்
6.வலிப்பு
7.உணர்ச்சியற்றுப்போதல். எதிலும் பதிலளிக்க இயலாமை
MAOI மருந்துகள் ,எவை என்பதை கீழே உள்ள அட்டவணையில் காணவும்
SSRI மருந்துகளும் MAOI மருந்துகளும் மேலே வகைப்படுத்தப்பட்ட மருந்துகள் அனைத்துமே மனச்சோர்வுக்கு கொடுக்கப்படும் மருந்துகளாகும்.
இந்த மருந்துகளை சாப்பிடுபவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.
உதாரணமாக SSRI மருந்துகளை சாப்பிடுபவர் கவனக்குறைவாக வேறு ஒரு டாக்டர் பரிந்துரைத்தார் என்பதற்காக MAOI மருந்துகளை சேர்த்து சாப்பிடக்கூடாது. அந்த புதிய டாக்டரிடம் நீங்கள் ஏற்கனவே SSRI மருந்துகள் சாப்பிடுவதை தெரியப்படுத்தவேண்டும். டாக்டர்களும் கவனமாக நோயாளியின் கடந்தகால மருந்துகள் உபயோகத்தைப்பற்றி விசாரிக்கவேண்டும்.
அதேபோல் MAOI மருந்துகள் உபயோகிப்பவர் அத்துடன் SSRI மருந்துகளை உபயோகிக்கக்கூடாது.
அப்படி உபயோகித்தால் மிகவும் ஆபத்தான செரோடோனின் நோய்க்குறி (SEROTONIN SYNDROME) உண்டாகும். அதன் அறிகுறிகள்,
1.உடல் உஷ்ணம் உயர்தல்.
2.சதை இறுக்கம்
3.MYOCLONUS வலிப்பு
4.மன பாதிப்புகள்.
தூக்க மாத்திரைகளும் நம் ஆரோக்கியமும்
தூக்க மருந்துகளை பற்றிய எச்சரிக்கைகளை டாக்டர்கள் உட்பட மருத்துவ மற்றும் மருந்தாளுமை துறையில் உள்ள நிபுணர்கள் அனைவரும் நோயாளிகளுக்கும் பொது மக்களுக்கும் செய்ய வேண்டும். அதுதான் நியாயமும் தர்மமும் மட்டுமல்ல மனிதாபிமானமும் கூட.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (FDA) 2012 இல் எடுக்கப்பட்ட ஒருகணக்கெடுப்பின் படி அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு சுமார் 500,000 பேர் தூக்க மருந்துக்கு பலியாகிறார்கள் என்று கண்டிருக்கிறார்கள் . இந்த கணக்கெடுப்பில் தற்கொலை செய்பவர்கள் சேர்க்கப்படவில்லை. தூக்கமாத்திரை தினமும் எடுக்கவில்லை என்றால் எனக்கு தூக்கமே வருவதில்லை என்று அதற்கு அடிமையானவர்களுடைய மரணக்கணக்கு மட்டுமே அதில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
ஒரு ஆய்வின் படி தூக்க மாத்திரை தொடர்ந்து சாப்பிடுவதால் அதுவே தூக்கமின்மை நோய் (INSOMNIA) உண்டாக காரணமாகிறதென்று தெரிய வந்திருக்கிறது. இதனால் டாக்டரின் ஆலோசனை இல்லாமல் தான்தோன்றித்தனமாகவே மருந்தின் அளவை கூட்டுகிறார்கள். அது இன்னும் பலசிக்கல்களை உண்டாக்குகிறது.
பாராசோம்னியா (parasomnia) என்பது ஒரு மோசமான தூக்க வியாதி ஆகும். தூக்கமாத்திரைகளை துஷ்பிரயோகம் பண்ணுபவர்களுக்கும் இது வருகிறது. இதன் அறிகுறிகள்
1.குழப்பத்துடனும் நிலையற்ற தன்மையுடனும் தூக்கத்திலிருந்து விழித்தல்
2.விழித்ததும் எந்த இடத்திலிருக்கிறோம் என்று திகைப்படைதல்.சொந்த வீட்டிலிருந்தாலும் அந்நியமாக உணர்தல். வியப்படைதல்.
3.தன் உணர்வில்லாமலே காரியங்கள் செய்தல். வாகனம் ஓட்டுதல்.சமையல் செய்தல் போன்றவை.
4.உடம்பில் அசாதாரணமான காயங்களையும் அடையாளங்களையும் காணுதல்
5.இரவில் தூங்கமுடியாமை,பகலில் தூங்கி வழிதல் போன்ற இரண்டுங்கெட்டான் நிலைமை
இன்னும் சோம்னாம்புலன்ஸ் (Somnambulance) என்ற தூக்கத்தில் நடக்க கூடிய வியாதியும் அடிக்கடி தூக்க மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு வரும்.
தூக்க மாத்திரையினால் வரும் தூக்கம் ஒரு கெட்ட தூக்கமாகும். இந்த கெட்ட தூக்கத்தை தூங்கி விழித்தவுடன் நீங்களே உணர்வீர்கள். அடித்துப்போட்ட மாதிரி அப்படி ஒரு அசதி இருக்கும். தலைவலி வரும் . மலம் இறுகி மலச்சிக்கல் உண்டாகும். அதுவே நாளடைவில் உங்களை ஒரு நோயாளி போல் ஆக்கிவிடும் உங்களுக்கு சுறுசுறுப்பே இருக்காது. இன்னும் கண் மங்கல், தலைசுற்றல், குமட்டல், கைநடுக்கம், பலஹீனம் இவையும் உண்டாகும். இவை அனைத்தும் கோலினெர்ஜிக் எதிர்ப்பு பின்விளைவுகளாகும். இது பற்றி இன்னும் தெளிவாக பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.
தூக்க மாத்திரை பழக்கம் நாளடைவில் போதையாக மாறி உங்களை அடிமைப்படுத்தக்கூடும். அப்படி அடிமையாகும் பட்சத்தில் மாத்திரை இல்லை என்றால் உங்களுக்கு சாதாரணமாக வரும் தூக்கம் கூட வராது.
தூக்கமருந்துகள் உங்கள் நரம்புகளை எப்படி தாக்குகிறது என்பதை கீழேயுள்ள படங்களின் மூலம் மேலிட்டாற்போல் விளக்கலாம்
மேலே படம்-1 இல் எடுத்து காட்டாக காட்டப்பட்டு இருப்பது சாதாரணமாக ஒரு நரம்பின் இயக்கமாகும். மேலிருந்து கீழாக முதலில் நிலை-1 இல் காட்டப்பட்டு இருப்பது ஒரு நரம்பின் சமநிலை (Neutral) அமைப்பாகும். இதில் சோடியம் அயனிகள் நரம்பு செல்லுக்கு வெளியேயும் பொட்டாசியம் அயனிகள் உள்ளேயும் இருக்கும். இரண்டு பக்கமும் குளோரைடு அயனிகள் இருக்கும். பொதுவாகவே சோடியம் அயனிகள் (Na +) பொட்டாசியம் (K+) அயனிகளை விட சக்தியுள்ள நேர்மின் (POSITIVE or +-ve) அயனிகளாகும். அதே சமயம் குளோரைடு (Cl-) அயனிகள் சக்தியுள்ள எதிர்மின் (NEGATIVE or --ve) அயனிகளாகும். எனவே இந்த சமநிலையில் நரம்பு செல்லுக்கு வெளியே நேர்மின் சக்தி மிகைத்தும் (➕)
![]() |
படம்-1 |
செல்லுக்கு உள்ளே அது தளர்த்தும் (➕) அல்லது எதிர்மின் சக்தி மிகைத்தும் (➖) இருக்கும்.
மத்திய நரம்பு மண்டலத்தில் கீழ்கண்ட ஹார்மோன்கள் நரம்பு தூண்டிகளாக இருக்கின்றன. அவை,
1)நார் அட்ரீனலின்,
2)டோப்பமின்,
3)அசிடைல்கோலின்,
4)க்ளூட்டமேட் மற்றும் 5)
அஸ்பார்டேட் ஆகியவை.
இந்த ஹார்மோன்களில் ஏதாவது ஒன்று அதன் ஏற்பியை (Receptor) சேரும்போது நரம்பு செல்லில் உள்ளும் புறமுமாக அயனிகள் அதன் வாசல்கள் வழியே பாயத்துவங்குகின்றன. அதாவது சோடியம் அயனிகள் உள்ளேயும் பொட்டாசியம் அயனிகள் வெளியேயும் பாய்ந்து நரம்பு செல்லை துடிக்க தயாராக்குகின்றன.இந்நிலையில் செல்லுக்கு உள்ளே நேர்மின் சக்தி மிகைத்தும் (➕) வெளியே எதிர் மின் சக்தி மிகைத்தும் இருக்கும். இந்நிலைக்கு செல் மின்முனை மாற்றம் (Cell Depolarization)என்று பெயர்.(படம்-1-நிலை-2)
மேலே உள்ள படம்-2, படம் -1 இன் மறு நிலை ஆகும். அதாவது சாதாரண நிலையில் நரம்பு செல்லின் வெளியே நேர்மின் சக்தியும் உள்ளே எதிர்மின் சக்தியும் ஒரு சமநிலையில் இருக்கும் என்பதையும் நரம்பு தூண்டி ஹார்மோன்களின் தூண்டுதலால் இந்த நிலை தலைகீழாக மாறி நரம்பு இயங்கும் என்பதை மேலே உள்ள படம்-1 இன் விளக்கத்தில் நாம் பார்த்தோம்.
படம்-2 இல் இனி இதே மத்திய நரம்பு மண்டலத்தில் சுரக்கும் நரம்பு ஒடுக்கி அல்லது அடக்கும் ஹார்மோன்களின் தாக்குதல்களை பார்க்கலாம்.
மத்திய நரம்பு மண்டலத்தில் சுரக்கும் நரம்பு ஒடுக்கி ஹார்மோன்கள் பின்வருமாறு:-
1.காபா - காமா அமினோ பியூட்டரிக் அமிலம் (GABA -GAMMA AMINO BUTYRIC ACID)
2.கிளைசின் (GLYCINE)
3.செரட்டோனின் (SEROTONIN)
இவற்றில் மிக முக்கியமானது காபா வாகும். சாதாரண தூக்கநிலையில் காபாவானது அதன் ஏற்பியில் (Receptor) சாதாரணமாக பொருந்தும் பொழுது ஓரளவு குளோரைடு அயனிகள் நரம்பு செல்களின் உள்ளே இறங்கி நரம்பை சாதாரண மின் முனைப்பு நிலைக்கு கொண்டு வரும். (படம்-2-நிலை-2) இது இயற்கையான தூக்க நிலை.
தூக்க மருந்து சாப்பிட்டபின் உதாரணமாக ஆல்ப்ரஜோலம் (Alprozolam -Alprax ,Diazepam and others) மற்றும் இதர இந்த வகையைச் (Benzodiazepins) சேர்ந்த டையாஜிப்பம், க்ளோர்டையாஜிப்பாக்சைடு என்று எந்த தூக்க மருந்தானாலும் நரம்பு செல்லில் அதன் ஏற்பியில் பொருந்தும் பொழுது அதை அடுத்துள்ள காபா ஏற்பியில் காபாவை மிக இறுக்கமாய் பொருந்த வைக்கும்.(படம்-2-நிலை-3). இப்பொழுது செல்லின் உள்ளே குளோரைடு அயனிகள் மிக உக்கிரமாக பாய்ந்து நரம்பு செல்லை உச்சநிலை நரம்பு மின் முனைப்பாக்கத்திற்கு கொண்டுபோகிறது.(படம்-2-நிலை-3).இது நரம்பை கழுத்தை நெரித்து வாயை பொத்தி மயங்க வைப்பதற்குச் சமமாகும். எனவே தான் தூக்க மாத்திரையால் வரும் தூக்கம் ஒரு மயக்க நிலையே தவிர உண்மையான தூக்கம் அல்ல.
இது அளவு மீறினால் இறப்பு கூட சம்பவிக்கும். இதை அடிக்கடி சாப்பிடுவதால் உங்கள் நரம்பு மண்டலம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து போகும். நரம்புத்தளர்ச்சி உண்டாகும். நாளடைவில் நீங்களே ஒரு நோயாளி போல் ஆகி விடுவீர்கள்
தூக்கமருந்து சாப்பிடக்கூடாதவர்கள்:-
1.வழக்கமாக பிராந்தி, விஸ்கி போன்ற ஆல்கஹால் பானங்களை அருந்தும் குடிகாரர்கள்
2.கஞ்சா, அபின், கோக்கைன், ஹெராயின் போன்ற போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள்
3.பெர்பெனஜின், ஹெலோபெரிடால் (Haldol) , டிராபெரிடால்,குளோசப்பின்(Clozaril),ரிஸ்பிரிடோன் (Risperdal) மற்றும் திக்குவாய் மருந்தான குளோர்ப்ரோமஜின் (Largactil ) போன்ற சைக்கோ மருந்துகள் சாப்பிடுபவர்கள் .
தூக்கமாத்திரை பழக்கத்தை எப்படி விடுவது ?
தினசரி 10மிகி சாப்பிடுபவர்கள் அதை 5 மி.கி ஆகவும் ,தினசரி 5 மி.கி.சாப்பிடுபவர்கள் அதை 2 மி.கி ஆகவும் ,தினசரி 2 மி.கி. சாப்பிடுபவர்கள் அதை ஒரு நாள் விட்டு அல்லது இரண்டு நாளைக்கு ஒரு முறை என்று குறைத்து பிறகு வாரம் ஒரு முறை ,மாதம் ஒரு முறை என்று ஆக்கி பிறகு ஒரேயடியாக அந்த பழக்கத்தை கைவிடவும்
தூக்கத்திற்கு மெலட்டோனின் சாப்பிடுவது நல்லதா?
இது பற்றி விளக்கமாக காண இங்கு க்ளிக் செய்யவும்
இருமல் மருந்துகள்-கவனம்
இந்த மழை காலத்தில் இருமல் தும்மல் சளித்தொல்லை என்பது சாதாரணமான விஷயங்கள்.அதனால்தான் பார்மசிகளில் குளிர் காலம்,மழைக்காலங்களில் இருமல் மருந்துகளை வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்வார்கள்.அது அவர்களுடைய வியாபாரம். அது பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் மருந்துக்கடைகளில் போய் நமக்கு தேவையான மருந்தை தான் வாங்குகிறோமா என்று அறிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம்.அதற்கு ஓரளவாவது மருந்து சம்பந்தமான அறிவு நமக்கு வேண்டும்.
இந்த பதிவு இருமலுக்கு டாக்டர் சீட்டு இல்லாமல் மருந்து வாங்குபவர்களுக்கு.
இருமல்களில் பலவகைகள் இருந்தாலும் நாம் முக்கியமாக தெரிந்து கொள்ளவேண்டியவைகளை கீழே வகைப்படுத்தி இருக்கின்றேன் .
நீங்கள் இருமல் மருந்துகளை டாக்டர் சீட்டு இல்லாமல் பார்மசியில் வாங்கும் பொழுது அங்கு மருந்தாளுனர் பெரும்பாலும் இருக்கமாட்டார். விற்பனையாளர்கள்தான் இருப்பர். அவர்களுக்கு அனுபவ அறிவுதான் இருக்குமே தவிர ஆழமான மருந்தியல் அறிவு இருக்காது. அவர்கள் அனுபவத்தில் தரும் மருந்து சில நேரங்களில் உங்களுக்கு பொருந்தி வராமல் போகலாம். எனவே நீங்கள் தான் தீர்மானிக்கவும் வேண்டும்.பொறுப்பேற்கவும் வேண்டும்.
உங்களுக்கு வறட்டு இருமல் இருக்கும் பட்சத்தில் சளி இருமலுக்கான மருந்தை சாப்பிடுவது அர்த்தமற்றது.அதுபோல் சளி இருமல் இருக்கும் பட்சத்தில் வறட்டு இருமலுக்கான மருந்தை சாப்பிடுவதும் பிரயோஜனம் தராது.
எனவே எப்படி இவற்றை இனம் பிரிப்பது என்று பார்க்கலாம்
வறட்டு இருமல் :-
நெஞ்சில் கபமோ சளியோ இல்லாமல் தேவையற்ற வறட்டு இருமல் உங்களுக்கு தொல்லை தருமானால் அதற்கு காரணம் ஒவ்வாமை என்ற அலர்ஜி ஆகும். சில சமயம் உயர் இரத்த அழுத்தத்திற்காக சாப்பிடக்கூடிய ACEI என்ற நொதி முடக்கிகள் (இவற்றை ...pril மருந்துகள் என்றும் சொல்வார்கள் (உம்) Captopril ,Enalapril ) சாப்பிடுவதாலும் வறட்டு இருமல் வரலாம். இதுபற்றி தனியாக பார்க்கலாம் .
அலர்ஜிக்கு காரணம் நம் உடல் சில ஒவ்வாத காரியங்களுக்கு ஆளாக்கப்படும்பொழுது தன் வெறுப்பை சில அறிகுறிகள் மூலம் வெளிப்படுத்துகிறது. அதற்கு உதவுவது நம் உடம்பில் சுரக்கும் ஹிஸ்டமின் என்ற பொருளாகும். எனவே அலர்ஜி இருமலுக்கு மருந்து வாங்கும் பொழுது அதில் கீழ்கண்ட ஹிஸ்டமின் எதிர்ப்பான்கள் (Antihistamines) இருக்கிறதா என்று பார்த்து வாங்கவேண்டும்.
1.டைப்பேன்ஹைட்ராமின் ஹைட்ரொக்ளோரைடு (Diphenhydramine Hydrochloride )
2 குளோர்பெனிராமின் மாலியேட் (Chlorpheniramine Maleate)
3.ட்ரிப்ரோலிடின் (Triprolidine)
4.டாக்ஸைலமின் (Doxylamine)
5.ப்ரோமெலைன் (Bromelain ) -அன்னாசிப்பழம் (Pineapple)
இந்த ஹிஸ்டமின் எதிர்ப்பான்கள் அனைத்துமே Bromelain ஐ தவிர) மயக்கத்தையும் சோர்வையும் உண்டாக்கக்கூடியவை ஆகும். எனவே இவற்றை மிக கவனமாக எடுத்துக்கொள்ளவேண்டும் . இதை இரவிலும் பகலிலும் தூங்கப்போகும் முன் எடுத்துக்கொள்வது நல்லது. மற்ற நேரங்களில் இதை எடுத்துக்கொள்ளும் நிர்பந்தம் இருந்தால் மட்டும் இதை சாப்பிட்டதும் ஒரு மணி நேர ஓய்வுக்கு பின் வேலையில் ஈடுபடுங்கள்.
Bromelain இயற்கையாக அன்னாசிப்பழம் போன்றவற்றிலிருந்து பெறப்படுவதால் அது கிரக்கமோ மயக்கமோ உண்டாக்காது .
ஒரு 2010 ஆய்வின்படி அன்னாசிப்பழம்,மற்றும் அதன் சாறு ஆகியவற்றில் தேன் கலந்து பருகுவதால் காசநோய், சளி மற்றும் வறட்டு இருமல் போன்றவை கட்டுப்படுவதாக கண்டறிந்து இருக்கிறார்கள்.
அன்னாசிபழத்திலிருக்கும் Bromelain ஹிஸ்டமின் (அலர்ஜி) எதிர்ப்பானாகவும் ,சளி இளக்கியாகவும் வேலை செய்வதால் அன்னாசிபழமும் அதன் சாறும் தொண்டைக்கமறல்,வறட்டு இருமல் கப இருமல் மற்றும் காச நோய் ஆகியவற்றிற்கு மிக நன்மை தருவதாக கண்டிருக்கிறார்கள்.
அன்னாசிப்பழ ஜூஸில் இரண்டு மேஜைக்கரண்டி தேன்கலந்து இருமலுக்கு மருந்தாகவும் அதே நேரம் இனிய பானமாகவும் அருந்தலாம். பக்கவிளைவுகள் கிடையாது
வறட்டு இருமலுக்கு Cough Suppressant கீழ்கண்ட இருமல் அடக்கிகளையும் பயன்படுத்தலாம். அவை அபின் வகை (Opium alkaloids)இருமல் அடக்கிகளாகும்.
1.கோடீன் பாஸ்பேட் (Codein phosphate)
2.ஹைட்ரொகோடோன் (Hydrocodon)
3.ஹைட்ரொமார்பொன் (Hydromorphone)
4.டெக்ஸ்ட்ரோமேதார்ப்பேன் (Dextrometharphane)-இது ஒரு செயற்கை அபின் மருந்தாகும் (Synthetic Opioid)-இது சேர்க்கப்பட்ட மருந்து பாக்கின் மேல் DM என்று போட்டிருப்பார்கள்
மேலே கூறப்பட்ட இருமல் அடக்கிகள் அனைத்துமே கிரக்கத்தையும் மயக்கத்தையும் உண்டாக்குபவை ஆகும். எனவே அவற்றை கவனமாக கையாளவும். டிரைவிங், சமையல் வேலைகள் உயரமான கட்டிட வேலைகள் இவற்றை ஒரு மணி நேரமாவது தவிர்த்துக்கொள்ளவேண்டும்.
Captopril, Enalapril போன்ற pril .... மருந்துகளால் இருமல் ஏற்பட்டால் டாக்டரின் ஆலோசனையுடன் மருந்தை தொடராமல் மாற்றிக்கொள்வது நல்லது
கப இருமலில் கபம் வெறும் உமிழ்நீராக இருந்தால் அது அலர்ஜி இருமலாகத்தான் இருக்கும். அதற்கு மேலே கண்ட அலர்ஜி மருந்துகளோ அல்லது இருமல் அடக்கிகளோ போதும்.
ஆனால் சளி இருமலாக இருந்தால் அது கிருமிகளால் உண்டாக்கியதாகத்தான் இருக்கும். அதற்கு மேலே கண்ட எந்த மருந்துகளையும் எடுத்துக்கொள்ள கூடாது.
இந்த சளி இருமல் சளியை தொண்டையிலிருந்து வெளியேற்றி சுத்தப்படுத்துவதற்காகவே உண்டாகிறது.எனவே இதை அடக்குவது நல்லதல்ல. அதற்கு கீழ்காணும் சளி இளக்கிகள் (Expectorants) சேர்ந்த மருந்துகளைத்தான் சாப்பிட வேண்டும்.நீங்கள் கடையில் சளி இருமலுக்கு மருந்து வாங்கும் பொழுது அதன் பாக்கின் மேல் எழுதப்பட்ட பார்முலாவில் கீழ்கண்ட மருந்துகளில் ஏதாவது ஒன்று இருக்கிறதா என்று கவனித்து வாங்கவும்.
1.அம்மோனியம் குளோரைடு (Ammonium chloride )
2.குவாபெனசின் (Guaifenasin)
3.ஆம்பராக்சோல் (Ambroxol)
4.புரோமோஹெக்சின் (Bromohexin)
5.அசிட்டைல்சிஸ்டின் (Acetylcysteine)
மேலே சொல்லப்பட்ட இந்த சளி இளக்கிகள் எதுவும் கிரக்கத்தையோ அல்லது மயக்கத்தையோ உண்டாக்காது எனினும் மருந்துகள் என்றாலே பொதுவாக கவனமாக இருப்பது நல்லது.
மூச்சுக்குழாய் விரிவாக்கிகள் (Bronchodilators)
இந்த வகை மருந்துகள் பொதுவாக ஆஸ்துமா அல்லது இளைப்பு (Wheezing) போன்ற சுகக்குறைவுகளினால் அவதிப்படுபவர்கள் உபயோகிக்கக்கூடியது . இந்த நோயாளிகள் இருமல் மருந்துகள் வாங்கும் பொழுது அதன் புட்டியின் மேல் குறிப்பிடப்பட்டிருக்கும் பார்முலாவில் கீழ்கண்ட மருந்துகளில் ஏதாவது ஒன்று இருக்கிறதா என்று கவனித்து வாங்கவும்
1.டெர்புடலின் (Terbutalin)
2.சால்புட்டாமல்(Salbutamol)
3.சால்மேட்டரல் (Salmeterol)
4.போர்மோட்டரால் (Formoterol)
5.இப்ராட்ரோபியம் (Ipratropium)
6.டையோட்ரோபியம் (Tiotropium)
7.தியோபில்லின் (Thiophyllin)
ஆஸ்துமா உடையவர்களுக்கு சளி இருந்தால் சளிக்குண்டான மருந்துகளுடன் மேற்கூறிய மூசுக்குழாய் விரிவாக்கிகளில் ஏதேனும் ஒன்று இருக்கிறதா என்று பார்க்கவும்.
சளி இல்லை வெறும் வறட்டு இருமலும் இளைப்பும் தான் இருக்கிறது என்றால் மேற்கூறிய மூச்சுக்குழாய் விரிவாக்கிகளுடன் ஏதாவதொரு ஹிஸ்டமின் எதிர்ப்பானோ அல்லது இருமல் அடக்கியோ இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும் .
ஆஸ்துமா பொதுவாக மூச்சுக்குழாயின் உட்பகுதியில் ஏற்படும் எரிவு (Inflammation) நிலையால் உண்டாவது. ஆரம்பத்தில் உண்டாகும் இந்த எரிவு நிலை படிப்படியாக முற்றி மூச்சுக்குழாயை நெருக்கி இறுக்கி இளைப்பை உண்டாக்கும். வீக்கம் கூட ஏற்படலாம். கிருமித்தொற்றும் ஏற்படலாம் சளியும் உண்டாகலாம்.
ஆஸ்துமாவுக்கு பொதுவாக கீழ்கண்ட கார்டிகோஸ்டெராய்டுகள் கலந்த சால்புட்டமால் அல்லது வேறு ஏதாவது மூச்சுக்குழாய் விரிவாக்கிகள் கலந்த மூச்சு உறிஞ்சிகள் பயன்தரும்:-
1.பெக்லோமெத்தசோன் (Beclomethasone)
2.ப்ளுடிகசோன் (Fluticasone)
ப்ரெட்னிசோலோன் மாத்திரைகளும் ஆஸ்துமாவிற்கு மிகவும் நன்று எனினும் டாக்டரிடம் கலந்தாலோசிப்பது மிகவும் நன்று.
ஆனால் ஆஸ்துமாவுடன் கிருமித்தொற்றும் சளியும் இருந்தால் கண்டிப்பாக டாக்டரின் ஆலோசனை இல்லாமல் ஸ்டெராய்டு மாத்திரைகளை சாப்பிடக்கூடாது.
மனச்சோர்வுக்கான மருந்துகளை (Anti-Deppressants) சாப்பிடுபவர்களின் கவனத்திற்கு :-
மனச்சோர்வு (Deppression),மனஅழுத்தம் (Anxiety), மற்றும் கவலை (Sarrow) என்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகாதவர்கள் ஆண்டவனைத் தவிர வேறு யாரும் இருக்கமுடியாது. இறைவன் ஒருவனுக்குத்தான் எந்த பிரச்சினைகளும் இல்லை. ஏனென்றால் எல்லாம் அவன் செயல். எல்லாம் அவனுக்கே சொந்தம்.
எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்ளுதல், கிடைத்ததை வைத்து திருப்திகொள்ளுதல் என்ற மனோநிலை யாரிடம் இருக்கிறதோ அவருக்கு துக்கமுமில்லை பயமும் இல்லை.
ஆனால் இந்த அவசர உலகில் யதார்த்தம் வேறாக இருக்கிறது. தாயும் பிள்ளையுமாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறாக இருப்பதால் ஒருவரை ஒருவர் மிஞ்சத்தான் பார்க்கிறார்கள்.
எனவே எல்லா குடும்பங்களிலும் மன அழுத்தம்,\மனச்சோர்வு என்று உணர்ச்சிவசப்பட்டு அல்லலுறுகிறோம்
ஒரு அறிஞர் சொன்னார், எவரொருவர் உணர்ச்சிகளுக்கு வசப்படுகிறாரோ அவர் வாழ்வில் தோல்வியடைந்தார்.
எவர் உணச்சிகளை தன் வசப்படுத்திக்கொண்டாரோ அவர் வாழ்வில் வெற்றி அடைந்தார்.
எனவே மனக்கவலைக்கும் மனச்சோர்வுக்கு மருந்து நம் மன இச்சைகளை கட்டுப்படுத்துவதிலேயே இருக்கிறது
ஆனால் டாக்டர்களை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறார்கள். என்னமோ டாக்டர்கள் எல்லாம் பெரிய ஆபத்பாந்தவர் என்ற நினைப்பு. மருந்துகள் எல்லாம் சஞ்ஜீவிகள் அல்ல.
உடலில் கோளாறு என்றால் மருந்து சாப்பிடலாம். மனக்கோளாறுக்கும் மருந்து வேண்டும் என்றால் இந்த கார்போரேட்டுகளின் பிடியில் இருக்கும் மருத்துவ விஞ்ஞானமும் மருந்தியல் கம்பெனிகளும் வேறு என்னதான் செய்வார்கள். உங்கள் மனக்கோளாறு அவர்களுக்கு அடித்த லாட்டரி.
சைக்கியாட்ரி, சைக்கியாட்ரிக் மருந்துகள் என்றெல்லாம் மருத்துவப்படிப்பில் பல கவர்ச்சிகரமான பெயர்களில் பிரிவுகளை உண்டாக்கி ஆய்வுகள் மேற்கொண்டு மருந்துகளை சந்தைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். இனி அவைகளை சுருக்கமாக பாப்போம்.
