திங்கள், 29 அக்டோபர், 2018

மருந்தே விஷம் -3

விஷமாகும் மருந்துகள் -ஆஸ்பிரின் 

வலி நிவாரணம் வாத உளைச்சல் மற்றும் காய்ச்சல் போன்றவற்றிற்கு ஆஸ்பிரின் ஒரு அற்புதமான நிவாரணி 
ஒரு காலத்தில் இது குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் தெரிந்து வைத்த ஒரு மருந்து 
தலைவலியா ஒரு ஆஸ்ப்ரோ சாப்பிடுங்கள் தலைவலி மாயமாக நீங்கி விடும் என்று பட்டி தொட்டிகளிலெல்லாம் விளம்பர படுத்தப்பட்டு  பெட்டி கடைகளில் கூட கிடைக்கப்பட்ட மருந்து 
ஆஸ்பிரின்,ஆஸ்ப்ரோ,டிஸ்பிரின்,டிஸ்பிரில் என்றெல்லாம் விளம்பரப்படுத்த பட்டாலும் இதன் இரசாயன பெயர் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம் என்பதாகும் 
பாராசிட்டமால் மாதிரி  இல்லாமல் இது ஒரு அமிலம் ஆகும் 
இது ஒரு பலவீனமான அமிலம் தான் என்றாலும் இதன் வீரியம் வயிற்றின் உட்புற மெல்லிய தோலை அரித்தெடுக்க போதுமானது 
இது இரத்தம் உறைவதையும் கட்டுவதையும் தடுத்து இரத்தத்தை நீர்த்து போக செய்யும் ஆற்றலுடையது  எனவே ஓவர் டோஸ் எடுத்து கொண்டால் வயிற்றில் புண் உண்டாவதோடு உள் இரத்த போக்கையும் (INTERNAL BLEEDING ) ஏற்படுத்தும்.மேலும் இதை தினசரி சாப்பிடக்கூடிய  இதய நோயாளிகள் மற்றும் பிரஷர் நோயாளிகள் உடலில் பலத்த காயங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.ஏனென்றால் இரத்தம் உறைவதை குறைக்கும் இந்த மருந்து பலத்த காயங்களிலிருந்து அதிக இரத்தப்போக்கை (EXTERNAL BLEEDING) உண்டாக்கும்.
பல் ஈறுகளில் இரத்தம் கசிவு இருந்தால் ஆஸ்பிரினை  டாக்டரின் ஆலோசனையுடன் கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும் 
மேலும் மூட்டு வலி உடையவர்கள் ஆஸ்பிரினை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
ஏனென்றால் ஆஸ்பிரின் யூரிக் அமிலம் சிறுநீரில் வெளியேறுவதை தடுக்க கூடியது இது ஒரு ANTI URICOSURIC  ஆகும் 
எனவே மூட்டு இடுக்குகளில் அதிகமான யூரேட் உப்புக்கள் தேங்கி வலியை அதிகரிக்கும் இவர்கள் மற்ற வலி நிவாரணிகளை குறிப்பாக ப்ரூபன், ,நெப்ரோக்ஸன், இன்டோஸிட் போன்றவற்றையோ  அல்லது ஸ்டெராய்டுகளையோ டாக்டரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளலாம்.
இப்போதெல்லாம் ஆஸ்பிரினை குழந்தைகளுக்கு அதுவும் ஐந்து வயதிற்கு கீழ் பட்ட குழந்தைகளுக்கு டாக்டர்கள் எழுதுவதில்லை 
காரணம் GRAY BABY எனப்படும் RYE'S SYNDROM என்ற கொடிய வியாதி இது ஒரு RARE SYNDROM தான் என்றாலும் இது ஒரு கொடிய வியாதி ஆகும் குழந்தைகளுக்கு ஆஸ்பிரின் ஏற்படுத்தும் இந்த கொடிய வியாதியால் குழந்தைகள் இறந்து விடும் 
எனவே பேபி ஆஸ்பிரின் என்ற பெயரில் இப்பொது ஆஸ்பிரின் மார்க்கெட்டில் இல்லை ஆனால் அதே பேபி ஆஸ்பிரின் 75கிராம் 80 கிராம்களில் இதய நோயாளிகளுக்கு மாத்திரைகளாக வருகின்றது 
பிரசவ காலங்கள் முழுவதும் ஆஸ்பிரினை எடுக்காமல் இருக்க வேண்டும் 
குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் ஆஸ்பிரின் எடுத்து கொண்டால் குறை பிரசவம் ஏற்படும் 
நஞ்சு உண்டாவதில் பிரச்சினை ஏற்படும் உள் இரத்தப்போக்கு ஏற்படலாம் குழந்தைக்கும் பாதிப்புகளை உண்டாக்கும்
ஆஸ்பிரின் ஜாக்கிரதை
பொதுவாகவே எந்த மருந்தாக இருந்தாலும் அதை மருந்தாகவே பாருங்கள்
அது வைட்டமின் மாதிரியாகவே இருக்கட்டும்
வைட்டமின் மாத்திரைகளை கூட அஜாக்கிரதையாக பயன்படுத்தினால் அதுவும் விஷமாகவே முடியும் இது பற்றி நாம் பின்னால் பார்க்கலாம்


வியாழன், 25 அக்டோபர், 2018

மருந்தே விஷம் -2

விஷமாகும் மருந்துகள் -வலிநிவாரணிகள் 

1.பாராசிட்டமால் :-

இந்த மருந்து யு எஸ்ஸில் Acetaminophen என்றும் இந்தியா போன்ற நாடுகளில் Paracetamol  என்றும் மார்க்கெட்டிங் செய்யப்படுகிறது 
தலைவலி காய்ச்சல் மற்றும் உடல்வலி போன்ற உபாதைகளுக்கு இது ஒரு அற்புதமான வலிநிவாரணி 
இதை சிறுவர் முதல் பெரியவர் வரை குறிப்பாக வயிற்று கோளாறு வாய்வு பிரச்சினை அல்சர் நோயாளிகள் என்று யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் 
இது வாத உளைச்சல் சிவப்பேறுதல்  (INFLAMMATION )போன்ற உபாதைகளுக்கு பயன்படுத்த கூடாது ஏனென்றால் பிரயோஜனம் இல்லை

 இது வலி மற்றும் காய்ச்சல் உஷ்ணத்தை குறைப்பதே அலாதியானது
இது மற்ற வலிநிவாரணிகள்  போல் செயல்படுவதில்லை
வயிற்று கோளாறுகளை உண்டாக்குவதில்லை
ஆனால் மத்திய நரம்பு மண்டலத்தின் மூலமாகத்தான் இது வேலை செய்கிறது மூளையில் உள்ள Hypothalamus பகுதியில் உஷ்ணத்தை சமன்படுத்தும் thermostat அமைப்பு உண்டு இது நம் உடம்பில் உஷ்ணம் அதிகரிக்கும் போது வியர்வை சுரப்பிகளை தூண்டிவிட்டு உஷ்ணத்தை கட்டுப்படுத்தும்.ஆனால் காய்ச்சலின் போது இந்த அமைப்பு உடலில் உண்டாகும்  pyrogen  புரதத்தினால்  அதிகப்படியான prostaglandin என்ற புரதத்தை சுரந்து உடல் உஷ்ணத்தை கூட்டும்  பாராசிட்டமால் இந்த thermostat அமைப்பை தூண்டி விட்டு அதிக வியர்வை மூலம் காய்ச்சலை கட்டுப்படுத்துகிறது .
இதே முறையில் இது வலியையும் கட்டுப்படுத்தும்
பாராசிட்டமால் இப்படி மத்திய நரம்பு மண்டலத்தின் மூலம் hypothalamus அமைப்பை மட்டுமே கட்டுப்படுத்துவதால் வயிற்று கோளாறுகளை உண்டாக்குவதில்லை
ஆனாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்ற கதைதான் இம்மருந்தை நம் இஷ்டத்திற்கும் எடுத்து கொண்டால்
இது panadol,Dolo என்ற பல பெயர்களில் 250 மி.கி ,500 மி .கி ,மற்றும் 600 மி.கி என்ற அளவுகளில் கிடைக்கிறது
குழந்தைகளுக்கு ரோஸ் மில்க் போன்ற கலரில் 125 மி.கி ஸிரப் பும் கிடைக்கிறது
இதற்கான கவர்ச்சிகரமான விளம்பரங்களும் மீடியாக்களில் பட்டி தொட்டியெல்லாம் காட்சியாகின்றன
மருந்துகளை விளம்பரம் செய்யும் போது அதன் அனுகூலங்களை மட்டும் ஹைலைட் பண்ணிவிட்டு பிரதிகூலங்களை மறைத்து விடுவார்கள்
இது எல்லா மருந்துகளுக்கும் குறிப்பாக இதய நோய் ,ரத்த அழுத்தம்,தைராய்டு ,வாத நோய் மருந்துகளுக்கும் இப்படித்தான் விளம்பரங்கள் செய்கிறார்கள்
சிகரெட் விளம்பரத்திற்கு கூட "சிகரெட் புகைப்பது உடலுக்கு கேடு என்று ஒரு சிறு குறிப்பு போடுவார்கள்
ஆனால் இந்த நச்சு விளம்பரங்களில் வெறும் வியாபார நோக்குதான் இருக்குமே தவிர ஒரு சிறு எச்சரிக்கை குறிப்பு கூட இருக்காது
இப்பொது வருவோம் பாராசிட்டமால் ஒரு அற்புதமான காய்ச்சல் நிவாரணிதான்
டாக்டர் எப்போதோ சிபாரிசு செய்தார் என்பதற்காக காய்ச்சல் வரும்போதெல்லாம் வைட்டமின் டானிக் மாதிரி குழந்தைக்கு பாரசிட்டமால் ஸிரப்பை  கொடுக்கலாமா?என்ன செய்ய குழந்தைக்கு மேலசூடு சும்மா நச் நச் என்று அழுதுகிட்டே இருக்கிறான் ஒரு வேலையும் செய்யமுடியவில்லை இதை ஒரு டோஸ் ஊற்றிவிட்டால் கொஞ்ச நேரமாவது தொல்லை இருக்காது காய்ச்சல் குறைந்து பிள்ளை தூங்கி விடுவான் நிம்மதியாக மற்ற வீட்டு வேலைகளை கவனிக்கலாம் மீண்டும் காய்ச்சல் ஏறினால்  இன்னொரு டோஸ் கொடுத்து தூங்க வைத்துவிடுவேன் ரோஸ் மில்க் மாதிரி டேஸ்ட்டாக இருப்பதால் இடக்கு பண்ணாமல் பிள்ளை குடித்துவிடுவான்
இது சில தாய் மார்களின் அங்கலாய்ப்பு ஆஹா என்ன ஒரு அறிவு ஜீவிகள்
ஏனென்றால் இது செல் போன் யுகம் அஞ்சறை பெட்டியும் பாட்டி  காலத்து இஞ்சி கஷாயமும் தாழ்ந்து போய்விட்டன அந்த காலத்து கிழவிகள் மாதிரி பிள்ளையை துரத்தி பிடித்து காலுக்குள் சிக்கவைத்து சங்கிலே இஞ்சி சாறை குழந்தையின் வாயில் திமிர திமிர ஊற்றுவதற்கு இந்த காலத்தில் யாருக்கு இயலும் காரணம் அந்த காலத்து கிழவிகள் மாதிரி இந்த காலத்தில் யாருக்கும் ஆரோக்கியமும் இல்லை நாட்டு மருத்துவ அறிவும் இல்லை
அதனால்தான் ஷாப் மருந்து வியாபாரிகளுக்கு அடித்தது யோகம்
பிள்ளைகளின் உடல் நலனுக்கு தோஷம்
பெரியவர்கள் கூட இந்த மருந்தை மாத்திரைகளாக தலைவலி காய்ச்சல் வரும்போது வாங்கி விழுங்குகிறார்கள்
எப்போதாவது சாப்பிடுவதில் பிரச்சினை இல்லை ஆனால் அடிக்கடி சாப்பிடும்போது ஓவர் டோஸ் ஆவதற்கு வாய்ப்பு உண்டு
பாராசிட்டமால் ஓவர் டோஸ் பக்க விளைவுகள் கொடுமையானவை
1.தலை சுற்றல்
2.வாந்தி
3.தோல் அரிப்பு
4.மயக்கம்
5.அல்சர்
6.குடல் பாதிப்பு
7.சோகை நோய்
8.உதடுகள் சிவத்தல்
மேலே கண்ட அத்தனை பக்க விளைவுகளும் ஈரல் பாதிப்பின் அறிகுறிகள்
ஆம் பாராசிட்டமால் ஒரு ஈரலை பாதிக்கும் கொடிய விஷம் ஆகும்
சாதாரணமாக நாம் சாப்பிடும் பாராசிட்டமால் ஈரலில்தான் சிதைக்கப்படுகிறது
அப்படி சிதையும் பொழுது 10% பாரசிட்டமால்  N -Acetyl p-Benzo Quinone Imine (NAPBQI )என்ற  நச்சாக மாறுகிறது இதை நம் ஈரல் தன்னிடமுள்ள Glutothione என்ற ஆஸீகரண எதிர்ப்பான (ANTIOXIDANT) மூலம் செயலற்றதாகிவிடும் ஆனால் இதுவே பாராசிட்டமால் ஓவர் டோஸ் ஆகும் பொழுது இந்த விஷத்தை முறிக்கும் அளவு க்ளூடோத்தியோனை ஈரலினால்
உற்பத்தி செய்யமுடியாமல் போய் அந்த NAPBOI விஷம் ஈரல் செல்களை தாக்கி அரித்துவிடும் பெரியவர்களுக்கே இப்படி என்றால் குழந்தைகளுக்கு கேட்க வேண்டியதே இல்லை
பெரியவர்கள் ஒருநாளைக்கு ஒரு வேளை 500 மி.கி.யிலிருந்து 1000 மி.கி வீதம் 4000 மி.கி.வரை எடுத்து கொள்ளலாம் எனினும் நிதானம் வேண்டும்
இரண்டு வயதுக்கு கீழ் பட்ட குழந்தைகளுக்கு டாக்டரின் கண்காணிப்பு இல்லாமல் இதை கொடுக்காதீர்கள்
மாத தீட்டு வலிக்கு இதை சாப்பிடலாம் ஆனால் கர்ப்பம் உண்டாகி விட்டால் இதை சாப்பிடக்கூடாது
இதை சாப்பிட்ட பிறகு அரிப்பு போன்ற அலர்ஜி ஏற்பட்டால் நிறுத்தி விடவும்
சிறுநீரகம் ஈரல் கோளாறுகள் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதை சாப்பிடவேண்டாம்
நீரிழிவு நோயாளிகள் டாக்டரின் ஆலோசனையின் பெயரில் இதை சாப்பிடலாம்
மது வருந்தும்போது மற்றும் புகைக்கும் போது இதை  சாப்பிட்டால் புற்று நோய் வர வாய்ப்பு உண்டு



