வெள்ளி, 1 நவம்பர், 2013

ஏகத்துவம்

 உலகிலுள்ள மதங்கள் பல அவற்றில் முக்கியமானவை இஸ்லாமும் கிறித்தவமும்.இன்னும்பிராந்தியமதங்களான ---------------------------------------------- ---- ஹிந்து,பெளத்தம்,ஜைனம்,ஜோராஷ்ட்ரம்.இதில் இஸ்லாம் தவிர மற்ற மதங்களில் உள்ள கடவுள் கோட்பாடுகள் தெளிவற்றவை.ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இல்லை என்பதுமட்டுமல்ல கடவுள் என்றால் இந்த அகிலத்துக்கேல்லாம் பொதுவானவர் இந்த அண்ட சராசரங்களையும் படைத்து ஆட்கொண்டவர் என்பதில் எவருக்குமே கருத்து வேறுபாடு இல்லை ஆனால்இவர்களின்   வினோதமான கடவுள் கோட்பாடுகளை கீழே படியுங்கள்.
 கிறித்தவ மதத்தை எடுத்து கொண்டால் ஒருகாலத்தில் பாலஸ்தீனில் மனிதராக வாழ்ந்த ஜீசஸ்தான் கடவுள் என்கிறார்கள்.ஆனால் அவரோ தான் படைத்த இந்த அகிலத்தில் பாலஸ்தீனத்திற்கு அப்பால் எங்குமே போனதுமில்லை.கண்டதுமில்லை.எல்லாம் அறிந்தவர் கடவுள் ஆனால் ஜீசசோ சிரிய மொழி தவிர வேறுதுவும் அறிந்திருக்கவில்லை.
ஹிந்து மதத்திலுள்ள வேத புராணங்களில் எங்குமே அந்த பெயரில் ஒரு மதம் இருந்ததாக சான்றுகள் இல்லை.இருப்பினும் அதன் முக்கிய பிரிவுகள் மூன்று,மூன்று தனித்தனி கடவுளர்களை நாயகர்களாகக் கொண்டவை.பிரம்ம மதம்.பிரம்மாவை கடவுளாக கொண்டது.பிரம்மா நான்கு முகங்களை கொண்டவர்.படைப்பதற்கு மட்டுமே சக்தி பெற்றவர்.பிரம்மலோகம் இவரது இருப்பிடம்.
அடுத்து வைஷ்ணவம்.மகாவிஷ்ணு இதன் கடவுள்.நீல மேக நிறம் பாம்பு படுக்கை.வைகுண்டம் இருப்பிடம் லக்ஷ்மி இவரது துணை.காக்கும் சக்தி மட்டுமே இவருக்கு சொந்தம்.
அடுத்து சைவம்.புலித்தோல் ஆடை.சிவந்த மேனி.மூன்று கண்கள்.பரமசிவன் இதன் நாயகன்.பார்வதி துணைவி.கைலாசம் இருப்பிடம்.எதையும் அழித்து துடைத்து தூய்மைபடுத்துவது இவரது வேலை.
இதில் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையில்   யார் கடவுள் உயர்ந்தவர் என்ற சர்ச்சை உலக பிரசித்தம்.
ஹிந்து வேதமாகிய ரிக் வேதமும் சில உபநிஷதுகளும் ஒரு இறைவன்தான் அவன் தான் விஷ்ணு என்றழைக்கப்படும்.ஆனால் அறிவுள்ளவர்கள் அவனை பல ரூபங்களில் தொழுவர்.என்கிறது.பல ரூபங்கள் என்றால் சிவன் சக்தி பிரம்மா சரஸ்வதி,இப்படி ஆண்களாகவும் பெண்களாகவும் அவர் விதம் விதமாக தொழப்படுவார் என்பது எப்படி அறிவுடைமை ஆகும் என்று தெரியவில்லை.
இப்படியே ஹிந்து வேதங்களில் ஒரு தெளிவற்ற தன்மையை பார்க்கும் போது அதில் மனித கையாடல்கள் இருப்பது தெளிவாகிறது.வேதங்கள் அதன் அசல் மொழியான வேத மொழியிலிருந்து பிராகிருத மொழிக்கும் பிறகு சம்ஸ்கிருத மொழிக்கும் மொழி மாற்றம் செய்யப்படும் போது இந்த கையாடல் நடந்திருக்க கூடும்.