நோய் -மனஅழுத்தம் அல்லது கவலை (Anxiety)
இந்த நோய்க்கான காரணி -இது பற்றி அவர்கள் ஆராய்ந்ததில் மத்திய நரம்பு மண்டலத்தில் காமா அமினோ பியூட்டரிக் அமிலம் (Gama Amino Butyric Acid சுருக்கமாக -GABA) என்ற நரம்பு ஒடுக்கி ஹார்மோன் சரியான அளவில் சுரக்காமல் இருக்கலாம் அல்லது அப்படியே சுரந்தாலும் சரியான முறையில் அதன் ஏற்பியில் (Receptor) ஏற்கப்படாமல் இருக்கலாம். இதனால் தூக்கமின்மை அமைதியின்மை நிம்மதியின்மை ஏற்படும் . வாழ்க்கையில் இவர் செய்த தவறுகளுக்காக நிம்மதியை தொலைத்திருப்பார். அந்த தவறுகளை திருத்திக்கொண்டாலே போதும்.நிம்மதி வந்துவிடும். GABA வும் சரியாகிவிடும். ஆனாலும் டாக்டரிடம் போகிறார். காரணம் மனோஇச்சைகளுக்கு அடிமை. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. என் மனோஇச்சைகளை நான் விடமாட்டேன். என் தவறுகளை நான் திருத்தமாட்டேன். ஆனாலும் நான் தூங்கி எழும்ப வேண்டும். விளைவு தூக்கமாத்திரைக்கு அடிமை.
டாக்டர் என்ன செய்வார். இந்தாருங்கள் தூக்கமாத்திரைக்கான சீட்டு. தொடர்ந்து சாப்பிடுங்கள் நானும் தொடர்ந்து எழுதித்தருகிறேன். தொடர்ந்து தூங்குங்கள். உங்களுக்கு தேவை தூக்கம். எனக்கு (டாக்டருக்கு) தேவை துட்டு.
தூக்க மருந்துகள் :-(Sleeping Pills -Anxiolytics)
1.பார்பிச்சுயூரேட் உப்புகள் (BARBITURATES)-இவை லூமினால், கார்டினால் என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். இவற்றில் இருக்கும் மருந்தின் பெயர் பீனோபார்பிட்டால் (Phenobarbital) ஆகும்
நெம்புட்டால் ( Pentobarbital) இந்த மாத்திரையை விழுங்கித்தான் அழகு தேவதை நடிகை மார்லின் மன்றோ தற்கொலை செய்துகொண்டார். இன்னும் அமோபார்பிட்டால் (Amobarbital), தயோபெண்டால் (Thiopental) ஏராளமாக இந்த குழுவில் இருக்கின்றன. இவை தூக்கமின்மை, வலிப்பு போன்றவற்றுக்காக டாக்டர்களால் சிபாரிசு செய்யப்பட்டன
பார்பிச்சுரேட் வகை மருந்துகளை அதன் கடுமையான பின்விளைவுகளின் காரணமாக இப்போது டாக்டர்கள் அதிகமாக எழுதுவதில்லை. கொஞ்சம் கவனக்குறைவாக கூடுதலாக எடுத்துக்கொண்டாலும் மூச்சை நிறுத்தி உடனடி மரணத்தை ஏற்படுத்த கூடியவை இவை.
2.அடுத்தது Benzodiazepins (பென்ஸோடியாஸப்பின்ஸ்) என்ற வகையை சேர்ந்த தூக்க மருந்துகள்.
சாதாரணமாக இவற்றைத்தான் டாக்டர்கள் இப்பொது சீட்டில் எழுதிக்கொடுக்கிறார்கள்
இவற்றில் எல்லோருக்கும் தெரிந்த பெயர்கள் இரண்டு.அவை ,
1.alprazolam (ஆல்ப்ரசோலம்)
2.diazepam (டையாசிப்பம்).
இன்னும் இந்த வகையில் chlordiazepoxide, Flurazepam, clonazepam என்று ஏராளமாக இருந்தாலும் மக்களுக்கு பழக்கமான, தெரிந்த பெயர்கள்தான் அந்த இரண்டும். பெயர்களை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு டாக்டரின் சீட்டு இல்லாமலே இதை சஞ்சீவிகளாக எண்ணி வாங்கி விழுங்கி கொண்டு இருக்கிறார்கள் சிலர்.
3.அடுத்தது மனவெறி (Psychosis) பிடித்தவர்கள் அடங்குவதற்கு உண்டான மருந்துகள் இவற்றை Antipsychotic மருந்துகள் என்றும் சொல்லலாம்.இவை
1).Largactil -லார்கக்ட்டில் (Chlorpromazine)-திக்குவாய் மருந்து
2).Anatensol -அன்டென்சல் (Fluphenazine)-மனவெறி (Schezophrenia)
3)Haldol -ஹால்டல் -(Haloperidol) -மனவெறி
4.Sizodon -சைசோடோன் (Risperidon)-மனவெறி
இந்த மனவெறி ஏற்படுகிறது என்றால் மூளை நரம்பு மண்டல முடிச்சுகளிலிருந்து நரம்பு ஊக்க ஹார்மோன்களான நார் அட்ரீனலின் (Noradreenalin), அசிடைல்கோலின் (Acetylcholin), டோப்பமின் (Dopamin) போன்றவற்றின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக டோப்பமின் ஆதிக்கம் கூடுதலாக இருக்கும். இந்த நிலைக்கு டோப்பமின் வெறி என்றே கூறலாம்.
இந்த டோப்பமின் வெறியை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.
முதல் வகையில் நோயாளி ஆர்ப்பாட்டம் பண்ணுவார். கையில் கிடைத்ததையெல்லாம் வீசி உடைப்பார் இதற்கு நேர்மறை ஸ்கீஸோபெர்னியா (Positive schezophrenia) என்பர்.
இரண்டாம் வகையில் நோயாளி சமூகத்தை விட்டு ஒதுங்கி இருப்பார். அமைதியாகவே இருந்தாலும் உள்ளத்தின் வெறியை சந்தர்ப்பம் வரும்போது தீர்த்துக்கொள்வார்.கொலையும் செய்வார். இதற்கு எதிர்மறை ஸ்கீஸோபெர்னியா (Negative Schezophrenia) என்பர். இந்த வகை மிகவும் ஆபத்தானது. பெரும்பாலும் சீரியல் கில்லர் சைக்கோக்கள் இப்படித்தான் இருப்பார்கள். ஆல்பிரெட் ஹிட்ச்காக் என்ற திகில் பட இயக்குனர் எடுத்த சைக்கோ,மற்றும் Frenzy போன்ற திரைப்படங்கள் இந்த மனோநிலையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டவைதான்.
இன்னும் ஏராளமான மருந்துகள் இந்த பிரிவில் இருக்கின்றன. இவை மத்திய நரம்பு மண்டலத்தின் டோப்பமின் என்ற ஹார்மோனை முடக்குகின்றன. அதோடு நாரெட்ரீனலின் செரோடோனின் போன்ற நரம்பு ஊக்க ஹார்மோன்களையும் முடக்குகின்றன .
4..அடுத்தது மனச்சோர்வுக்கான மருந்துகள் (antideppressants)
இவையும் மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்க கூடியவையே. அதாவது எப்போதும் சோர்ந்து போய் எதிலுமே பிடிப்பு இல்லாமல் சமூகத்தை விட்டு விலகி தூங்கு மூஞ்சிகளாக சோம்பிப்போய் இருப்பவர்களுக்கு இந்த மருந்துகள். இந்த மருந்துகள் ஏராளமாக இருந்தால் கூட பெயர்களை மட்டும் இங்கே குறிப்பிடலாம்.
இந்த மருந்துகளும் மத்திய நரம்பு மண்டலத்தின் ஊக்க ஹார்மோன்களான நாரெட்ரீனலின் ,செரோடோனின் போன்ற ஹார்மோன்களை மேலும் ஊக்கடுத்தி நரம்புகளை தூண்டி உற்சாகப்படுத்துகின்றன
ஆக மொத்தத்தில் இந்த மருந்துகளில் எதுவுமே நோய் நிவாரணம் தருவதில்லை
அந்தந்த நேரங்களில் ஒரு தற்காலிக தீர்வைத்தான் இவை தருகின்றன. ஆனால் மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தின் இயல்பு நிலையை மாற்றுகின்றன.
உதாரணமாக தூக்க மருந்துகளும், மனவெறி தணிப்பான்களும் கிட்டத்தட்ட ஒத்த ரீதியில்தான் மூளையை தாக்குகின்றன.
அதாவது தூக்க மாத்திரைகள் GABA என்ற நரம்பு முடக்கு ஹார்மோனை தூண்டும்போழுது மறைமுகமாக நார்-அட்ரீனலின், செரோடோனின்(serotonin), டோப்பமின் (Dopamin) போன்ற நரம்பு தூண்டி ஹார்மோன்களை பலஹீனப்படுத்துகின்றன அல்லது முடக்குகின்றன.
அதேபோல் மனவெறி தணிப்பான்கள் எனப்படும் ஆன்டிசைகோட்டிக் மருந்துகள் நேரடியாகவே நரம்பு தூண்டி ஹார்மோன்களை,முக்கியமாக டோப்பமின் ஏற்பிகளை முடக்குவதால் மறைமுகமாக GABA வை தூண்டலாம்.
இதே போல் மனச்சோர்வு மருந்துகளும் நரம்பு ஊக்க ஹார்மோன் அமைப்புகளை தூண்டி விட்டு மற்ற அமைப்புகளை முடக்குகின்றன.
இதே போல்தான் பார்க்கின்சன் நோய் மருந்துகளும். இவை எதுவுமே நோய் நிவாரணம் தருவதில்லை. நோயை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். ஆனால் தொடர்ந்து சாப்பிட்டு நிரந்தர நோயாளியாக இருக்கவேண்டும்
மேற்சொன்ன மருந்துகளில் பெரும்பாலானவை மத்திய நரம்பு மண்டலத்தை மட்டுமல்ல தானியங்கி நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும்
தானியங்கி நரம்பு மண்டல பாதிப்புகள் (Autonomic Effects):
ஆன்டி கோலினெர்ஜிக் தாக்கம் (Anticholinergic Effects )
கண்பார்வை மங்குதல்,வாய் வறட்சி,சிறுநீர் அடைப்பு, இதயத்துடிப்பு அதிகரித்தல், தலை சுற்றல், மற்றும் மலச்சிக்கல்
மத்திய நரம்புமண்டல பாதிப்புகள்
மயக்கம்
நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்புகள் :-
இது பொதுவாக மனவெறி தணிக்கும் மருந்துகளினால் ஏற்படும்
டோப்பமின் ஹார்மோனை முடக்குவதால் பெண்களின் முலைகளிலிருந்து பால் போன்ற வெண்ணிற திரவம் கசிதல், மாதவிடாய் கோளாறு, மலட்டுத்தன்மை
ஆன்டி அட்ரீனர்ஜிக் தாக்கம்:-
தலை வலி, உட்கார்ந்து எழும்பும்போது தலை சுற்றல்
சில மனவெறி தணிக்கும் மருந்துகள் (லார்காசிட்டில்), ஆண்களுக்கு விந்து அடைப்பை ஏற்படுத்தும்.
எக்ஸ்டரா பிரமிடல் பக்க விளைவுகள் -மனவெறித்தணிக்கும் மருந்துகள் :-
சுயகட்டுப்பாடு இல்லாமல் உடலின் அவயங்கள் தடுமாறுதல் (அகதீஸியா)
பார்கின்சனிசம்
நாக்கு,கழுத்து ,முகம் போன்ற இடங்களில் சதைகள் மெள்ள மெல்ல சுளுக்குதல் (டிஸ்டோனியா)
வீரியமிக்க நரம்பு தளர்வு (neuroleptic malignancy). இந்த நிலையில் கைகால்கள் ஒரேயடியாக தளரும்.மன நிலை பாதிக்கப்படும்.இதய துடிப்பு இரத்த அழுத்தம் உடல் உஷ்ணம் ஆகியவை அபரிமிதமாக உயரும்.
பொதுவாகவே தூக்க மாத்திரைகளும் மனவெறி தணிப்பான்களும் கட்டுப்பாடின்றி கவனக்குறைவுடன் சாப்பிடும்பொழுது மூச்சுத்திணறல் மூச்சடைப்பை உண்டாக்கலாம்
மேலும் கவனக்குறைவாக நீண்ட நாள் எடுத்துக்கொள்ளப்படும் மனவெறி தணிப்பான்கள் Tardive Dyskynesia என்ற ஒரு கொடிய நிலையை ஏற்படுத்தும்.இந்த நிலையில் தானாகவே கட்டுப்பாடு இல்லாமல் ஒருவரின்,நாக்கு, உதடுகள் தாடைகள் அசையும்.
ஆக மொத்தத்தில் இந்த மருந்துகள் எல்லாம் நோய் நிவாரணம் எல்லாம் தருவதில்லை. ஒரு தற்காலிக சுகம் மட்டுமே கிடைக்கிறது. மற்றபடி இவற்றை சாப்பிடுவதால் உடல் பாதிப்புகள்தான் மிச்சம்
பார்கின்சனிசம் போன்ற கடுமையான நிலை உடையவர்களை தவிர மற்றவர்கள் சும்மாவேனும் தூக்கமில்லை மனச்சோர்வு என்று சொல்லி டாக்டரிடம்போக்காதீர்கள் கண்டபடி மருந்துகளை வாங்கி சாப்பிட்டு நிரந்தர நோயாளிகள் ஆகாதீர்கள்
அடிப்படையில் உடம்பில் எந்த கோளாறுகளுமே இல்லாமல்,வரும் தூக்கமின்மை கவலை மனச்சோர்வு இவைகளெல்லாம் நோய்களே அல்ல. துன்பம் வரும் போகும். சூழ்நிலைகள் மாறும் எந்த நிலையிலும் இறை நேசத்தை நாடுங்கள் .
வெய்யிலின் வெப்பம் இல்லாமல் நிழல் சுகம் தராது.
இடிஇடிக்கும் வானம் மழை கொடுக்கும்
உங்கள் எண்ணங்கள் மாறாமல் உங்கள் நிலை மாறாது
தூய எண்ணத்துடன் இருங்கள்
பிறருக்கு உதாவி செய்யமுடியவில்லை என்றாலும் உபத்திரவமாவது செய்யாமல்
சுயநலம் தேவைதான் ஆனால் அது பிறர் நலத்தை பாதிக்காமல் இருக்கவேண்டும்
" நிச்சயம் ஒரு கஷ்டத்திற்கு பிறகு சுகம் இருக்கிறது ;நிச்சயம் ஒரு கஷ்டத்திற்கு பிறகு சுகம் இருக்கிறது." (அல் குர்ஆன் -அல் ஷரஹ்- விரிவாக்கம் என்ற அத்தியாயம்)
கஷ்டத்தையும் நஷ்டங்களையும் கண்டு மிரளாதீர்கள்
எப்படியும் இந்த வாழ்வு நிரந்தரமில்லை எதை கொண்டு வந்தோம் கொண்டு போவதற்கு
ஏமாந்துவிட்டோமே என்று ஏங்காதீர்கள். பொறுமையுடன் இருங்கள் . நிச்சயம் இறைவனின் நெருக்கம் என்ற கொள்ளை லாபம் உங்களுக்கு. பிறகு உங்களை ஏமாற்றியவன் நாஷ்டவாளிதானே
அகந்தையை விடுங்கள் பிறரை ஆளவேண்டும் என்ற எண்ணங்களை தொலையுங்கள்
பொறாமை கொள்ளாதீர்கள்.
இரக்கம் காட்டுங்கள். கோபப்படுமுன் தவறு எங்கே இருக்கிறது என்று சிந்தியுங்கள். உங்கள் கோபம் நியாயமானதாகவே இருந்தாலும் பொறுமையுடன் அமைதியாகிவிடுங்கள் . அதுவே நீங்கள் எதிராளிக்கு தரும் தண்டனை ஆகும். அவர் நிச்சயம் உங்கள் அமைதியை விரும்ப மாட்டார்.
பிறகு உங்களுக்கு எந்த மருந்தும் தேவைப்படாது.
புரத உணவுகளும் இன்சுலினும்
சாதாரணமாக புரதச்சத்து நம் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது ஆகும். 70கிலோ எடையுள்ள ஆரோக்கியமான ஒருவர் 60கிராம் வரை புரத உணவை எடுத்துக்கொள்வது நல்லது.
ஆனால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் புரத உணவுகளை டாக்டரின் ஆலோசனையின் பேரிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஏனெனில் நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் குறைவாகவே சுரக்கும்.
புரத உணவு வளர் சிதை மாற்றம் அடையவும் இன்சுலின் தேவை. எனவே அதிக புரத சத்து வளர் சிதை மற்றம் அடையாமல் சர்க்கரையாக மாறி இரத்தத்தில் மேலும் சர்க்கரை அளவை உயர்த்தலாம்
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் டாக்டரின் ஆலோசனையின் பேரில் புரத உணவுகளை கட்டுப்படுத்த வேண்டும்
ஏனெனில் அதிக புரதச்சத்து இரத்தத்தில் கிரியாட்டினின்,யூரியா போன்ற நைட்ரோஜன் கழிவுகளை அதிகரிக்கும்
கல்லீரலைப் பாதுகாக்கும் புரத உணவுகள் :-
கல்லீரல் மிக முக்கியமானதொரு உறுப்பு ஆகும். நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளும் உணவு சத்துக்களும் பெரும்பாலும் கல்லீரலில்தான் வளர்சிதை மாற்றங்கள் அடைகின்றன. நாம் எடுத்துகொள்ளும் வலி மருந்துகளில் பாராசிட்டமால் மிக சர்வசாதாரணமாக மிட்டாய் போல் பயன்படுத்தப்படுகிறது. இதை ஈரல் சிதைக்கும் போது 10% N-Acetyle parabenzo quinone imine (NABQUI) என்ற விஷப்பொருள் உண்டாகி ஈரல் திசுக்களை சேதப்படுத்தலாம்.எனவே பாராசிட்டமாலை தேவை இல்லாமல் அடிக்கடி சாப்பிடுபவர்கள் கவனமாக இருக்கவேண்டும். குழந்தைகளுக்கும் இதை அடிக்கடி கொடுப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 10% சதவீதம்தான் இந்த விஷம் உண்டாகிறது என்றாலும் அளவு தெரியாமல் அடிக்கடி அல்லது அளவுக்கு அதிகமாக பராசிட்டமாலை எடுக்கும் போது 10% என்றில்லாமல் அதைவிட அதிக அளவில் எல்லை மீறி இந்த விஷப்பொருள் உண்டாகும் போது ஈரல் அதை முறியடிக்கும் சக்தியை இழக்கலாம். பாராசிட்டமால் விஷத்தை முறியடிக்கும் க்ளூடோத்தியோன் என்ற நொதி அதற்கேற்றாற்போல் உற்பத்தியாகாமல் போகலாம்
பாராசிட்டமால் பாதிப்படைந்த ஈரலுக்கு புத்துயிரூட்டும் புரத உணவுகள் கீழே தரப்பட்டு இருக்கிறது.
1.வான்கோழி இறைச்சி
2.மாட்டிறைச்சி
3.சூறை மீன் (TUNA)
4.சோயா தயிர் (Tofu)
5.பால்
6.பிரேசில் நட்ஸ்
7.பெரிய வெள்ளை பீன்ஸ்
மேலே கூறப்பட்ட புரத உணவுகளில் இருக்கும் மெத்தியோனின் என்ற அமினோ அமிலம் ஈரலுக்கு மிகவும் நல்லது.ஈரலை பாதுகாக்கிறது. பாதிப்பு ஏற்பட்ட பத்து மணி நேரத்திற்குள் மெத்தியோனினை வாய் மூலமாகிய அல்லது சிரை இரத்தக் குழாய் மூலமாகவோ உட்கொள்ள வேண்டும்
சிறுநீரகத்தை பாதுகாக்கும் புரத உணவுகள்
கோழி இறைச்சி, மற்றும் முழு கோதுமையில் ஹிஸ்டிடின் என்ற அமினோ அமிலம் இருக்கிறது .இது சிறுநீரகத்திற்கு மிகவும் நல்லது.சிறுநீரக கோளாறு வராமல் இருக்க கீழ்கண்ட புரத உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.ஏனென்றால் அவற்றில் ஹிஸ்டிடின் அதிகம் இருக்கிறது.அவை,
1.கோழி இறைச்சி
2.கோழி முட்டை
3.முழு கோதுமை உணவுகள்
நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் புரத உணவுகள் :-
A .லியூசின்:-
1.மோர் ; 2.சோயா மொச்சை ; 3.நிலக்கடலை; 3.நொறுக்கப்பட்ட சணல்; 4.மாட்டிறைச்சி; 5.சால்மன் மீன்; 6.கோதுமை; 6.வாதுமை; 7.சுட்ட கோழி இறைச்சி
மேல்கண்ட இந்த உணவு வகைகளில் லியூசின் என்ற அமினோ அமிலம் இருக்கிறது. இது இன்சுலின் செல்களை ஆரோக்கியமாக வைப்பதுடன் இன்சுலின் சுரப்பையும் அதிகரிக்கிறது.
B .லைசின் :-
லைசின் இன்சுலினை திசுக்கள் பயன்படுத்தும் திறனை அதிகரிக்கிறது
இது அடங்கிய உணவுகள் ,
1.ஆடு, மாடு மற்றும் கோழி இறைச்சிகள்; 2.பார்மேசன் இத்தாலிய சீஸ் கட்டி; 3.கொடுவா மீன், சாளை மீன்; 4.முட்டை; 5.சோயா, சோயா தயிர் (Tofu); 6.பச்சை பாசி; 7.வெந்தயம்
சர்க்கரை குறியீட்டு எண் அட்டவணை -பழங்கள்
மேலே உள்ள அட்டவணையில் சில பழங்களின் சர்க்கரை குறியீட்டு எண் (GL), மற்றும் சர்க்கரை ஏற்று திறன்(GI) ஆகியவை தரப்பட்டு இருக்கின்றன. நீரிழிவு நோயாளிகள் பின்வரும் அளவீடுகளில் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சர்க்கரை குறியீட்டு எண்ணை (GI) விட சர்க்கரை சுமையேற்று திறன் (GL)மிகவும் முக்கியம்.
எந்த ஒரு இனிப்பு பண்டத்தை சாப்பிடும்பொழுதும் அதன் GL <10 (பத்துக்குள்) இருப்பதுமாதிரி பார்த்துக்கொண்டால் மிகவும் பாதுகாப்பானது மட்டுமல்ல மிகவும் அவசியமானதும் ஆரோக்கியமானதும் கூட. ஆம் ஒவ்வொரு நீரிழிவு நோயாளியும் இனிப்புகளை ஒரேயடியாக ஒதுக்குவது ஆரோக்கியமானதல்ல. நாம் இங்கு குறிப்பிடுவது இன்சுலினை சார்ந்திராத நீரிழிவு (NON INSULIN DEPENDIND DIABETUS MELLITUS-NIDDM) நோயாளிகளை மட்டுமே. இவர்களுக்கு இன்சுலின் சுரப்பு குறையாகவோ அல்லது ஒழுங்கற்றதாகவோ அல்லது செல்களால் இன்சுலினை பயன்படுத்த முடியாமையோ இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் GL அளவுடன் இனிப்புகளை சாப்பிடுவதால் இந்த குறைபாடுகள் நீங்க வாய்ப்புகள் உண்டு நவீன நீரிழிவு இயல் கூறுகிறது.
GL வரைமுறைகள்:-
1. GL <10 (பத்துக்கு கீழ்) = பாதுகாப்பு,ஆரோக்கியம்
2. GL 10 - 20 = நடுநிலை (கவனம்)
3. GL >20 (இருபதுக்கு மேல்) = ஆபத்து
நாம் இனிப்புகளை GL 20க்கு மேல் சாப்பிடும் பொழுது இரத்தத்தில் க்ளுகோஸின் அளவு திடீரென்று மிக வேகமாக உயரும். இன்சுலின் செல்களை அது பாதிக்கும். ஆனால் இனிப்புகளை 10 க்கு கீழான அளவுடன் சாப்பிட்டால் அதனால் இன்சுலின் செல்கள் வலுப்பெறுகின்றன.
நார்ச்சத்து அதிகமுள்ள பழங்களை சாப்பிடும்போது அதன் அளவீட்டை GL <10 இருப்பதுமாதிரி குறைத்து சாப்பிடலாம்.
உதாரணமாக 170 கிராம் மாம்பழத்தின் GL 28.
ஆனால் மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகம்.
மிகவும் சத்தும் ருசியும் மணமும் நிறைந்தது.
எனவே அதை ஒதுக்க முடியாது.
கீழ்கண்டவாறு மாம்பழத்தின் GL அளவை குறைத்து சாப்பிடலாம்
GL 19 க்கு மாம்பழத்தின் சைஸ் =130கி
ஃ GL 10க்கு (130/19) x 10 = 68.5 கி
எனவே ஒரு நீரிழிவு நோயாளி ஒரு நாளில் 50 - 65 கி வரை மாம்பழம் சாப்பிடலாம்
இந்த கணக்கிடுதல் GL இருபதுக்கு அதிகமுள்ள எல்லா பழக்களுக்கும் இனிப்பு பண்டங்களுக்கும் பொருந்தும்
நீரிழிவு நோய் மருந்துகள்-கவனிக்க -சில எச்சரிக்கைகள்
1.DPP4 என்ஜைம் முடக்கிகள் : க்ளிப்ட்டின்கள்
A.சிட்டாக்ளிப்ட்டின், ... SITAGLIPTIN
B.விடாக்ளிப்ட்டின், ... VIDAGLIPTIN
C.சாக்சாக்ளிப்ட்டின், ... SAXAGLIPTIN
D.லினாக்ளிப்ட்டின், ... LINAGLIPTIN
E.டெனெலிக்ளிப்ட்டின் , ... TENELIGLIPTIN
மேற்கூறப்பட்ட க்ளிப்ட்டின் நீரிழிவு மருந்துகள் DPP4 என்ற என்சைமை முடக்கித்தான் கணையத்திலிருந்து அதிக இன்சுலின் சுரப்பை தூண்டி விட்டு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைகின்றன.
மருத்துவர் இவற்றை பரிந்துரைத்தால் உங்களின் கணையம்,சிறுநீரகம் இதயம் மற்றும் உங்களின் ஜீரண மண்டலம்,இவையாவும் சரியாக ஆரோக்கியமாக இயங்குகின்றனவா என்பதை முன் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
காரணம் இவை சிலருக்கு தவறுதலாக பரிந்துரைக்கப்படும் பட்சத்தில்
.இதய செயலிழப்புகள் உண்டாகலாம்
.சிறுநீரகம் பாதிக்கப்படலாம்
.கணைய வீக்கம் (PANCREATITIS) ஏற்படலாம்
.ஜீரண கோளாறுகளை உண்டாக்கலாம்
காரணம் இவை சிலருக்கு தவறுதலாக பரிந்துரைக்கப்படும் பட்சத்தில்
.இதய செயலிழப்புகள் உண்டாகலாம்
.சிறுநீரகம் பாதிக்கப்படலாம்
.கணைய வீக்கம் (PANCREATITIS) ஏற்படலாம்
.ஜீரண கோளாறுகளை உண்டாக்கலாம்
2.பைகுவனாய்டுகள் -BIGUANIDES:-
F.மெட்பார்மின் ... (METFORMIN)
இந்த மருந்து வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு ஆகியவற்றை உண்டாக்கலாம்.இதை தனியாகவோ அல்லது கூட்டாகவோ எடுத்துக்கொண்டால் மேற்கண்ட பிரச்சினைகள் இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.
இந்த மருந்து மிகவும் பாதுகாப்பானது என்றாலும் மிகவும் அபூர்வமாக இரத்தத்தில் லாக்டிக் அமில உயர்நிலையை (LACTIC ACIDOSIS)உண்டாக்கலாம் .இது மிகவும் ஆபத்தான நிலையாகும் இது பெரும்பாலும் சிறுநீரகம் செயலிழந்த நிலையில் மெட்பார்மின் சாப்பிடுபர்களுக்கு ஏற்படும்.
லாக்டிக் அமில உயர்நிலையின் அறிகுறிகள் :
1.மிகுந்த களைப்பு ,சோர்வு
2.ஜீரண மண்டல கோளாறுகள்
3.மூச்சுத்திணறல்
4.தலைவலி,தலை சுற்றல்
5.இதயத்துடிப்பில் ஏற்ற இறக்கம்
6.குளிர்ஜுரம்,உடல் வலி
7.தோல் சிவத்தல் எரிவு
மேல் கூறியவற்றில் ஏதாவது ஒரு சில அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரிடம் உடனே கூறவும்
மேலும் மே 2020 இல் சில அமெரிக்க நிறுவனங்கள் தயாரித்த மெட்பார்மினில் NMDA (NITROSODIMETHYLAMINE)நைட்ரோசோ டை மீத்தைல் அமைன் என்ற புற்று நோயை உண்டாக்கும் அசுத்தம் கலந்து இருப்பதாக கண்டறிந்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அந்த Brand தயாரிப்புகளை தடை செய்தது.இது மருந்தின் குற்றமல்ல அதன் தயாரிக்கப்பட்ட முறையின் குறைபாடு.
மேலும் அசாதாரணமாக மெட் பார்மின் உங்கள் உடலின் விட்டமின் பி 12 மற்றும் கால்ஷியத்தை குறைக்கலாம்.எனவே மெட் பார்மின் சாப்பிடுபவர்கள் கால்ஷியம் மற்றும் வைட்டமின் பி 12 சத்துள்ள உணவுகளையோ அல்லது மாத்திரையோ எடுத்துக்கொள்வது நல்லது.
இந்த மருந்து மிகவும் பாதுகாப்பானது என்றாலும் மிகவும் அபூர்வமாக இரத்தத்தில் லாக்டிக் அமில உயர்நிலையை (LACTIC ACIDOSIS)உண்டாக்கலாம் .இது மிகவும் ஆபத்தான நிலையாகும் இது பெரும்பாலும் சிறுநீரகம் செயலிழந்த நிலையில் மெட்பார்மின் சாப்பிடுபர்களுக்கு ஏற்படும்.