புதன், 10 அக்டோபர், 2018

மருந்தே விஷம் -1

விஷமாகும் மருந்துகள் -1

சமீபத்தில் ஒரு பெண் சென்னையில் தன் கள்ளக்காதலுக்கு இடையூறு என்று கருதி தன் குடும்பத்தையே கொலை செய்ய முயன்றாள்  அதில் அவள் கணவன் தெய்வாதீனமாக தப்பித்துக்கொண்டான்.ஆனால் அவள் இரண்டு குழந்தைகளும் மாண்டன.இந்த செய்தியின் முழு விபரம் இந்த தலைப்புக்கு அவசியம் இல்லை என்றாலும் அதில் அவள் கொலை செய்ய பயன்படுத்திய அந்த மருந்து மிக முக்கியம் ஏனென்றால் அது தூக்க மாத்திரையோ அல்லது மூட்டை பூச்சி மருந்தோ இல்லை வெறும் கர்ப்பத்தடை மாத்திரை தான்.
இந்த டெக்கினிக்கை அவளுக்கு கூறியது அவளது கள்ள காதலன்தான் அவன் மருந்து கடை சட்டங்களை ஓரளவு தெரிந்தே வைத்திருக்கிறான் 
ஆம் தூக்க மாத்திரையோ பூச்சி மருந்துகளோ வாங்க வேண்டும் என்றால் மருந்தாளுனரிடம் டாக்டர் சீட்டை காட்டவேண்டும் அல்லது அதற்கான சில விவரங்களை காட்டவேண்டும் அப்படியே இல்லாமல் தெரிந்தவர் மூலம் அதை வாங்கினாலும் அது மிகப்பெரும் சிக்கலை பின்னால் பார்மஸிக்கும் வாங்கியவருக்கு உண்டாகலாம் 
இதனால் அவன் மூளை கருத்தடை மாத்திரைக்கு திரும்பி இருக்கிறது 
சாதாரண அல்லது டாக்டரின் வழிகாட்டுதலின் பெயரில் இந்த மாத்திரைகளை யாரும் பயன்படுத்தலாம் எந்த பிரச்சினையும் இல்லை பார்மஸியில் இதை OTC யில் டாக்டர் சீட்டு இல்லாமலே தருவார்கள் இதனால் எந்த சந்தேகமும் வராது 
ஆனால் ஒன்றை மறந்து விடக்கூடாது 
அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷமாகும் 
விருந்தும் மருந்தும் மூன்று நாள்தான் 
அதன் அர்த்தம் அளவுக்கு மீறி விருந்து சாப்பிட்டால் உடலுக்கு எவ்வளவு கேடோ அது போல்தான் அளவுக்கு மீறி எடுக்கப்படும் மருந்தும் உடலுக்கு கேடே 
மேலே கண்ட அந்த கொலை செய்தியில் கொலைகாரி தன் ஐந்து வயது குழந்தையை கொல்ல  ஐந்து மாத்திரைகளை பாலில் போட்டு கொடுத்தவளுக்கு பத்து வயது இன்னொரு குழந்தையை கொல்ல பத்து மாத்திரைகள் தேவைப்பட்டு இருக்கிறது 
ஒரு கருத்தடை மாத்திரை பேக்கில் 21 மாத்திரைகள் இருக்கும் 
இந்த மாத்திரைகளை ஒவ்வொரு மாதவிடாய் காலங்களில் ஒவ்வொரு நாளும் ஒரு மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும் 21 நாட்கள் இவ்வாறு சாப்பிட்ட பின் 7 நாட்கள் இரத்த போக்கு இருக்கும் வரை மாத்திரை ஏதும் சாப்பிட வேண்டாம் .அந்த 7 நாட்கள் மாத விடாய் நின்ற பிறகு மீண்டும் அடுத்த மாதவிடாய் கால ஆரம்பத்தில் மீண்டும் தொடர வேண்டும் இதுதான் அதன் நியதி 
சரி இப்போது அந்த மாத்திரைகளில் என்னதான் மருந்துகள் இருக்கிறதென்று விபரமாக பாப்போம் 
இவற்றில் பெரும்பாலும் இரண்டு வகையான ஹார்மோன்கள் தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ இருக்கும் 
அவை ப்ரோஜெஸ்டின் மற்றும் ஈஸ்ட்ரோஜென் வகை ஹார்மோன்களாகும் 
இவை பெரும்பாலும் செயற்கையாக (SYNTHETIC) உருவாக்கப்பட்டவை ஆகும் இவை இயற்கை ஹார்மோன்களை விட வீரியம் குறைந்தவை என்றாலும் தவறுதலாக பயன்படுத்தினால் ஆபத்தை விளைவிக்கும் 
பொதுவாக கர்ப்பத்தடை மாத்திரைகளில் ஏராளமான பக்க விளைவுகள் இருந்தாலும் அதில் மிக முக்கியமானவை 1.இரத்தம் குழாய்க்குள் உறைந்து சிறு சிறு உறைவுகளாக (CLOTS) மாறி அங்கங்கே இரத்தக்குழாய்களை அடைத்துக்கொள்ளுதல் இதில் முக்கியமானது நுரையீரல் இரத்தக்குழாய் அடைப்பு.இதற்கு PULMONARY  EMBOLISM என்பார்கள் மூச்சு முட்டி மரணம் சம்பவிக்கும் 
2.ஹார்ட் அட்டாக் 
3.ஈரல் வீக்கம் 
4.இரத்த கொதிப்பு 
சிறுவர்கள், சிகரெட் புகைப்பவர்கள் ,இதய நோயாளிகள் ,இன்னும் புற்று நோயாளிகள் இந்த மாத்திரைகளை கண்டிப்பாக எடுத்து கொள்ள கூடாது 

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

பருப்பு வகைகள் (மேவா)-1

பிஸ்தா 

பிஸ்தா பருப்பு மரங்களிலிருந்து பெறப்படும் போஷாக்கு நிறைந்த மேவா பருப்பு ஆகும்.வேறு எந்த பருப்பு வகையையும் விட அதிகம் புரத சத்து உடையது.ஒரு அவுன்ஸ் பிஸ்தாவில் சுமார் 6 கிராம் புரதம் இருப்பதால் சைவ உணவு பிரியர்களுக்கு இது ஒரு அமிர்தம் ஆகும் 
மேலும் பிஸ்தாவில் ஆக்ஸீகரண எதிர்ப்பான்கள் மற்றும் நார் சத்தும் இன்னும் விட்டமின்களும் அபரிமிதமாக உள்ளன 
1 அவுன்ஸ் (28.35 கிராம்) பிஸ்தாவில் American Agricultural Department விகிதப்படி கீழ்கண்டவாறு அதன் சத்துக்கள் அமைந்துள்ளன:-
1.கலோரி                                                          --- 159
2.புரதம்                                                              ---  5.72 gm 
3.கொழுப்பு                                                       --- 12.85 gm 
4.கார்போஹைடிரேட்                                 ---  7.75 gm 
5.நார் சத்து                                                       ---  3 gm 
6.சர்க்கரை                                                        --- 2.72 gm 
தாது உப்புகள் & வைட்டமின்கள்
7.மக்னேசியம்                                                 --- 34 mgm 
8.பொட்டாசியம்                                             --- 291 mgm 
9.பாஸ்பரஸ்                                                     --- 139 mgm 
10.வைட்டமின் பி -6 (பைரிடாக்சின்)                                      --- 0.480 gm 
11.வைட்டமின் பி-1 (தயாமின்)