 மேலும் கடவுள் வேறு கிடையாது அன்பே கடவுள் என்று போதித்த புத்தரையே கடவுளாக்கி வழிபடுகின்றனர்பெளத்தர்கள் .
ஜைன மதத்தினர் மகாவீரரையும்,ஜோராஷ்ட்ரியர்கள்(மஜூசிகள்)நெருப்பையும் கும்பிடுகின்றனர்.யூதர்கள் எஸ்ராவை தெய்வ  குமாரன் என்கின்றனர்.
ஆனால் இவை எல்லாவற்றிலிருந்தும் வேறு பட்டு இறைவனை இறைவனாகவே காட்டுகின்ற ஒரே மதம் இஸ்லாம்தான்.தனி மனிதனுக்கோ,அல்லது வேறு எந்த உயிருள்ள அல்லது உயிரற்ற பொருட்களுக்கோ வழிபாடு என்பது இஸ்லாத்தில் இல்லை.இறைவனை ஒப்பற்றவன்(ஒப்பிலியப்பன்)என்றும் ,ஏகன்(ஒன்றே குலம் ஒருவனே தேவன்) என்றும்,கற்பனைக்கு அப்பாற்ப்பட்டவன்,எல்லாவற்றையும் கற்பனா சக்தி உட்பட அனைத்தையும் கடந்து நிற்ப்பவன்(கடவுள்)என்றும்   போதிக்க கூடிய ஒரே மார்க்கம் இவ்வுலகில் இஸ்லாம்தான்.
இந்தியாவில் உள்ள இந்து மக்கள் பெரும்பாலும் முஸ்லிம்களை அரேபிய கடவுளான அல்லாஹ்வை கும்பிடுகிரார்களே.ஏன் இந்தியாவில் இத்தனை கடவுள்கள் இருக்க இவர்களுக்கு அரேபிய கடவுள்தான் வேண்டுமா என்றெல்லாம் தவறாக போதிக்க படுகிறார்கள்.
ஆனால் உண்மை அதுவல்ல.அல்லாஹ் என்ற சொல் அரபு மொழியில் இருந்தாலும் அந்த சொல் தரும் பொருள் இறைவன் என்பது மட்டுமே அன்றி ஒரு குறிப்பிட்ட நபரையோ அல்லது பொருளையோ குறிப்பது அல்ல.இந்த சொல்லை மத வித்தியாசம் இல்லாமல் அரப் கிறிஸ்தவர்களும் ஜீசசுக்கு பயன்படுத்துகிறார்கள்.ஒரு ஹிந்து அரபு மொழியை தாய் மொழியாக கொண்டிருந்தால் அவர்கூட பரமசிவனையோ அல்லது மகாவிஷ்ணுவையோ அல்லாஹ் என்றுதான் அழைக்க முடியும் ஏனென்றால் அரபு மொழியில் கடவுள்  என்ற அர்த்தத்தில் வரும் ஒரே வார்த்தை அல்லாஹ்தான்.அதுதான் அந்த வார்த்தையின் தனிச்சிறப்பு.இன்னும் சிறப்புகள் உள்ளன.அவற்றை பார்ப்போம்.
 இந்த அல்லாஹ் என்ற வார்த்தையை பன்மை படுத்த முடியாது.மேலும் இதை பெண்பாலாகவும் மாற்ற முடியாது.அப்படிஎன்றால் இறைவன் ஆண் என்று அறியப்படவில்லை.ஒப்பற்ற அவன் ஆண் பெண் என்ற இனங்களை எல்லாம் கடந்தவன் என்றாலும் அழைப்புக்காக அவன் ஆண் பால் குறியீட்டிலேயே அழைக்கபடுகிறான்.அதுவே பொருத்தமும் ஆகும் என்பதால் ஏகத்துவத்திற்கு இந்த அல்லாஹ் என்ற சொல் கன கச்சிதமாக பொருந்துகிறது.அதனால்தான் இந்த அகில உலகிலும் உள்ள முஸ்லிம்கள் பெரும்பாலும் எந்த மொழியினராயினும் அவர்கள் இறைவனை அல்லாஹ் என்றே அழைக்கின்றனர்.மற்றபடி இஸ்லாம் தொழுகையில் தவிர மற்ற நேரங்களில் இறைவனை அல்லாஹ் என்றுதான் அழைக்க வேண்டும் என்று நிர்பந்திக்கவில்லை
உங்கள் இறைவனை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எந்த மொழியில் வேண்டுமானாலும் அழகிய அர்த்தங்கள் தரக்கூடிய இணைவைப்பு கலவாத பேரை கொண்டு கூப்பிடலாம் என்பதே இஸ்லாம்.
ஒரு ஹிந்து வினவலாம் அப்படியானால்,தமிழில் தூயவன் என்றும் அரபியில் சுப்ஹான் என்றும் அர்த்தம் தருவதுதான் சிவன் என்பது.
தமிழில் பாதுகாப்பவன் ரட்ஷிப்பவன் என்று அரபியில் ரப்பு என்றும் அர்த்தம் தரக்கொடியதுதான் விஷ்ணு என்பது
மேலும் தமிழில் படைப்பவன் என்றும் அரபியில் ஹாலிக் என்றும் பொருள் படுவதுதான் பிரம்மா என்பது/
எனவே அந்த பெயர்களை கொண்டு ஏன் இறைவனை அழைக்க கூடாது என்று கேட்டால் ஒரு முஸ்லிம் என்ன பதில் சொல்லவேண்டும்?
ஒரே பதில்தான் நல்ல அர்த்தங்களை அந்த வார்த்தைகள் தந்தாலும்,அந்த சம்ஸ்கிருத வார்த்தைகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன,பிரம்மா என்ற படைப்பவன் நான்கு முகம் கொண்டவன்,பிரம்மலோகத்தில் இருப்பவன்,சரஸ்வதி இவரது மனைவி என்று தனி உருவகபடுத்த படுகிறான் இவ்வாறு விஷ்ணு,நீல நிறத்தவனாகவும் சிவன் சிவப்பு நிறத்தவனாகவும் உருவகப்படுத்தப்படுகிறார்கள்
இப்படி இவர்கள் தனி தனி உருவகமுள்ள தெய்வங்களாக உருவகப்படுத்த படுவதால் ஒரு முஸ்லிமால் அந்த பெயர்களை இறைவனுக்கு பயன் படுத்த முடியவில்லை.

கருத்துகள் இல்லை:

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...