லாக்டிக் அமில உயர்நிலையின் அறிகுறிகள் :
1.மிகுந்த களைப்பு ,சோர்வு
2.ஜீரண மண்டல கோளாறுகள்
3.மூச்சுத்திணறல்
4.தலைவலி,தலை சுற்றல்
5.இதயத்துடிப்பில் ஏற்ற இறக்கம்
6.குளிர்ஜுரம்,உடல் வலி
7.தோல் சிவத்தல் எரிவு
மேல் கூறியவற்றில் ஏதாவது ஒரு சில அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரிடம் உடனே கூறவும்
மேலும் மே 2020 இல் சில அமெரிக்க நிறுவனங்கள் தயாரித்த மெட்பார்மினில் NMDA (NITROSODIMETHYLAMINE)நைட்ரோசோ டை மீத்தைல் அமைன் என்ற புற்று நோயை உண்டாக்கும் அசுத்தம் கலந்து இருப்பதாக கண்டறிந்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அந்த Brand தயாரிப்புகளை தடை செய்தது.இது மருந்தின் குற்றமல்ல அதன் தயாரிக்கப்பட்ட முறையின் குறைபாடு.
மேலும் அசாதாரணமாக மெட் பார்மின் உங்கள் உடலின் விட்டமின் பி 12 மற்றும் கால்ஷியத்தை குறைக்கலாம்.எனவே மெட் பார்மின் சாப்பிடுபவர்கள் கால்ஷியம் மற்றும் வைட்டமின் பி 12 சத்துள்ள உணவுகளையோ அல்லது மாத்திரையோ எடுத்துக்கொள்வது நல்லது.
3.சல்போனையில் யூரியாக்கள் -SULONYLUREAS
G.க்ளிம்பிரைடு ... GLIMEPIRIDE
H .கிளைபியுரைட் ... GLYBURIDE
I .க்ளிப்பிசைடு ... GLIPIZIDE
J.டால்ப்யூட்டமைடு ... TOLBUTAMIDE
L .கிளிபேன்க்ளாமைடு ... GLIBENCLAMIDE
மேல் கண்ட ஸல்போனையில் மருந்துகள் எடுக்கும் போது திடீரென்று சர்க்கரை அளவு இரத்தத்தில் குறையும் அபாயம் இருப்பதால் இவர்கள் எப்பொழுதும் இனிப்பு பண்டங்களை வைத்து கொள்வது நல்லது.
இந்த மருந்துகளின் மற்ற பிரதிகூலங்கள்
1.அகோர பசி
2.எடை கூடுதல்
3.தோலில் அரிப்பு ,வெடிப்புகள்
4.வயிற்று கோளாறுகள்
6.கருமையான சிறுநீர்
பொதுவாக மேலே கண்ட எல்லா மருந்துகளும் பார்மசியில் வணிகப்பெயர்களில்தான் கிடைக்கும்.நான் வணிகப்பெயர்களை இங்கு குறிப்பிடவில்லை.காரணம் அவை இடத்துக்கு இடம் கம்பெனிக்கு கம்பெனி மாறுபடும்.ஆனால் மருந்து ஒன்றாகவே இருக்கும்.
எனினும் நாம் சாப்பிடும் மருந்து இன்னது என்று அதன் பொது (GENERIC) பெயரை தெரிந்து வைத்து கொள்வது நல்லது.காரணம் சில இடங்களில் நீங்கள் உபயோகிக்கும் மருந்து கிடைத்தாலும் அது நீங்கள் உபயோகித்து பழகிக்கொண்ட வணிக (BRAND) பெயரில் இருக்காது.எனவே நீங்கள் சாப்பிடும் மருந்தின் பொது பெயரை (GENERIC NAME) நீங்கள் சுயமாக தெரிந்து வைத்துக்கொண்டால் எந்த வணிகப்பெயரில் அது கிடைத்தாலும் அவசரத்திற்கு நீங்கள் அதை வாங்கி உபயோகிக்க முடியும்.
இதில் இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது.அதாவது ஒரு BRANDஇலிருந்து
இன்னொரு BRAND க்கு மாறும் பொழுது மருந்து ஒன்றாக இருந்தாலும் விளைவுகள் வித்தியாசமாக இருக்கலாம்.காரணம் தயாரிப்பு கோளாறுகள் தான்.அதாவது manufacturing difects. இன்னும் தெளிவாக கூறுவதாக இருந்தால் இரண்டு கம்பெனிகள் தயாரிக்கும் லுங்கிகள் என்பது ஒன்றுதான் ஆனால் அதன் முடித்தலில் (FINISHING )வித்தியாசம் இருப்பதில்லையா?அது மாதிரிதான்.
அதாவது ஒரு கம்பெனி நல்ல தரமுள்ள பொருட்களை கொண்டு அதன் எடை அளவுகளை நேர்த்தியாக கையாண்டு தன கம்பெனிக்கு உள்ளேயும் வெளியேயும் அந்த மருந்தை பல ஆய்வுகள் தரக்கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தி தயாரிப்பார்கள்.அதற்கு தகுந்த மாதிரி விலைகளும் நிர்ணயிப்பார்கள்.ஆனால் ஒரு சிறிய கம்பெனி அதே மருந்தை தயாரிக்கும் பொழுது இத்தனை தூரம் மெனெக்கெட மாட்டார்கள்.அதனால்தான் ஒரே மருந்து அதன் வணிகப்பெயர்களுக்கு ஏற்ற மாதிரி விலை மாறுபடுகிறது.நீங்கள் கூடுமான வரை உங்கள் உபயோகத்திலிருக்கும் brand ஐ குறைந்த விலையில் வேறு ஒரு Brand கிடைக்கிறது என்று மாற்ற வேண்டாம்.ஆனால் உங்கள் brand கிடைக்காத பட்சத்தில் டாக்டரின் ஆலோசனையுடன் வேறு brand க்கு மாறி கொள்வதில் தவறு இல்லை.
இந்த மருந்துகளின் மற்ற பிரதிகூலங்கள்
1.அகோர பசி
2.எடை கூடுதல்
3.தோலில் அரிப்பு ,வெடிப்புகள்
4.வயிற்று கோளாறுகள்
6.கருமையான சிறுநீர்
பொதுவாக மேலே கண்ட எல்லா மருந்துகளும் பார்மசியில் வணிகப்பெயர்களில்தான் கிடைக்கும்.நான் வணிகப்பெயர்களை இங்கு குறிப்பிடவில்லை.காரணம் அவை இடத்துக்கு இடம் கம்பெனிக்கு கம்பெனி மாறுபடும்.ஆனால் மருந்து ஒன்றாகவே இருக்கும்.
எனினும் நாம் சாப்பிடும் மருந்து இன்னது என்று அதன் பொது (GENERIC) பெயரை தெரிந்து வைத்து கொள்வது நல்லது.காரணம் சில இடங்களில் நீங்கள் உபயோகிக்கும் மருந்து கிடைத்தாலும் அது நீங்கள் உபயோகித்து பழகிக்கொண்ட வணிக (BRAND) பெயரில் இருக்காது.எனவே நீங்கள் சாப்பிடும் மருந்தின் பொது பெயரை (GENERIC NAME) நீங்கள் சுயமாக தெரிந்து வைத்துக்கொண்டால் எந்த வணிகப்பெயரில் அது கிடைத்தாலும் அவசரத்திற்கு நீங்கள் அதை வாங்கி உபயோகிக்க முடியும்.
இதில் இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது.அதாவது ஒரு BRANDஇலிருந்து
இன்னொரு BRAND க்கு மாறும் பொழுது மருந்து ஒன்றாக இருந்தாலும் விளைவுகள் வித்தியாசமாக இருக்கலாம்.காரணம் தயாரிப்பு கோளாறுகள் தான்.அதாவது manufacturing difects. இன்னும் தெளிவாக கூறுவதாக இருந்தால் இரண்டு கம்பெனிகள் தயாரிக்கும் லுங்கிகள் என்பது ஒன்றுதான் ஆனால் அதன் முடித்தலில் (FINISHING )வித்தியாசம் இருப்பதில்லையா?அது மாதிரிதான்.
அதாவது ஒரு கம்பெனி நல்ல தரமுள்ள பொருட்களை கொண்டு அதன் எடை அளவுகளை நேர்த்தியாக கையாண்டு தன கம்பெனிக்கு உள்ளேயும் வெளியேயும் அந்த மருந்தை பல ஆய்வுகள் தரக்கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தி தயாரிப்பார்கள்.அதற்கு தகுந்த மாதிரி விலைகளும் நிர்ணயிப்பார்கள்.ஆனால் ஒரு சிறிய கம்பெனி அதே மருந்தை தயாரிக்கும் பொழுது இத்தனை தூரம் மெனெக்கெட மாட்டார்கள்.அதனால்தான் ஒரே மருந்து அதன் வணிகப்பெயர்களுக்கு ஏற்ற மாதிரி விலை மாறுபடுகிறது.நீங்கள் கூடுமான வரை உங்கள் உபயோகத்திலிருக்கும் brand ஐ குறைந்த விலையில் வேறு ஒரு Brand கிடைக்கிறது என்று மாற்ற வேண்டாம்.ஆனால் உங்கள் brand கிடைக்காத பட்சத்தில் டாக்டரின் ஆலோசனையுடன் வேறு brand க்கு மாறி கொள்வதில் தவறு இல்லை.
கொரோனா கசாயம்
சுக்கு, மிளகு, திப்பிலி, அக்கரா, கடுக்காய் இவற்றை சம அளவு எடுத்து உரலில் போட்டு இடித்து பொடி செய்து கொள்ளவும் இதை வீட்டில் ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொண்டு தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது கெடுதல் செய்யாத வைத்தியம்.இதை அப்படியே தேனில் கலந்தோ அல்லது கஷாயம் பண்ணியோ சாப்பிடலாம்
ஐந்து வயதிற்கு கீழ்ப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு சிட்டிகை தேனில் கலந்து கொடுக்கலாம்
ஐந்து வயது முதல் பத்து வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு அரை டீ ஸ்பூன் தேனில் கலந்து கொடுக்கலாம்
பத்து வயதிற்கு மேல் ஒரு டீஸ்பூன் தேனில் கலந்து சாப்பிடலாம்
ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை எடுத்து கொள்ளலாம்
கசாயம் செய்யும் போது ஒரு டீஸ்பூனுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் என்ற விகிதத்தில் எடுத்துக்கொண்டு நன்றாக பாதி சுண்டும் வரை காய்ச்சி வடிகட்டி கொள்ளவும்
சூடு படுத்திய கத்தியில் தேனை ஊற்றி கருக்கி கசாயத்தில் விட்டு கலக்கவும்
இதுவே கொரோனா கசாயமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் ஏற்றது
ஆவி பிடித்தல்
ஆவி பிடித்தல் என்பது ஒரு மிகச் சிறந்த ஒரு மருத்துவ சிகிச்சை ஆகும் கொரோனாவுக்கு என்றில்லாமல் எந்தவிதமான சுவாச குழாய் கிருமி தொற்றாக இருந்தாலும் இது மிகவும் ஆபத்தில்லாத சக்தி வாய்ந்த ஒரு சிகிச்சை ஆகும்.இதற்கு மருத்துவரை அணுக வேண்டியதில்லை.சுயமாகவே இதை வீட்டிலேயே எடுத்துக்கொள்ளலாம்.மருந்து போட்டோ அல்லது வெறும் சுத்தமான நீரிலோ இதை எடுத்துக்கொள்ளலாம்
புதினா இலை ----2 அல்லது மூன்று
வேப்பங்குருத்து இல்லை ---2 அல்லது 3
துளசி இலை ----2 அல்லது 3
காபி தூள் ----- 1 டீ ஸ்பூன்
இத்தனையும் சேர்த்து போட்டாலுமோ அல்லது தனித்தனியாகவோ போட்டு ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு முறைகள் நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடியுங்கள்.இது நிமோனியா ப்ராங்கைட்டிஸ் நாட்பட்ட நுரையீரல் வியாதிகளுக்கு எதுவாக இருந்தாலும் சுகப்படும்.
வைட்டமின்-டி க்கு வைரஸ் எதிர்ப்பு சக்தி இருப்பதாக ஒரு சமீபத்திய ஆய்வறிக்கை கூறுகிறது. அது பற்றி பாப்போம்.வைட்டமின்-டி பொதுவாக நம் எலும்பு உறுதிக்கு அவசியம்.காரணம் விட்டமின்-டி யை கொண்டுதான் நம் உடல் எலும்புக்கு உறுதி தரக்கூடிய கால்சியம் பற்றும் பாஸ்பரஸ் சத்துக்களை உணவிலிருந்து பெற்று எலும்புகளை உறுதிப்படுத்துகிறது.
அதே வேளை மேலும் வைட்டமின்-டி நம் உடம்பின் கிருமி எதிர்ப்பு போர்வீரர்களான வெள்ளை அணுக்களின் சில எதிர்விளைவுகளையும் ஒழுங்கு படுத்துவதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
அதாவது சளி. இந்த கோவிட்-19 நோயின் பிரதான அறிகுறியே அடை சளிதான்.
இந்த சளி எப்படி உண்டாகிறது நம் உடம்பில்? இந்த வெள்ளை அணுக்கள் பல நேரங்களில் கட்டுப்பாடு இல்லாமல் சைடோக்கின் (CYTOKINES) என்ற நோய் எதிர்ப்பு சுரப்பை அதிகமாக சுரந்து சளியை உண்டாக்குகிறது. இந்த சைடோக்கின் கிருமியை மட்டும் அல்லாது உடலின் மற்ற செல்களையும் வெள்ளை அணுக்களையும் கூட அழிக்கிறது. இதற்கு சைடோக்கின் புயல் (CYTOKINE STORM) என்று பெயர். இதனால்தான் இந்த கோவிட் நோய் உட்பட அனைத்து நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களிலும் கெட்டி சளி உண்டாகிறது. இதுவே நிமோனியாவிற்கும் காரணமாகிறது.
இப்பொது கோவிட-19 நோயினால் அதிக பாதிப்பிற்கு உள்ளான தெற்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலி ஸ்பெயின் போன்ற நாடுகளிலுள்ளவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு அதிகமிருக்கிறது.
தோலில் இருக்கும் மெலனின்(MELONIN) என்ற நிறமி (PIGMENT) சூரிய ஒளிலியிலிருந்து நம் உடல் வைட்டமின் டி பெறுவதை குறைப்பதாகவும் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.இதனால்தான் பெரும்பாலும் கறுப்பு நிறத்தவருக்கு இந்த வைட்டமின் டி குறைபாடு அதிகம் இருக்கிறது.
மேலும் முதியோர்கள், சர்க்கரை நோயாளிகள் (68%), ஆரம்பநிலை சர்க்கரை நோயாளிகள்(58%), அதிக உடல் பருமன்(80%) ஆகியோருக்கு வைட்டமின் -டி குறைபாடு இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனவே இந்த நிலையில் இவர்களுக்கு கோவிட்-19 பாதித்தால் நிலைமை கடுமையாகவே இருக்கும்
நமது சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வசிப்பவர்களில் 1500 பேரை பரிசோதித்ததில் 60%விட்டமின் டி குறைபாடு இருப்பதாக பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் என்ற பதிவில் கூறப்பட்டுள்ளது. பொதுவாகவே இந்தியர்கள் 50% க்கும் அதிகமாக வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்.
இபோது கொரோனா ஊரடங்கினால் வீட்டிலேயே முடங்கி கிடப்பதும் இதற்கு ஒரு காரணமாகும்.
இறுதியாக விட்டமின் டி ஒரு கிருமி நாசினி அல்ல.வைரஸை நேரடியாக தாக்கி அழிக்காது. ஆனால் அதன் குறைபாடு வைரஸ் தாக்கத்தின் கடுமையை அதிகரிக்கும். எனவே குறைபாடு உடையவர்கள் உணவில் நிறைய வைட்டமின் டி சத்துள்ள சைவ அசைவ உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக கரோட்டின் மற்றும் வைட்டமின் -A அதிகமுள்ள முட்டை, காரட், காட் லிவர் எண்ணெய்,
சால்மன், மேக்ரல் போன்ற கொழுப்பு அதிகமுள்ள மீன்கள்
வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட பால், ஆரஞ்சு பழச்சாறு
மாட்டிறைச்சி. மாட்டு ஈரல்.
ஆனாலும் வைட்டமின் டி எடுத்தால் மட்டும் போதும் என்று எண்ண வேண்டாம்,அரசு சொல்வதைப்போல சுகாதார முறைகள்,சமூக இடைவெளி,தனிமை ஆகியவை கண்டிப்பாக பின்பற்றப்படவேண்டும் .
கோவிட் -19-சில குறிப்புகள் :-
1.வருமுன் சில முன் எச்சரிக்கைகள்
அ )ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து முறை கைகளை சோப்பு போட்டு கழுவிக்கொள்ளவும்
ஆ )பல முறை கைகளை சானிடைசர் ஜெல்லி கொண்டு துடைத்துக்கொள்ளவும் துடைப்பதற்கு சானிட்டரி நாப்கினை பயன்படுத்தவும்
இ )வெளியேயோ அல்லது வெளியூருக்கோ அல்லது வெளிநாட்டிற்கோ போய் திரும்பியவரா நீங்கள் ?தயவு செய்து ஒரு 15 நாட்களுக்கு உங்களை தனிமைப்படுத்திகொள்ளுகள்
ஈ )கூட்டங்கள் நிகழ்ச்சிகள் பொது இடங்கள் பொது வாகனங்களில் பயணங்கள் இவற்றை இந்த அபாயம் நீங்கும் வரை தவிர்த்துக்கொள்ளுங்கள் முடியாத போது மூக்கையும் வாயையும் முகமூடி போட்டு மறைத்து கொள்ளுங்கள்
முகமூடியை ஒருநாளைக்கு ஐந்துமுறை சோப்பு போட்டு கழுவி உலர்த்தி பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது உங்கள் பொருளாதாரம் இடம் கொடுத்தால் ஒருநாளைக்கு மூன்று முறை அதை புதிதாக மாற்றிக்கொள்ளுங்கள்
உ )கைகுலுக்குவதை கூடுமானவரை தவிர்த்துக்கொள்ளுங்கள்.இல்லையெனில் கைகுலுக்கியவுடன் கையை சோப்பு போட்டு கழுவி உலர்த்தி சானிடைஸ் செய்துகொள்ளுங்கள்
ஊ)அதிகமாக குடிப்பதற்கும் குளிப்பதற்கும் வெந்நீர் பயன்படுத்திக்கொள்ளுங்கள்
எ )வெந்நீரில் உப்பு போட்டு கார்கிள் செய்து கொள்ளுங்கள் ஆனால் நீங்கள் உயர் இரத்த அழுத்த நோயாளியாக இருந்தால் அல்லது ஆன்ஜியோ செய்தவராக இருந்தால் உப்பை தவிர்த்து பூண்டை வாயில் வைத்து மென்று விழுங்கிவிடாமல் வெந்நீரில் கார்கிள் செய்து துப்பிவிடவும்
ஏ )பொது இடங்களில் ஏணிப்படிகளில் ஏறி இறங்கும் போது கூடுமானவரை பக்கவாட்டில் உள்ள ஸ்டீல் அல்லது பிளாஸ்டிக் கை பிடியை தொடாதீர்கள்.கையுறை போட்டுக்கொள்ளுங்கள் அல்லது சோப்புப்போட்டு கையை கழுவிக்கொள்ளுங்கள்
ஐ )ஏ /ஸி யை கூடுமானவரை அல்லது முற்றிலும் தவிர்த்து விடுங்கள் தனி வீட்டில் தனியாக இருப்பவரா?கொஞ்ச நேரம் ஏ/ஸி யை பயன்படுத்திக்கொள்ளலாம்
ஒ )பீதி அடையாதீர்கள் காய்ச்சலோ ஜலதோஷமோ இருமலோ சளியோ இருந்தால் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள் அது சாதாரணமாக கூட இருக்கலாம்
ஓ )எதிர்ப்பு சக்தியை கூடுவதற்கு வைட்டமின் -A மற்றும் C மிக அவசியம் .ஆனால் விட்டமின் -A மாத்திரையாக அல்லது காப்சூல்களாக கிடைக்கிறது என்பதற்காக நீங்களாகவே டாக்டரின் ஆலோசனை இல்லாமல் இஷ்டப்படி வாங்கி சாப்பிடவேண்டாம்.விட்டமின்-A கொழுப்பில் கரையக்கூடியது எனவே அது அளவுக்கு அதிகமாக உடலில் தங்கி பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும் எனவே வைட்டமின்-A அதிகமுள்ள காய்கனிகள்,கீரைவகைகள் முட்டை பால் இவற்றை எடுத்துக்கொள்ளலாம்.இப்படி உணவு மூலமாக எடுத்துக்கொள்ளும் வைட்டமின்-A தீங்கில்லாதது
ஒள)வைட்டமின்-C நீரில் கரையக்கூடியதுதான் எனவே மாத்திரையாக சாப்பிடலாம் இருந்தாலும் பச்சை சாலடுகள் ஆரஞ்சு வகை சிட்ரஸ் பழங்களில் இது அபரிமிதமாக இருப்பதால் அவற்றை எடுத்துக்கொள்ளுவது நன்று.ஆனால் ஒன்று சமைக்கப்பட்ட எதிலும் விட்டமின் -சி அதிகம் கிடைக்காது விட்டமின்-சி சூடு தாங்காது.எனவே பச்சை சாலடுகள் நறுக்கிய வெள்ளரி முட்டைகோஸ் இலைகள் அடங்கிய சாலடுகள் மற்றும் சிட்ரஸ் பழங்கள் சாப்பிடுவது வைட்டமின் சி கிடைக்க உதவும்
இருமல் சளி மட்டும் உடம்பில் எதிர்ப்புசக்தி இல்லாமை இவற்றிற்கு நிவாரணம் கீழ்க்காணும் வீடியோவை க்ளிக் செய்யுங்கள்
இரும்பு சத்தும் தேநீரும்
சாதாரணமாக தேநீர் அருந்துவது காலை மாலை நேரங்களாக இருக்கட்டும்
அதாவது காலை டிபனுக்கு முன் மற்றும் மாலை நேரங்களில்
ஏனென்றால் சாப்பிட்டவுடன் அல்லது இரும்பு சத்து மாத்திரைகள் அல்லது டானிக்குகள் சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தினால் தேநீரில் உள்ள டானின்கள் இரும்பு சத்தை உணவிலிருந்தோ அல்லது மருந்துகளில் இருந்தோ உடல் கிரகிக்க விடாமல் செய்துவிடும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது
ஆல்கஹாலின் மருத்துவ குணம்
ஆல்கஹால் கீழ்கண்ட சில தவிர்க்கமுடியாத நேரங்களில் மருந்தாகவும் பயன்படும்.அவை
1.டைஎதிலின் கிளைகால் விஷம் இந்த விஷமானது இனிப்புத்தன்மை உடையது இது பெயிண்டிங்குகளில் பயன்படுத்தப்படும் இதை சில மருந்து தயாரிப்புகளில் மலிவாக இருக்கிறது என்று பயன்படுத்துவார்கள் ஆனால் அது சட்டவிரோதமானது இதை ஒருவர் தவறாக உட்கொள்ளும்பட்சத்தில் இது உடலில் ஆல்கஹால் டீஹைடிரோஜனஸ் என்ற என்ஜைமினால் ஆக்ஸீகரணம் அடைந்து கொடிய விஷமான கிளைகோல் ஆல்டெஹைடாக மாறிவிடும் இது இதயம் சிறுநீரகம் ஆகியவற்றை பாதித்து விடும்.
2.மீத்தைல் ஆல்கஹால் எனப்படும் மெத்தனால் கலந்த ஸ்பிரிட் கள்ள சாராயம் இவற்றையும் போதைக்காக சிலர் அருந்துவார் இந்த மீத்தைல் ஆல்கஹால் நம் உடம்பினுள் உள்ள ஆல்கஹால் டீஹைட்ரொஜெனஸினால் ஆக்ஸீகரணம் அடைந்து கொடிய விஷமான farmaldehyde ஆக மாறிவிடும்
மேற்கண்ட இந்த இரு சந்தர்ப்பங்களிலும் எத்தில் ஆல்கஹாலை மருந்தாக பயன்படுத்தலாம்
எத்தில் ஆல்கஹால் மேலே சொல்லப்பட்ட ஆல்கஹால் டீஹைட்ரஜனேஸ் என்ற என்ஜைமை நீர்த்துப்போக செய்து இலேசான நச்சுத்தன்மை உடைய Acetaldehyde ஆக மாறிவிடும்
இவ்வாறு டை எத்திலீன் கிளைக்கால் மற்றும் மீத்தைல் ஆல்கஹால் ஆகியவற்றின் விஷத்தன்மை முறிக்கப்பட்டுவிடும்
MRI ஸ்கேன் எச்சரிக்கை
MRI ஸ்கேன் எடுக்கும் போது கீழ்கண்ட முன்னெச்சரிக்கையுடன் அந்த அறைக்குள் செல்ல வேணும்
அது பேஷண்ட் மற்றும் அவருடன் MRI ஸ்கேன் அறைக்குள் நுழைபவர் டாக்டர் உட்பட யாரும் தங்களுடன் எந்த உலோக பொருட்களும் கொண்டுபோக கூடாது தங்கள் உடம்பினுள் பற்கள் உட்பட எங்காவது உலோக கலவை மற்றும் implants இருந்தால் அதை ரேடியாலஜிஸ்டிடம் தெரிவித்து விடவேண்டும் அதில் இரும்பு உலோக பொருட்கள் கண்டிப்பாக கூடாது
இரும்பு மிக வலுவான மின் காந்த கடத்தியாகும் எனவே இரும்புடன் MRI அறைக்குள் நுழையும் போது MRI மிஷின் OFF செய்யப்பட நிலையில் கூட அதை சுற்றி நிலவும் காந்த சுழலுக்குள் இரும்பு ஈர்க்கப்பட்டு தன்னுடன் பிணைந்து இருப்பவருடன் சுற்றி சுழன்று அசுர வேகத்தில் ராட்சச MRI எந்திரத்துடன் மோதி உயிர் சேதத்தை உண்டாக்கிவிடும்
மற்ற உலோகங்களுக்கு இந்த தன்மை இல்லை என்றாலும் அவையும் சில விபத்துகளை சில நேரம் உண்டாக்கலாம் அல்லது சரியான தெளிவான இமேஜ் கிடைக்க பெறாமல் செய்யலாம்
மற்றபடி MRI ஸ்கேன் மிகவும் பாதுகாப்பானது எக்ஸ்ரே போல அடிக்கடி எடுப்பதால் திசுக்களுக்கு எந்த சேதமும் ஏற்படுத்தாது
மஞ்சள் மகிமை
மஞ்சளில் இருக்கும் curcumin என்ற பொருள் ஒரு சிறந்த ஆக்ஸீகரண எதிர்ப்பான் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.எனவே மஞ்சளை தினமும் உணவுடன் சேர்த்துக்கொண்டால் புற்று நோய் வராமல் பாதுகாக்கும் மேலும் மஞ்சள் ஸ்ட்ரோக்,அல்ஜெய்மர் போன்ற கொடிய நிலைகளும் வராமல் தடுக்கும் என்று அந்த ஆய்வு கூறுகிறதுபய உணர்வும் செரிமானமும்
நம்முடைய சில உணர்ச்சிகள் உதாரணமாக,பயம்,அதிர்ச்சி,பீதி,போன்ற உணர்வுகள் கூட நம்முடைய ஜீரணமண்டலத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.உதாரணமாக இந்த உணர்வுகளின்போது நம் இரத்தத்தில் அட்ரீனலின் சுரப்பு அதிகரிக்கிறது நமது தானியங்கி நரம்புகளின் முனையிலிருந்து ஜீரண மண்டல திசுக்களுக்கு நாரெட்ரீனலின் என்ற பொருள் சுரப்பு அதிகரிக்கும்
இதன் விளைவு குடல் தசைகள் தளரும் குடலின் அசைவுகள் தளரும் வாயில் அதிக பசை தன்மையுள்ள உமிழ்நீர் சுரக்கும் ஜீரணமண்டலத்தை உட்சுவரில் படர்ந்திருக்கும் ம்யூஸின் என்ற பசை மேலும் கெட்டியாகும்
இதனால் மலச்சிக்கல் உண்டாகும் உணவு சத்துக்கள் மற்றும் மருந்துகள் சரியாக வயிற்றிலும் குடலிலும் உறிஞ்சப்படாது
இரத்தத்தில் மொத்த அணுக்கள் குறைபாடு நோய் (Aplastic Anemia)
இந்த நோய் பெரும்பாலும் எலும்புமஜ்ஜை கோளாறினால்தான் ஏற்படுகிறது.