சக்தி :-

மற்ற பருப்புகளை விடவும் பிஸ்தாவில் மிகக்குறைந்த அளவே கலோரி (159) இருக்கிறது எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதை தைரியமாக சாப்பிடலாம் ஒப்புமையாக மகடாமியா பருப்பில் 202 கலோரியும்,குவையானா (பேக்கன்)பருப்பில் 192 கலோரியும் இருக்க பிஸ்தாவில் மிக குறைந்த கலோரியே  இருக்கிறது 

ஆக்ஸீகரண எதிர்ப்பான்கள் (Antioxidant)

ஆக்ஸீகரண எதிர்ப்பான்கள் உடல் ஆரோக்கியத்திற்கு குறிப்பாக இதயம் பலப்படுவதற்கும் தேவையற்ற ஆக்ஸீகரண கழிவுகள் தேங்கி உடலில் புற்று நோய் உண்டாகாமல் தடுப்பதற்கும் அத்தியாவசியமானவை.வாதுமை மற்றும் முந்திரி பருப்புகளை விடவும் பிஸ்தாவில் இவை அபரிமிதமாக இருக்கின்றன.
உதாரணமாக பிஸ்தாவில் அடங்கி இருக்கும் ஆக்சிசீகரண எதிர்ப்பான்கள் :-
1.ஆல்பா டோக்கோபெரால் (வைட்டமின் -இ )
2.பைட்டோ ஸ்டெரால்கள் 
3.சாந்தோப்பில் கரோட்டினாய்டுகள் (கண்கள் ஆரோக்கியத்திற்கு )
28 பேர்கள் மாதிரிகளாக அடங்கிய ஒரு சிறு ஆய்வில் அவர்களுக்கு 1 அல்லது 2 சர்வீஸ் (1 அல்லது 2 கை  பிடி) பிஸ்தா பருப்பு ஒரு மாதம் சாப்பிட கொடுத்ததில் அவர்களுக்கு மற்ற எவரையும் விட தேவையான அளவு ஆக்ஸீகரான எதிர்ப்பான்கள் (லுடீன்,ஸீ சாந்தின்,ஆல்பா-கரோட்டின்,மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை உடலில் கூடி இருப்பது தெரிய வந்தது 
American Ophthalmic Assocition சிபார்சுபடி லூடின் மற்றும் சீசாந்தின் போன்ற ஆக்ஸீகரண எதிர்ப்பான்கள் முதுமையில் உண்டாகும் பார்வை கோளாறுகளுக்கு மிகவும் சிறந்தவை ஆகும் 

ஜீரண மண்டலம் :-

பிஸ்தாவில் இருக்கும் அதிக நார்சத்து குடலினுள் உணவை மிக எளிதாக இறங்க செய்வதால் மலச்சிக்கலுக்கு பிஸ்தா மிகவும் உகந்த தாக்கும் 
மேலும் பிஸ்தாவில் இருக்கும் பிரி பையாட்டிக்குகள் குடலில் நல்ல நுண்கிருமிகள் உண்டாக்கி செரிமான சக்தியை அதிகரிக்கும் 
 

புதன், 22 ஆகஸ்ட், 2018

அன்னமிட்ட வீட்டில் கன்னமிட்ட கதை

கேரளாவின் இந்த சோகம் இந்தியாவின் ஒருமைப்பாட்டு நிலைக்கு சில பாடங்களை தந்திருக்கிறது
கேரளாவின் இந்த நிலைக்கு இனம் மதம் மொழி பிராந்தியம் அத்தனையையும் தாண்டி அனைத்து மாநிலங்களும் போட்டி போட்டுகொண்டு உதவிக்கரம் நீட்டுகின்றன
ஆம் வேற்றுமையிலும் ஒற்றுமை இனம் வேறு மொழி வேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதர்களே என்ற மெய்சிலிற்கவைக்கும் பாடங்கள் அழகான பாடம்
ஆனாலும் இந்த பாடத்தை கேரளத்தில் உள்ள சிலர் எவ்வளவு தூரம் புரிந்து கொண்டார்கள் பாப்போம்
அடுத்தவரின் உதவி மிகவும் கேரளாவுக்கு தேவைப்படும் இந்த நேரத்தில் இன்னமும் அவர்கள் தங்களது இன மொழி   பிராந்திய துவேஷங்களை  விட்டுக்கொடுக்கவில்லை என்பது போல் தான் தெரிகிறது
குறிப்பாக அண்டை மாநிலமான தமிழகம் அரசாங்க ரீதியாக 10 கோடி ரூபாயை தந்ததோடு அதன் மக்களும் தங்கள் சகோதர மலையாளிகள் படும் அவஸ்தைகளை ஊடகங்கள் மூலம் அறிந்து பணமாகவும் உணவுகளாகவும் உடைகளாகவும் மருந்துகளாகவும் தனிப்பட்ட முறையில் லாரிகளில் வேன்களிலும் கண்டைனர்களிலும் அனுப்பி வைக்கும் காட்சிகளை காணும் போது தமிழரின் இந்த ஈகை இரக்க குணம் கண்டு ஒவ்வொரு தமிழனும் பெருமை பட வேண்டும்  
இந்த நிலையிலும் இன்று பக்ரீத் பெருநாளும் அதுவுமா கேரளாவிலிருந்து கன்னியாகுமரிக்கு இரவில் வந்த ஒரு லாரியில் நிறைய கோழி கழிவுகளை வழமை போல் தமிழ்நாட்டை குப்பை தொட்டியாக எண்ணி கொட்டுவந்த நிலையில் பொது மக்கள் மூலம் தகவலறிந்த போலீசார் மடக்கி பிடித்திருக்கின்றனர் 
இது மட்டுமல்ல இடுக்கி அணை நிரம்பி வழிந்து முற்றிலும் திறந்து விடப்பட்டு இடுக்கி மாவட்டம் முழுதும் வெள்ளக்காடான நிலையில் முல்லை பெரியார் அணை யில் தேங்கியுள்ள 142 அடி நீர் எங்களை பயமுறுத்துகிறது எனவே அதை 139 அடியாக குறைக்க வேண்டும் என்று ரசூல் ராய் என்பவர்  சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு வேண்டாத அரசியல் செய்திருக்கிறார் இதையே கேரளா முதல்வரும் தமிழக முதல்வருக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார்
இவர்களுக்கு மன சாட்சி மட்டுமல்ல முல்லைப்பெரியாறு அணையை திறந்துவிட்டால் அந்த நீரும் ஏற்கனவே வெள்ளக்காடாக மிதக்கும் இடுக்கியை நோக்கித்தானே பாயும் என்ற சிற்றறிவு கூட இல்லையே
அன்னமிட்ட வீட்டில் கன்னமிட்ட கதை தானே இது
 

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

கீழ்ப்பாக்கமும் தமிழகமும்

இந்த மாநில அரசியலில் ஓரளவு மாநில அக்கறையுடன் இருப்பவர்கள் என்று பார்த்தால் அது திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி இந்த நாலு கட்சிகளையும் தவிர்த்து மற்ற கட்சிகளில்தான் இருக்கிறார்கள் போல் தெரிகிறது
அவர்களின் தினசரி அறிக்கைகள் தொலை காட்சி பேட்டிகள் தன்னிலை விளக்கங்களை கேட்கும் போதும் பார்க்கும் போதும் அப்படிதான் தோன்றுகிறது அதில் உண்மை இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்
ஆனால் நிச்சயமாக மேலே குறிப்பிட்ட அந்த நாலு கட்சிகளுக்கும் ஆட்சியையும் அதிகாரத்தையும் பிடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தை தவிர சுத்தமாக மாநில அக்கறை என்பது கிஞ்சிற்றும் கிடையாது
ஒரு பக்கம் திமுகவும் அதிமுகவும் கூட்டு களவாணிகள் என்றால் மறு பக்கம் காங்கிரசும் பிஜேபியும் கூட்டு களவாணிகள்
இவர்கள் தங்களுக்குள் திட்டுவதும் சண்டை போடுவதும் ஏதோ ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் Professional-Agreement-
மற்றபடி நான் அடிப்பதை போல் அடிப்பேன் நீ அழுவதைபோல் அழு கொஞ்சம் உனக்கு கொஞ்சம் எனக்கு என்ற அடிப்படைதான்
பிஜேபிக்காரன் மசூதியை உடைதான் காங்கிரஸ்காரன் அதை கட்டி தரவே இல்லை
அதிமுகவும் திமுகவும் மாறி மாறி ஆட்சி செய்தார்கள் ஏரிகள் குளங்கள் என்று சமமாகவே பங்கு போட்டார்கள் கட்டுமானங்களும் அடுக்கு மாடிகளும் கட்டினார்கள் ஆனால் செப்பனிடவில்லை தூர்வாரவில்லை
மெரினா பீச்சை தங்கள் தலைவர்களின் நினைவிடங்களுக்காக பங்கு போட்டுக்கொண்டார்கள்
ஸ்டெரிலைட்டை நீதான் கொண்டு வந்தாய் இல்லை நீதான் என்று சிண்டைபிடித்து கொண்டார்கள் கடைசியில் இரண்டு பேரும் சேர்ந்துதான் என்ற உண்மை வெளியாயிற்று
ஸ்டெரிலைட்டுக்கு ஜெயலலிதா என்றால் கூடன்குளத்திற்கு ஒரு கருணாநிதி
குடி என்ற பிள்ளையை திமுகதான் பெற்றது என்றால் அதை வளர்த்து ஆளாக்கி டாஸ்மாக்கில் குடிவைத்தது அதிமுகத்தானே
இப்படித்தான் போகிறது அந்த நாலு களவாணிகளின் சேட்டைகளும்
ஆகவே தமிழர்களே 1967-இல் ஒரு நாற்பது வருட நல்லாட்சிக்கே சலிப்படைந்த நீங்கள் இந்த ஐம்பது வருட திராவிட ஆட்சியில் சலிப்படையாதது ஏன்?
அன்று காமராஜரோ பக்தவச்சலமோ உங்கள் நலன்களையும் செல்வங்களையும் கொள்ளை அடிக்கவில்லை ஆனால் நீங்கள் சலிப்படைந்தீர்கள் 
ஆனால் இன்று இந்த திராவிட ஆட்சியில் மணல் கொள்ளை மட்டுமல்ல ஒட்டு மொத்த மாநிலமே கொள்ளை போகிறது ஆனால் நீங்கள் சலிப்படையவில்லையே ஏன்?
கீழ்ப்பாக்கத்தில் இருப்பது ஒரு மெண்டல் ஹாஸ்ப்பிட்டால்தான் மொத்த மாநில மக்களையும் அங்கு கொண்டு பொய் அடைப்பது கஷ்டமே

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

நுரையீரல் புற்று ,அறிகுறிகள் காரணிகள் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை

நுரையீரல் புற்று 

 