இதன் அறிகுறிகள் தோலுக்கடியில் படத்தில் இருப்பதுபோல் சிவப்பு சிவப்பாக படை சிரங்கு போல் இரத்தம் தேங்கி அரிப்பு உண்டாக்கும்.காரணம் இரத்தம் உறைவதற்கு தேவையான platelets எனப்படும் அணுகுறைபாடு ஆகும்
இதில் ஆரம்ப நிலை,இடைநிலை மற்றும் முற்றிய நிலை என்று மூன்று வகைப்படும்.இதை படை சொறி சிரங்கு போல் தவறாக diagnose செய்ய வாய்ப்பு உண்டு
இந்த வகை சொறி பொதுவாக முழங்காலுக்கு கீழேதான் வரும் எனினும் இது உடலின் எந்த பாகத்திலும் வரும்
சாதாரணமாக நம் இரத்தத்தில் platelet அணுக்களின் அளவு ஒரு மைக்ரோ லிட்டருக்கு 150000 இலிருந்து 450000 வரை இருக்கலாம் இதற்க்கு கீழே இருந்தால் அது Aplastic அனீமியா வின் அறிகுறியாக இருக்கலாம்
இந்த வகை சொறி பொதுவாக முழங்காலுக்கு கீழேதான் வரும் எனினும் இது உடலின் எந்த பாகத்திலும் வரும்
சாதாரணமாக நம் இரத்தத்தில் platelet அணுக்களின் அளவு ஒரு மைக்ரோ லிட்டருக்கு 150000 இலிருந்து 450000 வரை இருக்கலாம் இதற்க்கு கீழே இருந்தால் அது Aplastic அனீமியா வின் அறிகுறியாக இருக்கலாம்
எலும்பு மஜ்ஜை சிலருக்கு பிறவிக்கோளாறினால் அல்லது பாரம்பரியத்தினால் ஏற்படலாம் அது அல்லாது கீழ்கண்ட காரணிகளாலும் ஏற்படலாம்
1. கதிர் வீச்சு மற்றும் இரசாயன மருத்துவம் (Chemotherapy )
2.எயிட்ஸ் போன்ற தன் எதிர்ப்பு குறைபாடுகள் (Auto Immune Disorder )
3.சில வைரஸ்கள்
4.பிரசவம்
Aplastic Anemia
சில அறியப்படாத காரணங்களாலும் உண்டாகலாம் அதற்க்கு Idiopathic APLASTIC Anemia என்பர்
இரும்பு சத்து குறைபாட்டினால் ஏற்படும் அனீமியாவிலும் இதுபோன்று இரத்த சிவப்பான சொறி நிலை ஏற்படும் ஆனால் அது தோலின் வெளிப்பகுதியில் இருக்கும்
இதன் அறிகுறிகள்
1.சிறு சிறு இரத்த கொப்புளங்கள் தோலின் உட்பகுதியில் காணப்படும்
2.மூக்கிலிருந்து மற்றும் பல் ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல்
3.மலத்தில் இரத்தம்
4.விழித்திரையில் இரத்த கசிவு
5.மாதவிடாயில் அதிக இரத்தம்
ஆகியவை அப்லாஸ்டிக் அனீமியாவின் முக்கிய அறிகுறிகள் ஆகும் இவை போக கீழ்கண்ட சோகை அறிகுறிகளும் இருக்கும்
1.களைப்பு
2.குமட்டல்
3.மூச்சு திணறல்
4.வேகமான ஒழுங்கற்ற இதய துடிப்புகள்
5.வெளிறிய தோல்
6.விவரிக்க முடியாத எளிதாக உண்டாகும் புண்கள்
7.தலை சுற்றல்
8.தலை வலி
இதன் சிகிச்சையை மூன்று விதமாக பிரிக்கலாம்
1.புதிய இரத்தம் மாற்றுதல்
2.எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை
3.மருந்துகள்
இதன் மருந்துகள் டாக்டரின் ஆலோசனையின் பேரிலேயே எடுக்க வேண்டும்
1.Filgrastim
Injections
2.Sargramostim
Intradermal Injections
3.Antithymocyte
Globulin Intravenous Shots
வெள்ளை அணு குறைபாடு நோய்
ஆங்கிலத்தில் Agranulocytosis எனப்படும் இவ்வியாதி இரத்தத்தில் granulocytes அல்லது neutrophils எனப்படும் வெள்ளை அணுக்களின் குறைபாட்டினால் ஏற்படுவது.நம் இரத்த வெள்ளை அணுக்களில் 80% இந்த granulcytes தான் உள்ளன.எனவே இவை குறை பட்டால் நம் உடம்பின் நோய் எதிர்ப்பு தன்மை பாதிக்கப்படும் இதனால் அப்பத்தான் தோற்று நோய்கள் நம்மை எளிதில் பாதித்துவிடும்
இவை குளோனஸ்ப்பின் மற்றும் தைராய்டு எதிர்ப்ப்பான் போன்ற மருந்துகளின் உபயோகம்
எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை,இவற்றினால் ஏற்படலாம்
வெள்ளை அணு குறைபாடு நோய்
நமது உடலிலுள்ள இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் தான் நமது நோய் எதிர்ப்பு சக்தியை நிர்ணயிக்கின்றன
வெள்ளை அணுக்களில் பிரதானமானது நியூட்ரோபில் அல்லது granulocytes என்ற அணுக்கள் தான்.இவை பொதுவாக 80% இருக்கும் பொதுவாக வெள்ளை அணுக்கள் என்றாலே இவற்றைத்தான் குறிக்கும் இந்த அணுக்கள் குறைவாக இருந்தால் அப்பத்தான் தோற்று நோய்க்களுக்கு நம் உடல் ஆளாக நேரிடும்.இந்த நிலைக்கு sepsis என்று பெயர்.
அறிகுறிகள்
1.காய்ச்சல்
2.குளிர்
3.குறை ரத்த அழுத்தம்
4. களைப்பு
5.தொண்டை புகைச்சல்
6.தலை வலி
7.வியர்த்தல்
8.சுரப்பிகள் வீக்கம்
காரணிகள்
1.மருந்துகள்
2.எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை
3.எயிட்ஸ்
4.க்ளோசப்பின் மற்றும் தைராயிட் எதிர்ப்பு மருந்துகள்
3.எயிட்ஸ்
4.க்ளோசப்பின் மற்றும் தைராயிட் எதிர்ப்பு மருந்துகள்
பரிசோதனைகள்
1.இரத்த வெள்ளை அணுக்கள் Differantial Count (DC )
2.தனி நியூட்ரோபில் அணு டெஸ்ட் (சாதாரணமாக 1500/mcL )
3.எலும்பு மஜ்ஜை டெஸ்ட்
மருத்துவம்
1.காரணி மருந்துகளை நிறுத்துதல்
2.ஆண்டிபையாட்டிக்குகள்
3.Granulocyte Coloney Stimulating Factor GCS -F ஊசி மூலம் எடுத்துக்கொள்ளுதல்
ஆண்மை குறைபாடுகள்-சில நிவாரண குறிப்புகள்
ஆண்மைக் குறைபாடுகளில் தலையாயது போதுமான ஆண் குறி விறைப்பு இல்லாமை மற்றும் தாம்பத்திய உறவின் பொது விந்து உடனே வெளிப்படுதல் போன்றவை இங்கு உறுப்பு விரைப்பற்ற தன்மை பற்றி பார்க்கலாம்
பொதுவாக இது மற்ற வியாதிகளுடன் சேர்ந்து இருக்காதவரை இது ஒரு நோய் இல்லை
பொதுவாக இது மன உளைச்சல்,சோர்வு,களைப்பு நிலைகளிலும் ஏற்படும்
இடமாற்றங்கள் கூட இதை பாதிக்கும்
ஒரு இடத்தில் அல்லது ஒரு சூழலில் விறைப்பு ஆண்மை இல்லாதவர் கூட இன்னொரு சுகமான இடத்தில் அல்லது சூழலில் ஆண்மையுடையவராக இருப்பார்.
ஒரு ஆணுடைய உறுப்பின் அகவியலில் corpus cavernosum எனப்படும் ஒரு ஜோடி சுருங்கி விரியும் தசை அமைப்பு உண்டு.இதில் இரத்த ஓட்டமும் உண்டு.காம உணர்வின்போது சரியான அளவில் இதன் இரத்த குழாய்களில் இரத்தம் ஓடவில்லை என்றால் ஆண் குறி விறைப்பு இருக்காது.ஆரோக்கியமான ஆண்மையுடைய நிலையில் தாம்பத்திய உறவின் போது நம் உடம்பில் உள்ள L-Argine என்ற அமினோ அமிலம் நைட்ரிக் ஆக்சைட் சிந்தேஸ் என்ற என்ஜைம் மூலம் சிதைவடைந்து நைட்ரிக் ஆக்ஸைடை வெளிப்படுத்துகிறது இந்த நைட்ரிக் ஆக்சைட் ஆண்குறி தசைக்கு இரத்த நாளங்களை விரிவாக்கி அதிக இரத்த ஓட்டத்தை கொடுத்து ஆண்குறி விறைப்பை உண்டாக்குகிறது.
sildenafil (வயக்ரா),tadalafil (சியலிஸ்) போன்ற ஆண்மை குறைவு நிவாரணிகள் இந்த நைட்ரிக் ஆக்சைட் பாதையில் தான் வேலை செய்கின்றன.இவை நைட்ரிக் ஆக்சைட் மூலம் இரத்த அழுத்தத்தை குறைப்பதால்,உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் ,தாழ்ந்த இரத்த அழுத்தம் உடையவர்கள் மற்றும் உயர் மற்றும் தாழ்ந்த இரத்த அழுத்தங்களுக்காக மருந்து சாப்பிடுபவர்கள் வயக்ரா போன்ற மாத்திரைகளை எடுக்கும் முன்பு டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும்
இயல்பாக சில மூலிகைகள் இதற்கு நிவாரணம் தருவதாக கூறுகிறார்கள்
1.ரெட் ஜின்செங்:இது கொரியா வில் அதிகமாக பயன் படுத்தப்படுகிறது.
இது பவுடர் காப்ஸ்சுல் மற்றும் சிரப் வடிவத்தில் கிடைக்கிறது இது பொதுவாக பக்க விளைவுகள் இல்லாதது பொதுவாக இது உடல் வலிமைக்கு சிறந்து என்று கூறினாலும் இதன் யூகங்கள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை
இதை உபயோகிக்கும் பொது சில விளைவுகளை இது தரும் தூக்கமின்மை,வாயுத்தொல்லை,வயிற்று கோளாறு போன்றவை ஏற்படலாம்
2.DIHYDROEPIANDROSTERONE இது அட்ரீனல் ஹார்மோன்கள் மூலமாக ஆண்மை விறைப்பை அதிகரிக்கிறது என்கிறார்கள்.சாப்பிடு முன் டாக்டரின் ஆலோசனை தேவை.
3.HORNEY GOAT WEED அல்லது EPIMEDIUM இது ஒரு சீன மூலிகை ஆகும் இதுவும் ஆண்மை வீரியம் ஏற்படுத்துவதாக கூறுகிறார்கள்.
4.GINKO BILOBA என்றோரு மூலிகை இதுவும் ஆண்மை குறைவுக்கு நல்லது என்பர்.
5.L -ARGINE அமினோ அமிலம் இது சிதைவடைந்து நைட்ரிக் ஆக்ஸைடை வெளியிட்டு விறைப்பை கூட்டுகிறது இது நாம் சாப்பிடும் புரதங்களின் மூலம் கிடைக்கிறது எனவே உணவில் அதிகம் புரதங்களை சேர்த்துக்கொள்வதால் ஆண்மை விருத்தி அடையும்
கீழ்கண்ட நோய்கள் ஆண்மை குறைப்பை உண்டாக்கும்
1.மனஉளைச்சல்
2.இரத்த குழாயில் கேட்ட கொழுப்பு அடைப்பு (Atherosclerosis )
3.நாட்பட்ட சிறுநீரக பாதிப்பு
4.நீரிழிவு
5.உயர் ரத்த அழுத்தம்
6.ஆணுறுப்பில் ஏற்படும் காயம்
7.சில மருந்துகள்,ஆன்டி ஹிஸ்டமின் (ஒவ்வாமை),மனஉளைச்சல் நிவாரணிகள்,பசி மந்தத்தை உண்டாக்கும் மருந்துகள் ,தூக்க மருந்துகள்
பொதுவாக இது மற்ற வியாதிகளுடன் சேர்ந்து இருக்காதவரை இது ஒரு நோய் இல்லை
பொதுவாக இது மன உளைச்சல்,சோர்வு,களைப்பு நிலைகளிலும் ஏற்படும்
இடமாற்றங்கள் கூட இதை பாதிக்கும்
ஒரு இடத்தில் அல்லது ஒரு சூழலில் விறைப்பு ஆண்மை இல்லாதவர் கூட இன்னொரு சுகமான இடத்தில் அல்லது சூழலில் ஆண்மையுடையவராக இருப்பார்.
ஒரு ஆணுடைய உறுப்பின் அகவியலில் corpus cavernosum எனப்படும் ஒரு ஜோடி சுருங்கி விரியும் தசை அமைப்பு உண்டு.இதில் இரத்த ஓட்டமும் உண்டு.காம உணர்வின்போது சரியான அளவில் இதன் இரத்த குழாய்களில் இரத்தம் ஓடவில்லை என்றால் ஆண் குறி விறைப்பு இருக்காது.ஆரோக்கியமான ஆண்மையுடைய நிலையில் தாம்பத்திய உறவின் போது நம் உடம்பில் உள்ள L-Argine என்ற அமினோ அமிலம் நைட்ரிக் ஆக்சைட் சிந்தேஸ் என்ற என்ஜைம் மூலம் சிதைவடைந்து நைட்ரிக் ஆக்ஸைடை வெளிப்படுத்துகிறது இந்த நைட்ரிக் ஆக்சைட் ஆண்குறி தசைக்கு இரத்த நாளங்களை விரிவாக்கி அதிக இரத்த ஓட்டத்தை கொடுத்து ஆண்குறி விறைப்பை உண்டாக்குகிறது.
sildenafil (வயக்ரா),tadalafil (சியலிஸ்) போன்ற ஆண்மை குறைவு நிவாரணிகள் இந்த நைட்ரிக் ஆக்சைட் பாதையில் தான் வேலை செய்கின்றன.இவை நைட்ரிக் ஆக்சைட் மூலம் இரத்த அழுத்தத்தை குறைப்பதால்,உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் ,தாழ்ந்த இரத்த அழுத்தம் உடையவர்கள் மற்றும் உயர் மற்றும் தாழ்ந்த இரத்த அழுத்தங்களுக்காக மருந்து சாப்பிடுபவர்கள் வயக்ரா போன்ற மாத்திரைகளை எடுக்கும் முன்பு டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும்
இயல்பாக சில மூலிகைகள் இதற்கு நிவாரணம் தருவதாக கூறுகிறார்கள்
1.ரெட் ஜின்செங்:இது கொரியா வில் அதிகமாக பயன் படுத்தப்படுகிறது.
இது பவுடர் காப்ஸ்சுல் மற்றும் சிரப் வடிவத்தில் கிடைக்கிறது இது பொதுவாக பக்க விளைவுகள் இல்லாதது பொதுவாக இது உடல் வலிமைக்கு சிறந்து என்று கூறினாலும் இதன் யூகங்கள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை
இதை உபயோகிக்கும் பொது சில விளைவுகளை இது தரும் தூக்கமின்மை,வாயுத்தொல்லை,வயிற்று கோளாறு போன்றவை ஏற்படலாம்
2.DIHYDROEPIANDROSTERONE இது அட்ரீனல் ஹார்மோன்கள் மூலமாக ஆண்மை விறைப்பை அதிகரிக்கிறது என்கிறார்கள்.சாப்பிடு முன் டாக்டரின் ஆலோசனை தேவை.
3.HORNEY GOAT WEED அல்லது EPIMEDIUM இது ஒரு சீன மூலிகை ஆகும் இதுவும் ஆண்மை வீரியம் ஏற்படுத்துவதாக கூறுகிறார்கள்.
4.GINKO BILOBA என்றோரு மூலிகை இதுவும் ஆண்மை குறைவுக்கு நல்லது என்பர்.
5.L -ARGINE அமினோ அமிலம் இது சிதைவடைந்து நைட்ரிக் ஆக்ஸைடை வெளியிட்டு விறைப்பை கூட்டுகிறது இது நாம் சாப்பிடும் புரதங்களின் மூலம் கிடைக்கிறது எனவே உணவில் அதிகம் புரதங்களை சேர்த்துக்கொள்வதால் ஆண்மை விருத்தி அடையும்
கீழ்கண்ட நோய்கள் ஆண்மை குறைப்பை உண்டாக்கும்
1.மனஉளைச்சல்
2.இரத்த குழாயில் கேட்ட கொழுப்பு அடைப்பு (Atherosclerosis )
3.நாட்பட்ட சிறுநீரக பாதிப்பு
4.நீரிழிவு
5.உயர் ரத்த அழுத்தம்
6.ஆணுறுப்பில் ஏற்படும் காயம்
7.சில மருந்துகள்,ஆன்டி ஹிஸ்டமின் (ஒவ்வாமை),மனஉளைச்சல் நிவாரணிகள்,பசி மந்தத்தை உண்டாக்கும் மருந்துகள் ,தூக்க மருந்துகள்
HIV-தொற்று சில நிவாரண ஆலோசனைகள்
எய்ட்ஸ் ஆரம்ப கட்ட அறிகுறிகள் அறிகுறிகள் :
இந்த கீழ்கண்ட அறிகுறிகள் HIV தொற்றின் ஆரம்ப நிலை ஆகும்.இந்த நிலையில் வைத்தியம் செய்து கொண்டாள் எய்ட்ஸ் வராமல் தடுக்க முடியும்.
1.மூட்டு மற்றும் தசை வலிகள்
2.களைப்பு
3.காய்ச்சல்
4.வாய்ப்புண்கள்
5.இரவில் வியர்த்தல்
6.உடல் அரிப்பு மற்றும் கொப்புளங்கள்
7.தொண்டை புகைச்சல்
8.சுரப்பிகள் வீங்குதல்
எய்ட்ஸ் முற்றிய நிலையில் வரும் அறிகுறிகள்
1.தோலில்,வாயில் மற்றும் மூக்கில் ஏற்படும் புண்கள்
2.கண் மங்கல்
3.பத்து நாட்களுக்கு மேல் தொடரும் வயிற்று போக்கு
4.நிண நீர் சுரப்பி வீக்கம்
5.தொடர்ந்து ஏற்படும் களைப்பு
6.ஞாபக மறதி
7.மன உளைச்சல்
8.நிமோனியா
AIDS என்னும் கொடிய வியாதியை உண்டாக்கும் இந்த வைரஸ் மூன்று நிலைகளை கொண்டது.மூன்றாவது நிலையான எய்ட்ஸ் நிலையை அடையாதவரை இதை பொதுவாக சிறந்த முறையில் மேனேஜ் பண்ண முடியும்
1.ANTI RETROVIRAL THERAPY அல்லது ART மூலம் HIV வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் இதை சிறந்த முறையில் நிர்வகிக்கலாம்
2.POST EXPOSURE PROPHYLAXIS அல்லது PEP மூலம் தொற்றுக்கு ஆளாகிவிட்டதாக ஒருவர் சந்தேகித்தால் ஆளான 72 மணி நேரத்திற்குள் இம்முறையின் மூலம் சுகம் பெறலாம்
கீழ்கண்டவாறு தன் வாழ்க்கையை மாற்றிக்கொண்டால் எய்ட்ஸ் நோயாளிகள் நிம்மதி பெறலாம்:
1மனஅழுத்த குறைப்பு-மன அழுத்தம் (Stress ) அதிகரிப்பதால் உடலின் எதிர்ப்பு சக்தி மேலும் பாதிக்கப்படும்
2.தேவையான கடுப்பூசிகள்-இவை மிகவும் அவசியம்
3.தாம்பத்திய உறவின்போது பாதுகாப்பு உறைகளின் பயன்பாடு
4.புகைப்பிடித்தலை நிறுத்துதல் -புகைபிடித்தல் உடல் எதிர்ப்பு சக்தியை பாதிக்க கூடியதே
5.தேவையான உடற்பயிற்சிகள் -இவை உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்கி இரத்த அழுத்தம் இதய நோய்கள் நுரை ஈரல் கோளாறு போன்றவற்றை வராமல் தடுக்கும் உடலுக்கு சக்தியும் புத்துணர்ச்சியும் அளிக்கும்
6.ஆரோக்கியமான உணவு கட்டுப்பாடு
மேலும் கீழ் கண்ட சில காரணிகள் தவிர்க்க முடியாதவை
1.வயது
2.உடலின் ஆரோக்கிய நிலை (தொற்று உண்டாகும் முன்பு)
3.பாரம்பரிய அணுக்கள் (Genes )
4.HIV வைரஸின் உள் வகைகள் (Sub Types)
5.ஏற்கனவே உடலில் ஏற்பட்ட மற்ற வகை தொற்றுகள்
.
கீழ்கண்டவாறு தன் வாழ்க்கையை மாற்றிக்கொண்டால் எய்ட்ஸ் நோயாளிகள் நிம்மதி பெறலாம்:
1மனஅழுத்த குறைப்பு-மன அழுத்தம் (Stress ) அதிகரிப்பதால் உடலின் எதிர்ப்பு சக்தி மேலும் பாதிக்கப்படும்
2.தேவையான கடுப்பூசிகள்-இவை மிகவும் அவசியம்
3.தாம்பத்திய உறவின்போது பாதுகாப்பு உறைகளின் பயன்பாடு
4.புகைப்பிடித்தலை நிறுத்துதல் -புகைபிடித்தல் உடல் எதிர்ப்பு சக்தியை பாதிக்க கூடியதே
5.தேவையான உடற்பயிற்சிகள் -இவை உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்கி இரத்த அழுத்தம் இதய நோய்கள் நுரை ஈரல் கோளாறு போன்றவற்றை வராமல் தடுக்கும் உடலுக்கு சக்தியும் புத்துணர்ச்சியும் அளிக்கும்
6.ஆரோக்கியமான உணவு கட்டுப்பாடு
மேலும் கீழ் கண்ட சில காரணிகள் தவிர்க்க முடியாதவை
1.வயது
2.உடலின் ஆரோக்கிய நிலை (தொற்று உண்டாகும் முன்பு)
3.பாரம்பரிய அணுக்கள் (Genes )
4.HIV வைரஸின் உள் வகைகள் (Sub Types)
5.ஏற்கனவே உடலில் ஏற்பட்ட மற்ற வகை தொற்றுகள்
.
காண்டாக்ட் லென்ஸ் -சில முக்கிய குறிப்புகள்
தொடு கண்ணாடிகள் (Contact Lens) கண்ணின் உள்ளேயே பொருத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டவை.இவற்றை தேவையான போது நாமே பொருத்திக்கொள்ளவோ கழற்றவோ முடியும்.
இவற்றை பயன் படுத்துமுன்பு மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை எடுக்க வேண்டும்.
கண்களில் போதுமான ஈரப்பதம் இருக்க வேண்டும்.போதுமான கண்ணீர் சுரப்பு உள்ள கண்களுக்கே காண்டாக்ட் லென்ஸ் உகந்தது.வறண்ட கண்களுக்கு இவை சரி வராது
பயன்பாடுகள்-Indications
1.Keratoconus என்ற கோளாறு.இதில் கண்ணின் கருவிழியை திரை போல் மூடி இருக்கும் Cornea என்ற ஜவ்வு அளவுக்கு அதிகமாக பொருத்தமில்லாமல் அகண்டோ நீண்டோ விழி லென்ஸை ஒழுங்கற்ற முறையில் மூடி இருக்கும் இதை சரியாக காண்டாக்ட் லென்ஸ் பொருத்திக்கொள்ளலாம்.
2.Aphakia என்ற விழி லென்ஸ் இல்லாமை கோளாறு
3.கண் மங்கல்
4.கிட்டப்பார்வை- Myopia
5.தூரப்பார்வை -Hyperopia
6.ஒளி சிதறல் -Astigmatism
7.விழி லென்ஸ் சரியாக பிம்பத்தை பிடிக்கமுடியாமை மற்றும் வளையும் அல்லது மடங்கும் தன்மை இல்லாமை -Presbiopia
8.ஒருகண் கிட்டப்பார்வையும் மறு கண் தூரப்பார்வையும் -Monovision
கூடா பயன் பாடுகள் -Contraindications
1.அதிக தூசியுள்ள இடங்களில் வேலை செய்வது
2.அதிக புகையுள்ள இடங்கள்
3.வேகமாக காற்று வீசும் இடங்கள்
4.நீண்ட காலமாக விழி வெண்படலம் வீங்கி அழற்சி அடைதல்-Chronic Conjunctivitis
5.நீண்ட கால கண் இமை வீக்கம் -Chronic Blepharitis
6.அடிக்கடி கண் தொற்று ஏற்படுதல்
முன் எச்சரிக்கைகள்
கீழ்கண்ட நிலைகளில் முன் எச்சரிக்கை அவசியம்
1.வலிப்பு நோய் -Epilepsy
2.உயர் இரத்த கொதிப்பு -HBP
3.இதய நோய் -Cardiac Disease
4.நீரிழிவு நோய் -இது retina விலும் விழி முன் பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்
5.கர்ப்பத்தடை மாத்திரைகள் பயன்பாடு
லென்ஸ் வகைகள்:
1.Hard Lenses அல்லது Lucite or Plexiglas.இவை PMMA எனப்படும் Polymethylmetacrylate என்ற கடின பிளாஸ்டிக் பொருளால் செய்யப்பட்டவை.இவற்றில் வளையும் அல்லது மடங்கும் தன்மை இருக்காது.இவை நீர் எதிர்க்கும்(water Resistant) தன்மை கொண்டவை.மலிவானவை.இவற்றில் சுலபமாக வலது இடது என மார்க் செய்து கொள்ளலாம்
ஆனால் இவை கடினத்தன்மை உடையவை.வலி ஏற்படுத்தும்.காற்றோட்டம் இருக்காது கண் வீக்கம் உண்டாகும்.கண் ஈரப்பதம் ஒட்டாது.நீண்ட நாள் உபயோகிக்க முடியாதவை
2.மென் கண்ணாடிகள் -Soft Lenses இவை வளையும் அல்லது மடங்கும் தன்மை கொண்டவை வலி இருக்காது காற்றோட்டம் உடையவை .ஆனால் அதிக விலை உடையவை.இவை இடத்தில் நன்றாக பொருந்தி இருக்கும்.
அதே சமயம் இவை ரசாயனங்களை உறிஞ்சும் தன்மை கொண்டவை.மேலும் சீக்கிரம் அழியும் தன்மை கொண்டவை.
இவற்றை இவை கண்ணில் இருக்கும் நிலையில் எந்த ரசாயன சொட்டு மருந்துகளையும் எடுத்துக்கொள்ள கூடாது.
அடிக்கடி இவற்றை rewet செய்ய வேண்டும்
3.Gas Permeable Lens இவற்றை median lens எனலாம்.இவை காற்றோட்டம் (Oxygenpermeable) உள்ளவை என்றாலும் மென் லென்சுகளை போல் நீர் உறிஞ்சாதாவை.ரசாயனங்களை உறிஞ்சாது.
ஆனால் இவற்றில் கொழுப்பு மற்றும் புரதப்படிவுகள் உண்டாகும்.
பின்விளைவுகள்
1.கருவிழி திரை வீக்கம் (Corneal Edema)
2.ரசாயண மருந்துகளின் தாக்கம்
கண் பரிசோதனை சொட்டு மருந்துகள்
கண் பரிசோதனையின் போது கண்களில் சொட்டு மருந்துகள் தருவார்கள்.இது கண்ணின் கருவிழியை டாக்டர் பரிசோதிப்பதற்கு வசதியாக அகட்டுவதற்காக தருகிறார்கள்.இதில் இரண்டுவகை உண்டு.ஒன்று Cyclopentolate என்ற மருந்து.இன்னொன்று Phenylephrin என்ற மருந்து .பெரும்பாலும் இவற்றில் எதோ ஒரு மருந்தையோ அல்லது இரண்டையும் ஒன்றன் பின் ஒன்றாகவோ தருவார்கள்.இரண்டுமே கண் விழியை அகட்டினாலும் அவை வெவ்வேறு கோணங்களில் வேலை செய்கின்றன.சாதாரண பரிசோதனைக்கு Cyclopentonate போதும்.இதன் சக்தி சிலமணித்துளிகள் மட்டுமே (4 டு 24 மணித்துளிகள் ) இருக்கும்.ஆழமான நீண்ட பரிசோதனைகளுக்கு Phenylephrin பயன் படுத்துவார்கள்.இதன சக்தி Atropin ஐ போல் நாட்கணக்கில் (7 நாட்கள்) இருக்கும்
இந்த மருந்துகள் எடுப்பதால் கண் எரிச்சல்,கண் சிவத்தல் புருவங்களில் வலி ,வெளிச்சத்தை தாங்கமுடியாமை,ஆகியவை ஏற்படும்.ஆஸ்பத்திரியை விட்டு குறைந்த பட்சம் எட்டு மணி நேரமாவது வெளியே வரக்கூடாது.அல்லது பொழுது மங்கிய நேரம் வருவது நல்லது.நடை தள்ளாட்டம்,இருதய படபடப்பு,கைகால் நடுக்கம்,சோர்வு,மயக்கம் இவை அசாதாரணமாக ஏற்படலாம் உடனே டாக்டரை அணுக வேண்டும்
குழந்தைகள் வயோதிகர்கள் ஆகியோர் Phenylephrin மற்றும் Atropin சொட்டு மருந்துகளை தவிர்ப்பது நல்லது.
இம்மருந்துகள் அளவுக்கு அதிகமாக எடுத்து கொண்டால் parasympathetic blockade அல்லது Sympathetic overactivity யினால் ஆபத்தான பக்க விளைவுகள் ஏற்படலாம் அவை
1.கண் நீர் அழுத்தம்
2.உயர் இரத்த அழுத்தம்
3.இதய துடிப்பு சீர்கேடு
4.மலச்சிக்கல்
5.சிறுநீர் அடைப்பு
6.வாய் வறட்சி
தலையில் ஏற்படும் சோரியாசிஸ்
தலையில் scalp எனப்படும் மண்டை ஒட்டு தோலில் ஏற்படும் சோரியாசிஸ் scalp psoriasis எனப்படும்.இது ஆரம்ப கட்டத்தில் சிறு அரிப்புடன் தலையின் ஒரு பகுதியில் மட்டும் படரும்.காய்ந்த சருகுகள் போல் உதிரும்.இதைக்கவனிக்காமல் விட்டால் தோல் சிவப்பேறி (inflamed ) தலை முழுவதும் மற்றும் கழுத்து காது என்று பரவும் அரிப்பு கடுமை ஆக இருக்கும் கடுமையான அரிப்பினால் தலை முடி உதிரும் அளவு மற்றும் இரத்தம் வடியும் புண்கள் ஏற்படும் அளவு சொரிய தோன்றும்.இது தலை போடுகிலிருந்து வேறு படும் பொதுவாக தலை பொடுகு கழுத்து காது வரை பரவாது மேலும் தலை பொடுகு ஈரப்பதமுடன் இருக்கும்.
இது பொதுவாக மன அழுத்தம்,வலி நிவாரணியான indomethacin மற்றும் இதய நோய் மருந்தான quinidine மருந்துகளின் அதிக பயன்பாடு மற்றும் பயன்படுத்திய ஷேவிங் பிளேடு,சீப்பு இவற்றினால் உண்டாகும்
இதற்க்கு salicylic acid மற்றும் coal tar கலந்த களிம்பு அல்லது ஷாம்பு பயன்படுத்தலாம்
புற்று நோய் -ஒரு அறிய தகவல்
இன்றைய கால கட்டத்தில் புற்று நோய் ஒரு கொடிய நோய் ஆகவே இருக்கிறது .இருப்பினும் இதை ஆரம்ப நிலையிலேயே மருத்துவம் செய்தால் குணமடைய வாய்ப்பு உண்டு.புற்று நோய் திசுக்களை அகற்ற சமீபத்திய ஒரு ஆய்வு நம்பிக்கைதரும் வகையில் சில தகவல்களை தருகிறது.அது நம்முடைய செல்களின் உட்கருவில் இருக்கும் DNA வின் முனையில் தொப்பி போல் இருக்கும் மூடிக்கு Telomere என்று பெயர்.இந்த telomere தான் DNA பிரிந்து பரவுவதை தூண்டுகிறது.வயது ஆக ஆக இந்த Telomere சிறுத்து தெரிந்துவிடுகிறது.அதன் DNA பரவுதலை தூண்டும் தன்மையும் சிறிது சிறிதாக குறைந்து ஒரு கட்டத்தில் நின்று விடுகிறது.எனவேதான் வயதானதும் திசுக்கள் வளருவதும் குன்றி விடுகிறது.இந்த Telomere ஐ வளர்த்துவிடுவதும் அதற்க்கு சக்தி தருவதும் Telomerase என்ற enzyme ஆகும் .இவ்வளவு தகவலையும் வைத்து இந்த ஆய்வாளர்கள் புற்று நோய் திசுக்களை வளரவிடாமல் தடுக்க முயற்சிக்கிறார்கள்.உதாரணமாக மனா அழுத்தத்தின் பொது நம் உடம்பின் திசுக்களில் உண்டாகும் கெட்ட வேதிகளான Free Radicals என்று சொல்லப்படும் ஆக்சிஜன் ஊக்கிகள் இந்த Telomerase enzyme ஐயும் அதன் மூலம் Telomere ஐயும் கட்டுப்படுத்துவதை அறிந்து உள்ளனர்.ஆனால் இந்த ஆக்சிஜன் ஸ்ட்ரெஸ் எனப்படும் மனா அழுத்தத்தின் பொது உண்டாகும் வேதிகள் நல்ல திசுக்களையும் அழிக்கிறது எனவே வரும் காலத்தில் புற்று நோய் செல்களை மட்டும் அழிக்க கூடிய வகையில் ஒரு முறையை வெகு விரைவில் கண்டறிய இந்த மிகவும் உதவியுள்ளது.
தூக்க மாத்திரைகள்
தூக்கம் பற்றிய சில குறிப்புகள்.நம்முடைய மத்திய நரம்பு மண்டலத்தில் இரு வகை ஹார்மோன்கள் சுரக்கின்றன.ஒன்று தூண்டும் (STIMULATORY) ஹார்மோன்கள். இன்னொன்று முடக்கும் (INHIBITORY ) ஹார்மோன்கள் ஆவன.இதில் பின் சொல்லப்பட்ட முடக்கும் ஹார்மோன்கள்தான் தூக்கத்தையும் அயற்சியையும் உண்டாக்கும் ஹார்மோன்களாகும்.இவை கிளைசின் மற்றும் GABA எனப்படும் ஹார்மோன்களாகும்.இதில் பிரதானமானது GABA எனப்படும் GAMMA AMINO BUTYRIC ACID ஆகும்.இது நரம்பு குழாயின் மேலுள்ள குளோரைடு அயனிகள் பாதையை திறந்து விட்டு அதிக அளவு குளோரைடு அயனிகளை நரம்பிற்குள் செலுத்தி நரம்பை களைப்படைய செய்கிறது.
தூக்க மாத்திரைகளும் அடிப்படையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த வேலையை செய்கின்றன உதாரணமாக BARBITURATES எனப்படும் தூக்க மாத்திரைகள் GABA RICEPTOR களை நேரடியாக தூண்டிவிட்டு நரம்பு மண்டலத்தை களைப்படைய வைக்கின்றன.இவை மூலக்கூறு அமைப்பில் GABA வை போலவே இருப்பதால் இது சாத்தியம் ஆகிறது இவை அதிக பக்க விளைவுகள் கொண்டவை.
BENZODIAZEPIN வகை மருந்துகளான DIAZEPAM ,ALPROZOLAM TRIAZOLAM போன்றவை நேரடியாக GABA RECEPTOR களை தொடுவதில்லை அதே நேரம் இவை பக்கத்தில் அமைந்திருக்கும் தங்களின் சொந்த BENZODIAZEPIN RECEPTOR களில் பொருந்தி GABA வை அதன் RECEPTOR களில் கச்சிதமாக பொருந்தும் படி செய்து நரம்பு மண்டலத்தில் அயர்ச்சியை உண்டாக்கும்.இவை பக்க விளைவு குறைவானவை எனினும் கவனக்குறைவாக உட்கொண்டால் ஆபத்தை விலை விக்க கூடியவை.
ROMAZICON என்னும் மருந்தை BENZODIAZEPIN விஷ முறிப்பானாக பயன் படுத்தலாம் .ஒரு மணி நேரம் மட்டுமே இதன் சக்தி இருக்கும்.இருப்பினும் ஒவ்வொரு மணி நேரத்திற்கு பின்னும் இதை பல முறை டாக்டரின் கண் காணிப்பில் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.
ZOLPIDAM என்ற மருந்து புதிதாக வந்திருக்கிறது.இது பக்கவிளைவுகள் மிக மிக குறைவானது ஆகும்.
ஆனால் ஒன்று நினைவிருக்கட்டும் இயற்கைகையான தூக்கமே மிகவும் சிறந்தது.
துக்க மாத்திரைகள்
தூக்க மாத்திரைகளின் உபயோகம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு வருவதை பார்த்தால் இவை தூக்க மாத்திரைகளா இல்லை துக்க மாத்திரைகளா என்ற கேள்வி எழுகிறது.காரணம் இவை தரும் தூக்கம் ஒரு ஆரோக்கியமான தூக்கம் அல்ல.
இன்று நமது ஊரில் உள்ள நோயாளிகளில் ஆண் பெண் என்று பேத மில்லாமல் 99% தூக்க மாத்திரைகளுக்கு அடிமை பட்டே கிடக்கிறார்கள் .
காரணம் டாக்டர்கள் .இன்ன நோய்க்குத்தான் என்றில்லை சாதாரண இருமல் சளி,தலைவலி காய்ச்சல் என்ற நிலையில் கூட நோயாளியின் விருப்பத்திற்கு ஏற்ப ஏதாவதொரு தூக்க மாத்திரையை பிரிஸ்க்ரிப்ஷனில் பொறுப்பற்ற முறையில் எழுதிக்கொடுத்து விடுகிறார்கள் அந்த நோயாளியும் அந்த பிரிஸ்க்ரிப்ஷனை காலாகாலமும் காப்பி எடுத்து மருந்தகங்களில் கொடுத்து வாழ் நாள் முழுக்க தூக்க மாத்திரையை வாங்கி விழுங்கி தானும் கெட்டு சமுதாயத்தையும் கெடுத்துக்கொண்டு இருக்கிறார்.
இதில் பிரபலமானது alprozolam என்ற தூக்க மாத்திரை பெண்கள் கூட இதன் பெயரை தெரிந்து வைத்து இருக்கிறார்கள்
குடிகாரனுக்கு இந்த மாத்திரையை பயன் படுத்துவர்க்கும் பெரிய பேதம் ஒன்றும் கிடையாது இரண்டுமே Addiction என்ற நிலையை ஏற்படுத்தக்கூடியவை .நரம்பு மண்டலம் ஈரல் கிட்னி இதயம் நுரையீரல் என்று சகட்டு மேனிக்கு வாழ்வாதாரங்களை அழிக்க கூடியவை இயற்கையாக தூங்கி விழிப்பவரின் கண்களில் உற்சாகம் இருக்கும் ஆனால் தூக்க மாத்திரையில் தூங்கி விழிப்பவரின் கண்களில் போதை இருக்கும் சோம்பல் இருக்கும்
உடலில் நீரும் கெட்ட கொழுப்புகளும் தங்கி எடை கூடும் முகம் உப்பி இருக்கும்
எனவே தூக்க மாத்திரைகளை பழக்க படுத்தாதீர்கள்
சாத்துக்குடியின் மகிமை
தினமும் காலையில் டிபன் சாப்பிட்ட பிறகு ஒரு சாத்துக்குடியை இரண்டாக வெட்டி துண்டாக்கவும்.பிறகு ஒருத்தண்டில் தேனை தடவி வாய்க்கு நேராக வைத்து பிழிந்து குடித்தால் இருமல் சளி l,கபம் போன்றவை நீங்கும்.ஒரு மாதம் இதை தொடர்ந்து குடிக்கலாம்
To study about Eczema and the methods of treatment click
எஸீமா பற்றி ஒரு பார்வை இன்று பெரும்பாலான மக்களுக்கு இந்நோய் இருக்கிறது இது பற்றிய மருத்துவ முறைகள் அடங்கிய ஒரு புத்தகத்தை உங்கள் கம்பியூட்டரில் பதிவிறக்கம் செய்ய மேலே உள்ள படத்தை கிளிக் செய்யுங்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் மிகச்சிறந்த மூலிகைகள் பற்றிய ஒரு வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்
நீரிழிவு நோயாளிகள் எந்த எந்த பழவகைகளை எப்பட எப்படி சாப்பிடலாம் என்பதை தமிழிலும் ஆங்கிலத்திலுமாக வீடியோவில் காண இங்கு சொடுக்கவும்
31)மாரடைப்பு (Myocardial Infarction )
நம் இதயத்தின் தசைகள் மிக உறுதியானவை.அதிலும் இதயத்தின் கீழ் அறைகளான வென்ட்ரிக்கிள் களின் தசைகள் மிக மிக தடிமனாகவும் உறுதியாகவும் இருக்கும் இவற்றிற்கு இரத்த போஷாக்கு தரும் இரத்தக் குழாய்களுக்கு கரோனரி தமனிகள் (CORONARY ARTERIES)என்று பெயர் இவைதான் சுத்த ரத்தத்தை இகொடுத்து இதய தசைகளை வலுப்படுத்துகிறது.இந்த குழை பரப்பில் ஏதாவது ஒரு பகுதியில் அடைப்பு ஏற்ப்பட்டாலோ அல்லது சுருக்கம்(VERY RARE) அந்த பகுதியின் திசுக்கள் கொஞ்சங்கொஞ்சமாக செயேல் இழந்து கருத்து விடும்.இந்த நிலைக்கு ISCHEMIA என்பர்.இந்த ischemia அடைந்த பகுதி இதயத்துடிப்பின் வேகத்துடன் ஒத்துப்போகாமல் நமக்கு பல அற்குரிகளை தெரிவிக்கும் இடது பக்கம் இருந்து எதோ ஒரு பாரம் நெஞ்சில் அழுத்துவது போன்ற உணர்வு ஏற்ப்படும் இதற்க்கு பெயர் ANGINA PECTORIS என்பர் இதுதான் ஆரம்ப நிலை இதை கவனிக்காமல் விட்டு விட்டால் இந்த நிலை இதயத்தின் எல்லா பகுதிகளுக்கும் பரவி அந்த திசுக்கள் அழிய (INFARCTION) தொடங்கிவிடும் திசுக்கள் அந்த தசைகள் செத்து போகும் இது வென்ட்ரிக்கிள் பகுதியில் ஏற்ப்பட்டால் மரணம் நிச்சயம்.இதுவே மாரடைப்பு ஆகும்
அறிகுறிகள்:1.இடது புறத்தில் கீழிருந்து தோள்பட்டை முதுகு என்று வலி
பரவும்
2.மூச்சு திணறல்
3.குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு
4.படபடப்பு இரத்த அழுத்தம் கூடுதல் அல்லது குறைதல்
5.வியர்த்தல்
6.களைப்பு,சோர்வு மயக்கம்
இப்படி ஏதாவது அறிகுறிகள் ஏற்பட்டால் 12 மணிநேரத்திற்குள் அவசர சிகிச்சைக்கு உட்பட வேண்டும் இல்லை என்றால் ஆபத்து
சில நேரங்களில் சர்க்கரை நோயாளிகள் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் முதியவர்கள் பலவீனமானவர்கள் இவர்களுக்கு மாரடைப்பு எந்தவித அறிகுறியும் இல்லாமல் ஊமையாகவே கதையை முடித்து விடும்
சில நேரங்களில் சர்க்கரை நோயாளிகள் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் முதியவர்கள் பலவீனமானவர்கள் இவர்களுக்கு மாரடைப்பு எந்தவித அறிகுறியும் இல்லாமல் ஊமையாகவே கதையை முடித்து விடும்
சிகிச்சை ஆலோசனையுடன் கீழ்கண்ட சிகிச்சைகள் தரப்படலாம்
1.பிரதானம் இரத்தக் குழாய்களில் ஏற்ப்படும் Thrombi எனப்படும் சிறு துணுக்குகளை கரைப்பது (உ.ம்) Streptokinase,Urokinase,Alteplase
2.இரத்த ஓட்டத்தை சீராக்குதல் (உ .ம்) Aspirin ,Warfarin ,Heparin
3.இதயத்தசைகளின் பிராணவாயு தேவைகளை குறைத்து அதன் தசைகளுக்கு நிதானத்தை கொடுத்தல் (உ.ம்)Beta blockers like Propranolol ,Atenolol ,Metaprolol ,
இதற்கு மேலும் தகவல்கள் பெற விசிட் http://www.pharmalatest.blogspot.com
30.சன் ஸ்க்ரீன் எனப்படும் சூரிய கதிர்வீச்சு கிரீம்கள்
கோடை வந்துவிட்டது அக்னி நட்சத்திரம் துவங்குமுன்பே அனல் பறக்கும் சீதோஷ்ணநிலை ஆரம்பித்துவிட்டது வெய்யில் என்பதற்காக வேலை வெட்டி இல்லாமல் வீட்டில் முடங்கி கிடக்க முடியுமா வெளியே போய்த்தானே ஆக வேண்டும் இதற்காகவே சூப்பர் மார்க்கெட்டுகளிலும் பார்மசிகளிலும் சன்ஸ்க்ரீன் க்ரீம்களை வைக்க துவங்கி விட்டனர்
சூரிய கதிர்வீச்சில் புற ஊதா கதிர்கள்தான் மிக ஆபத்தானவை இவற்றில் A,B,C இருக்கின்றன C வகை கதிர்கள் பூமியை எட்டுவதில்லை இவை மிக ஆபத்தானவை.இவற்றை முழுவதுமாக ஓசோன் தடுத்துவிடும்.A கதிர்கள் மிக மிக சிறியவை மிக வேகமானவை ஓசோன் இவற்றை தடுப்பதில்லை இவை இரவு பகல் மேக மூட்டம் என்று எல்லா காலங்களிலும் வெளி மண்டலத்தில் இருக்கும் இவை நம் உடலில் ஊடுறுவுவது தெரியாது எனவே நாம் மேக மூட்டமான சுகந்தமாக இருக்கிறதென்று வெளியே அதிகமாக அலைவோம் அப்போது நம்மை அறியாமலேயே UV-A கதிர்கள் அதிகமாக நம் உடலில் ஊடுறுவும்.இதனால் நேரடியான பாதிப்பு இல்லை என்றாலும் இவை தோலின் அடிப்பகுதி வரை ஊடுருவி அப்பகுதியை பலவீனமாக ஆக்குகிறது இந்த நிலையில் மிகவும் ஆபத்தான UV-B யால் அந்த இடத்தில் தோல் புற்று வர வாய்ப்பு உள்ளது.UV -A யில் 1,2 என்று இரண்டு வகை உள்ளது .2-ஆவது வகை கிட்ட தட்ட UV-B ஐ போலவே செயல் படும்
UV-B என்ற இந்த புற ஊதா கதிர்கள் தான் மிகவும் கொடியவை இவை தோல் புற்றை உண்டாக்கும் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணிவரை தெளிவான நல்ல கோடையில் வெளியில் இதன் ஆதிக்கம் இருக்கும் இது erythemaa என்ற தோல் சிவப்பு நிலையை உண்டாக்கும் இந்த நிலை நீடித்தால் தோல் புற்றில் போய் முடியும் ஆனால் இதில் டாக்டரின் ஆலோசனையுடன் ஒரு குறிப்பிட்ட ஒரு சில மணித்துளிகள் மட்டும் நம் தோலை காட்டி இயற்கையான suntan ஐ உண்டாக்கலாம்.suntan என்பது தொலை சிறிது கருமை ஆக மாற்றுவது இதனால் மேற்கொண்டு தோலை கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்க முடியும்.
மேலும் மிகவும் மென்மையான மாலை ஐந்து மணிக்கு மேல் இந்த UV-B மிக மிக குறைந்த அளவுள்ள நேரங்களில் நம் தொலை வெய்யிலில் காட்டினால் நம் தோல் அந்த மிக சிறிய அளவுள்ள UV -B யின் மூலம் வைட்டமின் டி ஐ தயாரிக்கிறது (தொடரும்)
UV-B என்ற இந்த புற ஊதா கதிர்கள் தான் மிகவும் கொடியவை இவை தோல் புற்றை உண்டாக்கும் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணிவரை தெளிவான நல்ல கோடையில் வெளியில் இதன் ஆதிக்கம் இருக்கும் இது erythemaa என்ற தோல் சிவப்பு நிலையை உண்டாக்கும் இந்த நிலை நீடித்தால் தோல் புற்றில் போய் முடியும் ஆனால் இதில் டாக்டரின் ஆலோசனையுடன் ஒரு குறிப்பிட்ட ஒரு சில மணித்துளிகள் மட்டும் நம் தோலை காட்டி இயற்கையான suntan ஐ உண்டாக்கலாம்.suntan என்பது தொலை சிறிது கருமை ஆக மாற்றுவது இதனால் மேற்கொண்டு தோலை கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்க முடியும்.
மேலும் மிகவும் மென்மையான மாலை ஐந்து மணிக்கு மேல் இந்த UV-B மிக மிக குறைந்த அளவுள்ள நேரங்களில் நம் தொலை வெய்யிலில் காட்டினால் நம் தோல் அந்த மிக சிறிய அளவுள்ள UV -B யின் மூலம் வைட்டமின் டி ஐ தயாரிக்கிறது (தொடரும்)
29.ARTHRITIS என்ற எலும்பு அழற்சி
பொதுவாக இதுபோன்ற மூட்டு வலிகள் எலும்பு அழர்ச்சியினாலும் (INFLAMMATION),முனை நரம்பு மண்டலம் நீரிழிவு போன்ற வியாதிகளால் பாதிக்கப்படுவதாலும் (DIABETIC PERIPHERAL NEUROPATHY),இன்னும் சோடியம் யூரேட்டு உப்புகள் மூட்டுகளில் படிவதாலும் ஏற்ப்படுகிறது ஏற்படுகிறது இது 40 வயதிற்கு மேல் சர்வ சாதாரணம்.
இந்த நிலைக்கு நிரந்தர தீர்வு இன்னும் கண்டுபிடிக்க படவில்லை தற்காலிகமான வலி நிவாரணிகளை கொண்டுதான் நாம் இப்போதைக்கு இதில் சுகம் பெற முடியும் ஆனால் வலி நிவாரணிகளை தொடர்ந்து சாப்பிட்டாலும் அவை பெரும்பாலும் அல்சர்,வயிற்றில் அஜீரணம் ரத்த ப்போக்கு இவற்றை உண்டாக்க கூடியவையாக இருக்கின்றன.என்ன செய்வது.
மூட்டு வலியை விட வலிநிவாரணிகள் ஏற்படுத்தும் மரணங்கள் வருடத்திற்கு 10000 முதல் 20000 என்று அமெரிக்க FDA ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.இது போதை மருந்துகளான கஞ்சா அபினி மரிஜுவானா இவற்றால் ஏற்ப்படும் மரணங்களை விடம் அதிகம்
இதற்க்கு காரணம் இந்த வலி மருந்துகள் பெரும்பாலும் அழற்சி (INFLAMMATION),வலி (PAIN) இவற்றை உண்டாக்கும் PROSTAGLANDINS என்ற பொருள் சுரப்பை நிறுத்துவதால்தான்
PROSTAGLANTINS என்ற ஹார்மோன்களை ஒத்த பொருட்கள் எலும்பு தசைகளிலும் களிலும்(SKELITAL MUSCLES),வயிறு ஈரல் போன்ற மென் தசைகளிலும் சுரக்கின்றன இவை நம் உடம்பில் பல நன்மைகளை செய்தாலும் எலும்பு தசைகளில் இவை ARTHRITIS போன்ற வழியை உண்டாக்குகின்றன ஆஸ்பிரின் BRUFEN,NAPROXEN போன்ற வலிநிவாரணிகள் PROSTAGALANTINs சுரப்புகளை நிறுத்தி வலி நிவாரணம் தருகின்றன இருப்பினும் இவை வயிற்றில் பிரச்சனைகளை உண்டாக்குகின்றன
Paracetamol இந்தவகையில் Prostaglandin ஐ மத்திய நரம்புமண்டலம் வழியாக நிறுத்துவதால் வயிற்றில் இது பிரச்சனைகளை உண்டாக்குவதில்லை எனினும் இது ஒரு பலஹீனமான வலிநிவாரணியே ஆகும்.இதை அதிகம் சாப்பிட்டால் ஈரலில் பிரச்சனைகளை உண்டாக்கும்
மிக மெதுவாக மாதக்கணக்காக சாப்பிட்டமின் கொஞ்சம் கொஞ்சமாக நிவாரணம் தரும் SARD (SLOW ACTING ANTI_RHEUMATIC DRUGS) எனப்படும் METHOTREXATE,GOLD SALTS,PENICILLAMINE,HYDRO CHLOROQUIN போன்ற மருந்துகளும் இருக்கின்றன.ஆனால் இவற்றை டாக்டரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடக்கூடாது
மேலும் இப்போது புதிதாக COX-2 INHIBITORS எனப்படும் CELECOXIB,ETORICOXIB என்று --COXIB என்ற பெயரில் முடியும் வலிநிவாரணிகள் வந்திருக்கின்றன இவை எலும்பு தசைகளில் மட்டுமே PROSTAGLANDIN சுரப்புகளை நிறுத்துகின்றன வயிறு போன்ற இடங்களில் இவை பிரச்சனைகளை உண்டாக்குவதில்லை எனினும் இதயம் இரத்த மண்டலம் ஆகிய இடங்களில் இவை மிகப்பெரும் தாக்கங்களை உண்டாக்குவதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள்
ஆக எந்த மருந்தாக இருந்தாலும் அவற்றை இஷ்டத்திற்கும் மிட்டாய் விழுங்குவது மாதிரி விழுங்காமல் ஒரு சிறந்த மருத்துவரின் ஆலோசனை படி சாப்பிடுங்கள்.இறைவன் அனைவருக்கும் சுகமளிப்பானாக சுகம் தருபவர்களில் மிகச்சிறந்தவன் இறைவன் ஒருவனே
28.பழரசங்கள் -ஒரு பார்வை
அப்பப்பா என்ன வெய்யில் கூலாக ஒரு ப்ரெஷ் ஜூஸ் சாப்பிடலாமே என்று இப்போது இந்த வெய்யில் சீசனில் பழச்சாறு ஸ்டால்களில் ஏகப்பட்ட கூட்டங்கள் அலைமோதுவதை காணலாம் ப்ரெஷ் ஜூஸ் ரொம்ப காஸ்ட்லி எனவே ஏழைகளின் பட்ஜெட்டுக்கு அது ஒத்துவராது என்பதற்காகவே இப்போது கம்பெனிகள் செயற்கை ப்ரூட் ஜூஸ்களை டின்களிலும் ஸ்ட்ரா ஒட்டிய பாக்கட்களிலும் நிரப்பி கலர்கலராக விற்ப்பனைக்கு வைத்துள்ளன இவற்றின் டின்களையும் பாக்கட்டுகளையும் பார்த்தாலே கண்ணை பறிக்கும் நாவில் நீர் ஊறும் அளவு கலர்கலராக பழங்களின் படங்களையும் போட்டு அழகாக அடுக்கி வைத்திருப்பார்கள்.இன்னும் tang போன்ற பழச்சாறு பொடிகள் மேங்கோ ஆரஞ்சு கிரேப் என்று வேறு கடைகளில் அடுக்கப்பட்டு இருக்கின்றன
ப்ரெஷ் ஜூஸ்களை பார்ப்போம். இதை பொறுத்தவரை பழச்சாற்றை உங்கள் வீட்டிலேயே உண்டாக்கி அதில் மேற்கொண்டு சர்க்கரை எதுவும் சேர்க்காமல் அதை வடிகட்டாமல் cloudy ஆகவே அருந்துவது மிகவும் நல்லது ஏனென்றால் கடைகளில் இந்த அளவிற்கு பக்குவம் இருக்காது.பொதுவாக எல்லாப்பழங்களிலும் சர்க்கரை கூடுதல் குறைவாக இருக்கிறது அதே நேரம் நார்ச்சத்தும் இருக்கிறது இந்த நார்ச்சத்துதான் பழங்கள் சாப்பிடுபவரின் இரத்தத்தில் சர்க்கரை உடனேயே உயரவிடாமல் பாதுகாக்கிறது இந்த நார்ச்சத்து ஜீரணத்திர்க்கும் மலச்சிக்கலுக்கும் மிகவும் நல்லது.இதை ஜூசில் வடிகட்டி எடுத்துவிடுவார்கள்.இந்த ஜூஸ் சர்க்கரை நோயாளிக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே மிகவும் கெடுதல் ஆகும் எனவே ஜூஸ் வடிகட்டாமல் சாப்பிடவேண்டும் அல்லது பழங்களாகவே சாப்பிடுங்கள.
மாம்பழத்தில் சர்க்கரை கூடுதலாக இருந்தாலும் அதிக நார்ச்சத்தும் இருக்கிறது எனவே ஒரு சர்க்கரை நோயாளி பாதி மாம்பழத்தை வடிகட்டாமல் ஜூஸ் ஆகவோ அல்லது அப்படியேவோ சாப்பிடலாம்
செயற்கை ஜூஸ்கள் பல வடிவங்களில் பொடியாகவும் பேக்குகளில் அடைக்கப்பட்ட சாறுகளாகவும் மிகப்பெரும் விளம்பரங்களுடன் சூப்பர்மார்க்கெட்டுகளில் கண்ணை பறிக்கும் விதமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இவை அத்தனையிலுமே PRESERVATIVES,EMULSIFYERS,STEBILIZERS,ADDITIVES என்று வேதிப்பொருட்களை கலந்து இருப்பார்கள்.இவை அத்தனையுமே தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு கெடுதல் தான்.சில பேக்குகளில் NO PRESERVATIVES என்று போட்டு இருப்பார்கள் என்றாலும் அதில் மற்ற வேதிப் பொருட்கள் கலந்து இருக்கும் அதை பிரிண்ட் பண்ணி இருக்க மாட்டார்கள்
பொதுவாக SODIUM BENZOATE என்ற வேதிப்பொருள்தான் அதிகமாக பெரும்பாலான ஜோச்களில் வேதி சேர்க்கப் படுகிறது இது இயற்கையாகவே ஆப்பிள் அவுரி நெல்லி ப்ளம்ஸ் போன்ற பழங்களில் இருக்கிறது இதற்க்கு ORGANIC SODIUM BENZOATE என்று பெயர்.இதில் கெடுதல் இல்லை ஆனால் ஜூஸ்களில் செயற்கையாக SODIUM BENZOATE ஐ கலக்கிறார்கள் இதனால் LEUKIMIA எனப்படு இரத்தப்புற்று வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று கண்டு பிடித்து இருக்கிறார்கள்
27.மூட்டு வலியும் யூரிக் அமிலமும்
Gout என்று சொல்லக்கூடிய மூட்டு வலி இப்போதுள்ள நவீன கால உணவு பழக்கங்களில் சர்வ சாதாரணம் ஆக இருக்கிறது
இது யூரிக் அமிலம் இரத்தத்தில் அதிகரிப்பதால் (Hyperuricemia )உண்டாகிறது நாம் சாப்பிடும் மிருகங்களின் இறைச்சி(Red Meat ),மது(Alcoholic Drinks),சாக்கலேட்டுகள் போன்றவற்றில் Purine என்ற ஒரு அமினோஅமிலம் இருக்கிறது இது புரத வகையை சார்ந்ததாகும் பொதுவாக புரதங்களை நாம் சாப்பிட்டால் அது யூரியா கிரியாட்டினின் போன்ற நைட்ரஜன் கழிவுகளாக இரத்தத்தில் மாறி சிறுநீரில் வெளியேறிவிடும் அந்த வகையில் இந்த purine உம் யூரிக் அமிலம் என்ற நைட்ரஜன் நச்சாக மாறி சிறுநீரில் வெளியேற வேண்டும் இந்த யூரிக் அமிலம் சோடியம் அயநிகளுடன் சேர்ந்து சோடியம் யூறேட்டுகள் என்ற உப்பாக மாறி சில அறிய முடியாத காரணங்களால் (IDIOPATHIC REASONS) நம் உடலின் மூட்டு இடுக்குகளில் போய் தங்குகிறது இந்த உப்புகள் கண்ணாடி சில்லுகள் போல் கூர்மையானவை எனவே இவை மூட்டு வலியை (ARTHRITIS)ஏற்ப்படுத்துகின்றன.இப்படி அறியமுடியாத காரணங்களால்(ENZYMATIC,IDIOPATHIC DEFECTS) ஏற்படும் மூட்டுவலிக்கு PRIMARY GOUT என்று பெயர்
இன்னும் சிறுநீரக பிரச்சினை சிலவகை மருந்துகள் புற்று நோய் இவற்றினால் உண்டாகும் வலிக்கு SECONDARY GOUT என்று பெயர்.