நுரையீரல் புற்று நோய்க்கு பல காரணிகள் இருந்தாலும் புகைபிடித்தல்தான் முக்கிய காரணியாக இருக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் 40%பேர் இந்நோயால் உயிரிழக்கிறார்கள் என்று தெரிகிறது 
புகையிலையை புகைக்காமல் வேறுவகையில் பயன்படுத்துவது கூட பரவாயில்லை காரணம் புகையிலையில் இருக்கும் நிக்கோட்டின் நேரடியாக புற்றுநோய் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை 
உதாரணமாக புகையிலையை வாயில் போட்டு மெல்லுதல் புகைப்பழக்கத்தை விட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவது இல்லை 
ஆனால் புகைக்கும் பொழுது எரியும் புகையிலையில் உள்ள நிக்கோட்டின் எரிந்து  NNK (NICOTIN DRIVED NITROSAMINE -KETONE) என்ற கொடிய புற்று நோய் ஊக்கியாக (CARCINOGEN) ஆக மாறுகிறது.இப்பொருள் நேரடியாக நுரையீரல் காற்றறை செல்களுக்கும் புகுந்து செல் அணு உட்கருவில் உள்ள DNA -ஐ தாக்கி அந்த செல்லை புற்றுநோய் செல் ஆக மாற்றுகிறது
புற்று நோய்களிலேயே புராஸ்டேட் புற்று மற்றும் நுரையீரல் புற்று இரண்டும் தான் உடனே மற்ற  இடங்களுக்கு பரவாமல் (METASTATIC) அவகாசம் எடுத்துக்கொள்ளும் தன்மையுடையவை 
அதற்குள் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்வது நலம் 

மேலேயுள்ள நிக்கோட்டின் மூலக்கூறு அமைப்பில் ஐகோண வடிவை கவனியுங்கள் அதற்க்கு பைரோலிடின் வளையம் என்று பெயர்.நிகோடின் தீயில் பொசுங்கும் போது இந்த வளையம் உடைந்து கீழ்கண்ட மூலக்கூறு வடிவத்தை பெறுகிறது
இந்த கூட்டு பொருள்தான் கேன்சரை உண்டாக்கும் NNK என்பது
இது சிகரெட்டில் என்றில்லை நிகோடின் இருக்கும் எந்த பொருள் ஆனாலும் இந்த ரசாயன மாற்றங்கள் தீயினால் ஏற்படுகின்றன
மேலும் சிகரெட் புகையில் 75% NNK இருக்கிறது சிகரெட் புகைப்பவரை விட அவர் எதிரில் அமர்ந்திருப்பவரைத்தான் அதிகம் பாதிக்கிறது காரணம் சிகரெட் புகை பெரும்பாலும் புகைப்பவரின் வாய்க்குள்தான் போகிறது பிறகு அவர் அதை வேகமாக ஊதி வெளியேற்றும் போது எதிரே இருப்பவரின் மூக்கிற்குள் சுவாசமாக கலந்து உள்ளே போகிறது .
NNK நம் உடலுக்குள் வந்தவுடன் ஈரல் அதை வீரியப்படுத்துகிறது

நுரையீரல் புற்று 

மேலேயுள்ள படத்தில் கறுத்து இருக்கும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட உறுப்பு ஆகும்

வகைகள் :-

1.பெரிய செல் நுரையீரல் கார்ஸினோமா இதை NON SMALL CELL LUNG CARCINOMA அல்லது SQUAMOUS CELL LUNG CARCINOMA என்றும் அழைப்பர் 
இது அவ்வளவு வேகமானது அல்ல என்றாலும் பாதிக்கப்பட்ட நுரையீரலில் வீரியமாக வேதனை உண்டாக்கும் .இது ஓரிடத்திலேயே நீண்டகாலம் நிலைத்திருப்பதால் இதை சிகிச்சை மூலமோ அல்லது சர்ஜரி மூலமோ சுலபமாக குணப்படுத்தலாம்.மேலும் பெரும்பாலும் இந்த நோயே தாக்குகிறது 
2.சிறிய செல் நுரையீரல் கார்ஸினோமா இதை மருத்துவத்துறையினர் SMALL CELL LUNG CARCINOMA என்பர் 
இது வீரியமாக மற்ற இடங்களுக்கும் பரவக்கூடியது என்றாலும் இது மிகவும்  அசாதாரணமாகவே உண்டாகிறது இது வேகமாக பரவக்கூடியது எனவே இதன் சிகிச்சையும் கடினமானது 
3.நுரையீரல் கார்சினாய்டு டியூமர் (LUNG CARCINOID TUMOR இது மிக மிக அசாதாரணமானது எனினும் மிகவும் ஆபத்தானது இதன் சிகிச்சையும் மிகவும் கடினமானது.இது நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லா சுரப்பிகளை தாக்கக்கூடியது 

அறிகுறிகள் 

ஆரம்பகட்ட அறிகுறிகள் பெரும்பாலும் தெரிவதில்லை 
நோய் முற்றிய பிறகு கீழ்காணும் சில அறிகுறிகள் தென்படலாம் 
1.குரல் கடினமாதல் 
2.களைப்பு 
3.பலவீனம் 
4.அடிக்கடி சளிபிடித்தல் 
5.சிகிச்சைக்கு மட்டுப்படாத தொடர் இருமல் 
6.இருமும்போது சளியுடன் இரத்தம் வருதல் 
7.வழியும் கட்டி சளியும் கூடிய இருமல் இதனால் விழுங்குவது கடினமாகும் 
8.மூச்சு திணறல் 
9.நோய் எலும்பை தாக்கும் போது எலும்பு வலி 
10எடை குறைதல் 

காரணிகள் 

1.நீண்ட நேர புகை சுவாசம் 
2.அடிக்கடி புகைத்தல் 
3.ரேடான் போன்ற கதிர்வீச்சுகள் 
4.நோய் எதிர்ப்பு சக்தி குறையும் சூழ்நிலைகள் (உம்):எய்ட்ஸ் நோய்,நோய் தொற்றுகள்,நீண்ட கால ஸ்டெராய்ட் உபயோகம் 

சிக்கல்கள் 

1.சளி அடைப்பு 
2.நிணநீர் ஓட்டத்துடன் நோய் எலும்பு மூளை போன்ற இடங்களுக்கும் பரவுதல் 
3.வாய் தோற்று,நா வறட்சி,வாய் புண்கள் 
4.ஜீரண மண்டல கோளாறுகள்,வயிற்று போக்கு,மலச்சிக்கல் 

நோய் நிலைகள் 

0-1-நிலை :- இந்த நிலையில் கேன்சர் உண்டாகி இருக்காது.ஆனால் DNA ஆரம்பகட்ட பாதிப்புக்கு தயாராக்கப்பட்டு இருக்கும் சிறு சிறு பொடுகு போன்ற டியூமர்கள் நுரையீரல் காற்றறைகளில் உண்டாக துவங்கும்.அறிகுறிகள் அப்போதைக்கப்போது உண்டாகி மறையும் தொண்டை புகைச்சல் 
1-ஆம் நிலை :- DNA பாதிக்கப்பட துவங்கும் டியூமர்கள் வளர துவங்கி ஆரம்பகட்ட புற்று ஆக மரத்துவங்கும் ஆனாலும் பரவும் நிலையில் இல்லை 
2-ஆம் நிலை :-டியூமர்கள் இன்னும் பெரிதாக தெளிவாக மாறி புற்று நோய் உறுதிப்படும் ஆனாலும் பரவும் நிலையில் இல்லை தொண்டை புகைச்சல் சளியுடன் அதிகரித்து இருக்கும் 
3-ஆம் நிலை :-டியூமர்கள் இன்னும் பெரிதாகி பரவும் நிலைக்கு வரும் ஆனால் நிணநீர் முடிச்சுகளை தொட்டிருக்காது 
4-நாலாம் நிலை :-இப்போது டியூமர்கள் நிணநீர் முடிச்சுகளை அடைத்து நிணநீர் ஓட்டத்தில் கலந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவத்துவங்கும் இதற்கு மருத்துவ பாஷையில் மெட்டஸ்டேஸிஸ் (METASTASIS ) என்பர் 
ஆரம்ப கட்டத்திலேயே எலும்பு ஜீரண மண்டலம் மூளை பகுதிகள் பாதிப்படைய துவங்கும் 

சிகிச்சைகள் :

1.நுரையீரல் புற்று ஆரம்ப கட்டமாக வெறும் தொண்டை புகைச்சல் இருமல் சளி இவற்றை தவிர வேறெதுவும் அறிகுறிகள் காட்டாது சங்கிலி தொடராக புகை பிடிப்பவர்கள் இத்தகைய அறிகுறிகள் தென் பட்டால் உடனே தகுந்த ENT நிபுணரிடம் போய்  பூரண பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும் 
2.புகையிலை பழக்கத்தை நிறுத்த வேண்டும் 
3.பொதுவாக ஆரம்பகட்டத்தில் நுரையீரல் புற்றை கண்டுபிடிக்க சரியான பரிசோதனை முறைகள் இல்லை என்றாலும் ஓரளவு கணிக்க முடியும் 
இருமல் சளி போன்ற அறிகுறிகளுக்கு கீமோதெராப்பி மற்றும் ஆன்டிபயோட்டிக்குகளை மருத்துவரின் ஆலோசனையுடன் எடுக்கவேண்டும் 
4.பெரிய செல் கார்சினோமா (NON SMALL CELL LUNG CARCINOMA )இதை ஓரளவு சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம் ஏனென்றால் இது உடனே மற்ற பகுதிகளுக்கு குறிப்பாக மூளைக்கு பரவாது 
5.சிகிச்சைகள் பொதுவாக அடிப்படையாக DNA நூல்கள் ஒழுங்கற்று பின்னப்படாமல் தடுப்பதே ஆகும்.இதை சத்தியமாக செல் குரோமோசோம்களில் உள்ள ஒரு விசேஷ ஜீன் புரோடீனை முடக்குவதே ஆகும் இதற்கு ஆங்கிலத்தில் INHIBITION OF ABNORMAL FUSION PROTEIN என்பர் 
இந்த ஜீன் புரதம் தான் NNK யினால் தூண்டப்பட்டு DNA ஐ தாக்கும் இந்த முறைக்கு மருத்துவத்துறையில் ALK GENE REARRANGEMENTS என்பர் 
கீழ்காணும் மூன்று மருந்துகள் இந்த வகையில் பயனாகின்றன 
1.Crizotinib (Xalkori )
2.Ceritinib (Zykadia )
3.Alcetinib (Alecehsa )
அடைப்பு குறிகளில் கொடுக்கப்பட்டிருப்பது அவற்றின் வர்த்தக பெயர்களாக்கு 
இம்மருந்துகளை தகுந்த டாக்டரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களுடன் எடுத்துக்கொள்ளலாம்

 