90% PRIMARY GOUT ஆகவே இருக்கிறது
மேலும் இதை குறுகிய கால மூட்டு வலி (ACUTE GOUT) என்றும் நாட்பட்ட மூட்டுவலி (CHRONIC GOUT) என்றும் பிரிக்கலாம்
மருத்துவம் 1.குறுகிய கால GOUT:-1.INDOMETHACIN (INDOCID);2.PHENYL BUTAZONE;3.COLCHICINE
மேலும் பொதுவாக ஆஸ்பிரினை தவிர்த்து பெரும்பாலான NSAID கலை இதற்க்கு பயன்படுத்தலாம் ஆனால் மருத்துவரின் ஆலோசனையை பெறவேண்டும் ஏனென்றால் ஆஸ்பிரின் மற்றும் அதுபோன்ற யூரிக் அமிலத்தைவிட பலஹீனமான அமிலங்களை எடுத்துக்கொண்டால் அவை யூரிக் அமிலம் வெளியேற விடாமல் செய்துவிடும் எனவே ஜாக்கிரதை GOUT வழிக்கு ஆஸ்பிரின் ஒருபோதும் சாப்பிடக் கூடாது
2.நாட்பட்ட GOUT :-PROBENECID ;SULFINPYRAZONE ;ALLOPURINOL
இதில் PROBENECID மற்றும் SULFINPYRAZONE ஆகியவை அஸ்பிரினை போல் பலஹீனமான அமிலங்களே ஆகும் இவற்றை குறைவாக சாப்பிட்டால் இவையும் ஆஸ்பிரின் போல் யூரிக் அமிலம் வெளியேறாமல் செய்துவிடும் எனவே இவற்றை டாக்டர் தரும் அளவுக்கு கொஞ்சமும் குறையாமல் மிகவும் ஜாக்கிரதை யாக சாப்பிடவேண்டும்
நம் உடம்பில் PURINE ஐ யூரிக் அமிலமாக மாற்றுவது XANTHINE OXIDASE என்ற ENZYME ஆகும் ALLOPURINOL இந்த ENZYME ஐ முடக்கி யூரிக் அமிலம் உண்டாகாமல் தடுக்கிறது எனவே நாட்பட்ட GOUT டிற்கு ALLOPURINOL மிகவும் பாதுகாப்பானது ஆகும் இது ZYLORIC என்ற பெயரில் கிடைக்கிறது டாக்டரின் ஆலோசனையின் பெயரில் இதை சாப்பிடலாம்
இது யூரிக் அமிலம் இரத்தத்தில் அதிகரிப்பதால் (Hyperuricemia )உண்டாகிறது நாம் சாப்பிடும் மிருகங்களின் இறைச்சி(Red Meat ),மது(Alcoholic Drinks),சாக்கலேட்டுகள் போன்றவற்றில் Purine என்ற ஒரு அமினோஅமிலம் இருக்கிறது இது புரத வகையை சார்ந்ததாகும் பொதுவாக புரதங்களை நாம் சாப்பிட்டால் அது யூரியா கிரியாட்டினின் போன்ற நைட்ரஜன் கழிவுகளாக இரத்தத்தில் மாறி சிறுநீரில் வெளியேறிவிடும் அந்த வகையில் இந்த purine உம் யூரிக் அமிலம் என்ற நைட்ரஜன் நச்சாக மாறி சிறுநீரில் வெளியேற வேண்டும் இந்த யூரிக் அமிலம் சோடியம் அயநிகளுடன் சேர்ந்து சோடியம் யூறேட்டுகள் என்ற உப்பாக மாறி சில அறிய முடியாத காரணங்களால் (IDIOPATHIC REASONS) நம் உடலின் மூட்டு இடுக்குகளில் போய் தங்குகிறது இந்த உப்புகள் கண்ணாடி சில்லுகள் போல் கூர்மையானவை எனவே இவை மூட்டு வலியை (ARTHRITIS)ஏற்ப்படுத்துகின்றன.இப்படி அறியமுடியாத காரணங்களால்(ENZYMATIC,IDIOPATHIC DEFECTS) ஏற்படும் மூட்டுவலிக்கு PRIMARY GOUT என்று பெயர்
இன்னும் சிறுநீரக பிரச்சினை சிலவகை மருந்துகள் புற்று நோய் இவற்றினால் உண்டாகும் வலிக்கு SECONDARY GOUT என்று பெயர்.
90% PRIMARY GOUT ஆகவே இருக்கிறது
மேலும் இதை குறுகிய கால மூட்டு வலி (ACUTE GOUT) என்றும் நாட்பட்ட மூட்டுவலி (CHRONIC GOUT) என்றும் பிரிக்கலாம்
மருத்துவம் 1.குறுகிய கால GOUT:-1.INDOMETHACIN (INDOCID);2.PHENYL BUTAZONE;3.COLCHICINE
மேலும் பொதுவாக ஆஸ்பிரினை தவிர்த்து பெரும்பாலான NSAID கலை இதற்க்கு பயன்படுத்தலாம் ஆனால் மருத்துவரின் ஆலோசனையை பெறவேண்டும் ஏனென்றால் ஆஸ்பிரின் மற்றும் அதுபோன்ற யூரிக் அமிலத்தைவிட பலஹீனமான அமிலங்களை எடுத்துக்கொண்டால் அவை யூரிக் அமிலம் வெளியேற விடாமல் செய்துவிடும் எனவே ஜாக்கிரதை GOUT வழிக்கு ஆஸ்பிரின் ஒருபோதும் சாப்பிடக் கூடாது
2.நாட்பட்ட GOUT :-PROBENECID ;SULFINPYRAZONE ;ALLOPURINOL
இதில் PROBENECID மற்றும் SULFINPYRAZONE ஆகியவை அஸ்பிரினை போல் பலஹீனமான அமிலங்களே ஆகும் இவற்றை குறைவாக சாப்பிட்டால் இவையும் ஆஸ்பிரின் போல் யூரிக் அமிலம் வெளியேறாமல் செய்துவிடும் எனவே இவற்றை டாக்டர் தரும் அளவுக்கு கொஞ்சமும் குறையாமல் மிகவும் ஜாக்கிரதை யாக சாப்பிடவேண்டும்
நம் உடம்பில் PURINE ஐ யூரிக் அமிலமாக மாற்றுவது XANTHINE OXIDASE என்ற ENZYME ஆகும் ALLOPURINOL இந்த ENZYME ஐ முடக்கி யூரிக் அமிலம் உண்டாகாமல் தடுக்கிறது எனவே நாட்பட்ட GOUT டிற்கு ALLOPURINOL மிகவும் பாதுகாப்பானது ஆகும் இது ZYLORIC என்ற பெயரில் கிடைக்கிறது டாக்டரின் ஆலோசனையின் பெயரில் இதை சாப்பிடலாம்
26.பப்ளிமாஸ் ஜாக்கிரதை
பப்ளிமாஸ் அல்லது கிரேப் புரூட் மிகவும் அற்புதமான ஒரு ஆரஞ்சு வகை சிட்ரஸ் பழம் ஆகும் இதன் சர்க்கரை சத்து தன்மை (Glycemic Index )வெறும் 25 தான்.இதில் சுத்தமாக கொலஸ்ட்ரால் இல்லை வைட்டமின் A யும் வைட்டமின் C யும் நிறைய வுள்ளன மற்றும் புரதமும் தாதுக்களும் நிறைய உள்ளன இருந்தாலும் இந்த பழத்தில் இருக்கும் Furanocoumarins என்ற பொருள் மிகவும் ஆபத்தான பின் விளைவுகளை மற்ற மருந்துகளுடன் ஏற்படுத்தும்.உதாரணமாக கொலஸ்ட்ரால் மருந்துகளான --statin வகை மருந்துகள்,இரத்த கொதிப்பு மருந்துகளான Amlodipine Nifedipine போன்ற கால்ஷியம் அயனி பாதை அடைப்பான்கள் (Calcium Channel Blockers),Ciprofloxacin போன்ற 4-Fluoroquinolin வகை ஆண்டியாட்டிக்குகள்,Cimetidin போன்ற வயிற்று கோளாறு மருந்துகள் இன்னும் சிலவகை புற்று நோய் மருந்துகள் இவற்றை சாப்பிடுபவர்கள் பப்ளிமாஸ் அல்லது அதன் சாறு சாப்பிடக்கூடாது
ஏனென்றால் பப்ளிமாசில் இருக்கும் Furanocoumarins மேற்கூறிய மருந்துவகைகளை வீரியம் இழக்க செய்து அவற்றை உடம்பிலிருந்து கழிவாக வெளியேற்றும் (Metabolize & Excrete )நம் ஈரலின் cytochrom-450) என்ற Enzyme ஐ முடக்கி அந்த மருந்துகளை மேலும் வீரியம் அடையச்செய்து பெரும் பக்க விளைவுகளை ஏற்ப்படுத்திவிடும்
மற்றபடி எந்த மருந்துகளும் சாப்பிடாத நிலையில் பப்ளிமாஸ் சிறுவர் முதல் பெரியவர் வரை சாப்பிட ஏற்ற ஒரு அருமையான பழம் ஆகும்
இது போல் பல நல்ல மருத்துவ ஆலோசனைகள் பெற http://www.seyedalipharmacistkpm.blogspot.com என்ற blog க்கு வாருங்கள்.மேலும் ஆரோக்கியம் சம்பந்தமான தகவல்களுக்கு (IN ENGLISH):- http://www.pharmalatest.blogspot.com
வீடியோக்களுக்கு
25.தலைவலி மருந்துகள்
தலைவலியா ஒரு அனாசின் சாப்பிடுங்கள் தலைவலி பறந்து போகும் என்று விளம்பரங்களை பார்த்திருப்பீர்கள் வீட்டு வேலையில் களைத்த பெண்ணின் படம் ஒருபக்கம் ஆபீஸ் வேளையில் களைத்த ஆணின் படம் ஒருபக்கம் என்று போட்டுவிட்டு அடுத்து அவர்கள் வாயில் ஒரு அனாசின் போடுவது மாதிரி படங்களை காட்டிவிட்டு அடுத்து மாயாஜாலம் போல் தலைவலி பறந்துபோய் அவர்கள் சிரிப்பது மாதிரி படங்கள் போட்டு விளம்பரப்படுத்துவார்கள்.
இந்த விளம்பரங்களை பார்த்து மிட்டாய் சாப்பிடுவதுமாதிரி அனாசினை இஷ்டத்திற்கும் வாங்கி விழுங்கினால் பாக்கட்டில் இருக்கும் பர்ஸ் கரைவது மட்டுமல்ல தலைவலியை விற்று திருகு வலியை வாங்கிய கதையாக அது முடியும்
கவனம் ஒரு அனாசினில் 400 மி.கி. ஆஸ்பிரினும் 32 மி.கி. caffeine உம் இருக்கிறது அதாவது இரண்டு அனாசினை நீங்கள் விழுங்கும் பொது உங்கள் வயிற்றில் 800 மி.கி.ஆஸ்பிரினும் 64 மி.கி.caffeine உம் சேர்க்கிறது.தலைவலி பறப்பதற்கு இந்த வித்தைதான் காரணம்.ஆனால் இதையே பழக்கமாக்கி கொண்டாள் வயிற்றில் அல்சர் வர வாய்ப்பு உண்டு.மேலும் அதிக காபினினால் Caffeine Rebound Headache வரவும் வாய்ப்புண்டு எனவே கவனம்
24.சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழங்கள் சாப்பிடலாமா?
பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு சாப்பிடுவதை விரும்புவதில்லை அந்த வகையில் பழங்களையும் ஒதுக்கிவிடுவார்கள் ஆனால் நார்ச்சத்துள்ள தர்பூசணி ,ஆப்பிள் ,ஸ்ட்ராபெர்ரி ,பப்பாளி ,ப்ளம்ஸ் ,முலாம்பழம் ,பாதி பழுத்த கொய்யா ,மாதுளை இவற்றை கீழ்கண்டவாறு உண்ணலாம்.பொதுவாக இவற்றில் சர்க்கரை சத்து மிகக் குறைவாக இருப்பதால் இவை இரத்தத்தின் சர்க்கரை அளவை மிதமாக படிப்படியாகவே உயர்த்தும்.இது சர்க்கரை நோயாளிக்கு மிகவும் நல்லதே ஆகும்
பொதுவாக சர்க்கரை நோயாளிக்கு தினசரி உடல் இயக்கத்திற்கு 10 டு 15 கிராம் சர்க்கரை தேவை இதை கீழ் கண்டவாறு பெறலாம்
75 கிராம் ஆப்பிள்,ப்ளூபெர்ரி ,செர்ரி ,கிவி,பேரிக்காய்,அன்னாசி,ப்ளம்ஸ் இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிட்டால் 10 கிராம் சர்க்கரை நம் உடம்பிற்கு கிடைக்கும்.
23.வயிற்று போக்கு-என்ன செய்யலாம்
சிலருக்கு வெளியூர் பயணம் வந்த இடத்தில் உணவு ஒவ்வாமை குடிதண்ணீரில் அசுத்தம் இப்படி பல காரணங்களாலும் இதர காரணங்களாலும் வயிற்று பேதி ஏற்ப்படும் தொற்று நோய்களால் பேதி ஏற்ப்படுவது Dysentry ஆகும் இது Entameba Hystolytica,Enterobacter ,Ecoli இன்னும் இதர பாக்டீரியா களால் உண்டாவது இதற்க்கு மலத்தை சோதித்து டாக்டரின் ஆலோசனையின் பேரில் ஆண்டிபையாட்டிக்குகள் சாப்பிடவேண்டும் இதன் அறிகுறிகள் வாயிற்று வலி சில நேரங்களில் வாந்தி (காலரா),ரத்தம் தொடர்ந்து பேதி,வெறும் தண்ணீராக போவது ,அசாதாரண துர்நாற்றம் என ஏற்ப்படும் மூன்று நாட்களுக்கு மேல் பேதி தொடர்ந்தால் உடனே மருத்துவரிடம் காட்டவேண்டும் .
இது அல்லாமல் சாதாரணமாக உணவு,தண்ணீர் இடமாற்றம் சீதோஷ்ண நிலை ஒவ்வாமை இவற்றினால் பேதி ஏற்பட்டால் இதற்க்கு Loperamide என்ற மருந்து மிகவும் சிறந்தது .இது பார்மசிகளில் OTC ஆகவே கிடைக்கும் பேதி ஏற்பட்டவுடன் முதலில் மாத்திரைக்கு பதில் கடும் கருப்பு தேநீரில் சர்க்கரை சேர்க்காமல் ஒரு முழு எலுமிச்சை சாற்றை பிழிந்து அருந்துங்கள் இதற்கும் கேக்கவில்லை என்றால் 6 Loperamide மாத்திரைகள வாங்குங்கள் .உணவுக்கு அரை மணி முன்பு 2 மாத்திரைகள விழுங்குங்கள் பேதி உடனே நின்று விட்டால் தொடர்ந்து மாத்திரையை ஒருநாளைக்கு மூன்று வேலை இரண்டு நாட்களுக்கு சாப்பிடுங்கள் பிறகு நிறுத்தி விடுங்கள் பால் பழங்களை தவிர்த்துவிடுங்கள் தயிர் தயிர் சாதம் கருப்பு தேநீர் மிதமான இனிப்புடன் சேர்த்துக்கொள்ளுங்கள் .இரண்டு நாட்களுக்கு மேல் இந்த மாத்திரை சாப்பிட வேண்டாம் அதற்க்கு பின்னும் பேதி தொடர்ந்தால் அது தொற்று நோய் ஆக இருக்கலாம் எனவே டாக்டரிடம் காட்டி antibiotics ,metronidazole எடுத்துகொள்ளுங்கள் இறைவன் அனைவருக்கும் சுகம் அளிப்பவனாக இருக்கிறான்
22.இருமல் மருந்துகள்
இருமல்கள் இரண்டு வகைப்படும் 1.வறட்டு இருமல் .இதில் நோய் கிருமி தோற்று இருக்காது பெரும்பாலும் புகை தூசு மகரந்த பொடி இவற்றின் ஒவ்வாமையினால் உண்டாகும் இதை அடக்குவதால் தீமை ஏதும் இல்லை.இதற்க்கு ஹிஸ்டமின் எதிர்ப்பான்கள் (Anti Histamins) மற்றும் இருமல் அடக்கிகள் (Cough suppressants) உபயோகிக்கலாம்.ஹிஸ்டமின் எதிர்ப்பான்களில் Chlorpheniramin Maleate,Cromylene இவை சிறந்தவை ஏனெனில் இவை சக்திவாய்ந்தவை அதே நேரம் குறைவாக அசதி உண்டாக்குபவை.Diphenhydramin,Triprolidine இவை மிக அசதி உண்டாக்குபவை மேலும் அபின் கூட்டுபொருள்கள் Codeine,Dextrometharphane இவை இருமல் அடக்கிகள் இவற்றை டாக்டரின் ஆலோசனைப்படியே எடுக்கவேண்டும்
2.சளி இருமல் இது நோய் கிருமியினால் உண்டாவது இதை மேற்கூறிய மருந்துகைனால் அடக்குவது தீமை ஆகும் சளி உள்ளேயே தங்கிவிடும் இதற்க்கு சளி இளக்கிகளை (Expectorants) உபயோகிக்க வேண்டும் Guaifenacin மிக சிறந்த சளி இளக்கியாகும் டாக்டரின் ஆலோசனையுடன் ஆண்டிபயாட்டிக்குகளும் பயன்படுத்தலாம்
21.காதுகளின் அமைப்பு
இதில் முதலில் நம் காதுகளின் அமைப்பு பற்றி அடிப்படையாக தெரிந்துகொள்வது நல்லது.நம் காதுகளை மேலோட்டமாக 1.வெளிக்காது 2.நடு காது 3.உள்காது என்று மூன்று பகுதிகளாக பிரிக்கலாம்.
1.முதலில் வெளிக்காது பற்றி பார்க்கலாம்.இதில்அ ) auricle அல்லது pinna எனப்படும் காது மடல் ஆ ).அதை தொடர்ந்து ear cannal காது குழாய்.இது மிகவும் மென்மையானதாகவும் உறுதியாக நரம்புகளால் இழைக்க பட்டதாகவும் இருக்கும் இதனால் சிறிய எரிச்சல் கூட இதில் சுரப்புகளை உண்டாக்கும் இந்த சுரப்புகள் தான் காது குடுமி ஆகும் இ )tymphanic membrane எனப்படும் காத்து ஜவ்வு.
2.நடு காது இது காது ஜவ்வுக்கு அடுத்து உள்ள பகுதி .இது ஒரு பட்டாணி அளவுள்ள ஒரு சிறிய கூடு ஆகும் இதற்குள் ossicles எனப்படும் மூன்று சிறிய எலும்புகள் இணைந்திருக்கும்.இந்த எலும்புகள் காது ஜவ்வு மூலம் கடந்து வந்த ஒலியை மேலும் அதிகரித்து உள்காதுக்கு அனுப்பும்.இந்த நடுக்காது பொதுவாக காற்றினால் நிறைந்திருக்கும் Eustachian Tubes எனப்படும் சிறிய பென்சில் முனை அளவுள்ள ஒரு குழாய் இந்த நட்க்காதை நம் மூச்சுக்குழாய் தொண்டையுடன் இணையும் nasopharynx என்ற பகுதியை இணைத்திருக்கும்.இதன் மூலம் நடுக் காதின் காற்றழுத்தத்தை வெளி காற்றுமண்டலத்துடன் சமப்படுத்தி இருக்கும்.ஒவ்வொருமுறை நாம் தடையை அசைத்து வாயை மெல்லும் போதெல்லாம் ஒருவித கிளிக் சத்தம் நம் காதுகளை ரீங்கரிப்பது இந்த eustachian tubes திறந்து திறந்து மூடுவதாலும் காற்று குமிழ்கள் அதன் வழியே இங்கும் அங்கும் செல்வதாலும் தான்
உதாரணமாக நாம் பயணிக்கும் விமானம் ஏறும் போதும் இறங்கும் போதும் வித்தியாசமான வளிமண்டல காற்றழுத்தத்திற்கு மாறுகிறது .அப்போது இந்த மாற்றத்தை எதிர்பாராத இந்த Eustachian குழாய்கள் சரிவர திறக்காமல் மூடிக்கொள்ளும் இதனால் நடுக்காது பகுதியில்நேருக்கடி உண்டாகி வேதனை ஏற்ப்படும் எனவே ஒரு சூயிங்கத்தை வாயில் போட்டு மென்றுகொண்டிருந்தால் இந்த குழாய்கள் சரிவர இயங்கி வேதனை தீரும்
3.உள் காது இதில் கேட்கும் கருவியான cochlea என்ற அமைப்பும் உள்காதை சமநிலைப்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் vestibular apparatus என்ற அமைப்பும் உள்ளது
காது நோய்களும் சிகிச்சையும்
1.Boil-உண்ணிகள் இதில் வலி,இருக்கும் எப்போதாவது கேட்கும் சக்தியில் பிரச்சினை நீர் வடிதல் போன்றவை இருக்கும்.காதின் மடலில் வரும் .
Boil பெரும்பாலும் காது மடலையே தாக்குகிறது .-
3.Bacterial Media Ottitis - பாக்டீரியா நடுக்காது தொற்று -இதற்கு Ottitis media என்பர் இது பெரும்பாலும் H.Influenza மற்றும் S.pneumonia போன்ற கிருமிகளால் உண்டாகிறது.வலி,காது கேளாமை,காய்ச்சல்,சீழ் வடிதல்,இதன் அறிகுறிகள்.சுயசிகிச்சை கூடாது மருத்துவரின் ஆலோசனைப்படி ஆன்டிபயாட்டிக்குகள் எடுக்கவேண்டும்
எச்சரிக்கை குழந்தைகளுக்கு பாலாடையில் பாலூட்டும்போது குழந்தையை தலையை மிகவும் தாழ்வாக வைத்து பாலூட்டினால் பால் eustachian குழாய் வழியே நடுக்காதுக்குள் செல்ல வாய்ப்பு உண்டு.
காது குருமி தேக்கம் நம்காதுகளில் வெளியிலிருந்து தூசி, கிருமிகள் உள்ளே போகாமல் இருக்க இயற்கையாகவே இது வெளிக்காது மடலை தொடர்ந்து நடுக்காது வரை உள்ளே இறங்கும் ear channel இல் பசை போல உற்பத்தியாகிறது காது குழலில் சில சமயங்களில் உண்டாகும் அழர்ச்சியினால் அல்லது அடிக்கடி காது குடைவதால் இது அதிகமாக சுரந்து தேங்கி கெட்டியாகி காதை அடைத்துக் கொள்ளும் .இதை கவனக்குறைவாக ஹேர்பின் தீக்குச்சி காட்டன் முனை குச்சிகளை கொண்டு எடுக்க முயற்ச்சித்தால் 25% தான் வெளிவரும் 75% மேலும் உள்ளேயே தள்ளப்பட்டு விடும்
குருமி கரைப்பான்கள் பார்மசிகளில் கிடைக்கும் இவற்றில் கார்பமைட் பெராக்சைடு (Carbamide Peroxide or Urea Hydrogen Peroxide) மிகவும் சிறந்தது.இந்த சொட்டு மருந்தை கடையில் வாங்கி ஒருவேளைக்கு மூன்று சொட்டு வீதம் இரண்டு வேலை நான்கு நாட்கள் உபயோகிக்கவேண்டும்.பிறகு Ear Syringe மூலம் கரைந்து வெளியாகும் குருமியை கவனமாக எடுக்கவேண்டும்
2.நடு காது இது காது ஜவ்வுக்கு அடுத்து உள்ள பகுதி .இது ஒரு பட்டாணி அளவுள்ள ஒரு சிறிய கூடு ஆகும் இதற்குள் ossicles எனப்படும் மூன்று சிறிய எலும்புகள் இணைந்திருக்கும்.இந்த எலும்புகள் காது ஜவ்வு மூலம் கடந்து வந்த ஒலியை மேலும் அதிகரித்து உள்காதுக்கு அனுப்பும்.இந்த நடுக்காது பொதுவாக காற்றினால் நிறைந்திருக்கும் Eustachian Tubes எனப்படும் சிறிய பென்சில் முனை அளவுள்ள ஒரு குழாய் இந்த நட்க்காதை நம் மூச்சுக்குழாய் தொண்டையுடன் இணையும் nasopharynx என்ற பகுதியை இணைத்திருக்கும்.இதன் மூலம் நடுக் காதின் காற்றழுத்தத்தை வெளி காற்றுமண்டலத்துடன் சமப்படுத்தி இருக்கும்.ஒவ்வொருமுறை நாம் தடையை அசைத்து வாயை மெல்லும் போதெல்லாம் ஒருவித கிளிக் சத்தம் நம் காதுகளை ரீங்கரிப்பது இந்த eustachian tubes திறந்து திறந்து மூடுவதாலும் காற்று குமிழ்கள் அதன் வழியே இங்கும் அங்கும் செல்வதாலும் தான்
உதாரணமாக நாம் பயணிக்கும் விமானம் ஏறும் போதும் இறங்கும் போதும் வித்தியாசமான வளிமண்டல காற்றழுத்தத்திற்கு மாறுகிறது .அப்போது இந்த மாற்றத்தை எதிர்பாராத இந்த Eustachian குழாய்கள் சரிவர திறக்காமல் மூடிக்கொள்ளும் இதனால் நடுக்காது பகுதியில்நேருக்கடி உண்டாகி வேதனை ஏற்ப்படும் எனவே ஒரு சூயிங்கத்தை வாயில் போட்டு மென்றுகொண்டிருந்தால் இந்த குழாய்கள் சரிவர இயங்கி வேதனை தீரும்
3.உள் காது இதில் கேட்கும் கருவியான cochlea என்ற அமைப்பும் உள்காதை சமநிலைப்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் vestibular apparatus என்ற அமைப்பும் உள்ளது
காது நோய்களும் சிகிச்சையும்
1.Boil-உண்ணிகள் இதில் வலி,இருக்கும் எப்போதாவது கேட்கும் சக்தியில் பிரச்சினை நீர் வடிதல் போன்றவை இருக்கும்.காதின் மடலில் வரும் .
Boil பெரும்பாலும் காது மடலையே தாக்குகிறது .-
சிகிச்சை
இது தானாகவே சில நாட்களில் குணமாகிவிடும் இது staphylococcus aureus என்ற கிருமியினால் வரும் இதற்க்கு மருந்து தேவை இல்லை சூடான ஒத்தடம் கொடுத்தால் போதும்
2.Bacterial External Otitis -பாக்டீரியா வெளித் தொற்று -இதற்க்கு otitis externa or swimmers ear என்றும் பெயர் பெரும்பாலும்குளிக்கும்போதும் கோடையிலும் நீர் உள்ளே போவதால் வரும்.அறிகுறிகள்,வலி இருக்கும்,அரிப்பு .செவிட்டு தன்மை இருக்கலாம்.காதில் சீழ் வடியும் சுயமாக மருந்து எடுக்க கூடாது. மருத்துவரின் ஆலோசனைப்படி ஆன்டிபயாட்டிக்குகள் எடுக்கவேண்டும்3.Bacterial Media Ottitis - பாக்டீரியா நடுக்காது தொற்று -இதற்கு Ottitis media என்பர் இது பெரும்பாலும் H.Influenza மற்றும் S.pneumonia போன்ற கிருமிகளால் உண்டாகிறது.வலி,காது கேளாமை,காய்ச்சல்,சீழ் வடிதல்,இதன் அறிகுறிகள்.சுயசிகிச்சை கூடாது மருத்துவரின் ஆலோசனைப்படி ஆன்டிபயாட்டிக்குகள் எடுக்கவேண்டும்
எச்சரிக்கை குழந்தைகளுக்கு பாலாடையில் பாலூட்டும்போது குழந்தையை தலையை மிகவும் தாழ்வாக வைத்து பாலூட்டினால் பால் eustachian குழாய் வழியே நடுக்காதுக்குள் செல்ல வாய்ப்பு உண்டு.