ஞாயிறு, 22 ஜூலை, 2018

நிமோனியா

நிமோனியா-குறிப்புகள் 

நிமோனியா என்பது நுரையீரலில் உள்ள காற்று அறைகளில் (Alveoli) ஏற்படும் அழற்சி மற்றும் எரிதல் (Inflammation) நோய் ஆகும் 
இது சாதாரண அழற்சியினாலோ அல்லது கிருமி தொற்றினாலோ ஏற்படும் 
இதில் எரிந்து சிவத்தல் (Inflammation )கண்டிப்பாக இருக்கும் 
எரிந்து சிவத்தல் இல்லாமல் வெறும் கிருமித்தொற்று மட்டுமே இருக்குமானால் அது சுவாச குழாய் தொற்று (Bronchitis )ஆகும் 
நாட்பட்ட சுவாசக்குழாய் தொற்று நிமோனியா அல்லது புற்று நோயாக மாற வாய்ப்புண்டு 
நிமோனியா எந்த வயதிலும் யாருக்கும் வரும் என்றாலும் கீழ்கண்ட நபர்களுக்கு அது வரும் வாய்ப்பு அதிகம் 
1.ஐந்து வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் 
2.65-வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 
3.எய்ட்ஸ் வியாதியுள்ளவர்கள் 
4.ஆஸ்பெஸ்ட்டாஸ் போன்ற நச்சு ரசாயன தொழிலாளிகள் 
5.ஆஸ்பத்திரியில் வெகுநேரம் வென்டிடேட்டர்,இன்ஹேலர் போன்ற கருவிகளின் பயன்பாட்டில் இருக்கும் நோயாளிகள்
6.அதிக ஸ்டெராய்டு பயன்பாடு 
7.மது பழக்கம் 
8.புகைபிடித்தல் 
10.கஞ்சா அபின் பழக்கம் 
11..நீண்ட கால படுக்கை 
12.ஆஸ்த்மா,சர்க்கரை மற்றும் இதய நோய்கள்
நிமோனியா மூன்று வித கிருமிகளால் ஏற்படும் அவை முறையே,பாக்டீரியா,வைரஸ்,மற்றும் காளான்கள் 
இதில் பாக்டீரியாவினால் ஏற்படும் நிமோனியா மிகவும் கொடூரமாகவும் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறக்கூடியதாகவும் இருக்கும் 
வைரஸ் மூலம் வரும் நிமோனியா அவ்வளவு கடுமையாக இருக்காது இதற்கு ஆன்டிபயாட்டிக்ஸ் கூடாது பத்தியம் இருகால் போதும் தானாகவே குணமாகிவிடும் 

காளான்Fungus)தொற்றினால் ஏற்படும் நிமோனியா பெரும்பாலும் எய்ட்ஸ் போன்ற நோய் எதிர்ப்புத்தன்மை குறையும் நோயாளிகளுக்கு உண்டாகும் 
பெரும்பாலும் எய்ட்ஸ் நோயின் ஆரம்ப அறிகுறியே நிமோனியாவாகத்தான் இருக்கும் 

அறிகுறிகள் 

1.காற்று பைகளில் சீழ் உண்டாவதால் சளிக்கட்டி மூச்சு விட இயலாமை 
2.காய்ச்சல் 
3.தலைவலி 
3.சளியினால் பசியின்மை 
4.இருமல் 
5.எடை குறைதல் 
6.தளர்வு 
7.சோர்வு 
8.கெட்டி சளி 
9.நெஞ்சு வலி  
10.வைரஸ் நிமோனியாவில் இளைப்பு மற்றும் காய்ச்சல் இருக்கும் 
11.பாக்டீரியா நிமோனியாவில் காய்ச்சலுடன் இளைப்பு ,அதிக வியர்வை உதடு மற்றும் நக கண்கள் நீளம் பாரித்து போதல் மற்றும் மன குழப்பம் ஆகியவை இருக்கும்
 Pneumocystis jirovecii இது நிமோனியாவை உண்டாக்கும் ஒருவகை  காளான் ஆகும் இது பெரும் பாலும் எய்ட்ஸ் போன்ற உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் நச்சு மற்றும் சுத்தமில்லா  சூழலில் புழங்குபவர்களுக்கு தொற்றி கொள்ளும் மற்றபடி இது ஆரோக்கிய சூழலில் இருப்பவர்களுக்கு தொற்றாது எனவே எய்ட்ஸ் நோயாளிகளுடன் பழகுபவர்களுக்கு இந்த காளான் தொற்று எளிதில் ஏற்படாது

சிகிச்சைகள் 

1.பாக்டீரியா நிமோனியாவிற்கு மருத்துவ ஆலோசனை படி ஆன்டிபயாட்டிக்குகள் எடுத்துக்கொள்ளவேண்டும் 
2.வைரஸ் நிமோனியாவிற்கு கண்டிப்பாக ஆன்டிபயாட்டிக்குகள் எடுக்க கூடாது

 

வியாழன், 5 ஜூலை, 2018

இரும்பு சத்து

உணவிலிருந்து இரும்பு சத்தை அதிகம் பெறுவது எப்படி ?

இரும்பு சத்து உடம்புக்கு மிகவும் இன்றியமையாதது என்பது நம் அனைவருக்கும் தெரியும் 
இரும்பு சத்து இரத்தத்தை விருத்தி செய்ய உதவுகிறது 
இரும்பு சத்து  குறைவுப்பாட்டால் இரத்தத்தில்  சோகை உண்டாகும் 
இரத்த சோகை உடம்பில் பல நோய்கள் வர வழி வகுத்துவிடும் 
இரும்பு சத்து வேண்டும் என்பதற்காக இரும்பை நாம் உணவாக கொள்ள முடியாது 
இரும்பு சத்து மாத்திரைகள் டானிக்குகள் ஊசிமருந்துகள் என்று எல்லாவற்றிலும் பக்க விளைவுகள் உண்டு 
அவற்றை டாக்டரின் ஆலோசனை இன்றி எடுத்துக்கொள்ள கூடாது 
ஆனால் இறைவன் அற்புதமாக தன்  கருணையினால் நாம் சாப்பிடும் அன்றாட சாதாரண உணவு வகைகளில் கூட இரும்பு சத்தை சரிவிகிதத்தில் பொதிந்து வைத்திருக்கிறான்
அவற்றை முறையாக பயன் படுத்துவதன் மூலம் நாம் இரும்புச்சத்தை எவ்வித குறைவும் இன்றி பெறலாம் 
முதலில் ஒன்றை தெரிந்து கொள்வோம் 
நம் உடலில் சுமார் 65 சதவீத இரும்பு சத்து இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் என்ற புரதத்தில் உள்ளது 
ஹீம் என்ற இரும்பின் கூட்டு பொருளும் குளோபின் என்ற புரதமும் சேர்ந்து உருவாகும் பொருள்தான் ஹீமோகுளோபின் 
இதில் இருக்கும் இரும்பு கூட்டு பொருளான ஹீம் தான் இரத்தத்திற்கு அபாரமான செந்நிறத்தை தருகிறது.இரத்தத்தின் சிவப்பணுக்களுக்கு  நிறமே ஹீம்தான் கொடுக்கிறது
இரும்பு சத்து எவ்வளவு குறைவாக உள்ளதோ அவ்வளவு இரத்தம் வெளிறி இருக்கும் இதனால் இரும்பு சத்து குறைபாட்டினால் தோலும் வெளிறி இருக்கும் இதை வைத்து அனீமியாவை கண்டறியலாம் 

இரும்பு சத்தின் வகைகள் 

பொதுவாக உணவு மூலம் கிடைக்கும் இரும்பு சத்தை இருவகைகளாக பிரிக்கலாம் அவை :-

1.ஹீம் இரும்பு சத்து  

மிருகங்களின் சிவப்பு இறைச்சி (Red Meat) வகை உணவிலும் பறவை மற்றும் மீன் இறைச்சி (White Meat)வகையிலும் காணப்படுகிறது தாவர உணவில் இது முற்றிலும் கிடையாது 
ஹீம் இரும்பு சத்தை உடல்  வெகு எளிதில் உட்கொண்டு தன்மையமாக்கிவிடும் .இதனால் அசைவ உணவு பிரியர்களுக்கு இரும்பு சத்து குறைபாடு வேறு இடையூறுகள் ஏதும் இல்லாத பட்சத்தில் பொதுவாக ஏற்படுவது இல்லை

2.நான் ஹீம் இரும்பு சத்து 

அசைவ உணவில் ஹீம் இரும்பும் நான் ஹீம் இரும்பும் சேர்ந்து இருந்தாலும் காய் கறி  உணவில் நான் ஹீம் இரும்பு சத்து மட்டுமே உள்ளது நான் ஹீம் இரும்பு சத்தை உடல் மிக எளிதாக உட்கொள்ளாது இதனால் சைவ உணவு பிரியர்களுக்கு இரும்பு சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் 
இவர்கள் டாக்டரின் ஆலோசனையுடன் மாத்திரை டானிக்குகளை எடுத்துக்கொள்ளலாம் 

இரும்பு சத்து ஊக்கிகள் 

பொதுவாக உடம்பு உணவிலிருந்து இரும்பு சத்தை உறிய ஊக்கப்படுத்தும் சில பொருட்களை பார்க்கலாம் 

1.வைட்டமின் சி  

உணவு சாப்பிட்ட உடன்  எலுமிச்சை ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடுவதால் அதிலுள்ள வைட்டமின் சி உணவுமூலம் கிடைக்கும் இரும்பு சத்தை உடல் எளிதாக பயன்படுத்துவதை ஊக்க படுத்தும் 

2.பைடேட்டு உப்புகள் 

இவைசாதாரணமாக உடல் இரும்பு சத்தை  உறிவதை  குறைக்கும் என்றாலும் இவற்றை தண்ணீரில் ஊறவைத்தோ நொதிக்க செய்தோ சாப்பிட்ட பிறகு எடுத்து கொண்டால்  இவை இரும்புசத்து உடலில் சேர்வதை ஊக்கப்படுத்துவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது 
பைடேட்டு உப்புகள் சோயா வாதுமை வால்நட்டுகள் முந்திரி போன்ற பருப்பு வகைகளில் அதிகம் இருக்கிறது 
மேலும் துத்தநாகம்,தாமிரம் மாங்கனீசு போன்ற உலோக சத்துக்களும் மிக சிறிய அளவில் Trace Elements சேர்த்துக்கொண்டால் உடல் இரும்பு சத்தை எளிதில் உட்கொள்ள எதுவாக இருக்கும் 
கடைகளில் வாங்கும் இரும்பு சத்து டானிக்குகள் மற்றும் மாத்திரைகளில் இந்த Trace Elements சேர்க்கப்பட்டிருக்கும் 
நாம் சாப்பிடும் சைவ மற்றும் அசைவ உணவுகளிலும் பழங்களிலும் இந்த Trace Elemens இருக்கின்றன 
துத்தநாகம் பிரேசில் ஓட்ஸ்,oyester,முட்டை ஆகியவற்றிலும்,தாமிரம் மாமிசம்,வெண்ணெய்,வேர்க்கடலை போன்ற உணவுகளிலும்,மாங்கனீசு ஓட்ஸிலும் இருக்கின்றன.

தேநீர் கூடாது 

சாப்பிட்டவுடன் ஒரு மணி நேரத்திற்குள்ளாக தேநீர் போன்ற பானங்களை தவிர்ப்பது  நன்று ஏனென்றால் அவற்றில் இருக்கும் டானின் என்ற பொருள் உணவிலிருந்து உடல் இரும்பு சத்தை எடுப்பதை தடுப்பதாக ஆய்வு கூறுகிறது 
தேநீரை பொறுத்தவரை அது பெரும்பாலும் நான் ஹீம் இரும்பு சத்து உறியப்படுவதைத்தான் தடுக்கிறது 
மேலும் தேநீர் ஏற்கனவே இரும்பு சத்து குறைபாடு உடையவர்களை அதிகம் பாதிக்கிறது

இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகள் 

1.ஈரல் 
2.மண்ணீரல் 
3.எலும்பு மஜ்ஜை 
4.சிவப்பு இறைச்சி (ஆடு மாடு மிருகங்கள் )
5.வெள்ளை இறைச்சி (பறவைகள் ,மீன்கள் )
6.உலர்ந்த அத்திப்பழம் 
7.பேரீச்சை 
8.முந்திரி,வாதுமை 
9.முட்டை 
10.பச்சை காய்கறி மற்றும் கீரை வகைகள் 

RDA -தினசரி இரும்பு சத்தின் தேவை :-

1.பெண்கள் (வயது 19 -50)   =18 மி கி 
2.ஆண்கள் (வயது 19 -50)   = 8 மி.கி 
3.கர்ப்பிணி பெண்கள்         = 27 மி கி 
4.பாலூட்டும் பெண்கள்      = 9 மி கி
மேலேயுள்ள தகவல் National  Institute Health  (NIH) இன் சிபாரிசின்படி தரப்பட்டது 

இரும்பு சத்து குறைபாடு சோகையின் அறிகுறிகள் 

1.களைப்பு 
2.சோர்வு 
3.வெளிறிய தோல் 
4.முடி உதிர்தல் 
5.உடல் அரிப்பு எரிச்சல் 
6.பலவீனம் 
7.தூசி கல் மண் இவற்றை தின்ன ஆர்வம் 
8.கால் ஓய்வின்மை 

9.நகம் உடைதல் வளைதல்


வியாழன், 28 ஜூன், 2018

சிந்திப்போம் செயல்படுவோம்

தமிழ்நாடு -நேற்றும் இன்றும்


தமிழ் நாடு நேற்று இன்று நாளை என்று பிரித்து பாப்போம்
இந்தியா சுதந்திரம் அடைந்து குடியராசாகிய பின்
நான்கு மாகாணங்களாக இருந்த அது பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டது
1967 வரை ஒன்றாக இருந்த காங்கிரஸ் மதராஸ் மாநிலத்தை ஆண்டது
மதராசுக்கு பல பெருமைகள் உண்டு
வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நவீன நகரம்
புனித ஜார்ஜ் கோட்டை அகழிகளால் சூழப்பட்டு அமைக்க பட்ட ஒரு பெருமை மிக்க அமைப்பு
இந்தியாவின் முதல் மாநகராட்சி என்ற பெருமையும் லண்டனுக்கு பிறகு வெள்ளையர் சாம்ராஜ்யத்தின் இரண்டாவது மாநகராட்சி என்ற பெருமையும் மதராஸுக்கே உண்டு
உலகின் இரண்டாவது நீளமான அழகிய மெரினா கடற்கரை உள்ள நகரம் மதராஸ்
ஆக்ஸ்போர்ட் ,கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களுக்கு அடுத்து உலகின் மூன்றாவது என்று போற்றத்தக்க மதராஸ் யுனிவர்சிட்டி என்று போற்றப்பட்ட காலம் மாண்புமிகு சதாசிவ முதலியார் வைஸ் சென்சலராக இருந்து உண்ணத்தமிக்க முதலியார் யுனிவர்சிட்டி என்று வெளிநாட்டவர் வியந்து போற்றும் அளவிற்கு மதராஸ் யுனிவர்சிட்டி திகழ்ந்த பொற்காலம் என்றால் அது 1967 க்கு முன்
இன்றும் இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவு மிக பரந்த இடப்பரப்பில் உன்னதமான பிரிட்டிஷ் கட்டிடக்கலையின் பிரமாதத்திற்கு சான்றாக பிரமிப்பூட்டும்படியாக அமைந்து இருப்பதுதான் மதராஸ் உயர்நீதி மன்றம்
இங்கு இன்னமும் இரண்டாவது உலகப்போரின்போது ஜெர்மனியின் எம்டன் கப்பல் போட்ட குண்டின் அடையாளம் இருக்கிறது
இந்தியாவிலேயே மிக முன்னேறிய மாநிலங்களில் மஹாராஷ்டிரா பஞ்சாபி மாநிலங்களுக்கு அடுத்த நிலையில் இருந்த பெருமை சென்னை மாநிலத்திற்கு உண்டு அதாவது 1967 க்கு முன்
பாரம்பரியம் கலாச்சாரம் கல்வி அமைதி இது அத்தனையிலும் சிறந்து விளங்கிய மாநிலம்தான் இது
இந்தியாவின் அமைதி பூங்கா
தொழில் தொடங்குவதற்கு அருமையானதொரு மாநிலம் என்று பலராலும் போற்றப்பட்ட மதராஸ் மாநிலம் 1967 க்கு பின் கொஞ்சன்கொஞ்சமாக சிதைந்து சின்னாபின்னமாகி இன்று அலங்கோலத்திலும் அலங்கோலமாக எங்கும் அரசியல் எதிலும் அரசியல் அராஜகம் போராட்டம் அரசிற்கும் மக்களுக்கும் இடையே எந்த ஒரு புரிந்துணர்வும் இல்லாத ஒரு நிலை ஊழல்,விலைவாசி ஏற்றம் என்று ஐயோ தலை சுற்றுகிறது
பின்னி தொழிற்சாலை மூடப்பட்டதால் ஆரம்பித்து
ஸ்டாண்டார்ட் கார்க்கம்பெனி
பிறகு நோக்கியா
பிறகு ஹூண்டாய் என்று ஒவ்வொன்றாக இழுத்து மூடப்பட்டதே ஏன்
யார் மீது பழியை போடுவது
என்னை பொறுத்தவரை மக்களின் மீதுதான்
1967 இல் ஆட்சியை மாற்றி திராவிடம் என்ற குறுகிய வட்டத்திற்குள் தங்களை சுருக்கிக்கொண்டார்களே அந்த தலை முறை மீதுதான்
நான் திராவிடத்திற்கு எதிரானவன் அல்ல
அது கலாச்சாரம் ஆனால் அதை அரசியலாக்கியதும் அதற்கு மக்கள் துணை போனதும் தான் 1967 இல் மக்கள் செய்த தவறு
திமுக ஒரு நல்ல ஒரு எதிர்கட்சியாகவே கடைசிவரை இருந்திருக்கலாம்
காங்கிரஸையே ஆளவிட்டு  மாநிலம் தேசிய நீரோட்டத்திலிருந்து விலகுவதை தடுத்திருக்கலாம்
மேதை  டர்.அண்ணா அவர்கள் ஒரு பேரறிஞர்.நாவன்மை மிக்கவர் மிகச்சிறந்த எழுத்தர் சாமர்த்தியமும் சாதுர்யமும் மிக்கவர் தமிழின் மீதும் தமிழகத்தின் மீதும் மிகுந்த பற்று உடையவர் இதில் எதிலும் சந்தேகமில்லை
ஆனால் ஏட்டில் அறிவு என்பது வேறு ஆட்சி அனுபவம் என்பது வேறு என்று திமுக 1967 மார்ச்சில் ஆட்சியில் அமர்ந்த உடனேயே திரு அண்ணா அவர்கள் உணர்ந்திருக்கிறார்
ஒரு மிகப்படிக்காத காமராஜருக்கு இருந்த அனுபவ ஞானம் கூட தனக்கு இல்லையே என்று அவர் உணர்ந்திருப்பார்
ஏனென்றால்  காமராஜை பார்த்து கருப்பிட்டி விலை என்னாச்சு என்று ஏளனம் பேசிய அவரால் ஆட்சிக்கு வந்த வுடன் கருப்பிட்டி விலை மாத்திரம் அல்ல படி அரிசி விலையை கூட ஒரு ரூபாய் அளவிற்கு கொண்டு வர முடியவில்லை
மக்களை ஏமாற்றிவிட்டோமோ என்ற மன உளைச்சல் கூட அந்த நல்ல மனிதருக்கு ஏற்பட்டிருக்கலாம்
அது மட்டுமல்ல
தனக்கு பிறகு என்னவாகுமோ என்று கூட அவர் அஞ்சி இருக்கலாம்
காரணம் அவருக்கு கீழே உள்ளவர்களின் நாணயத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இருக்க வாய்ப்பில்லை
காரணம் பொய் சொல்லி பழக்கப்பட்டவர்கள்
மக்களும் பொய்யையும்  சினிமாவையும் உண்மை என்று நம்மபதலைப்பட்டு விட்டார்களே
ஐயோ எல்லாம் மோசம் போய்விடுமே என்று அவர் எண்ணி இருக்கலாம்
அவர் மரணித்து விட்டார்
அண்ணாவின் மரணத்திற்கு பின் தமிழகம் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள துவங்கியது
காவிரி பிரச்சினை முல்லைபெரியார் பிரச்சினை என்று ஒவ்வொரு பிரச்சினைகளாக தலை தூக்க ஆரம்பித்தன
திமுக பல துண்டுகளாக உடைந்து நொறுங்கியதுதான் அது ஆட்சியை கைப்பற்றியதன் பலன்
காங்கிரசை வளர்ப்பதற்கோ மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கோ டெல்லியும் சரி இங்குள்ள காங்கிரஸ்காரர்களும் சரி முனைப்பு காட்டவில்லை
விளைவு தமிழகத்தின் தலை எழுத்து திமுக அ இ.அ தி முக என்று குறுகிய திராவிட வட்டத்திற்குள் சுழல துவங்கியது
அரசியல் என்பது புனிதமானது என்பது போய் பெரும் சூதாட்டக்களம் ஆகியது
மக்களும் ஓட்டிற்கு துட்டு,இலவசங்களுக்கு மயங்கி களமிறங்கி சூதாட தலைப்பட்டுவிட்டனர்
விளைவு மாநிலம் மதிப்பிழந்து
வளங்கள் சூறையாடப்படுகின்றன
பக்கத்துக்கு மாநிலங்களின் கழிவுகளை கொட்ட பயன்படும் குப்பை தொட்டியாக தமிழகம் ஆகிவிட்டது
ஆறுகள் தூர் வரப்படவில்லை
ஆற்று மணல் வரம்பு மீறி கொள்ளை போகிறது
அரசியல் மற்றும் ஆளும் வர்க்கத்திற்கோ மக்களுக்கோ எந்தவிதத்திலும் மாநில அக்கறை என்பது கிஞ்சிற்றும் இல்லாமலேயே போய்விட்டது
விளைவு பக்கத்து மாநிலங்களுக்கு இங்கிருந்து சரக்குகள் ஏற்றிக்கொண்டு போகும் சரக்கு லாரிகள் சரக்குகளை அங்கு இறக்கிவிட்டு அதிக வாடகை கிடைக்கிறது என்பதற்காக அங்கிருந்து அவர்கள் ஏற்றிவிடும் கழிவுகளையும் குப்பைகளையும் இங்கே கொண்டு வந்து தன் சொந்த மாநிலம் என்றுகூட பாராமல் திருட்டுத்தனமாக  கொட்டிவிட்டு  போகிறார்கள்
இவர்களை என்னவென்பது
யாராவது பக்கத்துக்கு வீட்டுக்குப்பைகளை அவர்கள் அதிக பணம் கொடுத்தார்கள்  என்பதற்காக வாரி கொண்டுவந்து தன வீட்டில் கொட்டுவார்களா?
வீடுவரை உள்ள அக்கறை (self or house interest) இந்த தமிழர்களிடம் ஏன் மாநில (state) அளவுக்கு விரிவடைய வில்லை
இத்தனைக்கும் தமிழர்கள் சிறந்த கல்வி அறிவுடையவர்கள் உழைப்பாளிகள் பிறகு என் அவர்களிடம் மாநில அக்கறை இல்லை ஏன் இந்த நிலை
இதை மாநில அக்கறை இன்மை என்பதா  அல்லது பரந்த மனப்பான்மை என்பதா?
எப்படிப்பார்த்தாலும் இந்த அணுகுமுறை இந்த சூழ்நிலையில் அறிவுடைமை இல்லை
காரணம் இன்றைய இந்தியாவில் மாநிலங்களின் கூட்டாட்சி என்றிருந்தாலும் மாநிலங்களிடையே  சுயநலமும் போட்டி மனப்பான்மையும் தான் அதிகமாக இருக்கிறது
கர்நாடகா காவிரியில் தனக்கே உரிமை என்கிறது
கேரளா ஆறுகளை கடலில் பொய் விடுவேன் தவிர விவசாயத்திற்கு திருப்ப மாட்டேன் என்கிறது
ஆந்திரா பாலாற்றில் தடுப்பணை கட்டி  கொண்டு நீர் தரமாட்டேன் என்கிறார்கள்
சேர சோழ பாண்டிய சாம்ராஜ்ஜியங்கள் மாதிரி தமிழகம் இன்று தனி நாடாக இல்லை
பிரிட்டிஷ் ஆட்சிக்கு பிறகு ஏக இந்தியா என்ற கூட்டாட்சி தத்துவத்தில் விரும்பியோ விரும்பாமலோ நாம் சிக்கிக்கொண்டோம்
இந்த நிலையில் நாம் திராவிட மாயையில் இருக்கிறோம்
தனித்தமிழ்நாடு என்ற குறுகிய வட்டத்திற்குள் இருக்கிறோம்
மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தை அவர்கள் மதிப்பதில்லை
காரணம் நம்முடைய இந்த குறுகிய அணுகுமுறைதான்
எனவே இனியாவது தூர நோக்குடன் சிந்திப்போம் செயல் படுவோம்