காது குருமி தேக்கம் நம்காதுகளில் வெளியிலிருந்து தூசி, கிருமிகள் உள்ளே போகாமல் இருக்க இயற்கையாகவே இது வெளிக்காது மடலை தொடர்ந்து நடுக்காது வரை உள்ளே இறங்கும் ear channel இல் பசை போல உற்பத்தியாகிறது காது குழலில் சில சமயங்களில் உண்டாகும் அழர்ச்சியினால் அல்லது அடிக்கடி காது குடைவதால் இது அதிகமாக சுரந்து தேங்கி கெட்டியாகி காதை அடைத்துக் கொள்ளும் .இதை கவனக்குறைவாக ஹேர்பின் தீக்குச்சி காட்டன் முனை குச்சிகளை கொண்டு எடுக்க முயற்ச்சித்தால் 25% தான் வெளிவரும் 75% மேலும் உள்ளேயே தள்ளப்பட்டு விடும்
குருமி கரைப்பான்கள் பார்மசிகளில் கிடைக்கும் இவற்றில் கார்பமைட் பெராக்சைடு (Carbamide Peroxide or Urea Hydrogen Peroxide) மிகவும் சிறந்தது.இந்த சொட்டு மருந்தை கடையில் வாங்கி ஒருவேளைக்கு மூன்று சொட்டு வீதம் இரண்டு வேலை நான்கு நாட்கள் உபயோகிக்கவேண்டும்.பிறகு Ear Syringe மூலம் கரைந்து வெளியாகும் குருமியை கவனமாக எடுக்கவேண்டும்
வாயில் கேன்சர் வருவது பற்றிய ஒரு வீடியோ காணத்தவறாதீர்கள் வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்
20.பிராண்ட் குழப்பம் சில கம்பெனிகள் தங்கள் தயாரிப்புகளின் பிராண்ட் பெயர்களில் குழப்பம் செய்கின்றன உதாரணமாக Midol PMS என்ற வலிமாத்திரையில் Paracetamol இருக்கும் இது வயிற்றில் பிரச்சினை உண்டாக்காது அதே சமயம் அந்த கம்பெனி தயாரிக்கும் Midol IB;Midol-200 இவற்றில் Ibuprofen இருக்கும் இது வயிற்றில் பிரச்சினை உண்டாக்கும்.எனவே பாமர ஜனங்கள் சரியாக பார்க்காமல் பெயர் ஒரே மாதிரி இருப்பதை வைத்து பிரச்சினைக்கு ஆளாகிறார்கள் எனவே மருந்துகளை வாங்கும் பொது அதன் ingredients List ஐயும் பார்த்துகொள்வது நல்லது.
19.வலிநிவாரணிகள் பற்றி ஒரு பார்வை
மருந்து கட்டுப்பாட்டு துறையினர் (Drugs Controller Dept ),மருந்து பரிசோதகர் (Drugs Inspectors ),மருந்தாளுனர்கள் (Pharmacists ) மற்றும் மருத்துவர்கள் இப்படி எல்லாத்துரையினருமே வியாபாரிகளாகவும் தங்கள் வருமானத்தையும் கிம்பளத்தையும் பேணுபவர்களாகத்தான் இருக்கிறார்களே தவிர மக்களின் நலன் பேணவோ தங்களின் படிப்புக்கு மரியாதை செலுத்துபவர்களாகவோ இல்லை பெரும்பாலானவர்களிடம் சேவை மனப்பான்மையே கிடையாது.இது அமெரிக்க FDA கூட விதிவிலக்கல்ல என்று பார்த்தோம்.எனவே சாதாரணமாக நாம் பயன் படுத்தும் சில வலி நிவாரணிகள்(NSAIDs) பற்றி நாமும் தெரிந்து கொள்வது நல்லதில்லையா.
NSAIDs வகைகள்
இவை Aspirin,Ibuprofen,Indomethacin,Naproxen,Diclofenac,Aceclofenac ஆகியவை ஆகும்
Naproxen என்ற வலிநிவாரணி மருந்துகடைகளின் OTC யில் கிடைக்கும் இதுவும் NSAID வகையை சேர்ந்ததாகும் இது 12 வயதுக்கு கீழ்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க ஆகாது.இதை 65 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் மிக ஜாக்கிரதையாக உட்கொள்ள வேண்டும் ஒரு நாளைக்கு இரண்டு மாத்திரைகள் வேளைக்கு ஒன்று வீதம் இரண்டு வேளை எடுத்துகொள்ளலாம்.OTC ஆக அதிக பட்சம் ஒரு வாரம் வரை எடுத்துக்கொள்ளலாம்.
Naproxen என்ற வலிநிவாரணி மருந்துகடைகளின் OTC யில் கிடைக்கும் இதுவும் NSAID வகையை சேர்ந்ததாகும் இது 12 வயதுக்கு கீழ்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க ஆகாது.இதை 65 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் மிக ஜாக்கிரதையாக உட்கொள்ள வேண்டும் ஒரு நாளைக்கு இரண்டு மாத்திரைகள் வேளைக்கு ஒன்று வீதம் இரண்டு வேளை எடுத்துகொள்ளலாம்.OTC ஆக அதிக பட்சம் ஒரு வாரம் வரை எடுத்துக்கொள்ளலாம்.
INDOMETHACIN இது கடைகளில் பெரும்பாலும் INDOCID என்ற பெயரிலும் இன்னும் பல பெயர்களிலும் இது கிடைக்கும்.இதுவும் NSAID வகையை சேர்ந்ததுதான்.இதுவும் பொதுவாக COX-1 மற்றும் COX-2 இவை இரண்டையுமே முடக்குவதன் மூலம்தான் பலன் தருகிறது .எனவே இவையும் COX-1ஐ முடக்குவதால் வயிற்றில் பிரச்சனைகளை உண்டாக்கும்.சிறுநீரகத்திலும் இது பிரச்சனைகளை உண்டாக்கும்.Gout என்று கூறப்படும் யூரிக் அமில பிரச்சினைகளுக்கு இது சிறந்த வலி நிவாரணியும் யூரிக் அமில குறை ப்பானும் ஆகும்
Ibuprofen
இந்த மருந்து பெரும்பாலும் BRUFEN என்ற பிராண்டில் கிடைத்தாலும் இதன் Generic Name ,Ibuprofen என்பதாகும்.இதுவும் steroids அல்லாத வலிநிவாரண வகையை சேர்ந்ததாகும்.இவ்வகை மருந்துகளுக்கு பொதுவாக Non Steroidal Anti Inflammatory Drugs (NSAID) என்பர்.இதுவும் மற்ற NSAID கலை போல் நம் உடம்பில் இருக்கும் CYCLO OXIGENASE (COX) என்ற enzyme ஐ ஆஸ்பிரினை போல் அல்லாது தற்காலிகமாக செயலிழக்க செய்கிறது இதனால் நம் உடம்பில் Prostaglandins என்ற வலி ஊக்கிகள்(Inflammatorysecretions)சுரக்காமல் நின்று விடும் எனவே வலி மற்றும் சிவத்தல்(Inflammation)இவை குறைந்து விடும்.இருந்தாலும் இவை வயிற்றில் Prostaglantin சுரப்பை தடுத்து அபரிமிதமான ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கச்செய்து வயிற்றை பாழ் படுத்திவிடும் எனவே அல்சர்,வயிற்று புண் வாயு தொந்தரவுகள் உள்ளவர்கள் பெரும்பாலும் NSAID களை தவிர்ப்பது நல்லது.இவர்கள் மாற்றாக Paracetamol மற்றும் COX-2 INHIBITORS என்ற வகை மருந்துகளை சாப்பிடலாம்
இதை சாதாரணமாக 200mg நான்கு வேளை அல்லது 400mg இரண்டு வேளை அல்லது 600 - 800 mg ஒருவேளை சாப்பிட்ட ஒரு கால் மணி நேரம் கழித்து சாப்பிடவேண்டும் ஐந்து வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்
மேலும்ஆஸ்பிரின் Acetyl Salicylic Acid எனும் பலஹீனமான ஒரு அமில வகை சேர்ந்தது என்றாலும் இதனாலெல்லாம் வயிற்றில் அமிலத்தன்மை கூடுவதில்லை. மாறாக இது வயிற்றில் அமிலபாதுகாப்பிர்க்காக சுரக்கவேண்டிய prosaglandin ஐ சுரக்கவிடாமல் செய்து விடும்.இதற்காக இது Cyclo oxigenase என்ற enzyme ஐ நிரந்தரமாக முடக்கிவிடும் இதனால் வயிற்றில் அபரிமிதமான hydrochloric acid சுரந்து வயிற்ரை சேதப்படுத்திவிடும் ஆஸ்பிரினும் மற்ற NSAIDs ஐ போல் வயிற்றில் புண்கள் அல்சர் மற்றும் இரத்தப்போக்கு உண்டாக்கும்.இத்தன்மையில் ஆஸ்பிரின் மிக மோசமானது ஏனென்றால் முன் சொன்ன மாதிரி இது மற்ற NSAID களை போல் அல்லாது வாயிற்று பாதுகாப்பிற்காக சுரக்கும் PROSTAGLANDIN உக்கு காரணியாக இருக்கும் CYCLO-OXIGENASE-1 என்ற ENZYME ஐ நிரந்தரமாக முடக்கிவிடும் .இப்போது பெரும்பாலும் ஆஸ்பிரின் இரத்த ஓட்டத்தை விருத்தி செய்ய platelets அடைப்புகளை குறைத்து இரத்த ஓட்டத்தை சீராக்க மிக குறைந்த அளவில் (80 mg) பயன்படுத்துகிறார்கள் இந்த வகையில் இதய நோயாளிகள் மற்றும் Angina,Blood Pressure நோயாளிகளுக்கு ஆஸ்பிரின் ஒரு வரப்பிரசாதமாகும் மேலும் விவரங்களுக்கு please visit http://www.pharmamedilatest.blogspot.com or to download please click
. Paracitamol இதை அமெரிக்காவில் Acetaminophen என்பர்.பெயர் தான் வித்தியாசமே தவிர இரண்டும் ஒரே வேதிப்பொருள்கள் தான் மிகச்சிறந்த வலி மற்றும் காய்ச்சல் நிவாரணி.வயிற்றில் எந்த பிரச்சினையையும் உண்டாக்காது உணவுக்கு முன்போ பின்போ எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம் கட்டுப்பாடு கிடையாது.பெரியவர்கள் ஒருநாளைக்கு அதிகபட்சம் 4gms (4000 mgs )வரை சாப்பிடலாம்.
Paracetamol கல்லீரலில் தான் metabolize ஆகிறது அப்போது இதன் மூன்றில் ஒரு பகுதி N-Acetyl-p-Benzoquinone imine அல்லது NAPQ என்ற கொடிய விஷமாக மாறுகிறது அப்போது ஈரலில் இருக்கும் glutathione என்ற Enzyme அதை வீரியம் இழக்க செய்துவிடுகிறது.ஆனாலும் paracetamol உட்கொள்ளும்போதெல்லாம் ஈரலில் அதே அளவு glutathione தேய்மானம் அடைகிறது என்பது முக்கியம் எனவே அதிக அளவு paracetamol எடுத்துகொண்டால் Glutathione ஈரலில் தீர்ந்து விட்ட நிலையில் ஈரலை நேரடியாக தாக்கி சேதம் ஏற்படலாம்.
மேலும் குடிகாரர்கள் (Alcoholics),ஈரல் வீக்கம்(Liver Cirrhosis)உள்ளவர்கள் ,2 வயதிற்கு கீழுள்ள குழந்தைகள் இதை சாப்பிடுமுன் டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும் .
கர்ப்பிணிகள் தாய்ப்பால் கொடுப்பவர்கள் டாக்டரின் ஆலோசனை பெறவேண்டும்
மேலும் இது பற்றி விவரமான தகவலை உங்களின் கம்பியூட்டரில் பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்
அல்லது http://www.pharmalatest.blogspot.com விசிட் செய்யவும்
மேலும் குடிகாரர்கள் (Alcoholics),ஈரல் வீக்கம்(Liver Cirrhosis)உள்ளவர்கள் ,2 வயதிற்கு கீழுள்ள குழந்தைகள் இதை சாப்பிடுமுன் டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும் .
கர்ப்பிணிகள் தாய்ப்பால் கொடுப்பவர்கள் டாக்டரின் ஆலோசனை பெறவேண்டும்
மேலும் இது பற்றி விவரமான தகவலை உங்களின் கம்பியூட்டரில் பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்
அல்லது http://www.pharmalatest.blogspot.com விசிட் செய்யவும்
18.சீட்டு மருந்துகளும் OTC-க்கு மாறிய அபத்தம்
OTC
மருந்துகள் பற்றி மிக கவனமாக இருக்கவேண்டும் காரணம் இவையும் பக்க
விளைவுகள் உள்ளவையே.சாதாரண saridon இல் இருக்கும் paracetamol அல்லது
Acetaminophen (U.S) இவையும் கண்மூடித்தனமாக பயன்படுத்தினால் கல்லீரலில்
மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அதுவும் குழந்தைகளுக்கு இதை கொடுக்கும்
பொது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.Paracetamol or Acetaminophen இது
Tylenol என்ற பெயரில் US ஸில் 1955 இலிருந்து 1960 வரை டாக்டர் சீட்டிற்கு
மட்டுமே கிடைத்தன 1960இல் இது OTC க்கு மாறியது.
முன்பு
டாக்டர் சீட்டுகளுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய IBUPROFEN
(Brufen);NAPROXEN (Proxen );DIPHENHYDRAMIN (Benedryl );OXYMETAZOLIN
(Affrin ) ஆகியவை இப்போது OTC யில் கிடைக்கின்றன. எனவே ஓடக் மருந்துகள்
வாங்கும் போது டாக்டர் அல்லது பார்மசிஸ்டின் தீவிர ஆலோசனையின் பேரிலேயே
வாங்க வேண்டும்17.OTC மருந்துகள் எப்போது ஆபத்தாகும் ?
நாம்
நினைப்பது போல் சாதாரணமாக டாக்டரிடம் போகாமலே நாம் சாப்பிடும்
பாரசிட்டமால் (P-500;P-650,Dolo ,Glamol ),Ibuprofen (Brufen )போன்றவை
ஆபத்தில்லாதவை அல்ல.இவற்றின் packing உள்ளே பொதிந்திருக்கும் Catelogue இல்
எல்லாவிவரங்களையும் கம்பெனிகள் தருவதில்லை.சில விவரங்களை மட்டும் தந்து
விட்டு பொத்தாம் பொதுவாக "இந்த மருந்தை சாப்பிடும் போது வழக்கத்திற்கு
மாற்றமாக ஏதாவது உங்கள் உடம்பிற்கு நிகழ்ந்தால் டாக்டரை பார்க்கவும்"என்று
மட்டுமே கண்ணுக்கு தெரியாத பொடி எழுத்துகளில் தருகிறார்கள். இது
மிகப்பெரும் அபத்தம் ஆகும்.அமெரிக்காவில் 27-02-1992 இல் காங்கிரசின் ஒரு
அங்கமான General Accounting Office ,வெளியிட்ட ஒரு அறிக்கை அதிர்ச்சி
தரக்கூடியதாக இருந்தது அது FDA ஒருபோதும் OTC மருந்துகள் தயாரிக்கும்
கம்பெனிகளிடம் மருந்து பற்றிய முழு விவரங்களையும் தரவேண்டும் என்று
விதிக்கவில்லை என்பதுதான்.
16.OTC மருந்துகள் எல்லாம் பாதுகாப்பானவைதானா ?
OTC மருந்துகள் என்றால் மருந்து சீட்டு இல்லாமலேயே மருந்தகத்தில் கவுண்டரில் நேரடியாக வாங்கக்கூடிய மருந்துகள்.முன்பெல்லாம் காய்ச்சல் தலைவலி என்றால் ஒரு Anacin அல்லது Saridon வாங்கி போட்டுக்கொள்ளலாம் இதற்குமருந்து சீட்டு தேவை இல்லை.ஆனால் இப்போது Antibiotics,Codein syrups இன்னும் தூக்கத்தை தரக்கூடிய இருமல் மருந்துகள் என்று வகை வகையாக OTC யில் கிடைக்கின்றன.அமெரிக்காவில் மருந்துகளை ஒழுங்கு படுத்தும் துறைக்கு FDA என்று பெயர் .1962-இல் இந்த FDA அமெரிக்க காங்கிரசின் மூலம் ஒரு சட்டத்தை அமுல் படுத்தியது இதற்க்கு Food,Drug and Cosmetic Act (FD&CA) என்று பெயர் .இந்த சட்டத்தின்படி மருந்து கம்பெனிகள் தங்கள் Market செய்யும் OTC மருந்துகளின் வீரியம் மற்றும் பாதுகாப்பு இவற்றை தெளிவு படுத்தவேண்டும் என்பது.ஆனால் வேடிக்கை என்னவென்றால் இதற்கு பெரும்பாலான கம்பெனிகளின் பதில் வெறும் மவுனமே.
FDA ஆரம்பத்தில் இதற்க்கு உடனடி தீர்வு எதையும் காணவில்லை.ஆனால் நான்கு வருடம் கழித்து 1966-இல் இது பற்றி ஆராய National Acadamy of Science (NAS) ஐ கலந்து OTC மருந்துகளின் Effects மற்றும் Safety பற்றி ஆய்வு செய்து ஒரு அறிக்கை தருமாறு கேட்டுகொண்டனர் .1969 -இல் NAS ஒரு அதிர்ச்சி தரத்தக்க அறிக்கையை FDA இடம் சமர்ப்பித்தது அதில் OTC மருந்துகளில் 75% கம்பனிகள் விளம்பரப்படுத்துவது மாதிரி வீரியமோ பாதுகாப்போ இல்லை என்பதுதான்
1972-இல் 17 ஆய்வாளர்களை கொண்டு சுமார் 300000 OTC மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன.அதில் வினோதம் என்ன வென்றால் வித்தியாசமான விலைகளில் விதம் விதமாக வண்ணமும் பாட்டில்களும் விளம்பரமும் தரப்பட்ட சுமார் 700 மருந்துகளில் ஒரே மாதிரியான Active Ingredients களே இருந்தன.உதாரணமாக வயிற்று உப்புசத்திர்க்கு சாப்பிடக்கூடிய Antacids களில் எல்லாவற்றிலுமே வெறும் Calcium carbonate ,அல்லது Aluminium Trisylicate அல்லது Megnesium Hydroxide இப்படித்தான் இருந்தன.
1983 இல் FDA மிகுந்த பிரயாசைப்பட்டு பதினோரு வருட தீவிர ஆய்வுகளுக்கு பின் ஒரு அதிர்ச்சி தரும் உண்மையை ஆய்வாளர்கள் மூலம் கண்டறிந்தது. அது OTC மருந்துகளின் பார்முலாவில் சேர்க்கப்பட்டிருக்கும் கலவைகளில் மூன்றில் ஒரு பகுதிதான் பாதுகாப்பும் வீரியமும் உள்ளவை என்பது.ஆனால் இந்த உண்மையை FDA வெளிப்படையாக அறிவிக்கவில்லை மழுப்பலாகவே அதை அறிவித்தனர்.காரணம் அரசியல்.
Health Research Group (A Ralph Nader Affiliate)என்ற அமைப்பு FDA ஐ கோர்ட்டுக்கு இழுத்தது.அவர்கள் வாதிட்டது அமெரிக்காவின் 1962 மருந்து சட்டங்களின் படி பாதுகாப்பற்ற சரியான விவரமற்ற மருந்துகளை சந்தையில் விளம்பரப்படுத்த முடியாது என்றபோது FDA இவைகளை எப்படி Category -lll என்ற ரீதியில் அனுமதிக்கிறது என்று. FDA விழி பிதுங்கியது நீதிபதி John Sirica என்பவர் FDA க்கு எதிராக தீர்ப்பளித்தார் Category -3 என்றரீதியில் அனுமதிக்கப்பட்ட அத்தனை மருந்துகளையும் உடனடியாக கடைகளிலிருந்து திருப்பி குப்பையில் வீசி எறியுமாறும் அதன் தயாரிப்புகளை உடனே நிறுத்துமாறும் தீர்ப்பளித்தார்.
இதன் பிறகு FDA எல்லா மருந்து கம்பெனிகளையும் அதன் மருந்து பார்முலா கலவைகள் அதன் முழு விவரங்கள் அடங்கிய பட்டியலை தருமாறு கடுமையுடன் கூறியது.சுமார் 450 மருந்துகலவைகள் பாதுகாப்பற்றவை அல்லது வீரியமில்லாதவை என்று reject செய்யப்பட்டன.
1983 இல் FDA மிகுந்த பிரயாசைப்பட்டு பதினோரு வருட தீவிர ஆய்வுகளுக்கு பின் ஒரு அதிர்ச்சி தரும் உண்மையை ஆய்வாளர்கள் மூலம் கண்டறிந்தது. அது OTC மருந்துகளின் பார்முலாவில் சேர்க்கப்பட்டிருக்கும் கலவைகளில் மூன்றில் ஒரு பகுதிதான் பாதுகாப்பும் வீரியமும் உள்ளவை என்பது.ஆனால் இந்த உண்மையை FDA வெளிப்படையாக அறிவிக்கவில்லை மழுப்பலாகவே அதை அறிவித்தனர்.காரணம் அரசியல்.
Health Research Group (A Ralph Nader Affiliate)என்ற அமைப்பு FDA ஐ கோர்ட்டுக்கு இழுத்தது.அவர்கள் வாதிட்டது அமெரிக்காவின் 1962 மருந்து சட்டங்களின் படி பாதுகாப்பற்ற சரியான விவரமற்ற மருந்துகளை சந்தையில் விளம்பரப்படுத்த முடியாது என்றபோது FDA இவைகளை எப்படி Category -lll என்ற ரீதியில் அனுமதிக்கிறது என்று. FDA விழி பிதுங்கியது நீதிபதி John Sirica என்பவர் FDA க்கு எதிராக தீர்ப்பளித்தார் Category -3 என்றரீதியில் அனுமதிக்கப்பட்ட அத்தனை மருந்துகளையும் உடனடியாக கடைகளிலிருந்து திருப்பி குப்பையில் வீசி எறியுமாறும் அதன் தயாரிப்புகளை உடனே நிறுத்துமாறும் தீர்ப்பளித்தார்.
இதன் பிறகு FDA எல்லா மருந்து கம்பெனிகளையும் அதன் மருந்து பார்முலா கலவைகள் அதன் முழு விவரங்கள் அடங்கிய பட்டியலை தருமாறு கடுமையுடன் கூறியது.சுமார் 450 மருந்துகலவைகள் பாதுகாப்பற்றவை அல்லது வீரியமில்லாதவை என்று reject செய்யப்பட்டன.
15.நோயாளிகள் கேட்கவேண்டியவை
மருத்துவரிடம் நோய் ஆலோசனை மற்றும் பரிசோதனைகள் முடித்த பிறகு மருத்துவர் தனது லெட்டர் பேடில் வேகமாக மருந்து பட்டியலை கிறுக்கி உங்களிடம் தரும்போது சில கேள்விகளை அவரிடம் கேட்கும் உங்கள் உரிமைகளை விட்டுகொடுத்து விடாதீர்கள் கேள்விகள் இதோ :-
1.டாக்டர் இந்த மருந்தின் பெயர் என்ன ?
2.இதை எப்படி சாப்பிட வேண்டும்?
3.இது எதற்க்காக எனக்கு தரப்படுகிறது ?
4.இதை எந்தெந்த நேரங்களில் நான் சாப்பிட வேண்டும்?
5.உணவுடனா அல்லது ,உணவுக்கு முன்பா அல்லது பின்பா எவ்வளவு நேரம் ?
6.ஏதாவது உணவு கட்டுப்பாடுகள் உண்டா ?
7.ஏதேனும் முன்ஜாக்கிரதை அல்லது எச்சரிக்கைகள் நான் பின்பற்றவேண்டுமா?
8.இந்த மருந்துடன் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உண்டாக்கும் நிலைகள் அல்லது மருந்துகள் (Contraindications )ஏதேனும் நான் எதிர்கொள்ளக்கூடாதவை உண்டா ?
9.இந்த மருந்துகளுடன் சாப்பிடக்கூடாத மருந்துகள் யாவை ?
10.இந்த மருந்துகளினால் பொதுவாக உண்டாகும் பக்க விளைவுகள் யாவை?
11.இந்த மருந்தை நான் உட்கொள்ளும் போது நான் உங்களிடம் தெரிவிக்க வேண்டிய ஏதேனும் முக்கியமான விளைவுகள் உண்டா ?
12.இதை நான் எவ்வளவு காலம் சாப்பிடவேண்டும் ,எப்போது எப்படி நிறுத்த வேண்டும் ?
மேல் குறிப்பிட்ட கேள்விகளை ஒரு காகிதத்தில் எழுதி முன் ஏற்பாடாக வைத்துக்கொள்ளுங்கள் மருந்த்துவரிடமும் மருந்தாளுனர்களிடமும் (Pharmacists )இதை கேளுங்கள்
14.வயிற்று பூச்சிக்கு மருந்து
வாயிற்று பூச்சிக்கு Albendazol ஒரு நல்ல மருந்து.ஆனால் இதை உணவுடன் சாப்பிட்டால் அவ்வளவாக பயன் இருக்காது ஏனென்றால் உணவிலுள்ள கொழுப்புடன் இது குடலில் உறிஞ்சப்பட்டு விடும் எனவே குடலில் உள்ள பூச்சி சாப்பிடுவதற்கு இது கிடைக்காமல் இது நம் உடல் இரத்த மண்டலத்திற்கு போய்விடும் எனவே இதை வெறும் வயிற்றில் சாப்பிட ஒரு மணி நேரம் முன்பு சாப்பிடவேண்டும்இல்லை என்றால் கொழுப்பு சத்தில்லாத உணவுடன் இதை சாப்பிடலாம்
13.பக்கவிளைவுகள்-ஒரு கண்ணோட்டம்
மருத்துவரிடம் போகிறோம் கடவுள் மாதிரி அவர் காப்பாற்றுவார் என்று கண் மூடித்தனமாக இருந்துவிடாதீர்கள் இப்போதெல்லாம் மருத்துவர்களும் மருந்தாளுனர்களும் வியாபாரிகளாகி விட்டார்கள் ஒவ்வொரு சொந்த கிளினிக்குடனும் சொந்தமாக டாக்டரே ஒரு மருந்தகமும் வைத்திருக்கிறார் எனிவே உங்கள் நோய் குணமாவதை விட அவரது மருந்துகள் போணியாக வேண்டும் என்பதே குறி.பொதுவாக மருத்துவத்துறையில் ஒரு விதியுண்டு.அதாவது ஒரு மருந்து அதன் நோய் நிவாரண இயல்பு,அதன் பக்க விளைவுகள்,நோயாளியின் நிலை இவற்றை எடை போட்டுத்தான் அந்த மருந்து நோயாளிக்கு தரவேண்டும் உதாரணமாக ஒரு மருந்து ஒரு மூன்று மாத கர்ப்பிணி நோயாளிக்கு தரப்படவேண்டும்.அந்த மருந்து கற்பத்திற்கு தீமை ஏற்படுத்தும் என்று ஆய்வு சொல்கிறது.இப்போது அந்த மருந்து அந்த நோயாளிக்கு தரப்படவில்லை என்றால் நோயாளியின் உயிருக்கு ஆபத்து எண்ணும் பட்ச்சத்தில் நோயாளிக்கு இது பற்றி ஒரு ஆலோசனை கொடுத்துவிட்டு மருந்து பற்றிய விபரங்கள் கூறி அந்த மருந்தை தரலாம் என்கிறது மருத்துவ விதி.ஆனால் இப்போது என்ன நடக்கிறது சாதாரண காய்ச்சலுக்கு கூட Antibiotics அத்தோடுகூட ஒரு Paracetamol மேலும் ஒரு vitamin-B Complex இப்படி கொடுத்துவிட்டு அந்த மருந்தின் Dosage மட்டும் சொல்லிவிடுகிறார்கள் அதன் மற்ற விவரங்களை பக்கவிளைவுகள்,Overdosage ,எத்தனை நாள் என்பதை எல்லாம் சொல்லுவதில்லை
உதாரணமாக Antibiotics எல்லாமே பக்க விளைவுகள் உள்ளவைதான் இவற்றை குறைந்த பட்சம் மூன்று அல்லது ஐந்து நாட்களாவது சாப்பிட வேண்டும் இடையில் நோயின் கடுமைகுறைந்து இருக்கலாம் ஆனால் இடையிலேயே நிறுத்திவிட்டால் நோய் கிருமிக்கு வலிமை (Virulance )அதிகமாகி Superinfection ஏற்பட்டுவிடும் .அதே போல் உணவிலிருந்து பெறுவது அல்லாமல் மாத்திரை மருந்து மூலம் எடுக்கும் Vitamin களிலும் பக்கவிளைவுகள் உண்டு.உதாரணமாக Vitamin B3 என்ற niacin ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கூட்டும் Vitamin A அதிகமானால் மூட்டு வலி முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும் வைட்டமின் சி அதிகம் எடுத்தால் வயிற்றிலும் இரத்தத்திலும் அதிக அளவு அமிலத்தன்மை உண்டாகும்.அதே போல் வலிமாத்திரைகள் Brufen, Diclofenac,போன்றவை அதிகமானால் அல்சர் மற்றும் சிறு நீரகக்கோளாறு களை உண்டாக்கும்.Cox -2 Inhibitors எனப்படும் நவீன ரக வலி மாத்திரைகள் அதிகப்பட்டால் மூச்சு திணறல் மாரடைப்பு போன்றவை உண்டாகலாம்.Paracetamol அதிகமானால் ஈரலை பாதிக்கும்
12.மருந்து சீட்டை வாசிக்க முடிகிறதா ?
டாக்டர்கள் எழுதும் மருந்து பெரும்பாலும் ஒழுங்கற்றதாகவு புரியாத கிறுக்கல் நடையிலும் இருந்தால் அதை மிகவும் நாசுக்காக மறுத்து விடுங்கள் தெளிவாக எழுதித்தரும்படி கேளுங்கள் ஏனென்றால் இந்த மாதிரி எழுதி தருவது அவர்கள் விரும்பிய மருந்து கடைகளில் வாங்க வேண்டும் என்ற ஒரே வியாபார நோக்கம் தான் .இன்னும் மருந்து சீட்டுகளில் b.i.d.(ஒருநாளைக்கு இரண்டு வேலை);h.s.(இரவில் மட்டும் ),p.o.(வாய் வழியாக )இப்படி கிரேக்க மொழி குறியீடுகளில் எழுதுகிறார்கள்.இது சட்டப்படி குற்றம். கொடுத்து மருத்துவம் பார்க்கும் போது டாக்டர் என்ன மருந்து தருகிறார் எப்படி சாப்பிட வேண்டும் என்ன முறையில் வைத்தியம் நடக்கிறது என்பதை எல்லாம் தெளிவாக சொல்ல வேண்டியது டாக்டரின் கடமை அதை தெரிந்து கொள்ள வேண்டியது உங்களின் உரிமை
11.இந்த மருந்து என்ன ?