புதன், 21 பிப்ரவரி, 2018

காவிரியும் அரசியலும்

     அரசியல் என்பது புனிதமானது.இறுதி தூதர் முஹம்மது நபி (இறைவனின் சாந்தியும் சமாதானமும் அவர் மீது உண்டாகட்டும் ) அவர்கள் ஒரு ஆன்மீக வாதியாக மட்டுமில்லாமல் ஒரு அரசியல்வாதியாகவும் ஆட்சி தலைவராகவும் இருந்தார்.ஏனென்றால் ஆன்மிகம் மனிதனை நெறி படுத்துவதற்கு தேவை என்றால் அரசியல் அவன் வாழ்வதற்கு தேவை என்பதை அவர் உணர்ந்து செயல்பட்டார்.அரசியலையும் ஆன்மீகத்தையும் அவர் ஒருநாணயத்தின் இரு பக்கமாகவே  கண்டார்
ஒரு நேர்மையான அரசாங்கத்தை அவர் உருவாக்கினார்.அவரை தொடர்ந்து வந்த ஹஜ்ரத் அபூபக்கர்(இறைவன் அவர்களை பொருந்திக்கொண்டான்),ஹஜ்ரத் உமர் (இறைவன் அவர்களை பொருந்திக்கொண்டான் )ஹஜ்ரத் உஸ்மான் (இறைவன் அவர்களை பொருந்திக்கொண்டான்),ஹஜ்ரத் அலி (இறைவன் அவர்களை பொருந்திக்கொண்டான்)ஆகிய நான்கு கலீபாக்களும் நெறி பிறழாத நல்லாட்சியை மக்களுக்கு வழங்கினார்கள்.ஜாதி மத வேறுபாடின்றி எல்லோரும் நல்லாட்சியை அனுபவித்தார்கள்
மக்களின் உயிர் உடைமைகள் பாதுகாக்கப்பட்டன
அவர்களது உரிமைகள் மதிக்கப்பட்டன
குறிப்பாக பெண்களின் உரிமைகள் பேணப்பட்டு அவர்கள் அச்சமின்றி வாழ்வது உறுதி செய்யப்பட்டது
இவர்களது ஆட்சியை நமது தேச பிதா காந்திஜி அவர்களே சிலாகித்தார்கள்
கலீபா உமரின் ஆட்சி போன்று ஒரு ஆட்சி இந்தியாவில் மலர வேண்டும் என்று அவர் விரும்பினார்
ஆனால் அவரது விருப்பம் நிறைவேறியதா?
அந்த மனிதருள் மாணிக்கம் அற்பத்தனமாக கொல்லப்பட்டாரே அப்போதே அவர் விருப்பத்தோடு அவரையும் தீயிலிட்டு பொசுக்கிவிட்டார்கள்
இன்று பொசுங்கிய ஜநாயகம்தான் நம்மை கருவறுக்கிறது
இந்த ஜனநாயகத்தில் பெயரளவில்தான் ஜனங்கள் நாயகர்களாக இருக்கிறார்கள் மற்றபடி அமைச்சர்களுக்கும் அதிகார்வர்க்கத்திற்கும்  பொறுப்பற்ற முறையில் அதிகாரங்களை வாரி இறைத்திருக்கிறது நமது அரசியல் நிர்ணய சட்டம்.இந்த அபத்த சட்டத்தை உண்டாக்குவதில் எப்படித்தான் அம்பேத்கார் போன்ற மேதைகளும் பங்கேற்றார்களோ தெரியவில்லை
மக்களுக்கு பாதுகாப்பு இல்லை அரசாங்கம் வரி என்ற பெயரில் மக்களை எப்படி எப்படியெல்லாமோ பயமுறுத்தி வகை வகையாக பிடுங்கிக்கொள்கிறது ஆனால் ஒவ்வொரு முறையும் நிதி பற்றாக்குறையையே காரணம் காட்டி மேலும் மேலும் கட்டண உயர்வு கூடுதல் வரி என்று மக்களை வதைக்கிறார்கள்.அரசே மக்களிடம் வியாபாரம் நடத்துகிறது கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள் அதை அதிகார வர்க்கம் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்கிறார்கள்.பிறகு மீண்டும் கொள்ளை மீண்டும் பங்கீடு இப்படி தொடர்கதை இதற்கு பெயர் அரசியலா அல்லது சூதாட்டமா
மக்கள் நீதி மன்றங்களை நாடினால் பெரும் சம்பளங்களில் திளைத்துவீட்ட கோடீஸ்வர நீதிபதி கூட்டம் சாமானிய மக்களின் பிரச்சினைகளை பொருட்படுத்துவதே இல்லை தங்களின் பதவியிலும் பணத்திலும் குறியாக இருந்து அநியாயம் செய்யும் அரசிற்கு சார்பாகவே ஒன்று தீர்ப்பளிப்பார்கள் அல்லது கேஸை இழுத்தடித்தது நீர்த்து போக செய்துவிடுவார்கள்
எங்கும் ஊழல் எதிலும் ஊழல் மேல் மட்ட சிபாரிசுகள் இதில் சாமானியன் எப்படி வாழ்வது
நஷ்டப்பட்டவன் தன்  உரிமைகளுக்காக காவல் நிலையத்தில் போய்  காவல் தேடினால் அங்கும் ஊழல் பயமுறுத்தல்கள்கள்.என்ன செய்வது சரி தன்  உரிமைகளுக்காக போராட்டம் நடத்தினால் ஒருபுறம் போராட்டம் நடத்துங்கள் என்று நம்மை தூண்டி விடும் நம் அரசியல் சட்டம் மறுபுறம் போலீசை தூண்டி விட்டு போங்கள் போய்  தடியடி நடத்துங்கள் கண்ணீர்குண்டு வீசுங்கள் முடிந்தால் போலி என்கவுண்டர் மூலம் நாலு பேரை காவு வாங்குங்கள் என்கிறது இதுதான் ஜன நாயகமா.சரி மீண்டும் கோர்ட்டுக்கு போகவும் என்கிறார்கள் அங்கெ போனால்  ஆயிரம் முறை அல்லது முடிவற்ற கேஸ் ஒத்திவைப்புகள்
உதாரணம் காவிரி பிரச்சினை பாபர் மஸ்ஜித் பிரச்சினை
நீதிமன்றங்களுக்கு நியாயம் எது அநியாயம் எது என்று அப்பட்டமாகவே தெரிந்தாலும் தீர்ப்புகளை தருவதில்லை காரணம் அநியாயக்கார அதிகாரவர்கத்திற்கு பயம்
காவிரி பிரச்சினையில் நியாயம் எது என்று நீதிபதிகளுக்கு தெரியும் ஆனாலும் அவர்கள் நியாயத்தின் பக்கம் தீர்ப்பு தர தயங்குகிறார்கள் காரணம் தரங்கெட்ட அரசியல்
பாபரி மஸ்ஜித் விவகாரத்திலும் அதே கதைதான்
ஒருவேளை நியாயமான தீர்ப்பு வந்தாலும் அதை பார்லிமென்டில் சட்டம் போட்டு தடுத்து விடுகிறார்கள்
இந்த கேடுகெட்ட அரசியல் தாக்கங்களினால் நீதிமன்றங்களில்  குற்றவாளி தப்பிவிடுகிறான் நிரபராதி தண்டிக்கப்படுகிறான்
எனவே போலீசிடம் போகவும் பயமாக இருக்கிறது
நீதிமன்றங்களை நாடவும் தயக்கமாக இருக்கிறது
ஒரு நீதிபதி நியாயமாக நடக்க விரும்ப கூடாது என்பது எழுதப்படாத விதி
உதாரணம் சிபிஐ கோர்ட் நீதிபதி லோயாவின் மர்ம முடிவு
மாநிலத்தில் ஒரு கட்சி மத்தியில் வேறு கட்சி என்று ஆட்சி அமையும் பொழுது மாநிலத்தில் ஆளும் கட்சி மத்தியில் ஆளும் கட்சிக்கு மாநில  உரிமைகளை தொலைத்து விட்டு ஜால்றா போடவேண்டும்.எங்கே தன் ஆட்சி கலைக்கப்பட்டுவிடுமோ தன் பதவி பறிபோய்விடுமோ என்று பயத்துடன் தன் மக்களின் உரிமைகளையும் மாநில நலனையும் மத்திய அரசுக்கு அடகுவைத்து விடவேண்டும் 
நம்முடைய நீதி மன்றங்களும் எப்படி அரசியல் உள்நோக்குடன் செயல்படுகின்றன என்பதற்கு இந்த காவிரி நீர்பங்கீடு குறித்து சுப்ரீம் கோர்ட் அளித்திருக்கும் இறுதி தீர்ப்பு ஒரு உதாரணம்.நீதி தேவனே மயங்கி விழும் அளவிற்கு ஒரு அபத்தமான மோசமான அநியாயமான ஒரவஞ்சனையான தீர்ப்பு இதை நான் ஒரு தமிழகத்த்தை சேர்ந்தவன் என்பதற்காக சொல்லவில்லை.தீர்ப்பளித்த நீதிபதிகள் எவரும்கூட தமிழகத்தை சேர்ந்தவர்களாக இல்லாமல் இருக்கட்டும்.ஆனால் தேசிய  ஜனநாயக கண்ணோட்டத்தில் அவர்கள் இந்தியர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள்  தமிழ் நாட்டையும் இந்தியாவின் ஒரு பகுதி என்ற ரீதியில் தீர்ப்பை தரவில்லை.பேசாமல் வெளிப்படையாகவே தமிழகம் காவிரியை ஒட்டுமொத்தமாக மறந்துவிடவேண்டும் என்று கூறி இருக்கலாம் ஏனென்றால் தீர்ப்பின் உள்நோக்கமே அதுதான்.ஆனால் ரொம்ப புத்திசாலித்தனமாக தமிழகத்திற்கு சில சாதகங்களை உண்டாக்கி இருப்பது மாதிரி தீர்ப்பில் ஒரு தோற்றத்தை உருவாக்கி ஏமாற்றி இருக்கிறார்கள்.
உதாரணமாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு  ஆகியவற்றை ஏற்படுத்தி தரவேண்டும் என்பது தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கை.இதை சுப்ரீம் கோர்ட் தன்  தீர்ப்பில் ஏற்றுக்கொண்டு ஆறு வாரங்களுக்குள் (FEBRUARY 10 2018 இலிருந்து )அதை அமைக்கவேண்டும் என்று மத்திய அரசிற்கு கெடு விதித்து விட்டு மிக புத்திசாலித்தனமாக வாரியம்(BOARD) என்ற சரியான வார்த்தைக்கு பதில் திட்டம் (SCHEME )என்ற வார்த்தையை போட்டு குழப்பி நம்மை ஏய்த்து இருக்கிறார்கள்
இது மட்டுமல்ல காவிரி யாருக்கும் சொந்தமில்லை அது தேசிய சொத்து என்று தீர்ப்பில் சொல்லிவிட்டு ஏற்கனவே தீர்ப்பாயத்தில் தமிழகத்திற்கு தரப்பட்ட ஆண்டின்  ஒட்டு மொத்த நீர் அளவான 192 TMC யிலிருந்து 14.5 TMCஐ 
குறைத்து அதை கர்நாடகாவிற்கு வழங்கி தங்களது தேசப்பற்றை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் இதற்கு அவர்கள் கூறியுள்ள காரணம் எந்த ஒரு உண்மை தேசியவாதியையும் கொதிப்படைய வைக்கும் அதாவது காவிரியின் தமிழக எல்லையில் சுமார் 20TMC நீர்வளம் இருப்பதை தீர்ப்பாயம் கணக்கில் கொள்ளவில்லை அதையும் நாம் கணக்கில் கொண்டால் அதுவும் இதுவும் tally ஆகிவிட்டது எனவே தமிழகம் அதில் 10 TMC வரை எடுத்துக்கொள்ளலாம் என்று காரணம் சொல்லி இருக்கிறார்கள் . ஆனால் ஒன்றை வசதியாக மறந்து விட்டார்கள்.வழக்கு கர்நாடகாவிலிருந்து எவ்வளவு நீர் தமிழகத்திற்கு வரவேண்டும் என்பதற்கு தானே தவிர தமிழகத்தின் நிலத்தடிநீர் பற்றியதல்ல அப்படியானால் கர்நாடக எல்லையிலும் நிலத்தடி நீர் இருக்குமே அதை ஏன் கணக்கில் கொள்ளவில்ல.
இந்த தீர்ப்பை கொஞ்சமும் சிந்திக்காமல் நாம் வரவேற்பது நம் தலையில் நாமே மலத்தை அள்ளி  போட்டுக்கொள்வதற்கு சமம் 
இதில் நமக்கு சாதகமாக எதுவுமே இல்லை .நம்மை ஏமாற்றிவிட்டார்கள்
இந்த தீர்ப்பின் ஒரே ஒரு அம்சத்தை அதாவது தமிழகத்திற்கு தரவேண்டிய நீரின் அளவை குறைப்பதைமட்டுமே கர்நாடகம் ஏற்றுக்கொள்ளும் இருந்தாலும் அதிலும் அவர்கள் குளறுபடி செய்வது தொடரும் அதற்கு மத்திய அரசும் துணை போகும.அதுதான் தேசியம் அதுதான் ஜனநாயகம் இன்னும் ஒரு வேடிக்கை என்னவென்றால் இப்படி ஒரு அநியாயம் நடக்கும் பட்சத்தில் பாதிக்கப்படக்கூடியது தமிழகம்தான் ஆனால் இதை எதிர்த்து எந்த கோர்ட்டிலும் மேல்முறையீடும் செய்ய முடியாது ஏனென்றால் தீர்ப்பில் அப்படித்தான் இருக்கிறது
அது மட்டுமல்ல 15 வருடம் வரை இந்த தீர்ப்பு அமலில் இருக்கும் அதுவரை தமிழகம் கருநாடகத்தையோ அல்லது மத்திய அரசையோ எதிர்த்து ஒரு மயிரையும் பிடுங்க முடியாது
சரி 15 வருடத்திற்கு பிறகு இந்த பிரச்சினையின் முடிவு என்ன ?தெரியாது தீர்ப்பில் எதுவும் சொல்லப்படவேயில்லை
ஆனால் 15 வருடங்களுக்கு பிறகு காவிரி தமிழகத்திற்கு தேவைப்படாது.அதை கர்நாடகமே முழுவதும் பயன்படுத்திக்கொள்ளட்டும்
ஏனென்றால் அதற்குள் தமிழகத்தில் குறிப்பாக காவிரி டெல்டா பகுதியில் பெட்ரோல் கிணறுகள்,எண்ணெய் குழாய் பாதிப்புகள்,ஹெலோஜன் திட்டம் நியூட்ரினோ திட்டம் என்று செயல்படுத்தி விவசாயத்தை பாழ்படுத்தி அந்த மண்ணை மலடாக்கி இனி காவிரிக்கு அங்கு அவசியம் இருக்காது என்ற நிலையை உருவாக்கிவிடுவோம் என்பது அந்த தீர்ப்பில் எழுதப்படாத வரிகள்
இது அப்பட்டமான பாசிசமா? அல்லது தேசியமா ?
இனி நம்மவர்கள் இதை எப்படி அணுகினார்கள் என்று பார்க்கவேண்டாம் ஏனென்றால் அது கன்றாவி மேலும் முடிந்து போன கதை.காவிரியை நமது மக்களின் மெத்தனமும் முன் சென்ற ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறைகளும்தான் இவ்வளவு பூதாகரமான பிரச்சினையாக ஆக்கிவைத்தது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை
இனி என்ன செய்யவேண்டும் என்று பார்க்கலாம்
வருகிற FEB 23 2018 ஆம் தேதி காவிரி சம்பந்தமாக ஒரு அணைத்து கட்சி கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார் முதல்வர் பழனிசாமி
கேட்க நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் இது எந்த அளவு பயன்தரும் என்று தெரியவில்லை
காரணம் திமுகவும் அதிமுகவும் எக்காலத்திலும் மாநில நன்மையை கருதி ஒருத்தருக்கொருவர் மனம்விட்டு கருத்துக்களை பரிமாறிக்கொண்டதுமில்லை விட்டுக்கொடுத்ததுமில்லை
அதனால் அவர்கள் குறுகிய நோக்கில் பலனைந்திருப்பார்களே தவிர தொலை நோக்கில் அவர்கள் எந்த பலனும் அடைந்ததில்லை அதில் அவர்களுக்கு அறிவுமில்லை அக்கறையுமில்லை
தொலை நோக்கு நன்மை என்பது மாநில உரிமைகளுடன் தங்களையும் முன்னேற்றி கொள்வது இதை மற்ற மாநிலங்களில் செய்கிறார்கள்
ஆனால் இந்த அறிவுஜீவிகளோ மாநில உரிமை மாநில நலன் என்பதெல்லாம் பின்னே முதலில் நான் என் ஆட்சி பதவி சுகங்கள் எனக்கு மட்டுமுள்ள  பொருளாதாரம் என் வீடு வாசல் இதற்காகத்தான் நான் அரசியலுக்கே வந்தேன் என்ற ரீதியில் செயல்பட்டு எல்லாவற்றையும் குட்டிச்சுவர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்
குட்டிச்சுவர்களுக்கு நடுவே என்ன செல்வசுகங்களில் மிதந்தாலும் அது உண்மையில் சுகம் அல்ல என்ற அறிவு கூட இங்கு ஆள்பவர்களிடம் இல்லை
அமெரிக்காவை குட்டிச்சுவர் ஆக்கிவிட்டு அதை ஆள்பவர்கள் மட்டும் தனித்தீவாக சுகப்படமுடியுமா.முடியாது எனவே அவர்கள் தன் நலனுடன் நாட்டு நலனையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.இதுதான் உலகின் எல்லா பகுதிகளிலும் ஏன் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் கூட இப்படித்தான்.
பக்கத்திலிருக்கும் கேரளாவை பாப்போம்
அவர்கள் கூறுகிறார்கள் நாங்கள் சினிமா தியேட்டர்களில் போய் முதல்வர்களை தேர்ந்தெடுக்கமாட்டோம் என்று எவ்வளவு எதார்த்தம் அவர்கள் சினிமாவை சினிமாவாகத்தான் பார்ப்பார்கள் அதில்வரும் ஹீரோக்களை ஹீரோ வொர்ஷிப் பண்ணுவதில்லை ஏனென்றால் மாநில நலன்
ஆந்திராவை பாருங்கள் ஒரு ஐந்து வருடம்தான் நடிகர் NTR இடம் ஆட்சியை தந்தார்கள் அதன் பிறகு கழட்டி விட்டார்கள் காரணம் மாநில நலன்
கர்நாடகாவை பாருங்கள் அங்கு ராஜ்குமார் இருந்தவரை அவர்தான் பெரிய ஹீரோ அதற்காக அவரை முதல்வராக்கினார்களா இல்லை காரணம் அதனால் மாநிலத்திற்கு என்ன நன்மை என்ற தொலை நோக்கு
சினிமா என்பது பொழுதுபோக்கு
ஆனால் அரசியல் நம் வாழ்வாதாரம்
அதில் சினிமா என்ற மாயையை புகுத்தலாமா கூடாது
ஆனால் அதில் நாம் தவறு செய்தோம் அதை அனுபவிக்கிறோம்
இப்போது இந்த சர்வகட்சி கூட்டத்தில் திமுக ஒத்துபோனாலும் அதிமுக ஒத்து வருமா என்பது சந்தேகம்தான்.
இந்த சந்தேகத்தையும்தாண்டி எல்லோரும் ஒத்த கருத்துக்கு வந்தால் அது நன்மைதான் ஆனால் அது அதிசயம்
முதலில் கூட்டம் தொடங்கும் முன்  முதல்வர் பழனிசாமி ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும் மற்ற கட்சிகள் அதிருப்தி அடைவது மாதிரி எந்த ஒரு கருத்தையும் தான்தோன்றித்தனமாக அவர் திணிக்க முயலக்கூடாது.ஒரு புத்திசாலி முதலில் மற்றவர்களை பேசவிட்டுதான் தான் பேசுவான் என்பது நினைவிருக்கட்டும்.திரு பழனிசாமி ஆட்சிக்கு முதல்வராக இருக்கலாம் ஆனாலும் மந்திரிதான் மன்னரல்ல என்பது கவனமிருக்கட்டும்
அத்தனை கட்சிகளும் தங்கள் உள்கருத்து வேறுபாடுகளை களைந்து மாநில நன்மை ஒன்றையே பிரதானமாக கொண்டு நல்ல முறையில் ஆலோசித்து ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும் என்று எதிர்பார்ப்போம்






அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...