முதலில்
நாம் சாப்பிடப்போகும் மருந்தின் வர்த்தகப்பெயர் என்ன அதனுள் இருக்கும்
மருந்தின் பெயர் என்ன இதன் முழு விபரமும் என்ன என்பதை மிகத்தெளிவாக
டாக்டரிடமும் மருந்தாளுனரிடமும் தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
.பொதுவாக வர்த்தகபெயர் வேறாக இருக்கும் ஆனால் மருந்து ஒன்றுதான் என்றாலும்
டாக்டரின் ஆலோசனை இல்லாமல் நீங்கள் சாப்பிடும் மருந்தின் வர்த்தகப்பெயரில்
மாறாதீர்கள் ஏனென்றால் சில மருந்துகள் தயாரிக்கப்படுவதில் சுத்தம்
கம்பெனிக்கு கம்பெனி வேறுபாடும் எனவே ஒரு brand இலிருந்து இன்னொரு
பிரண்டுக்கு மாறும்போது ஜாக்கிரதை . (இன்னும் வரும் )
10.நாம் என்ன செய்ய வேண்டும்
நோயாளிகளாகிய
நாம் மருத்துவரிடம் போகும் முன் தீர யோசிக்க வேண்டும்.சில சிறிய
பிரச்சினைகளுக்கு வீட்டில் இருக்கும் கை மருந்துகளே போதும் என்று நம்வீட்டு
பாட்டிமார்கள் சொன்னால் முதலில் அதை முயற்சிக்க வேண்டும் .அப்படியே
டாக்டரிடம் போகும் கட்டாயம் வந்தாலும் டாக்டரிடம்கூச்சமில்லாமல் நம்
பிரச்சினைகள் அத்தனையையும் ஒப்புவிக்க வேணும்.பிறகு நமது நோக்கத்தை
தெளிவாக்கிவிடவேண்டும் உதாரணமாக நீங்கள் கொலஸ்டிரால் பிரச்சினைக்காக
டாக்டரிடம் போகிறீர்கள் என்றால் உங்கள் இறுதி நோக்கம் கொலஸ்டெரால் மட்டும்
குறைவதல்ல உங்கள் இதயம் ஆரோக்கியம் பெற வேண்டும்.நீண்ட ஆயுளுடன்
ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே.ஏனென்றால் எண்பதுகளில் Atromid -S
(Clofibrate ) என்ற கொலஸ்டிரால் குறைப்பான் மிகப்பிரபலம்.இது கொலஸ்டிராலை
கண்மூடித்தனமாக குறைத்தது உண்மை.ஆனால் அதனால் பக்கவிளைவுகள் ஏற்பட்டு
மாரடைப்பினால் இறந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம் இருந்தது.எனவே எந்த
ஒன்றையும் கண் மூடித்தனமாக நம்ப வேண்டாம் சாதாரணமாக கொலஸ்டரோல் கூடுதலாக
இருந்தால் ஒரு நல்ல டாக்டர் ஆரம்பத்தில் மருந்துகள் இல்லாமல் உணவு
கட்டுப்பாடு மூலம் இதற்கு ஒரு ஆலோசனை தருகிறாரா என்று கவனியுங்கள்
9.மருத்துவர்களின் அலட்சியம்
மருத்துவர்கள்
பெரும்பாலும் மருந்து பற்றிய முழு விபரங்களையும் கவனிப்பதில்லை அவர்கள்
மேஜையில் இருக்கும் PDR (Physician's Desk Reference) ஐயோ அல்லது மருந்து
பாக்கிங்குடன் வரும் மருந்து பற்றிய விபரங்களையோ கூட அவர்கள் Refer
செய்வதில்லை.மேலிட்டார் போல் தங்கள் அனுபவங்களில் பலருக்கு அந்த மருந்து
கொடுத்த பலனை கொண்டே அவர்கள் மீண்டும் அதே மருந்தை தன நோயாளிக்கு
கொடுக்கின்றனர்.ஒவ்வொரு முறையும் நாம் மருந்துகள் வாங்கும் போது அதன்
பாக்கிங்குடன் வரும் Pamphlet ஐ படிக்க வேண்டும்.ஒருத்தருக்கு
ஒத்துக்கொள்ளும் மருந்து இன்னொருவருக்கு வேறு பக்க விளைவுகளை
ஏற்ப்படுத்தலாம்.ஒத்துக்கொண்டவருக்கு Tolerant என்பர்.மற்றவருக்கு
susceptible என்று பெயர்.நாம் ஒரு மருந்துக்கு Tolerant ஆ அல்லது
susceptible ஆ என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் மருத்துவர்கள் அது பற்றி
எச்சரிக்காதவரை.
உதாராணமாக
வயிற்று அல்சர் நோயாளிகளிடம் முன்பு Tagamet என்ற மருந்து பிரபலம்.இன்றும்
இதை சிலர் பயன்படுத்துகின்றனர்.இதில் உள்ள Cimetidine என்ற மருந்து
வயிற்றில் அமிலம் அதிகம் சுரக்காதவாறு பார்த்துக்கொள்ளும்.ஆனால் இது நாம்
சாப்பிடும் வேறு மருந்துகளுடன் பெரும்பாலும் interact செய்யும்.அதனால் இதை
எடுத்து கொள்ளும்முன் வேறு ஏதாவது மருந்து சாப்பிடுவதாக இருந்தால் அதை
முன்கூட்டியே டாக்டரிடம் கூறிவிட வேண்டும்.டாக்டரும் நீங்கள் சாப்பிடும்
மருந்துகளில் ஏதாவது ஓன்று கல்லீரலில் cytochrom 450 என்ற enzyme மூலம்
metabolize ஆகக்கூடியதாக இருந்தால் அது பற்றி எச்சரிக்க வேண்டும்.ஏனென்றால்
Cimetidine -ம் அந்த enzyme மூலமாகவே metabolize ஆகிறது.
மேலும் Cimetidine சிலருக்கு பாலியல் கோளாறு,மனக்குழப்பம்,மற்றும் Depression ஆகியன ஏற்ப்படுத்தலாம்.
மேலும்
Ofloxacin என்றொரு Antibiotic மிகச்சிறந்த 4-Quinolin வகையை சேர்ந்த
Antibiotic அவ்வளவு பக்க விளைவுகள் இல்லை என்பது சரிதான் அதன்
தயாரிப்பாளர்கள் அப்படித்தான் விளம்பரப்படுத்துகிறார்கள் எதோ மிட்டாய்
விளம்பரம்போல.எனவே நாமும் இதை பார்த்து ஏமாந்து நமக்கோ நம் பிள்ளைகளுக்கோ
டாக்டரின் ஆலோசனையுமில்லாமல் முறையற்ற வகையில் இதை பயன்படுத்தினால் சில
சமயம் தூக்கமின்மை,கண் மங்குதல்,குழப்பம், அசதி,தேவை இல்லாத
கற்பனைகள்,வெட்டு,மூச்சுத்திணறல்,மாரடைப்பு போன்ற பக்க விளைவுகள் ஏற்ப்பட
வாய்ப்பு உண்டு
8.FDA பற்றி ஒரு செய்தி
அமெரிக்க
Food And Drug Administration அதாவது சுருக்கமாக FDA எனப்படுவதுதான்
யு.எஸ்ஸில் மருந்துகள் கட்டுபாட்டு வாரியமாகும் இவர்கள் அனுமதி இல்லாமல்
எந்த ஒரு மருந்தும் அங்கு விற்பனைக்கு வர முடியாது.உலகின் மற்ற நாடுகளிலும்
இவர்களைத்தான் பெரும்பாலும் பின்பற்றுகிறார்கள்.இதில் ஆச்சரியம்
என்னவென்றால் உண்மையில் இந்த FDA-க்கு சொந்தமாக ஒரு ஆய்வு கூடம்
கிடையாது.இவர்கள் மருந்து கம்பெனிகள் தரும் தகவல்கள் அடிப்படையில்தான்
முடிவு எடுக்கிறார்கள்.அதில் சில சமயம் தவறுகள் இருப்பதாக சந்தேகம் வந்தால்
உடனே இவர்கள் தங்களின் அங்கீகாரத்திற்கு உட்பட்ட சில தனியார் ஆய்வு
கூடங்களுக்கு அனுப்புவர்
imitrex
என்று ஒரு branded மருந்து இதில் ஒற்றை தலைவலியை போக்க கூடிய sumatryptan
என்ற மருந்து அடங்கி இருக்கிறது.Kansas City Star என்ற பத்திரிக்கையின்
ஆசிரியர் மிஸ் Kelly garbus என்பவர் இது பற்றி ஒரு தகவலை ஆய்வு செய்த போது
ஒரு செய்தி வெளிப்பட்டது.ஓர் ஆரோக்கியமான 41 வயது பெண் இந்த மருந்தை தன்
ஒற்றைதளைவலிக்காக ஊசி மூலம் எடுத்து கொண்டார்.சில மணி நேரங்களில் அவர்
இறந்து விட்டார்.உடனே மிஸ் கெல்லி கார்பஸ் FDA இடமிருந்து தகவல் அறியும்
சட்டத்தின் மூலம் விசாரித்ததில் சரியான தகவல் இல்லை ஆனால் FDA யின் ஒரு
மருத்துவ அதிகாரி ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த மருந்து பற்றி
இது மரணம் விளைவிக்க கூடும் என்று FDA யின் தலைமைக்கு அறிவுறுத்தி
இருந்தும் FDA யின் தலைமை இதற்க்கு அனுமதி கொடுத்திருப்பது தெரிய
வந்தது.அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் தான் வேடிக்கையானது
பலருக்கு
இது எந்த வித ஆபத்தும் இல்லாமல் பலன் அளிக்கிறது சிலருக்கு இது ஆபத்து
விளைவிக்கிறது எனவே இது அனுமதிக்க படுகிறது என்பதுதான்
7.புராஸ்டேட் வீக்கம் (BHP)
நம்
சிறுநீரக பையின் கீழ் அதை ஒட்டிய மாதிரி நம் சிறுநீர் குழாயை
(Urithra)சுற்றிய படி ஒரு Walnut பருப்பின் வடிவில் அமைந்திருக்கும்
சுரப்பிதான் இது.கீழே உள்ள படத்தில் அம்பு குறி இட்டுள்ள பகுதி
பெரும்பாலும்
நாற்பது வயதிற்கு மேல் இது வீங்கி சிறுநீர் குழாயை அடை த்துகொள்ளும்
இதனால் சிறுநீர் சிலருக்கு சரியாக பிரியாது.அடிக்கடி சிறு நீர் கழிக்க
உணர்வு தூண்டும் ஆனால் சிறுநீர் சரியாக பிரியாது.இது சில நேரங்களில்
ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும்.முழுவதுமாக சிறுநீர் வராமல் அடைத்து
Catheter போட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
இதில்
ஆறுதல் என்னவென்றால் இந்த சுரப்பி சும்மா வீங்குவதால் மட்டும் பிரச்சினை
இல்லை என்பதை இப்போது கண்டுபிடித்து இருக்கிறார்கள்.ஏனென்றால் சிலருக்கு
இது வீங்கி இருந்தாலும் தாரளமாக இவர்கள் சிறுநீர் கழிப்பார்கள்.ஆக இந்த
சுரப்பி வீன்கும்போது சிலருக்கு இந்த சுரப்பியும் சிறுநீர் குழாயும்
சிறுநீர் பையின் கீழ் வாயும் சந்திக்கும் இடத்தில் இரத்தக்குழாய் களில் ஒரு
வித அழுத்தம் ஏற்படுகிறது இதற்க்கு Alpha Pressure என்பார்கள்.இதுதான்
இந்த பிரச்சினைக்கு காரணம் என்று இப்போது கண்டு பிடித்து இருக்கிறார்கள்.
இந்த பிரச்சினை உள்ளவர்கள்:-
1.கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகளை தவிர்த்து கொள்ள வேண்டும்
2.காபி,கோகோ போன்ற Caffine உணவுகளை தவிர்ப்பது நல்லது.மிதமாக தேநீர் அருந்தலாம்
3.சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைக்க கூடாது
4.டாக்டரிடம் ஆலோசனை பெற்று மாத்திரையோ அல்லது TURP என்ற சிகிச்சையோ செய்து கொள்வது நல்லது
இன்று
லேசர் முறையில் அதுவும் பச்சை கதிர் வீச்சு லேசர் முறையில் TURP மிக
எளிதாக செய்யப்படுகிறது .ஆனாலும் சாதாரண TURP செய்தவர்களுக்கு மட்டுமே
குறைந்த பட்சம் 5 வருட கியாரண்டி உண்டு
5.அறுவை சிகிச்சை செய்ய
விரும்பாதவர்கள் 5 alpha reductase inhibittors மற்றும் alpha adrenergic
blockers இவற்றை மருத்துவரின் (Urologist )ஆலோசனையின் பேரில் எடுத்து கொள்ள
வேண்டும்
6.தூக்கமின்மை (Insomnia )
தூக்கம்
நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.ஆழ்ந்த உறக்கத்தின்போது நம்
இதயம் தன துடிப்பை ஆபத்து இல்லாத முறையில் குறைத்து ஓயவேடுத்துக்கொள்ளும்
.லாக்டிக் அமிலம் போன்ற நச்சுக்கழிவுகளை நம் உடல் தன்மையமாதலின் மூலம்
வீரியம் இழக்கச்செய்து கழிவுகளாக வெளியேற்ற தயார் நிலையில்
வைக்கிறது.அதனால்தான் இரவில் தூங்கி காலையில் விழித்தவுடன் நாம் கழிவுகளை
வெளியேற்ற தயாராகிவிடுகிறோம்
இவ்வளவு
நேரம் தூங்க வேண்டும் என்பது முக்கியமில்லை .ஆனால் திருப்தியாக தூங்கினோமா
என்பதுதான் முக்கியம்.சிலருக்கு ஒருசில மணி நேரம் தூங்கி விழித்தாலே
போதும் திருப்தி அடைந்து விடுவார்கள்.எனவே எந்த தூக்கம் திருப்தி தருகிறதோ
அதுவே ஆரோக்கியமான தூக்கம் ஆகும்.
ஆனால்
மனஉளைச்சல்,சிறுநீரக பாதிப்பு ,வலி இருமல் போன்ற தோஷங்களால் சிலர்
தூக்கத்தை இழந்து தவிக்கிறார்கள் இதில் மன உளைச்சல் என்பது ஒரு வியாதி
இல்லை இதற்கு டாக்டர் தேவை இல்லை இதற்கு சிறந்த மருந்து இறை
நம்பிக்கைதான்.நம்மை படைத்த இறைவன் நம்மை ஒருபோதும் கைவிட மாட்டான்.ஒரு இறை
நம்பிக்கையாளன் கை ஏந்தி கேட்கும் பிரார்த்தனையை இறைவன் ஒருபோதும்
நிராகரிபதில்லை.
ஏனென்றால் நாம் அவன் சொந்தம் அவனிடமே மீளப்போகிறோம் தன் சொந்தப்பொருள் சேதப்படுவதை அதன் சொந்தக்காரன் விரும்ப மாட்டான்.
எனவே எதுவந்தாலும் வரட்டும் ஆண்டன் இருக்கிறான் என்பவர்களிடம் கேட்டு பாருங்கள் அவர்கள் தூக்கத்திற்கு பஞ்சம் இருக்காது
ஆனால்மற்ற
சுகக்குரைவினால் தூக்கத்தை இழந்தவர்களுக்கு மருந்து தேவைப்படுகிறது.முன்பு
Barbiturates தான் தூக்க மருப்தாக பயன் படுத்தப்பட்டது ஆனால் இவை ஆபத்து
மிக்க பக்க விளைவுகளை உண்டாக்குவதால் இப்போது benzodiazapines ,zolpidam
என்று பக்கவிளைவுகள் குறைந்த சில மருந்துகள் கிடைக்கின்றன.பெருபாலும்
தூக்கமின்மை மனதில் ஏற்ப்படும் பயவுணர்ச்சியினாலும் சில வியாதிகள்
ஏற்ப்படுத்தும் மன உளைச்சல்களாலும் (Anxity )தான் ஏற்ப்படுகிறது .
கீழ்கண்ட benzodiazapines அதன் வகைகளுக்கு ஏற்ற மாதிரி பயனாகின்றன :-
குறுகிய நேர தூக்கம் --Oxazepam , Clonazepam ,Medazolam ,Triazolam
நடுநிலை ---------Temazepam ,Lorazepam ,Alprazolam
நீண்டநேரம் -----Chlordiazepoxide ,Diazepam ,Flurazepam
ஆனால்
இந்த Benzodiazepam களும் சார்பு நிலையை (dependence )உண்டாகக்
கூடியவையே.ஆனால் Baarbiturates களைவிட பக்க விளைவுகள் குறைந்தவை .
மேல்
கூறப்பட்ட benzodiazapines அதிக அளவில் உட்கொண்டால் ஆபத்தை ஏற்படுத்தும்
இதற்க்கு மாற்று மருந்தாக Flumanezil என்ற மருந்தை டாக்டர் தருவார்
இப்போது நவீனமாக Zolpidem என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது இது benzodiazapines ஐ விட பாதுகாப்பானதாக கருதப்படுகிறது
5.அலர்ஜியும் ஆஸ்த்மாவும்
இப்போதெல்லாம்
நமக்கு மூக்கடைப்பு,நீர்கோர்த்தல் ,சளி, இருமல் என்று வந்துவிட்டால் அதை
நிவர்த்தி செய்ய வேறுவழி இல்லாமல் அசதியையும் மயக்கத்தையுமுண்டாக்கும் anti
histamin களைத்தான் டானிக்காகவோ அல்லது மாத்திரைகளாகவோ விழுங்க
வேண்டியுள்ளது .prostate சுரப்பி வீங்கி சிறுநீர் அடைப்பு உள்ளவர்களுக்கு
அடிக்கடி anti histamin உட்கொள்ளுவது பெரும் பிரச்சினையை உண்டாக்கலாம்.வாகன
ஓட்டிகள் ஆபத்தான கருவிகளை கையாள்பவர்கள் உயரமான கட்டுமான பணிகளில்
ஈடுபடுபவர்கள் இன்னும் Parkinson வியாதி ,Alzheimer போன்ற மனோ வியாதி
உடையவர்கள் anti histamins கண்டிப்பாக சாப்பிடக்கூடாது
Diphenhydramin
Hydrochloride ,Chlorpheniramin Maleate ,Triprolidine Hydrochloride
ஆகியவை சாதாரணமாக மருந்தகத்தில் கிடைக்க கூடிய antihistamin கள் .இவற்றில்
Chlorpheniramin Maleate மிகவும் பாதுகாப்பானது.இது ஒரு வீரியமுள்ள
antihistamin என்றாலும் மிகவும் குறைவான அசதியையே உண்டாக்கும் அதாவது
Strong antihistamin but least sedative.
இப்போது
அசதி உண்டாக்காத Cetrizine ,Loratidine ,Astamizole ,Terfenadine போன்ற
Antihistamin கள் கிடைக்கின்றன ஆனால் இவை பணக்காரர்களுக்கு உரியவை இன்னும்
கவனமில்லாமல் அளவுக்கு மீறினால் இவையும் அசதி உண்டாக்குபவையே.Cromolyn
அல்லது Cromoglycic acid போன்ற histamin மற்றும் leucotriene போன்ற
அலர்ஜியும் inflammation உண்டாகும் ஹார்மோன்களை வெளியாக்கும் mast cells
களை அமைதி படுத்தக்கூடிய மருந்துகளும் கிடைக்கின்றன.இவை leucotriene போன்ற
infammattory ஹார்மோன்களை அதன் receptor களில் பதியவிடாமல் செய்வதால் இது
ஒரு anti inflammatory ஆகவும் பயன்படுவதால் ஆஸ்த்மா நோயாளிகளுக்கு nesal
spray ஆகவும் கிடைக்கிறது.இதனால் beclomrthasone ,fluticasone
,flunisolide ,budenoside ,போன்ற வீரியமும் அதிக பக்க விளைவுகளும் கொண்ட
corticosteroid களை தவிர்த்துக்கொள்ளலாம்
மேலும்
ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சு குழாய் inflammation ஆகி
குறுகி சுருங்கி இருக்கும் இதனால் இவர்களுக்கு மூச்சுத்திணறல் இளைப்பு
போன்றவை குறிப்பாக மழை பனி காலங்களில் அதிகமாகவே இருக்கும்.ஆரம்பத்தில்
இவர்கள் ephedrin(sympathetic அல்லது Adrenergic ஊக்கி போன்ற அதிக
பக்கவிளைவுள்ள மருந்துகளை (இதய துடிப்பு அதிகரித்தல்,மூத்திரம் அடை
படுத்தல்) பயன்படுத்தவேண்டிய கட்டாயம் இருந்தது .மேலும் மூச்சுக்குழாயை
விரிவடைய மட்டுமே செய்யக்கூடிய salbutamol, theophyllin போன்ற மருந்துகளை பயன்படுத்துவது மட்டுமே பிரயோஜனம் இல்லை ஆனால் இப்போது அதைவிட குறைந்த
பக்கவிளைவுள்ள கொண்ட steroid inhalers வந்துள்ளன இவை inflammation ஐ குறைப்பதால்
ஆஸ்துமா நிவாரணம் அடைகிறது அவை beclomethasone ,flunisolide salmeterol
அல்லது ஏற்கனவே நாம் கண்ட cromolyn ஐயும் பயன்படுத்தலாம்.இவற்றை
பயன்படுத்தும் போது கூடவே salbutamol (ventolin )ஐயும் சேர்த்து
பயன்படுத்தலாம் தப்பில்லை.ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் ஆஸ்துமா
என்பதே மூச்சுக்குழாய் சுருங்குவதால் ஏற்படுவது அல்ல.மூச்சு குழாயின்
உட்பகுதியில் inflammation உண்டாவதாலேயே ஏற்படுகிறது.எனவே வெறும்
மூச்சுக்குழாய் விரிய வைக்கும் (Bronchodilators )-ஐ மட்டும்
பயன்படுத்தாமல் கூடவே corticosteroids களான fluticasone போன்ற anti
inflammattorys களையும் பயன்படுத்த வேண்டும்
4.அஜீரணம் -அல்சர்
நம்
வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சில சந்தர்ப்பங்களில் அதிகமாக
சுரக்க நேரிட்டால் வயிற்றில் அஜீரணம் வாயுத்தொல்லை ஏற்ப்படும்.நாட்பட்ட
நிலையில் வயிற்றின் சுவர்கள் அமிலத்தால் அரிக்கப்பட்டு புண்கள் உண்டாகி
பிறகு அல்சராக மாறிவிடும்.இதற்க்கு நம் உணவு பழக்கங்களை ஒழுங்கு படுத்த
வேண்டும்.குறித்த நேரத்தில் சாப்பிடவேண்டும் கண்டிப்பாக காலை உணவை
புறக்கணிக்க கூடாது.அதிக காரம் அதிக எண்ணெய் வஸ்துகளை தவிர்த்துக் கொள்ள
வேண்டும்.நொறுக்குத்தீனிகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
சாதாரண அஜீரண
கோளாறுகளுக்கு அலுமினியம் மற்றும் மக்னீசியம் ஹைடிராக்சைடு கலவைகளை
திரவமாகவோ அல்லது சுவைக்கும் மாத்திரைகளாகவோ உட்கொள்ளலாம் .
நாட்பட்ட
கோளாறுகளுக்கு மற்றும் அல்சர்களுக்கு டாக்டரின் ஆலோசனையின்பேரில்
Cimetidin ,Ranitidine அல்லது இவ்வகையில் புதிதாக வந்திருக்கும் Femotidine
ஐ எடுத்துக்கொள்ளலாம்.ஆயினும் இப்போது பெரும்பாலும் இவற்றை விட Proton
Pump Inhibitors வகைகளான Omiprazole ,Esomeprazole ,Rabiprazole போன்றவை
மிகவும் பாதுகாப்பானவை.ஆனால் குறுகிய அல்லது நாட்பட்ட எதுவாக இருந்தாலும்
ஆரம்பமாக ஒரு சில நாட்கள் இம்மருந்துகளுடன் Antacids ஐ யும்
உட்கொள்ளவேண்டும் ஏனென்றால் வயிற்றில் ஏற்கனவே அதிகமாக சுரந்து தங்கி விட்ட
அமிலத்தை antacids கலை கொண்டு மட்டுமே Neutralize செய்ய முடியும்.சிறு
நீரகக்கோளாறு உள்ளவர்கள் டாக்டரின் ஆலோசனையின்படியே antacids களை உட்கொள்ள
வேண்டும்
3.அல்ஜைமர் நோய் (Alzheimer's Syndrom):
இந்த
வியாதி வந்தவர்கள் தன நினைவு இழந்து விடுவார்கள்.இது மூளையின்
நினைவுப்பகுதியில் உள்ள நரம்பு மண்டலங்களை சிறுகச் சிறுக அழித்து
விடும்.இந்த வியாதி வந்தவர்களின் மூளை மண்டலத்தில் Acetylcholin என்ற
நரம்பு ஊக்கி ஹார்மோன் சரிவர சுரக்காததிநாளோ அல்லது சுரக்கின்ற ஹார்மோன்
acetylcholinesterase என்ற enzymine ஆல் அழிக்கப்படுவதினாலோதான்
ஏற்ப்படுகிறது இதற்க்கு நிவாரணம் இதுவரை இல்லை.ஆனால் சில மருந்துகள் மூலம்
இவர்கள் அமைதி பெற முடியும்.Tacrine என்ற மருந்துதான் முதன் முதலில் இந்த
வியாதி வந்தவர்களுக்கு ஒரு தர்க்காலிக அமைதி தந்தது.ஆனால் இப்போது வேறு சில
மருந்துகளும் உபயோகத்தில் இருக்கின்றன.
ஆரம்ப
கட்டத்திலிருந்து கொஞ்சம் முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு இந்த
acetylcholinesterase என்ற enzyme ஐ செயலிழக்கச்செய்யும் Galantamine
,Rivastigmin ,Donepazil போன்ற மருந்துகள் மூலம் தற்காலிகமான நிவாரணம்
அடையலாம் .
முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு N-methylD-aspertate(NMDA) என்ற ஹார்மோனை செயலிழக்கச்செய்யும் (Antagonist ) Memantine -என்ற
மருந்தை உபயோகிக்கலாம்.ஏனென்றால் ஒரு ஆய்வின் தீர்வு படி மூளையில் நினைவு
பகுதியில் இந்த NMDA என்ற நினைவை மட்டுப்படுத்தக்கூடிய ஹார்மோனும்
Acetylcholinஎன்ற நினைவை தூண்டக் கூடிய ஹார்மோனும் ஒன்றை ஒன்று
கட்டுப்படுத்துபவை ஆக இருக்கின்றன ஒன்று மிகைக்கும் போது ஒன்று சுருங்கி
விடும்.இந்த நிலையில் நினைவு கோளாறு ஏற்ப்படும்
2.மனச்சோர்வு(Depression):-
இந்த
நோய் வந்தவர்கள் மனத்தளர்வு எதிலும் பிடிப்பின்மை அச்சம் தோல்வி
மனப்பான்மை இவற்றுடன் தூக்கமின்மை மன உளைச்சல் இவற்றிக்கும்
ஆளாகிறார்கள்.இது பாரம்பரியமாகவும் வரலாம் அல்லது எதோ ஒன்று வாழ்க்கையில்
எதிர்பாராத ஏமாற்றங்கள் அல்லது தோல்விகள் போன்ற நிகழ்வுகளாலும் வரலாம்
பாரம்பரியமாக வந்திருந்தால் இதை டாக்டரிடம் காட்டி மருந்துகள்
எடுத்துக்கொள்ளலாம்.இந்த மருந்துகள் பெரும்பாலும் பக்க விளைவுகள் உள்ளதாகவே
இருக்கும்இந்த மருந்துகளால் எடை
போடுதல்,மந்தம்,மலச்சிக்கல்,களைப்பு,ஆகியவை ஏற்ப்படும் இப்போது சில
மருந்துகள் குறைந்த பக்க விளைவுகளுடன் கிடைக்கின்றன.அவை Fluoxein
,Paroxetin,Bupropion ,Sertalin ,and Venlafaxin .
1.ஸ்கீசோபெர்னியா (மன நோய்):-
இந்த நோய் பாதித்தவர்கள் ஒன்று நேர்மறையாக(positive )ஆக மிகவும் உத்வேகத்துடன் இருப்பார்கள் நிலையில்லாமல் தவிப்பார்கள் இன்னொரு விதம் எதிர்மறை (நெகடிவ்).இவர்கள் அமைதியாக ஒதுங்கி இருப்பார்கள் தங்களை அந்நியமாக்கி கொள்வார்கள் schezophernia உக்கு நிவாரணம் கிடையாது மருந்து மூலம் கட்டுப்படுத்துவதுதான் இன்று வரை உள்ள நிலைமை.அதிலும் உத்வேக schezophernia விற்கு முன்பு அதிக பக்க விளைவுகலுள்ள Haloperidol ,thioridazine ,trifluoperazine போன்றவரை உபயோகித்தார்கள்.இம்மருந்துகள் நோயாளிக்கு நிம்மதியின்மை,களைப்பு,பலவீனம்,பேச்சு தடுமாற்றம் மற்றும் தசை பிடிப்பு போன்ற பக்க விளைவுகளை உண்டாக்கின.எனவே இவற்றை விட குறைந்த பக்க விளைவுகள் கொண்ட risperidone ,clozapine ஆகியவை இப்போது உபயோகத்திலிருக்கின்றன
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக